Saturday, January 30, 2010

பகைவனை நன்பனாக்கும் வழி

15 என்ன சொல்றாங்ன்னா ...
தலைப்பை பார்த்தவுடன் யாருக்குத்தான் ஆசையிருக்காது.நாம இதுக்கு முன்னே பார்த்தேயிருக்காத (உதாரணம்)இரண்டு பேரில் ஒருவரை பார்த்ததுமே பேச ஆசையாஇருக்கும். மற்றவரிடம் அத்தனை ஸ்நேகம் இருக்காது. சிலநேரம் வெறுப்பாகவும் இருக்கும்.முதலாமவர் நமது உள்ளத்தில் ஆட்சிசெய்யும் எண்ணத்தை போலவே அவருக்கும் இருக்கும்.இரண்டாமவர் அதற்கு நேர்மாறான எண்ணம் கொண்டவர்.
நம்முடைய நண்பர்கள்(சொந்தம்+பந்தம்)சிலர் மீது அதிகமான அன்பு செலுத்தவும் வேறு சிலர் மீது குறைவான அன்பு செலுத்தவும் என்ன காரணம். அவர்கள் உங்கள் மீது எப்படி அன்பு செலுத்துகின்றார்களோ அதுக்கேற்றமாதிரி உங்களை அறியாமலே நீங்கள் அவர்கள் மீது அன்பு செலுத்துவது தான்.சிலப்பேரிடம் எந்த கொடுக்கல் வாங்கலும் இருக்காது. இருந்தாலும் அந்த ஆளை பார்த்ததும் இவன்(ள்) ஆளே சரியில்லை பொறாமை பிடித்தவன்(ள்) சொல்ல காரணம் அவர்கள் நீங்க நல்லா வாழ்வதைக் கண்டு மனசுக்குள்ளேயே பொறாமை தான். அது உங்களுக்கு தெரியாது என்று நினைத்து மனதில் பொறாமை கொள்வதுதான்.ஆனால் எண்ண அலைகள் வெளியேறி உங்கள் உள்மனதை தொட்டு உங்களையறியாமலெயெ அவரை வெறுக்க செய்துவிடும்.
அதனால் பகைவனை நன்பனாக்குவதும் நன்பனை பகைவனாக்குவதும் நம் மனம்தான். அதனாலே பகைவனை நீங்க உள்ளன்போடு நேசித்தால் (இருங்க..அடிக்க கையை ஓங்க வேண்டாம்..)அவன் உங்க நண்பனாகிவிடுவான். நண்பன் மீது வேண்டாவெறுப்பாக போலியாக அன்பு செலுத்தவோ மனசுக்குள்ளே வெறுத்தாலோ ரொம்ப சீக்கிறம் எதிரியாகிவிடுவான். நீங்க நேர்ல அவனை திட்டவோ ஏசவோ தேவையில்லை.
-----------------------------------------------------------------------
இப்போ பகைவனை நன்பனாக்கும் வழி>> முதல்ல நமக்கு யாரை பிடிக்கவில்லையோ மனவருத்தமோ அவரை பற்றி நினைப்பை கொஞ்ஜ நேரம் மறக்கமுயற்சி செய்யவும். எப்படி >> பேப்பர் படிக்கலாம், குழந்தைகள் இருந்தால் கொஞ்ஜி விளையாடலாம்...(என்னுடைய கோபமா..