Friday, May 14, 2010

இலவசமா ஒரு சினிமா


          இனையத்தில் ஏராளமான சாஃப்ட்வேர்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதில் நமக்கு சில ரொம்பவும் பிடிக்கும். ஸைசும் குறைவாகவே இருக்கும். ஆனா அது காசு கொடுத்து வாங்குவதாக இருக்கும். ஃப்ரீவேராக இருக்காது. மனசுக்கு பிடித்ததை வாங்கலாம் தப்பில்லை. எப்படி வாங்குவது ,  க்ரெடிட் கார்டை உபயோகித்தால் ஒரு வேளை அது ஃபேகாக இருந்தால் ஐந்து டாலருக்கு பதில் ஐம்பது டாலராக அழவேண்டி வரலாம்.
சில நேரம் கார்டில் உள்ள மொத்த பணமும் காலி ஆகிவிடும்
        
       பொதுவா ஒரு சாஃப்ட் வேர் நமது கம்ப்யூட்டரில் பதியும் போது அனைத்தும் ஒரு இடத்தில் பதிவதில்லை. ஸ்டார்ட் மெனு, ப்ரோகிராம் ஃபைல் போல்டர், சிஸ்டம் 32ஃபோல்டர், ரெஜிஸ்டிரி ,ஃபான்ஸ் போல்டர் இப்படி பல இடத்தில் பதிகிறது. அதன் சேவை காலம் வரை இருக்கும் .சேவை முடியும் போது. பாஸ்வேர்ட் கேக்கும் , அல்லது சீரியல் கேக்கும்.

       இதை அன் இன்ஸ்டால் செய்தால் ரெஜிஸ்டிரியை தவிர அனைத்தும் டெலிட் ஆகும். மீண்டும் அதே சாஃப்ட் வேரை எத்தனை தடவை இன்ஸ்டால் செய்தாலும் மீண்டும் சீரியல் நெம்பர் கேக்கும். .வாங்க இப்ப ஓசியில மங்களம் பாடுவதை பாக்கலாம்.

        முதலில் CCleaner  என்ற சின்ன ஸைஸ்  சாஃப்ட் வேரை இங்கு டவுன் லேட் செய்யுங்கள். இது நமது கணிணியில் தேவையில்லாத , விடுபட்ட , குப்பை தொட்டியில் உள்ள , ரெஜிஸ்டிரியில் சரியில்லாத , டெம்ப்ரவரி ஃபைல்களை நீக்குகிறது.  முதலிலேயே இதை உபயோகித்து வருபவர்களுக்கு இது தெரியும்.

      பிரச்சனையுள்ள சாஃப்ட்வேரை முறைபடி அன் இன்ஸ்டால் செய்ததும். ஸ்டார்ட் மெனு போய் செர்ச் பாக்ஸில் அந்த சாஃப்ட்வேர் பெயரை கொடுத்து தேடிபாருங்கள். . தொடர்புடைய பெயர் ,ஃபோலடர் கண்ணில் பட்டால் அத்தனையையும் டெலிட் பண்ணுங்க. பிறகு சிகிளினர் ஐ டபுள் கிளிக்கி அதில்  கிளினரில் ரன் கிளினர் பட்டனை தட்டுங்கள். இரண்டு மூன்று முறை தட்டி மேலே பாக்ளில் காலியாகிற வரை பாருங்கள். பிறகு ரெஜிஸ்டிரி பட்டனை கிளிக்கி ஸ்கேன் இஷ்யூ .அதில் வேண்டாத பைல்கள் வரும் அப்படி  வந்ததும் ஃபிக்ஸ் செலக்டட் இஷ்யூ பட்டனை கிளிக்கி எல்லாத்தையும் டெலிட் பண்ணுங்க. இதையும் பாக்ஸ் காலியாகும் வரை பண்ணுங்க.


        பொதுவா எந்த புரோகிராமும் ஓடாத நேரத்துல சிகிளினரை யூஸ் பண்ணீணா உடனே பலன் அதிகம் கிடைக்கும். இல்லாட்டி அந்த சாஃப்ட்வேர் உபயோகத்தில் உள்ளதுன்னு எர்ரர் மெசேஜ் வரும். கம்ப்பூட்டரை ஒரு தடவை ரீஸ்டார்ட் பண்ணிட்டு பிறகு ஒரு தடவை சிகிளினரை யூஸ் பண்ணா அந்த பிரசனை சாஃப்ட் வேர் முற்றிலும் உங்க கம்யூட்டரில் இருக்காது.

