Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Friday, March 11, 2011

ஒரு ரூபாயில் மருத்துவம் ...!!! --2

90 என்ன சொல்றாங்ன்னா ...
 
       ரொம்ப நாளைக்கி (வருஷங்கள் )பிறகு நம்ம தோஸ்த் ஒருத்தரை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சு  பேசிக்கிட்டு இருந்ததில் வீட்டுக்கு விருந்துக்கு அழைச்சார். பொதுவா யார் வீட்டுக்கும் போய் பழக்கம் இல்லாததால நழுவிக்கொண்டே இருந்தேன் . அன்னைக்கி பார்த்து என் கெட்ட நேரம் விடப் பிடியா தள்ளிக்கொண்டு போய்ட்டார் . அவங்க தங்ஸும்  அன்பா நிறைய ஐட்டம் செய்து வச்சிருந்தாங்க. ((ஹை..சொல்ல மாட்டேனே ..! அதையெல்லாம் சொன்னா நீங்க கண்ணு போட்டுடூவீங்க ))
        அடேய்,  நான் இன்னைக்கி விரதம்டான்னு (பொய்)சொல்லியும் விடல. வேற வழி .நாலு நாளைக்கி தாங்குற மாதிரி சாப்பிட்டேன் . (முழுக்க நனைஞ்ச பிறகு பாக்கெட்டில இருக்கிற கைகுட்டை இருந்தா என்ன நனைஞ்சா என்ன ஹி..ஹி..)).  ஆனா தோஸ்த்தான் என் வாயயே ஒரு மாதிரி ஏக்கமா பார்த்துகிட்டு இருந்தான்.டேய் உன் தட்டை பார்டா இல்லாட்டி எனக்கு வயத்த வலிக்குமுன்னு சொன்னேன் . பயபுள்ள  சொல்றான் .இல்லடா இத சாப்பிட்டா எனக்கு வயத்த வலிக்கும் .அதான் நீ சாப்பிடறதை பாக்குரேன் . (நா சாப்பிட்டது  5 முட்டை போட்ட ஆம்லெட் ))
யாரை பாத்து இன்னாங்கிரே.ஐயே...கீசிபுடுவேன் கீசி....
   
     வித விதமா சாப்பிட்டதும் கைகழுவிவிட்டு பேசிக்கிட்டு இருக்கும் போது போரடிக்காம இருக்க ஃபிரெஞ்ச் ஃபிரையை (( கொஞ்சம் தாங்க அரை கிலோ ))  ருசிச்சிகிட்டு இருந்தேன் . அப்பவும் அவன் என் வாயயே  பார்த்துகிட்டு  இருந்தான் ஆனா அவன் சாப்பிடல ..கேட்டா அதே பழைய பாட்டு .இதை சாப்பிட்டா எனக்கு வயத்த வலிக்கும் .இதையெல்லாம் விட்டு தலைமுழுகி பல வருஷமாச்சின்னுட்டான்
       இப்ப இதை எல்லாம் சாப்பிடு ஒன்னும் ஆகாது . செலவு இல்லாத வைத்தியம் நான் தரேன்னு சொன்னதும் பயந்துகிட்டேதான் சாப்பிட்டான் சாப்பிட்டதும்  நான் அதை குடுத்ததும் உடலுக்கு ஒன்னுமே ஆகல..  ஆனா ஆனது ஒன்னுதான் . அடுத்த தடவை  5 முட்டை ஆம்லெட்டு பதில் 2 முட்டை ஆம்லெட்தான் எனக்கு கிடைச்சது .அவ்வ்வ்  
      விஷயம் இதுதான் .. வீட்டு சாப்பாடா இருந்தாலும் சிலருக்கு கத்திரிகாய் , உருளை கிழங்கு , முட்டை இதுமாதிரி  பொருட்களை  சாப்பிட்டா அவர்களுக்கு வயிறு உப்பிக்கும் முதுகு , கால் , கை போன்ற இடங்களில் வாயு பிடிச்சிக்கும் , அசைக்க முடியாது . இன்னும் சிலருக்கு நெஞ்சு எரிச்சல் இருக்கும் ஈனாக். மாத்திரை , ஜெலுசில்  இப்படி எதாவது  சாப்பிடுவது . கடைசியில் எதுவும் சரியாகாமல்  அந்த அந்த பொருட்களையே  விட்டு விடுவது ..

