Wednesday, November 10, 2010

சந்தேகம்-5

141 என்ன சொல்றாங்ன்னா ...

        இந்த வாரம் எந்த சந்தேகமும் யார்கிட்டையும் கேக்கக் கூடாதுன்னு நினைச்சாலும் முடியல .பாருங்க மூளை துருபிடிக்க பாக்குது அதனால எப்பவும் கெரசின்ல போட்டு வைக்க வேண்டி இருக்கு.  எப்பவும் தமிழ்ல சந்தேகம் கேட்டு அலுத்துப்போச்சி அதனால இந்த தடவை இங்கிலீஷில கேக்கரேன் பதட்டப்படாம , பயந்துகிட்டு எஸ்கேப் ஆகாம , நான் ஸ்கூலுக்கே போகலன்னு பொய் சொல்லாம தைரியமா பதில் சொல்லுங்க 
எலேய் ....!!பின்னாடி நா இருக்கேன் வண்டியை நேரே பாத்து ஓட்லே..!!

    ஆட்டோ ஓட்டுபவரை ஆட்டே டிரைவர்ன்னு சொல்றோம் , பஸ் ஓட்டுபவரை பஸ் டிரைவர்ன்னு சொல்றோம் , லாரி ஓட்டுபவரை லாரி டிரைவர்ன்னு சொல்றோம் , ஹி..ஹி.. ஸ்குரு டைட் செய்பவரை ஸ்குரு டிரைவர்ன்னு சொல்ரோம்
     சைக்கிள் ஓட்டுபவரை  ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் ..?  பைக் , ஸ்கூட்டர் ஓட்டுபவரையும் ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் ..? இதுல நீங்க சொல்லலாம் அதையெல்லாம் நாமே ஓட்டறோம் அதனால பேர் இல்லைன்னு .ஆனா அந்த ஆள் ஒரு காரோ , இல்லை டெம்போ , மினி வேனோ , வாங்கினாலும் , இல்லை ஓட்டினாலும் நான் டிரைவர்ன்னு எப்படி சொல்றாங்க .
லைசன்ஸுக்கு  அப்ளை பண்ணிட்டு அலப்பறையை பாரு..?முடியல..
    சரி , அடுத்த கொஸ்டின் அதே ,  ஆனா நோ சாய்ஸ்.. , கப்பல் ஓட்டுபவரை ஷிப் டிரைவர்ன்னு சொல்லாம கேப்டன்னு ஏன் சொல்றாங்க அவர் என்ன துப்பாக்கி வச்சிகிட்டு போருக்கா போறார். கப்பல் டிரைவர்ன்னு சொன்னா அசிங்கமாவா இருக்கு. அதே போல ஃபிளைட் ஓட்டுபவரை  கேப்டன்னு சொல்லவில்லை , டிரைவர்ன்னும் சொல்லவில்லை  பைலட்டாம் .. அடப்பாவிங்களா.. ஒரே வேலை செய்பவனுக்கு  மூனு வித பேரா..? 
      இங்கிலீஷ் காரன் எதை சொன்னாலும் ஆமாம் சாமி போட்டே பழகிட்டு .இது வரை யாரும் எதிர் கேள்வி கேக்காதது ஏன்னு புரியல . ஒரு படத்துல வந்த ஜோக் மாதிரி வெள்ளையா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் .அவன் எது சொன்னாலும் சரியாதான் இருக்குங்கிர மாதிரி இருக்கு.
பாருய்யா இவனையெல்லாம் தூக்கிட்டு அலைய வேண்டியிருக்கு.... இஹிக்.ஈஹி..ஹி..ஈ.

    அதனால பொதுமக்களாகிய நீங்க தெரிஞ்சதை சொன்னா எனக்கும் புரியும் நானும் கொஞ்சம் கத்துப்பேன் ,எங்கேயே யாரோ கத்துதரதா படிச்சேன் ஆனா நினைவு இல்லை .இல்லாட்டி கீழே கண்டவாறு அறிவிப்பு விரைவில் வரும்

முக்கிய அறிவிப்பு:

    இப்பதான் நான் எல்கேஜி யிலிருந்து ஆரம்பிச்சி இருப்பதால இதுல ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கு. நல்ல தலையில நிறைய முடி உள்ள இளவயது ஆசிரியர்கள் என்னை தொடர்புக் கொள்ளலாம் . உணவு மற்றும் தங்குமிடம் இலவசம் ..குறைந்தது மூனுமாசம் தொடர்ந்து இருந்தால் கேட்ட தொகையை விட இரண்டு மடங்கு கூடுதல் சம்பளம் தரப்படும்..
விளக்கம்
(1)தலையில் முடி நிறைய இல்லாட்டி தலையை சொறிஞ்சே புண்ணாகிடும் அந்த பாவம்  எனக்கு எதுக்கு..ஹி..ஹி..
(2) வயசு அதிகமா இருந்தா நீங்க சொன்னது காதுல சரியா விழலன்னு சொல்லி தப்பிக்கும் அபாயம் இருப்பதால் இள வயதுக்கு முன்னுரிமை
(3) விளக்கம் சொல்லியே தொண்டைதண்ணி வத்தாமா இருக்க உணவும் , இன்னைக்கி பாடம் போதும் நாளைக்கு வரேன்னு சொல்லிட்டு ஊரைவிட்டே ஓடாமல் இருக்க தங்குமிடமும் இலவசம்.

