Friday, September 24, 2010

மாலையில் நானும் மனதோடு பேச ...!!

65 என்ன சொல்றாங்ன்னா ...

      பெரியோர்களே தாய்மார்களே.. இங்கே கூடி நிற்கும் கூட்டத்தாரே..வாங்க..வாங்கன்னு உங்களை அன்போடு அழைக்கிரேன்....!!
பிளீஸ் கொஞ்சம்  பயப்படாம  நில்லுங்க..ஹி..ஹி.. 



        கொஞ்சம் ஆண்களும்  ,பெண்களும்  தனித்தனியா நில்லுங்க..அப்பதான் 50 சதம் தனி இடம் தர வசதியா இருக்கும்..

முதல்ல நிக்க சொல்லிட்டு இதை போட்டா என்ன அர்த்தம்..ஹி..ஹி..

ஒரு வழியா மொக்கை போட்டுப்போட்டு பொறுக்க முடியாம என்னை திருத்த ஆசைப்பட்டு இதான் வழின்னு நெனச்சிட்டாங்கப்போல  அதனால




நடக்க முடியாதவங்களுக்கு ஸ்பெஷல் வண்டி வருது

  இது வரை என்னை திட்ட முடியாத வங்க ..கோவம் உள்ளவங்க அங்கேயும் வந்து ஒரு வார காலத்துக்கு கும்மி எடுக்கலாம்..தயவு தாட்சனை பார்க்காம ..!! இது ஒரு அரிய வாய்ப்பு  தவற விடாதீங்க..ஹி..ஹி... வருவீங்கன்னு நம்புறேன். இங்கே கிளிக்கினால் நேரே பாஸ்போர்ட் , டிக்கெட் , விசா இல்லாம வந்துடலாம. ((  பெட் அனிமல்ஸுக்கு தனி இட வசதி உண்டு...ஹா..ஹா..))

வலைச்சரத்தில் 

( 1 )  முதல் நாள் 

(2)  இரண்டாம் நாள் 

(3)   மூன்றாம் நாள்  

(4)  நான்காவது நாள்  

(5)    ஐந்தாவது நாள்   

(6 )  ஆறாவது  நாள் 

(7)   ஏழாவது  நாள்

Saturday, September 11, 2010

பிள்ளைகள் எத்தனை--5

155 என்ன சொல்றாங்ன்னா ...
       வலையுலகில் என்னை தொடர்ந்து நமது சகோஸ் களும் நிறைய  சந்தேகங்கள் கேட்டு வருகிறார்கள்  . இது ஆரோக்கியமான விஷயந்தான் . எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவுன்னு  வள்ளுவ தாத்தா சொல்லிட்டு போய் இருக்காரு .
மண்ணூக்கு மரம் பாரமா..? மரத்துக்கு கிளை பாரமா..?


     இதை ஸ்கூலில் சொல்லி குடுத்தப்ப  நான் கேட்டேன் . திருக்குறளை எழுதியது எப்போ அவருக்கு கல்யாணம் ஆனப்பிறகா ஆகிறத்துக்கு  முன்னமான்னு ..அப்போ வாத்தியாருக்கு  வீட்டில என்ன கஷ்டகாலமோ பாருங்க. என்னை தொறத்தி தொறத்தி அடிச்சாரு ...நானும் அவரும் ஸ்கூல மொத்தம் 6 ரவுண்டு ஓடினோ முன்னா பாருங்களேன்..

   வீட்டில தொல்லை தாங்காமதான் பிள்ளைகளை ஸ்கூல் அனுப்புறாங்க .அவங்க என்னான்னா ஹோம் ஒர்க்குனு சொல்லி திரும்பவும் வீட்டில தண்டனை தராங்க.. இது என்னா அநியாயம் அக்கிரமம். அப்பா அம்மா படிகாதவங்களா இருந்தா .அந்த பிள்ளை  என்ன செய்யும்.
என்னைய வச்சா ஃபிலீம் காட்ட சொல்றே..