அடேய்  யார்ராஅவன் யானை குட்டியை  ஆட்டோவில ஏத்தினது...??  :-))

      சிலருக்கு வயிற்றில ஆசிட் அதிகம் சுரக்கும் . இது தெரிஞ்சி  இருந்தா போதும். அவர்கள் ஏதாவது கடலை மிட்டாயோ  இல்லை சுவீட்டோ சாப்பிடனும் ..அமிலத்தை நேராக்க இனிப்பு அல்லது வாழைப்பழம் ஒன்னுதான் வழி .அந்த நேரம் அது இல்லாம போனா குடல் எரிச்சல் வந்து  அல்சராக போகும் .
     இன்னும் சிலருக்கு ஆசிட்டை நேராக்கும் பித்த நீர்  அதிகமானால் இனிப்பு , வாழைப்பழம் எதுவும் ஒத்து வராது  அவங்களுக்கு கொத்து மல்லி இலை அதிகம் போட்டு எந்த வகையிலாவது  சாப்பிட்டா சரி வரும்  .ஓகே. ஆனா இதெல்லாம் எதுவும் சாப்பிடாதவங்களுக்கு .வயிறு காலிய இருப்பவங்களுக்கு மேலே சொன்னது. சாப்பிட்டதும் வரும் பிரச்சனைக்கு கீழே  படிங்க
       அதிகமில்லை  ஜெண்டில் மேன் மற்றும் வுமன் .ரொம்ப சிம்பிளா கொஞ்சம் ஓமத்தை பவுடராக்கி அதில் நான்கில் ஒன்று உப்பு பவுடரையும் சேர்த்து அப்படியே  வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டியதுதான் . 5 நிமிடத்தில்  பலன் தெரியும் .அப்படி தெரியாவிட்டால் அதே போல இன்னொரு தடவை சாப்பிடுங்கள் போதும் . சுவிட்ஜை  ஆஃப் செய்தால் எப்படி மின்சார பல்ப் எரிவதை நிறுத்துதோ  அதே மாதிரி உங்க நெஞ்சி எரிச்சல், வயிறு உப்புதல், அடிக்கடி ஏப்பம் விடுதல்  எல்லாமே பட்டுன்னு நின்னு போகும்
எழுந்து நிக்க தெம்பில்லைன்னு யார்  சொன்னது  ?  
     புது ஓமம் நல்ல வாசனையா  கலரா இருக்கும் அவரவர் வசதிக்கு தகுந்த மாதிரி (அதாவது பாட்டல் அல்லது பிளாஸ்டிக் டப்பா ) வாங்கி அதை பவுடராக்கி  கூடவே  உப்பையும் பவுடராக்கி மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ளவும் (பழைய ஓமம் வாசனையும் இருக்காது பலனும் இருக்காது ) தேவைப்டும் போது சின்ன டீஸ்பூன் போதும் . தேவைப்பட்டால் வெளியூர் போகும் போதும்.கூடவே வைத்துக் கொள்ளலாம் . .கடையில் உள்ள ஓமநீர் தேவையில்லை . அதில் அதிக அளவு தண்ணீரோ  இல்லை வேறு எதுவும் கலந்திருக்க சான்ஸ் இருக்கு அதனால்தான் .
  டிஸ்கி :  இனி ஆங்கில மருந்து பக்கம் போகாமல் டாக்டரிடம் போவதுக்கு முன் இதை முயற்சி செய்யுங்கள். இதுவும் பூண்டு வைத்தியம் மாதிரி 100 சதம் டெஸ்ட் செய்தது  J  

Thursday, February 10, 2011

ஒரு ரூபாயில் மருத்துவம் ...!!!

128 என்ன சொல்றாங்ன்னா ...

         ஆரம்பத்துல  கவிஞர் பட்டம் குடுத்தாங்க ..அதுக்கு தகுந்த மாதிரி  கவிதைங்கிற பேர்ல இங்கே  இரெண்டும்  மூஞ்சி புக்கில சிலநேரம்  கிறுக்கி சில பல பேரை தடுமாறி விரட்டியும் இருக்கிறேன் .. இன்னொன்னு ((இது ரைட்டர் ))  வைட்டிங்க் லிஸ்டில இருக்கு .அதுப்போட நேரம் கிடைக்கல... 
பெட்ரோல் விலை +  ஸ்பெக்ட்ரம்  ஊழல்   
      
         சமீபத்தில  டால்டா  அடச்சே.....டாகுடர் பட்டம் கிடைச்சி அது சம்பந்தமா ஒரு பதிவு கூட போடாட்டி அது சரில்லை ...கூடவே  நர்ஸ் கேட்டும் அவர் தரல..சரி போனா போகட்டும் எங்காவது ஒரு மலை உச்சியில ஒத்தைக்கு ஒரு கிளினிக்  திறக்காமலா போயிடப்போரேன்.. ((மக்கா எங்காவது போலீஸ்  தொந்திரவு இல்லாத இடமா சொல்லுங்க ..கமிஷன் உங்க சுவிஸ் அக்கவுண்டுக்கு அனுப்பிடரேன் ))  அதனால இதில் ஒரு மருத்துவக்குறிப்பு சொல்றேன் கேட்டதும் இல்லாம முடிஞ்சா உபயோகித்துப் பாருங்க..ஓக்கே ....!! இனி சீரியஸ்  