உங்களுக்கு பதிவை படிக்கலாம் )இப்படியே நாலுநாள் போகட்டும். பிறகு அவனிடம் உள்ள ஏதாவது நல்ல குணத்தை பாருங்கள் (என்னதான் போக்கிரியாக இருந்தாலும் அவன் மனைவியிடம் அல்லது குழந்தைகளிடம் அன்பாக இருந்திருப்பான், யாருக்காகவும் எதுவும் கொடுத்து உதவியிருப்பான், இப்படி..) இதை ஒரு நாலு நாள் யோசனை பன்னிப்பாருங்கள். இப்போது அவனை பற்றிய கெட்ட எண்ணம் உங்கள் மணதில் இல்லை ஓக்கே....>.நேரில் பார்க்கும் சந்தர்பம் வரும் போது பாருங்கள் மாற்றத்தை. அவனே உங்களை பார்த்து புன்னகை புரிவான் தேவை பட்டால் மன்னிப்பே கேட்பான் உங்களிடம். நீங்களே ஆச்சிரியப்படுவீங்க.
இதே போல் மனைவியிடம் சும்மாவாவது புகழ்ந்து பாருங்கள். பதிலுக்கு அவர்கள் காட்டும் அன்பின் மழையில் திக்குமுக்காடிப்போவீர்கள். உங்கள் வாழ்க்கை டிராக்கே மாறிப்போகும். உண்மையிலெயே லவ் பண்ன ஆரம்பித்துவிடுவீர்கள். வாழ்க்கை இனிமையாக போகும்.
---------------------------------------------------------------------------
நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் ஒரு பாக்கிஸ்தானி என் குருப்பில் இருந்தார்.அவர் பழைய டெக்னால்ஜி , நானோ மாடல் டெக்னால்ஜி ,தினமும் பாஸிடம் என்னை பற்றி கம்ப்ளைண்ட். (அவருக்கு வேலை போய்விட்டால் என்னசெய்வது பயம் ) பாஸும் கால்மணி நேரம் விசாரனை.நானும் பொருமையாக பதில் சொல்வேன் ஆனால் அவரைப்பற்றி எதுவும் கம்ப்ளைண்ட் செய்வதில்லை. இப்படியே ஒருமாசம் போனது. பாஸும் வெறுத்துப்போய் ஒருநாள் அவரை திட்டி இனி என்னைப்பற்றி கம்ப்ளைண்ட் செய்தால் உனக்கு நோட்டீஸ்தான் கிடைக்கும் என என் முன்னாலெயே விரட்டி விட்டார். பாக்கிஸ்தானியும் என்னதான் அடிச்சாலும் இவன் தாங்குரானே ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்ன்ன்ன்னு. அதன் பிறகு இரண்டு பேருக்கும் நடுவில் நல்ல நட்பு. அது பத்து வருடமாக இன்னும் தொடர்கிறது..ஆனால் நான் அவசரபட்டு இருந்தால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகி இருவர் பெயருமே கெட்டிருக்கும்.
என்னது பயபுள்ள சொல்வது சரிதானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Friday, January 29, 2010