       திரும்ப புதுசா அந்த சாஃப்ட் வேரை ரீஇன்ஸ்டால் பண்ணி யுஸ் பண்ணுங்க. எப்ப சீரியல் கேக்குதோ அப்ப திரும்பவும் மேலே உள்ள மாதிரி செய்யுங்க.  இது ஒரு  ஈஸியான முறை

        ”திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது

    இதுக்கும் அந்த பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


86 என்ன சொல்றாங்ன்னா ...:

சைவகொத்துப்பரோட்டா said...

உபயோகமான தகவலுக்கு நன்றி ஜெய்லானி.

Paleo God said...

// இதுக்கும் அந்த பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை//

அதானே.:))

இதே போல நிறைய பகிரவும். :)

r.v.saravanan said...

தகவலுக்கு நன்றி ஜெய்லானி

ஜெய் said...

எனக்கு சோறு போடறதே இந்த சாஃப்ட்வேர்தான்.. எங்க கம்பெனி சஃப்ட்வேரை இப்படி டகால்டி பண்ணாத வரைக்கும் சந்தோஷம், ஜெய்லானி.. :-)

ஜெய் said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
// இதே போல நிறைய பகிரவும். :) //

ரைட்டு.. ஒரு குரூப்பாத்தான் கெளம்பியிருக்காங்க.. :)

malar said...

வேறு என்ன திட்டம் போட்டு திருடாமல் ....


சட்டம் போட்டு தடுக்கலாம்....

vanathy said...

ஜெய்லானி, நிறைய பயனுள்ள தகவல்கள் எழுதுகிறீர்கள். ஏதோ ஒரு இடத்தில் கம்யூட்டர் பற்றி பெரிதாக தெரியாது என்று சொன்னதாக ஞாபகம். ஆனால் இந்த போடு போடுகிறீர்கள்.

ஜெய்லானி said...

@@@சைவகொத்துப்பரோட்டா--//உபயோகமான தகவலுக்கு நன்றி ஜெய்லானி.//

வாங்க சை .கொ.ப .கிடைக்கிர எதையும் இனி விடாதீங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║--//

// இதுக்கும் அந்த பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை//

அதானே.:))

இதே போல நிறைய பகிரவும். :) //

என்னய வில்லனாக்கிடாதிங்கய்யா .பேருக்கு பின்னாடியே பார்கோட் அதுவும் டிரேட் மார்க்வுடன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--// தகவலுக்கு நன்றி ஜெய்லானி //

வாங்க!! சரவணண். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஹேமா said...

நிறைவான செய்திகள் ஜெய்.

ஜெய்லானி said...

@@@ஜெய்--//எனக்கு சோறு போடறதே இந்த சாஃப்ட்வேர்தான்.. எங்க கம்பெனி சஃப்ட்வேரை இப்படி டகால்டி பண்ணாத வரைக்கும் சந்தோஷம், ஜெய்லானி.. :-)//

அந்த சாஃப்ட்வேர் பேரை சொன்னால் கொஞ்சம் தேவலை ரிவர்ஸ், ஃபிரண்ட்ன்னு ரிப்பேர் பண்ணி பாத்துடலாம் . யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்.

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
// இதே போல நிறைய பகிரவும். :) //

ரைட்டு.. ஒரு குரூப்பாத்தான் கெளம்பியிருக்காங்க.. :)//

பின்ன நாங்கெல்லாம் யாராம். வாங்க நீங்களும் ஒரே ஜோதியில ஐக்கியமாயிடலாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@malar--// வேறு என்ன திட்டம் போட்டு திருடாமல் .... சட்டம் போட்டு தடுக்கலாம்....//

மலர் அக்காவ்!! நீங்க அப்பாவி, அதையும் எங்கிட்டேயே கேக்குறீங்களே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய்லானி, நிறைய பயனுள்ள தகவல்கள் எழுதுகிறீர்கள். ஏதோ ஒரு இடத்தில் கம்யூட்டர் பற்றி பெரிதாக தெரியாது என்று சொன்னதாக ஞாபகம். ஆனால் இந்த போடு போடுகிறீர்கள்.//

இப்பவும் அதாங்க சொல்றேன். திமிங்கிலங்கள் உலவும் கடலில் நான் ஒரு சிப்பி அவ்வளவுதான். பெரியதாக ஒன்றும் தெரியாது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹேமா--//நிறைவான செய்திகள் ஜெய்.//

வாங்க குழந்தைநிலா !!நிறைவான செய்திக்கு சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

நன்றி

எம் அப்துல் காதர் said...

soooper ஐடியா ஜெய்லானி!!!

