ஊரில அடிக்கடி விஷேஷங்கள் நிறைய நடக்கும். யாருக்காவது கல்யாணம் , காது குத்தல் , இப்பிடி நிறைய நடக்கும் போது பத்திரிக்கைகள் அடிக்கடி வரும் .சிலநேரம் ஓரே நேரத்தில மூனு கூட வருவதுண்டு .நானும் போய் சில கூடமாட உதவிகள் செய்வதுண்டு .ஓரே ஊர் , சொந்த பந்தங்கள் என்று விழாகளை கட்டும்.
ஒரு தடவை பழைய நண்பனின் (எதிரி ) கல்யாணத்துக்கு இப்பிடி போகும் போது கடைசி வரை ஒரு மாதிரியே இருந்தான் பேசவா வேண்டாமான்னு. சரி நானும் ஏதோ கல்யாண டென்ஷன் போலன்னு நினைச்சிகிட்டு மொய் எழுதிட்டு வந்தேன் .
வீட்டில மாலை நேரத்தில பேச்சு வாக்கில .வந்ததே பிரச்சனை.. ஏன் அந்த வீட்டு கல்யாணத்துக்கு வரல நானும் எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன் குடும்பத்தார்கள் குறை சொல்ல , அப்போ நானும் ஏன் சாப்பிட்டு விட்டு மொய்யும் எழுதிட்டுதானே வந்தேன் . ஆனா அந்த தறுதலை பிடிச்சவந்தான் கடைசி வரை பேசவே இல்ல இதுல வேற என்மேல குறையான்னு நானும் கத்த ஒரு வழியா வீட்டில சமாதானம் ஆனது
மறுநாள் அந்த தெரு வழியா போகும் போது , அந்த பய வீட்டிற்கு வெளியே நின்னுகிட்டு இருந்தவன் . ஓடி வந்து கையை பிடிச்சிகிட்டான் ..மாப்ளே என்னை மன்னிச்சிடுடா...!!! நானும் மவுனம் சாதிக்க..” உனக்கு எவ்வளவு பெரிய மனசு “ உனக்கு பத்திரிக்கையே நான் தரல .இருந்தும், என் கல்யானத்துக்கு வந்து உதவி செய்தும் மொய்யும் வச்சிகிட்டு போனே..!!
இவ்வளவு நல்லவனா நீ. இதை நினைச்சே எனக்கு நேத்திலிருந்து மனசு சரியில்ல அப்ப நான் தான் சரியில்லன்னு சொல்லி கண் கலங்கிட்டான்.. வந்துச்சே ஆத்திரம் என்ன சொல்ல ” திருடனுக்கு தேள் கொட்டினாற் போல” பழமொழி படிச்சிருக்கேன் .ஆனா எந்நிலை அப்படி ஆச்சேன்னு ஆத்திரம் பிளஸ் அவமானம். எனக்குள்ள..அவ்வ்வ்வ்
மனசை திடப்படுத்தி கிட்டு ( பின்ன இதை வெளிய சொல்ல முடியுமா மெகா பல்பு வாங்கியதை ) வெளிக்காட்டிகாம சரி விடு நா அப்புறமா வறேன்னு சொல்லிட்டு எஸ் ஆக பார்த்தா. பய புள்ள விடவே இல்ல. நான் இத்தனை நாளா உன்கிட்டே பேசவே இல்லை பத்திரிக்கையும் வைக்கல ஆனா நீ எதையும் மனசில வைக்காம வந்தியேன்னு ஓரே ஃபீலிங்..
அப்புற மென்ன அவன் வீட்டிற்கு கூட்டிகிட்டு போய் திரும்பவும் விருந்து சாப்பாடுதான்..ஹி...ஹி.. வீட்டிற்கு வந்து விஷயதை சொல்ல கிண்டலும் கேலியும் மாசம் பூரா போனது தான் மிச்சம் . இது இப்பிடி ஆனா அந்த இன்னொரு வீட்டிற்கு போகாததால அவனுக்கு கோவம் வந்து அவன் இப்ப பேசுவதே இல்லை ரோட்டில என் தலையை பார்தாலே அடுத்த சந்துக்குள் அவசரமா ஓடிடறான் .நான் யாரை சமாதானப்படுத்த நீங்களே சொல்லுங்களேன்...
அதுக்காக அவனை இன்னொரு தடவை கல்யாணம் பண்ன சொல்லவா முடியும் .இந்த அனுபவத்துக்கு பிறகு இப்பெல்லாம் பத்திரிக்கையை நாலு ஜெராக்ஸ் எடுத்து வைக்கிறேன்னா பாத்துக்கோங்க. இதில நீங்க எப்பூடி...??? ஹா..ஹா...