அதிர்ச்சி வைத்தியம்

5 என்ன சொல்றாங்ன்னா ...
என்னுடைய பாஸ் மிகவும் நல்ல டைப் ஆள்.எத்தனையோ பொருளாதார வசதியிருந்தும் கூடப்பணிப்புரியும் எல்லோரிடமும் ஏற்றதாழ்வு பார்காதவர்.வீட்டில் டெக்னிக்கல் வேலை எதுவும் இருந்தால் என்னைத்தான் கூப்பிடுவார்.நாம்தான் ஆலின் ஆல் அழகு ராஸா ஆச்சே.அரபு நாட்டில் பொதுவாக இந்தியருக்கு மரியாதை அதிகம் ஏனென்றால் மற்ற நாட்டவர்கள் சொன்ன வேலையைத்தான் செய்வார்கள். நம்ம ஆள் அந்த வேலையை இன்னும் திறன்பட யோசித்து அழகாக செய்வார்கள்.( என்னது மேட்டர் டிராக் மாறுதா..சரி..)அவர் வீட்டில் அனைவருமே நல்ல குணம் (ஃபிலிப்பைனி,இந்தோனேசி உள்பட ஹி..ஹி..)
மாதுளம் பழம் என்னத்தான் பழுத்திருந்தாலும் உள்ளே ஒரு மொக்கைப்பல் கருப்பாக ஈ..என்று இளிக்கும். அதுப்போல அவருடைய சித்தப்பா(வயசு 55) பயங்கர சந்தேக பார்ட்டி.எதையுமே சந்தேகத்தோடேயே பார்பவர்க்கு கலகலபாக பேசும் என்னை கண்டால் முகம் அல்ஷேசன் நாய் மாதிரி ஆகிவிடும்.(ஒருவேளை போனஜென்மத்தில் நான் பெண்னாய் பிறந்து எனக்கு மாமியாராக இருந்திருப்பாரோ.)
வீட்டில் கரண்ட இல்லை என்றவுடன் பார்க்கபோனேன். மெயின் போர்டில் பிரச்சனை.பக்கத்தில் உள்ள லெதர் சோஃபாவின் மீதுஏறி ஆன்லைனில் வேலை செய்துக்கொண்டு இருக்கும் போது அடிக்கடி உடம்பில் ஸ்டேட்டிக் கரண்ட் ஆனது. ஒரு எல்க்ட்டிரிக் டெஸ்ட்டரால் எர்த் செய்து கொண்டே வந்தேன்.( தரையில் கால் படாமல் அல்லது நியூட்ரல் வயர் தொடாமல் லைவ் வயரை தொட்டால் அது எத்தனை வோல்டேஜில் இருந்தாலும் ஒன்றும் செய்யாது. அதேநேரம் காலில் உள்ள செருப்போ அல்லது சிறிதளவு லீக்கேஜ் இருந்தால் நமது உடல் பேட்டரி போல் சார்ஜ் ஆகிவிடும்.)இதை எல்க்ட்டிரிக் டெஸ்ட்டரால் எர்த் செய்வதுதான் சரியான முறை. முதலில் எர்த் செய்யும் போது டெஸ்டர் அதிகமாக ஒளிரும்,திரும்ப வைக்கும்போது லேசாகவும் மூண்றாவதாக ஒன்றும் இருக்காது. எர்த் செய்யாமல் நேரடியாக நாம் எதையாவது தொட்டால் நமக்கு மின் அதிர்ச்சி ஏற்படும்.
வேலை செய்வதை கிழம் (மாமியார்)பார்த்துக்கொண்டிருந்தார். இவரை வைத்து ஏன் காமடிபன்னக் கூடாது. உடனே செயலில் இறங்கினேன்.கீழ உள்ள ஒருஅடிநீல ஸ்குரு டிரைவரை எடுத்துக்கேட்டேன்(அரபியில்). நம்பியார் மாதிரி முறைத்து கொண்டே எடுத்து தர நானும் வடிவேலு மாதிரி முகத்தை வைத்து ஸ்குரு டிரைவரை பிடிக்க கிழம் வீல்...கத்திக் கொன்டே நாலு அடி தள்ளி விழுந்த்து.அடித்த ஷாக் அப்படி (அது திட்டிய திட்டை இங்கு எழுதினால் நீங்க ஒரே நாளில் அரபிபாஷை கத்துப்பீங்க )
அதுக்கு பிறகு நான் எப்போது அங்கே போனாலும் கிழம் மிஸ்ஸிங். கூப்பிட்டாலும் பக்கமே வராது.”சும்மாவா சொன்னார்கள்,அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பிகூட உதவமாட்டார்கள் என்று”. (தயவு செய்து இதை யாரும் முயற்சிசெய்ய வேண்டாம்.தெரிந்துக்கொள்ள மட்டுமே)
ஆமா இது டெக்னிக் பதிவா இல்லை மொக்கையா????????

Wednesday, January 27, 2010

கோபமா! உங்களுக்கா!!