// ”திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது ” இதுக்கும் அந்த பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.//

-"திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது."

- நாங்க திருந்திட்டோமுங்க.

// திமிங்கிலங்கள் உலவும் கடலில் நான் ஒரு சிப்பி அவ்வளவுதான்//
- நீங்க சிப்பி யல்ல, எங்களுக்கு முத்தான முத்து அல்லது சாஃப்ட் வேரை செதுக்கும் சிற்பி என்று வேணும்னா வச்சுக்கலாமா?

GNU அன்வர் said...

உங்க தலைப்புக்கும் இந்த பதிவுக்கும் சம்மந்தம் இருக்கா இப்படி படிக்கிறுதுக்காக தலைப்பு வைக்காதிங்க

GEETHA ACHAL said...

அருமையான பயனுள்ள தகவல்...மிகவும் நன்றி ஜெய்லானி...

MUTHU said...

ட்ரை பண்ணி பார்த்து விட்டு சொல்கிறேன்,தகவலுக்கு நன்றி

MUTHU said...

”திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது ”


ஆமாம் மகா ஜனங்களே சத்தியமாய் இல்லை

MUTHU said...

ஜெய்லானி said...
இப்பவும் அதாங்க சொல்றேன். திமிங்கிலங்கள் உலவும் கடலில் நான் ஒரு சிப்பி அவ்வளவுதான். பெரியதாக ஒன்றும் தெரியாது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி/////////////


திமிங்கிலங்கள் நிறைய இருக்கும் ஆனால் சிப்பி

MUTHU said...

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//////


இப்போ எனக்கு கண்ணு தெரிய்முள்ள ,

முற்றும் அறிந்த அதிரா said...

ஜெய்..லானி, அருமையான உபயோகமான தகவல்..
திட்டம் போட்டுத் திருடி வைத்தேனென்றால் ஒருகாலத்தில் எனக்கிது உதவலாம்.... ஓக்கை முறைக்க வாணாம்....

கண் என்றால் ரொம்பப் பிடிக்குமோ? எனக்கும் கண்கள் ரொம்ப பிடிக்கும்.

கமெராவை தொலைச்சிட்டீங்களோ? இன்னும் நிலவைக் காணேல்லையே??? இங்கு எங்களுக்கு அயகா தினமும் தெரியுதூஊஊஊஊஊஉ :):):):).

Prasanna said...

ஆ.. நாலு பேருக்கு நல்லது நடக்குதுனா எதுவுமே தப்பில்ல:) ஹீ ஹீ

நாடோடி said...

ந‌ல்ல த‌க‌வ‌ல் ஜெய்லானி... யூஸ் ப‌ண்ணிக்கிறேன்..

காஞ்சி முரளி said...

ஜெய்லானி அவர்களே...

உங்கள் இந்த இடுகை.. எனக்கு புரியாமலே படித்து முடித்தேன்... இதெல்லாம் computer புலிகளுக்கு மட்டுமே புரியும்.... computer பொறுத்த வரையில் நான் ஒரு "கைநாட்டு". அதனால்தான் 'புரியாமலே படித்து முடித்தேன்' என்று சொன்னேன்...

இந்த இடுகையில் கண் போட்டோவினுள் வரிகள்... realy super...!

"எதை வேண்டுமானாலும் செய். முயலு. முடி.
ஆனால் உனக்கு சோறு போடும் உன் கல்வி மற்றும் வேலையை மட்டும் மறந்து விடாதே.
அதில் முன்னேற எதாவது வாய்ப்புக்கள் உண்டோவென பார்த்துக்கொண்டே இரு. ஏனனெனில் அதனால்தான் நீ இவ்வளவு தூரமும் வந்திருக்கின்றாய்.."

இந்த தத்துவ வரிகளை தேடிப்பிடித்து போட்ட தங்களுக்கு பாராட்டுக்கள்...
வாழ்த்துக்கள்...