       நமது உடம்பில  நாளுக்கு நாள்  கொழுப்பு சத்து சேர்ந்து கிட்டுதான் இருக்கு. முறையா உடற்பயிற்ச்சி செய்யும் போது அது தானா குறையும் . அப்படி இல்லாமப்போகும் போது அது ரத்தத்தில சேர்ந்துகிட்டே இருக்கும் . ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமா  சேரும் போதுதான் ஹார்ட் அட்டாக்  வரை போகும் ..ஆனா அதுல வர மிகக் குறைந்த அளவுதான் மூட்டு வலி . ஏன் அந்த இடங்களில் சில மெல்லிய ரத்தகுழாய்களில்  கொழுப்பு சேர்ந்து ரத்த ஓட்டத்தை தடை செய்திடும்... ஆரம்ப காலத்தில  மறத்து போனமாதிரி தெரியும்  ..சிலருக்கு கால் கை உப்பிப்போகும்...உட்கார்ந்தே இருப்பாங்க 

      இந்த மூட்டு வலி சிலருக்கு மாச, ஏன் சிலருக்கு வருஷ கணக்குல கூட இருக்கும் .எத்தனையோ  டாக்டர் ( ஒரிஜினல் ) கிட்ட போய் காட்டினாலும் அவர் சில பல டெஸ்ட் செய்ய சொல்லி ஆட்டோமேடிக்கா நமது பர்ஸை  குறைச்சி  பல்ஸை அதிகமாக்கி பட்டை பட்டையா மருந்து மாத்திரையை குடுத்து அனுப்புவார் . அப்போதைக்கி சரியாகி  கொஞ்ச நாள் கழிச்சி திரும்பவும் வந்துடும்.. நாமளும் பழைய டாக்டரை ( ஒரிஜினல் ) நல்லா திட்டிட்டு  வேற புது டாக்டரை பார்க்க போயிடுவோம்  ..இது ஒரு தொடர் கதையாகி போகும்..  இது வீட்டில் இருப்பவங்களுக்கு ..இதே  வெளியே  வேலைக்கு போகும் ஆண்களா இருந்தா ரொம்பவும் பாவம்.  சிலருக்கு அலைய முடியாமல் வேலையே  போகும் பரிதாப நிலையும் வரலாம் .

     இதை செலவே இல்லாமல் குணமாக்க  முடியும்..அதுவும்  வீட்டில்  இருக்கும் பொருளைக்கொண்டே  ..என்ன ஆச்சிரியமா இருக்கா... !!  இதுப்போல எத்தனையோ  பொருட்கள்  இருக்கு ஆனா நமக்கு அதன் அருமை ,பெருமை  புரிவதில்லை.. என் கூட வேலை பார்க்கும் ஒருவரின் உறவினருக்கு இந்த பிரச்சனையால்  நடக்கவே சிரமப்பட்டார்.. அப்போது நான் சொன்னேன் .இது மாதிரி செய்யுங்க போதுமுன்னு..சந்தேகத்தோடவே போனார்  அடுத்த நாள்  பயங்கர சந்தோஷத்தோட வந்து சொன்னார்.. இது கடந்த மூனு வருஷமா இருக்கு ஆனா இன்னைக்கி காலையில எழுந்திருச்சதும் பார்த்தேன் . ரொம்ப நன்றி என் வாழ்க்கையில மூட்டு வலியே வந்ததில்லை போல உணர்ந்தேன் என்றார் நான் சொன்னேன் எப்பவாவது திரும்ப வருவது மாதிரி இருந்தா இதை திரும்பவும் செய்யுங்க போதுமுன்னேன்  ...

       விஷயம் இதுதான்  வீட்டில் இருக்கும் வெள்ளை பூண்டு நாலு அதாவது நாலு பல்  எடுத்து அதை கத்தியால்  சின்ன சின்னதா நறுக்கி கொள்ளவும். அதை அரைக்கவோ நசுக்கவோ கூடாது. இரவு  தூங்கப்போகும் போது  அதாவது பெட்டில போய் தூங்கப்போகும் கடைசி நேரத்தில  அப்படியே வாயில் போட்டு முழுங்கி தண்ணீர் குடிக்க வேண்டியதுதான் ..தட்ஸ் ஆல்..... மறு நாள் காலை எழுந்து பார்க்கும் போது வித்தியாசம் தெரியும் ..

       காரணம்  இது ரத்தத்தின் அடர்த்தியை கொஞ்சம் குறைப்பதால இதயம் பம்ப் செய்ய அதிக மெனக்கெடுவதில்லை சாதாரனமாகவே பம்ப் செய்வதால் . ரத்தம் உடல் முழுக்க அதன் முழு பலத்துடன் பாய்வதால் மூட்டுக்களில்  தேங்கி இருக்கும் கொழுப்பு தானாக கரைந்து அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுகிறது ..நான்கு பூண்டுப்பல் ஒரு விலையே  இல்லை அப்படியே இருந்தாலும் அது அதிகபட்சம் ஒரு ரூபாய்  வருமா..? 
 அடுத்த தடவை யாருக்காவது  மூட்டு வலி மாதிரி இருந்தால் , தெரிந்தால்  டக்டரிடம் போவதுக்கு முன்  இதை செய்யுங்கள்.. தெரியாத வருக்கும் தெரியப்படுத்துங்கள்.. எல்லா புகழும் இறைவனுக்கே...!!