        நமது  பிள்ளைகளுக்கும்  நம் மீது பாசம் அதிகம் , நமக்கும் நம் பிள்ளைகள் மீது பாசம் அதிகம் . இதில காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.. ஓக்கே.. இதில் எனக்கு என்ன சந்தேகமுன்னா என் பிள்ளை--> உன் பிள்ளை  சரி இதில் தென்னம்பிள்ளை  ,  கீரிப்பிள்ளை  , அணில் பிள்ளை இந்த  பிள்ளைகள் நடுவில எங்கே வந்துச்சி....
இருய்யா படம் மட்டும் பாத்துட்டு வரேன்...!!!

      அப்போ இது ம்ட்டும்தானா பிள்ளை. உலகத்துல.இந்த மூனுக்கும் மனுஷனுக்கும் என்ன உறவு .என்ன சொந்தம்
வீட்டில சொல்பேச்சு கேக்காட்டி பெரிசுகள் சொல்வது  உன்னை பெத்ததுக்கு  நாலு தென்னைம்பிள்ளை  பெத்திருக்கலாம் இல்லை வளர்த்திருக்கலாம்...... அதும் சரிதான்  ..ஸ்கூல்ல சேர்க்க வேண்டிய செலவில்லை ,,அதுவும் வளர்ந்து காதல் , கத்திரிகாய்ன்னு ஓடாது .கிரிப்பிள்ளையை  வளர்த்து போட்டோ போட ஆள் இருக்கு ((ங்கொய்யால ஒரு ஆளை பழி வாங்கியாச்சு )) ..ஆனா அணில் பிள்ளையை வளர்த்து ஃபிலிம் காட்ட யாராவது இருக்காங்களா..? வலையுலகில்

அச்சோ...கால் இல்லாத ஜீவன் விட்டுடு  பாவம்
        குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு சொல்ற படுபாவி பயலுங்க ..அப்போ அதன் குட்டியை ஏன் குரங்கு பிள்ளைன்னு சொல்லாம குரங்கு குட்டின்னு சொல்றானுங்க.. ஏன் இந்த ஓர வஞ்சனை..தன் மானம் தடுக்குதோ..?  அதனால மக்கள்ஸ் இனிமே யாராவது எது சொன்னாலும் தலையை ஆட்டாம ஏன் எதுக்கு எப்படின்னு கேக்கோனும் சரியா.. அப்பதான் ஒரு நல்ல ஜெனரேஷன் வரும் ((ஏதோ என்னால முடிஞ்சது )) சந்தேகம் கேட்டு ரொம்ப நாளாச்சேன்னு சிலபேர் கேக்கராங்கப்பா என்ன செய்ய இதுக்கு பதில் சொல்லுங்க :-))

டிஸ்கி :: நடுவில் கொஞ்சம் பிசியாக இருந்ததால்.பிளாக் பக்கம் வர முடியல .((பிளாகிலும் , பேஸ்புக்கிலும் , மெயிலிலும் ரமளான் வாழ்த்து சொன்ன அத்தனை நல்ல உள்ளத்துக்கும் நன்றிகள் பல))

Friday, September 3, 2010

கல்யாண மாலை...!!!

88 என்ன சொல்றாங்ன்னா ...

        ஊரில அடிக்கடி விஷேஷங்கள் நிறைய நடக்கும். யாருக்காவது கல்யாணம் , காது குத்தல் , இப்பிடி நிறைய நடக்கும் போது பத்திரிக்கைகள் அடிக்கடி வரும் .சிலநேரம்  ஓரே நேரத்தில மூனு கூட வருவதுண்டு .நானும் போய் சில கூடமாட உதவிகள் செய்வதுண்டு .ஓரே ஊர் , சொந்த பந்தங்கள் என்று விழாகளை கட்டும்.