நட்புடன்..
காஞ்சி முரளி....

ஜெயந்தி said...

சிலதெல்லாம் தப்பில்லைங்க.

Priya said...

தகவலுக்கு நன்றி!

Geetha6 said...

ஓசியில மங்களம் பாடி ஆச்சு..
மிக நன்றி

மனோ சாமிநாதன் said...

மிகவும் உபயோகமான பதிவு.
அந்தக் கண் ஒரு ஓவியம் போல மிக அழகு.
அதன் கீழுள்ள வரிகள் அதையும் விட அழகு!

ஜெய்லானி said...

@@@தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை-- //

நன்றி //

யப்பா , கண்ணா , ராஸா . பேரு ரொம்ப சின்னதா இருக்கே!! வாங்க !! வாங்க!!உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//soooper ஐடியா ஜெய்லானி!!!//

இங்கிலிபிஸ் கொலையா !! ஆகட்டும். என் பேருல பாதிய வச்சதால விட்டுடறேன்.
// -"திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது."

- நாங்க திருந்திட்டோமுங்க. //

பாட்டையெல்லாம் முழுசா பாடி முழு வில்லனா என்னை ஆக்கிடாதீங்க எசமான்

// திமிங்கிலங்கள் உலவும் கடலில் நான் ஒரு சிப்பி அவ்வளவுதான்//
- நீங்க சிப்பி யல்ல, எங்களுக்கு முத்தான முத்து அல்லது சாஃப்ட் வேரை செதுக்கும் சிற்பி என்று வேணும்னா வச்சுக்கலாமா?//

ஐயே தலைய சுத்துதே!! ஹார்ட்டெல்லாம் வலிக்கிற மாதிரி இருக்கே!! கைகாலெல்லாம் நடுங்குதே!! அதுக்கு இப்படியா ஐஸ் வைக்கிறது. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@snegan--//உங்க தலைப்புக்கும் இந்த பதிவுக்கும் சம்மந்தம் இருக்கா இப்படி படிக்கிறுதுக்காக தலைப்பு வைக்காதிங்க //

வாங்க சினேகன் உங்க இந்த நேர்மை புடிச்சிருக்கு. இந்த கமெண்ட் பாக்ஸ் மேல இருக்கிறதை பார்த்து பயந்து கருத்து போடலயே ?( ச்சே.. எப்பூடியெல்லாம் ஆளை பிடிக்க வேண்டி வருது ) உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Geetha Achal--//அருமையான பயனுள்ள தகவல்...மிகவும் நன்றி ஜெய்லானி...//

வாங்க !! வாங்க!! சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MUTHU--//ட்ரை பண்ணி பார்த்து விட்டு சொல்கிறேன்,தகவலுக்கு நன்றி//

இப்பிடிதான் என் வாழ்க்கை நாலு வருஷமா ஓடுது தல .

//”திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது ”


ஆமாம் மகா ஜனங்களே சத்தியமாய் இல்லை//

பின்ன நாங்கெல்லாம் அக் மார்க் . ஐ எஸ் ஐ முத்திரை இட்ட சுத்தமான நல்லவங்க இல்லையா முத்து.

//திமிங்கிலங்கள் நிறைய இருக்கும் ஆனால் சிப்பி //

ஓஹோ!! அப்பூடி ஒரு அர்த்தம் கூட இருக்கா . என் மரமண்டைக்கு புரியலையே!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MUTHU--//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//////


இப்போ எனக்கு கண்ணு தெரிய்முள்ள ,//

அடப்பாவி இதுக்குதான் இத்தனை பில்டப்பா!!!. சிஷ்யா உம் பக்தியை மெச்சினோம் உன் கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம். இன்று முதல் உறக்கமே வராது முழித்த படியே இருப்பாய். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லாத்தான் யூஸ் பண்ணுறீங்க.. நாங்களும் இதைத்தான் கஷ்டமர்களுக்கு இன்ஸ்டால் பண்ணிக்கொடுப்போம். நமக்குத் தெரிஞ்சதை நாலுபேருக்கு சொன்னா நல்லதுதான். நன்றி ஜெய்லானி..

ஜெய்லானி said...