Wednesday, November 3, 2010

மா.....!!!!

81 என்ன சொல்றாங்ன்னா ...

      முக்கனிகளில் மா , பலா , வாழைன்னு இப்ப எல் கேஜி படிக்கிற குழந்தைக்கு கூட தெரியுது.  (ஏன்னா நா இப்ப எல் கேஜி தான் படிக்கிறேன் ..ஹி..ஹி..) அப்போ இதை பத்தி உங்களுக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கும் .
      அதில பயன் படாத  பொருளே இல்லை , பிசின் வரை மருத்துவ பயன் உள்ளது..  மாங்காயில் செய்யும் ( ஆவக்காய் )  ஊருகாய் ருசியே தனிதான் ,  இதில மொத்தம் 1500 வகைகள் இருக்கு.
      முகல்  பேரரசர்களில் அக்பர் ஒரு மாம்பழப்பிரியர் . அவரது பீஹார் தோட்டத்தில மட்டும் கிட்டதட்ட அப்பவே ஒரு லட்சம் மாமரங்களை வளர்த்து வந்தார் . அந்த பழங்கள் லாங்கராவகைகளாம். (அந்த காலத்தில ஏன் மாசம் மும்மாரி பொழிஞ்சுதுன்னு இப்பதான் புரியுது )
     நமது கவிஞர்களும் அதை ஒட்டியே எழுதிய பாட்டுக்களும் ரசனை  மிகுநத பாட்டாவே இருந்திருக்கு உதாரணத்திற்கு ‘மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா”  ஊமை விழிகள் படப்பட்டு சசிரேகாவின் குரலும் ,சுரேந்தரின் குரலும் டாப் , ’’ அடடா  மாமரக் கிளியே  உன்னை இன்னும் நான் மறக்கலையே  “ சிட்டுக்குருவி படத்தில் ஜானகியின்  குரல் பாடலின் வரிகள் , “ நான் மாந்தோப்பில் நின்றிந்தேன் ‘’  எங்கள் வீட்டு பிள்ளை  படத்தில எம் ஜி ஆர் பாட்டு .. மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் “  டாக்டரு விசய் ஆடிய பாட்டு ...இப்படியே போகும்....!! 
      இதுப்போல மாங்காயின் , பழத்தின் சுவை , மருத்துவப் பயன்களை பக்கம் பக்கமா சொல்லிகிட்டே  போகலாம் .என்ன ஒன்னு , அதிகம் சாப்பிட்டா  உடம்பு சூடு அதிகமாகிடும் . அதனால  உடல் சூட்டை குறைக்க பால் சாப்பிட வேனும் ( ஒரிஜினல் பால் தான்..தப்பா நினைத்தா நிர்வாகம் பொருப்பல்ல.)
      இதை பத்தி பதிவு போடலாமுன்னு பார்க்கும் போது சகோ அமைதியக்கா  ஒரு பதிவு போட்டிருக்காங்க அதனால இங்கே  நிறைய  சொல்லல   என்னடா இது தெளிவா எழுதிகிட்டே வரானே என்னன்னு யோசிக்கிறீங்களா ..வாங்க மெயின் ஸீனுக்கு இப்ப போகலாம்.
      இவ்வளவு அருமையா, சுவை , குணம் , மணத்தில் மாங்காய் , பழம்  இருக்கும் போது . ஒருத்தரை அறிவு குறைவா இருப்பதாக நினைச்சிகிட்டு அவனை ( ரை ) மாங்காய் மடையன்ன்னு திட்டுரோமே ஏன் ?.
      அப்படி திட்டுவதால் நாம அவரை கேலி பண்ணுரோமா ? இல்லை மாங்காயை கேலி பண்ணுரோமா..?திட்டுவதுக்கு ஏன் வேர உதாரணம் கிடைக்க வில்லை . ஒரு வேளை திட்டும் ஆளுக்கு மா மரத்தின் , பலன்களை பத்தி தெரியலையா..?. ஒரு வேளை அந்த திட்டும் ஆளே மடையனா..?
       திட்டுறவன் அப்படி திட்டுறான் ஓக்கே..!! .அதுக்கு பதில் சொல்றவனும் பதிலுக்கு ஏன் அதையே அவனை பாத்து சொல்லனும் . அதுக்கு பதிலா அவன் கிட்ட திருப்பி கேளுங்க .அதுக்கு அர்த்தம் என்னன்னு . ஙே“ன்னு முழிப்பான். அப்போ அவனை பார்த்து  கேளுங்க .அடுத்த தடவை திட்டும் போது  மாங்காயை  கேவலப்படுத்தாதே...

     சரி சகோஸ்..உங்களில் யாருக்காவது  அதுக்கு என்ன அர்த்தமுன்னு தெரியுமா..?  தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்...பிளீஸ்  
டிஸ்கி: பதிவு போடாவிட்டால் இடம் விற்பனைக்கு என்று மிரட்டல் விடப்படுவதால் பயந்து போய் இந்த பதிவு