கொஞ்ச நாளைக்கு ஒரு தடவை பீதியை கிளப்புறது நாசாவோட வேலை . எப்பவெல்லாம் விண்கற்கள் பூமியை அட்டாக் செய்யும் .அப்படின்னு ஒரு பெரிய லிஸ்டே வச்சிருக்கு . அதுல ஒன்னு 2019 பிப்ரவரி 1ம்தேதி யோட பூமி அழியப் போகுதாம். மாயன் காலண்டரை விட இவங்க வச்சிருக்கிற காலண்டர்தான் ரொம்பவும் பயங்கரமா இருக்கு .
நாசாவுக்கு யாராவது அப்பாயின்மெண்ட் வாங்கி தாங்களேன் . இருக்கிற கொஞ்ச நஞ்ச சந்தேகத்த அங்கேயே கொட்டிட்டு வந்துடரேன் J). பூமிக்கு வெளியிலிருந்து வரும் எந்த ஒரு விண் கல்லோ இல்லை எதுவாக இருந்தாலும் அது பூமியின் காற்று மண்டலத்தை தொடும்போது உராய்வினால் வெடித்து சிதறிவிடும் . இப்படி ஒரு ஸிஸ்டத்தை இறைவன் படைத்திருக்கிறான் .அப்படினு ஸையண்டிஸ்டுகள்தான் சொல்றாங்க
இதனால் அந்த பொருள் பூமியை தொடும் போது அதோட வேகம் குறைந்து பெரும்பாலும் கடலிலேயே விழுந்து விடும் .(நிலத்தை விட நீர்தானே 2 மடங்கு இருக்கு )இரெண்டு பேர் மேல் விழுந்து காயமான ரிப்போட் இருக்கு . அதுவுமில்லாம தினமும் சின்ன சின்ன துகள்கள் விழுந்துகிட்டேதான் இருக்கு.
என்னதான் விதவிதமா பயமுறுத்தினாலும் பிறந்த மனிதன் ஒரு நாள் இறக்கத்தானே வேனும் . இதானே இயற்கையின் விதி அப்படி இருக்கும் போது இதையெல்லாம் நினைத்து ஏன் கவலைப்படனும் . இதுல எனக்கு ஒரு சந்தேகம் என்னன்னா .இந்த ஒரு விண்கல்லாலேயே நம்ம பூமிக்கு மிகப்பெரிய அழிவுன்னு சொன்னா அதுக்கு அப்புறம் வரும் கல்லாலே இல்லாத பூமியை என்ன செய்து விடமுடியும் .அதுக்கு ஏன் இத்தனை பெரிய சார்ட் ரெடி செய்யனும். டைம் கிடைச்சா இங்கே பாருங்க
நானும் இதே சந்தேகங்களை ஒரு மெயில்ல கேட்டு எழுதினேன் .என்ன ஆச்சுன்னே தெரியல ....இதுவரை பதிலே கானோம் . ஒரு வேளை இதை வச்சி ஏதும் ஆராய்ச்சி செய்றாங்களான்னு தெரியல .ஹி..ஹி.... இதுல முதல் கேள்வி எந்த ஒரு வெளிப்பொருளும் நமது காற்றுமண்டலத்துக்குள் நுழையும் போது வெடிச்சு சிதறிவிடும் என்றால்.இங்கிருந்து அனுப்பும் இந்த ராக்கெட் மட்டும் எப்படி ஒன்னுமே ஆகாம போய்ட்டு பத்திரமா திரும்பி வருது ..அந்த ரகசியத்தை தெரிஞ்சவங்க யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்.