@@@athira--//ஜெய்..லானி, அருமையான உபயோகமான தகவல்..திட்டம் போட்டுத் திருடி வைத்தேனென்றால் ஒருகாலத்தில் எனக்கிது உதவலாம்.... ஓக்கை முறைக்க வாணாம்....//

எனக்கும் இது நிறைய இடத்தில் உதவுது. அதனால்தான் இங்கு போட்டேன் .

//கண் என்றால் ரொம்பப் பிடிக்குமோ? எனக்கும் கண்கள் ரொம்ப பிடிக்கும்.//

பின்ன , மான் , முயல் , அழகான பெரிய கண் உள்ள ( ஆந்தை இல்லை ) பெண் பார்தால் பிடிக்காதா என்ன . கண் இதயத்தை காட்டும் கண்ணாடி.

//கமெராவை தொலைச்சிட்டீங்களோ? இன்னும் நிலவைக் காணேல்லையே??? இங்கு எங்களுக்கு அயகா தினமும் தெரியுதூஊஊஊஊஊஉ :):):):)//

இப்பூடியா வெறுப்பேத்துவது அமாவசை நேரத்துல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பிரசன்னா--//ஆ.. நாலு பேருக்கு நல்லது நடக்குதுனா எதுவுமே தப்பில்ல:) ஹீ ஹீ //

பாத்து கம்பெனி காரங்களுக்கு தெரியாம பாத்துக்கோங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நாடோடி--//ந‌ல்ல த‌க‌வ‌ல் ஜெய்லானி... யூஸ் ப‌ண்ணிக்கிறேன்..//

இதில இன்னும் நிறைய வசதி இருக்கு . அதில ஒன்னுதான் மேல சொன்னது. நமது கம்ப்யூட்டருக்கு அவசியமான ஒன்று . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மின்மினி RS said...

ஆமா ஜெய்லானி டிவியில ஒண்ணுமே தெரியலியே..

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி--//ஜெய்லானி அவர்களே... உங்கள் இந்த இடுகை.. எனக்கு புரியாமலே படித்து முடித்தேன்... இதெல்லாம் computer புலிகளுக்கு மட்டுமே புரியும்.... computer பொறுத்த வரையில் நான் ஒரு "கைநாட்டு". அதனால்தான் 'புரியாமலே படித்து முடித்தேன்' என்று சொன்னேன்...//

சார் , இப்பவெல்லாம் மளிகை கடை வரை கம்ப்யூட்டர் வந்து விட்டது. நாம பிறக்கும் போது கத்துகிட்டா பிறந்தோம். அதுபோலதான் இதுவும். உண்மையில் கம்ப்யூட்டர் மட்டுமெ புலி அதுக்கு முன்னே நாம எல்லாம் எலி மட்டுமே( அதன் செயல் வேகத்துக்கு முன்னால் )

//இந்த இடுகையில் கண் போட்டோவினுள் வரிகள்... realy super...!"எதை வேண்டுமானாலும் செய். முயலு. முடி. ஆனால் உனக்கு சோறு போடும் உன் கல்வி மற்றும் வேலையை மட்டும் மறந்து விடாதே. அதில் முன்னேற எதாவது வாய்ப்புக்கள் உண்டோவென பார்த்துக்கொண்டே இரு. ஏனனெனில் அதனால்தான் நீ இவ்வளவு தூரமும் வந்திருக்கின்றாய்.."

இந்த தத்துவ வரிகளை தேடிப்பிடித்து போட்ட தங்களுக்கு பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்...//

இதில் போட்டோ வேறு எழுத்துக்கள் வேறு. இரண்டையும் இனைத்து வைத்துள்ளேன். இதை பார்க்கும்போதெல்லாம் மனம் ஜிவ்வென்று உற்சாகம் பிறக்கும். என் நீண்ட நாள் டெஸ்ட்டாப் வால்பேப்பர் இது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி--//சிலதெல்லாம் தப்பில்லைங்க.//

அப்புடின்னா சரிதான் .அப்ப இன்னும் பாத்திடலாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Priya--// தகவலுக்கு நன்றி! //

வாங்க!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Geetha6--//ஓசியில மங்களம் பாடி ஆச்சு.. மிக நன்றி //

ஹி..ஹி.. சேம் பிளட்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மனோ சாமிநாதன்--//மிகவும் உபயோகமான பதிவு.
அந்தக் கண் ஒரு ஓவியம் போல மிக அழகு. அதன் கீழுள்ள வரிகள் அதையும் விட அழகு! //