      ஒரு தடவை பழைய நண்பனின் (எதிரி ) கல்யாணத்துக்கு இப்பிடி போகும் போது  கடைசி வரை ஒரு மாதிரியே இருந்தான் பேசவா வேண்டாமான்னு. சரி நானும் ஏதோ கல்யாண டென்ஷன் போலன்னு நினைச்சிகிட்டு மொய் எழுதிட்டு வந்தேன் .

      வீட்டில மாலை நேரத்தில  பேச்சு வாக்கில .வந்ததே பிரச்சனை..  ஏன் அந்த வீட்டு கல்யாணத்துக்கு வரல நானும் எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன் குடும்பத்தார்கள் குறை சொல்ல  , அப்போ நானும் ஏன் சாப்பிட்டு விட்டு மொய்யும் எழுதிட்டுதானே வந்தேன் . ஆனா அந்த தறுதலை பிடிச்சவந்தான் கடைசி வரை பேசவே இல்ல இதுல வேற என்மேல குறையான்னு நானும் கத்த ஒரு வழியா வீட்டில சமாதானம் ஆனது

       மறுநாள் அந்த தெரு வழியா போகும் போது , அந்த பய வீட்டிற்கு  வெளியே நின்னுகிட்டு இருந்தவன்  . ஓடி வந்து கையை பிடிச்சிகிட்டான் ..மாப்ளே என்னை மன்னிச்சிடுடா...!!!  நானும் மவுனம் சாதிக்க..உனக்கு எவ்வளவு பெரிய மனசு “ உனக்கு பத்திரிக்கையே நான் தரல .இருந்தும், என் கல்யானத்துக்கு வந்து உதவி செய்தும் மொய்யும் வச்சிகிட்டு போனே..!! 


             இவ்வளவு நல்லவனா நீ. இதை நினைச்சே எனக்கு நேத்திலிருந்து மனசு சரியில்ல அப்ப நான் தான் சரியில்லன்னு சொல்லி கண் கலங்கிட்டான்.. வந்துச்சே ஆத்திரம் என்ன சொல்ல திருடனுக்கு தேள் கொட்டினாற் போல பழமொழி படிச்சிருக்கேன் .ஆனா எந்நிலை அப்படி ஆச்சேன்னு ஆத்திரம் பிளஸ் அவமானம். எனக்குள்ள..அவ்வ்வ்வ்

         மனசை திடப்படுத்தி கிட்டு ( பின்ன இதை வெளிய சொல்ல முடியுமா மெகா பல்பு வாங்கியதை ) வெளிக்காட்டிகாம சரி விடு நா அப்புறமா வறேன்னு சொல்லிட்டு எஸ் ஆக பார்த்தா. பய புள்ள விடவே இல்ல. நான் இத்தனை நாளா உன்கிட்டே பேசவே இல்லை பத்திரிக்கையும் வைக்கல ஆனா நீ எதையும் மனசில வைக்காம  வந்தியேன்னு ஓரே ஃபீலிங்..

        அப்புற மென்ன அவன் வீட்டிற்கு கூட்டிகிட்டு போய் திரும்பவும் விருந்து சாப்பாடுதான்..ஹி...ஹி.. வீட்டிற்கு வந்து விஷயதை சொல்ல கிண்டலும் கேலியும் மாசம் பூரா போனது தான் மிச்சம் . இது இப்பிடி ஆனா அந்த இன்னொரு வீட்டிற்கு போகாததால அவனுக்கு கோவம் வந்து அவன் இப்ப பேசுவதே இல்லை ரோட்டில என் தலையை பார்தாலே அடுத்த சந்துக்குள் அவசரமா ஓடிடறான் .நான் யாரை சமாதானப்படுத்த நீங்களே சொல்லுங்களேன்...
 
   அதுக்காக அவனை இன்னொரு தடவை கல்யாணம் பண்ன சொல்லவா முடியும் .இந்த அனுபவத்துக்கு பிறகு இப்பெல்லாம் பத்திரிக்கையை நாலு ஜெராக்ஸ் எடுத்து வைக்கிறேன்னா பாத்துக்கோங்க. இதில நீங்க எப்பூடி...???  ஹா..ஹா...