ஆரம்பத்துல வெறும் கண் மட்டுமே இருந்தது பிறகு அந்த வரியை சேர்த்தேன். இது என் டெஸ்க்டாப் வால்பேப்பர் . ஏனே இதை மாத்த மனசு வரவே . இல்லை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//நல்லாத்தான் யூஸ் பண்ணுறீங்க.. நாங்களும் இதைத்தான் கஷ்டமர்களுக்கு இன்ஸ்டால் பண்ணிக்கொடுப்போம். நமக்குத் தெரிஞ்சதை நாலுபேருக்கு சொன்னா நல்லதுதான். நன்றி ஜெய்லானி..//

உண்மைதான் ஷேக்!!, இதில நிறைய பலன் இருக்கு. இடம் மிச்சமாகும் , வேகமா பூட் ஆகும். சிக்கல் இருக்காது. ஆனால் இதில் உள்ள இன்னெரு வசதியை சொல்ல வந்தேன் அவ்வளவுதான். போகும் போது எதை கையில கொண்டு போக போறோம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மின்மினி--//ஆமா ஜெய்லானி டிவியில ஒண்ணுமே தெரியலியே..//

வாங்க!! உங்க ஆசையை சீக்கிரமா நெற வேத்திடுவோம்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அன்புடன் மலிக்கா said...

எதுவுமே தெரியாது தெரியாதுன்னு சொல்லிப்புட்டு இத்தை புட்டு புட்டு வக்கிறீகளே. அமுஸ்பிரே.

சூப்பர் நல்ல தகவல்கள்..

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பயனுள்ள தகவல். சில தகவல் புதியதாகவும் இருக்கிறது.

இன்னும் நிறைய எழுதுங்கள் ஜெய்லானி.

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றி ஜெய்லானி.

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//எதுவுமே தெரியாது தெரியாதுன்னு சொல்லிப்புட்டு இத்தை புட்டு புட்டு வக்கிறீகளே. அமுஸ்பிரே. சூப்பர் நல்ல தகவல்கள்.//

நெசந்தாங்க நா ஒரு பச்சை கொயந்த. கற்றது தூசி அளவு , கல்லாதது கடல் அளவு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அக்பர்--//நல்ல பயனுள்ள தகவல். சில தகவல் புதியதாகவும் இருக்கிறது. இன்னும் நிறைய எழுதுங்கள் ஜெய்லானி.//

வாங்க அக்பர்!! இப்பயும் ஏதாவது சொல்லிடுவீங்களோன்னு நெனச்சேன். நெகடிவா இருந்தாலும் சொல்லலாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@செ.சரவணக்குமார்--//பகிர்வுக்கு நன்றி ஜெய்லானி.//

வாங்க!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

MUTHU said...

ஜெய்லானி said...
அடப்பாவி இதுக்குதான் இத்தனை பில்டப்பா!!!. சிஷ்யா உம் பக்தியை மெச்சினோம் உன் கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம். இன்று முதல் உறக்கமே வராது முழித்த படியே இருப்பாய். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி//////////////

இப்ப தான் தெரியுது நேத்து ஒரு புல்லை உள்ள விட்டும் ஏன் தூக்கம் வரவில்லை என்று,இரு உனக்கும் சாபம் விரைவில் கொடுக்கப்படும்

MUTHU said...

ஜெய்லானி நேற்று என் நண்பர் அவர் கம்ப்யூட்டர் பார்மேட் பண்ணும் போது ஒரிஜினல் cd யை உடைத்து விட்டார் எப்படி என்று இன்னும் எனக்கு இன்னும் விளங்க வில்லை,அவரிடம் இருப்பது Fujitsu siemens product recovery cd rom windows xp edition familliale sp2 ,இப்போது அந்த வெர்ஷன் டௌன்லோட் பண்ண முடியுமா,முடியும் என்றால் எப்படி என்று தெரியபடுத்தவும் என் ID muthusaravanan@hotmail.fr or srilathasaravanan@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும் நன்றி

SUFFIX said...

ஓ.கே ரூட் கிளியரு...நன்றி!!

ஜெய்லானி said...

@@@MUTHU--//இப்ப தான் தெரியுது நேத்து ஒரு புல்லை உள்ள விட்டும் ஏன் தூக்கம் வரவில்லை என்று,இரு உனக்கும் சாபம் விரைவில் கொடுக்கப்படும் //

புல்லை துண்ணா தூக்கம் வராதுய்யா !!டிஃபனா துண்ணாதான் தூக்கம் வரும். நல்ல சாபமா குடுய்யா கனவில கங்கா , யமுனா , சரஸ்வதி நாட்டியம் ஆடட்டும்..ஹி...ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MUTHU said..//.................//

இரண்டு மெயிலயும் பாருங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சசிகுமார் said...

சார் வழக்கம் போல உங்கள் பதிவு அருமை , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

@@@SUFFIX--//ஓ.கே ரூட் கிளியரு...நன்றி!!//

வாங்க ஷாஃபி.சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வேலன். said...

அருமையான பதிவு சார்...திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக்கொண்டே இருக்கின்றது....ம்...கூம்...திருடனிடம் சாவியே கொடுத்துவிட்டீர்கள்...நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

MUTHU said...

உடனே பதில் அனுப்பியதற்கு நன்றி நண்பா ட்ரை பண்ணி விட்டு பதில் சொல்கிறேன்

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//சார் வழக்கம் போல உங்கள் பதிவு அருமை , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

வாங்க சசி, ச்ந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வேலன்.--//அருமையான பதிவு சார்...திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக்கொண்டே இருக்கின்றது....ம்...கூம்...திருடனிடம் சாவியே கொடுத்துவிட்டீர்கள்...நன்றி...வாழ்க வளமுடன், வேலன் //

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தலைவரே!!.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Thenammai Lakshmanan said...

காஞ்சி முரளி சொன்னதுதான் ஜெய்லானி.. ரிப்பீட்ட்டூ

ஜெய்லானி said...

@@@thenammailakshmanan--//காஞ்சி முரளி சொன்னதுதான் ஜெய்லானி.. ரிப்பீட்ட்டூ //

தேனக்கா !! படத்தையா பாடத்தையா ? நடுராத்திரியில குழப்பி விட்டுடீங்களே!! ஓக்கே ..அப்ப உங்களுக்கும் அவருக்கு சொன்ன அதே பதில்தான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Jaleela Kamal said...

சொல்லனுமுன்னு நினைத்து வந்ததை இங்கு நிறைய பேர் சொல்லிட்டாங்க.

அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு,. ரொம்ப நன்றீ..

கண் படம் ஸ்ஸ்ச் ரொம்ப அழகு, அந்த கீழ் உள்ள தகவல் அதை விட அருமை.

ஜெய்லானி said...

@@@Jaleela--//சொல்லனுமுன்னு நினைத்து வந்ததை இங்கு நிறைய பேர் சொல்லிட்டாங்க.
அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு,. ரொம்ப நன்றீ..//

அதை உங்க வாயல கேட்பதும் சந்தோஷம்.
//கண் படம் ஸ்ஸ்ச் ரொம்ப அழகு, அந்த கீழ் உள்ள தகவல் அதை விட அருமை.//

இதுதான் எனக்கு பூஸ்ட் மாதிரி. டெஸ்க்டாபில பாக்கும்போது மூளை கொஞ்சமாவது வேலை செய்யும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

MUTHU said...

நன்றி நண்பா உன் பைல் வேலை செய்கிறது

MUTHU said...

ஜெய்லானி said...
//கண் படம் ஸ்ஸ்ச் ரொம்ப அழகு,

இதுதான் எனக்கு பூஸ்ட் மாதிரி. டெஸ்க்டாபில பாக்கும்போது மூளை கொஞ்சமாவது வேலை செய்யும் . //////



எங்க வீட்டில் பூரி கட்டை உடைஞ்சது தான் மிச்சம்

ஜெய்லானி said...

@@@MUTHU--//நன்றி நண்பா உன் பைல் வேலை செய்கிறது//

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்.

//எங்க வீட்டில் பூரி கட்டை உடைஞ்சது தான் மிச்சம்//

இதுக்குதான் முதல்லயே அக்ரிமெண்ட் போடனுங்கிறது. வன்முறை யாரும் கூடாதுங்கிறது. தூங்கும் போதும் ஹெல்மெட் போட்டுக்க. அம்மி க்கல்லுக்கு ஹெல்மெட் உத்திர வாதமில்லை.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆணி அதிகம் சார்..அதனாலதான் லேட்..

இதை ஆபிஸ் கம்யூட்டர்ல டிரை பண்ணிட்டு, அப்புறமா, வீட்டு கம்யூட்டர்ல செய்கிறேன்..
ஏன்னா..நான் உஷார் பேர்வழி..ஹி..ஹி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்லாலாலா... சொன்னீங்க.

எம் அப்துல் காதர் said...

--//soooper ஐடியா ஜெய்லானி!!!//
//இங்கிலிபிஸ் கொலையா !! ஆகட்டும். என் பேருல பாதிய வச்சதால விட்டுடறேன்//.

குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர் (ஜெய்லானி) களும் இருக்கிறார்கள். இதில் நீர் எந்த ரகம் என்று கேள் (மங்குனி) மன்னா. நீ போட்டிருக்கும் சட்டை உனதா?

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//ஆணி அதிகம் சார்..அதனாலதான் லேட்..இதை ஆபிஸ் கம்யூட்டர்ல டிரை பண்ணிட்டு, அப்புறமா, வீட்டு கம்யூட்டர்ல செய்கிறேன்.. ஏன்னா..நான் உஷார் பேர்வழி..ஹி..ஹி //


பட்டு , இதெல்லாம் சீக்ரெட் வெளியே சொல்லக்கூடாது. யார் என்ன சிடி தந்தாலும் , வைரஸ் யூ எஸ் பி குடுத்தாலும் முத செக் என் ஆபீஸ் கம்ப்யூட்டர் தான் பலி ஆடு . அதுல நல்லா ஒடுனா மட்டுமே என் பிசில போடுறதே...

நான் உஷாருக்கு உஷார் பார்ட்டியாக்கும் ஹி... ஹி....சேம் பிளட் !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//நல்லாலாலா... சொன்னீங்க.//

வாங்க நிஜாம் , மாசக்கணக்குல ஆளையே கானேம்!! . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர் (ஜெய்லானி) களும் இருக்கிறார்கள். இதில் நீர் எந்த ரகம் என்று கேள் (மங்குனி) மன்னா. நீ போட்டிருக்கும் சட்டை உனதா?//

வாத்யாரே!!! இது எங்க தாத்தா காலத்து கேள்வி. நான் சட்டை போட்ட மாதிரியா உங்க கண்ணுக்கு தெரியுது !! அப்ப டாக்டர பாத்துட வேண்டியது தான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப அவசியமான தகவல்..

கலக்குறீங்க போங்க..

ஒன்னும் தெரியாது, தெரியாதுன்னு சொல்லிட்டே இப்படியா??
ஹ்ம்ம். நடக்கட்டும் நடக்கட்டும்..:) :)

ஜெய்லானி said...

@@@Ananthi--//ரொம்ப அவசியமான தகவல். கலக்குறீங்க போங்க..ஒன்னும் தெரியாது, தெரியாதுன்னு சொல்லிட்டே இப்படியா??
ஹ்ம்ம். நடக்கட்டும் நடக்கட்டும்..:) :)//

வாங்க!!இது சின்ன மேட்டருங்க.. நா ஒரு அப்பாவி கொயந்த .ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

MUTHU said...

ஜெய்லானி said...

வாங்க!!இது சின்ன மேட்டருங்க.. நா ஒரு அப்பாவி கொயந்த .ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி//////


நம்பிட்டேன் (சத்யமாதான்)

படம் காட்டினது போதும் வேறு எதாவது போடு

ஸாதிகா said...

பயனுள்ள தகவல்.தொடருங்கள்.

Menaga Sathia said...

உபயோகமான தகவல்,நன்றி!!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அணைத்து பதிவுகளும் அருமை


இன்னும் நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள் ...


(இடுகையின் முகவரியை மட்டும் இணைக்கவும் Like this:http://kjailani.blogspot.com/2010/05/blog-post_14.html
not ur blog URL like this: http://kjailani.blogspot.com)

பொன் மாலை பொழுது said...

மிக எளிதாக ,எளிமையாக சொல்கிறீர்கள்.
சிலர் தேவையற்ற வார்த்தைகளை போட்டு கடுபேத்துவார்கள்.
இந்தவகையில் நீங்கள் நம்மாளுதான்.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))