9 என்ன சொல்றாங்ன்னா ...
கோபம் என்பது சாதாரணமாக எல்லோருக்குமே வரும்.கோபத்தில் இரண்டு வகை இருக்கிறது.அதில் முதல் வகை ஒருவரை அன்பினாலோ,நட்பினாலோ அல்லது இவள் அல்லது இவர் தன்னுடையவள்(வர்)என்ற உரிமையிலேயே வருவது. மற்றது காரணம் இல்லாமல் வருவது யார் மீதாவது உள்ள கோபத்தை யாரிடமாவது காட்டுவது. கோபம் உலகில் சாதித்ததை விட அழித்ததே அதிகம்.அப்படிப்பட்ட கோபத்தை குறைக்க சில வழிகள் இதோ...
1.பதிலே பேசாமல் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடுதல்.(எதிராளிக்கு உங்கள் கோபம் புரிந்து விடும்)
2.வெளியே போக முடியவில்லையா ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.(அதன் பலன் உடனே தெரியும்.முயற்சி செய்து பாருங்கள்)
3.ஒரு பேப்பர் எடுத்துக்கொண்டு உங்களுக்கு யார்மேல் கோபமோ அவர்களை திட்டி, திட்டி எழுதுங்கள்.பிறகு அந்த பேப்பரை கிழித்து விடுங்கள்.
4. அந்த நேரம் கண்ணாடியில் உங்கள் முகத்தை பாருங்கள்.(இரண்டு,மூன்று தடவை இப்படி செய்தால் வாழ்கையில் அதன் பிறகு கோபமே படமாட்டீர்கள்.
5.வெது வெதுப்பான தண்ணீரில் தலை குளித்தால் கோபம் தணியும்.
6.பிடித்த பாடலை மெதுவாக ஹம்மிங் செய்யுங்கள்.
கோபம் (உடல் ரீதியாக )ஏன் வருகிறது.செரிக்காத உணவு வகை, நேரந்தவரிய உணவு பழக்கம்.அஜீரணக்கோளாறு (மலச்சிக்கல் அதைத்தொடர்ந்து வரும் மூலவியாதி)அடுத்தவர் பிரச்சனையில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது.(டீவியில் சீரியல் பார்பது)
பெண்கள் மாதவிலக்கு வரும் தினத்திற்கு முன்னே கண்ட கண்ட வலிநிவாரணிகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு ஒரு வாரத்திற்கு முன்பாக இருந்தே, தினமும் கசகசா அரை டீஸ்பூன் எடுத்து அரைத்து,அதைப் பாலில் கலக்கிச் சாப்பிட்டால் வலி போயே போச்!!..
இதை ஏன் இங்கு குறிப்பிட்டேன் என்றால் பெண்களுக்கு மனவலிமை குறையும் இந்த நேரத்தில் வலியும் சேர்ந்துக்கொண்டால் வரும் கோபத்தில் அந்த வீடு நரகமாகிவிடும்.(சாப்பாட்டில் உப்பு, காரம் ஏற்ற இறக்கம்)

இதைப்படித்த உங்களுக்கு கோபம் வருதா!!!.அப்ப இந்த பதிவு முக்கியமா உங்களுக்குதான் திரும்பவும் முதலிலிருந்து படியுங்கள்..

Sunday, January 24, 2010

சவுதி அரேபியா செல்லும் இந்தியர்களுக்கான புதிய சட்டம்

2 என்ன சொல்றாங்ன்னா ...
துபாய் : சவுதி அரேபியா சென்று பணியாற்ற விரும்பும் இந்தியர்கள், பணியாளர் விசா பெற, போலீசாரின் தடையின்மை சான்றிதழ் பெற்று (கிளியரன்ஸ் சர்டிபிகேட்) சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, "அரபு நியூஸ்' என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தி:சவுதி அரேபியாவில் பணியாற்ற விசா பெற விண்ணப்பிக்கும் இந்தியர்கள் அனைவரும், அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு முன், போலீசாரின் தடையின்மை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறையை கண்டிப்பாகப் பின்பற்றும்படி, இந்தியாவில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு பணி நியமன நிறுவனங்கள் ஆகியவை, இந்த புதிய விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என, டில்லியில் உள்ள சவுதி தூதரகம் மற்றும் மும்பையில் அமைந்துள்ள துணை தூதரகம் ஆகியவையும் கேட்டுக் கொண்டுள்ளன.
"இந்த புதிய சட்டத்தால், குற்றப்பின்னணி உடையவர்கள், சவுதி அரேபியாவிற்கு வருவது தடுக்கப்படும்' என, பணி நியமனம் செய்யும் நிறுவனம் ஒன்றின் மேலாண்மை இயக்குனரான இப்ராஹிம் குட்டி என்பவர் தெரிவித்தார்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ""இந்தப் புதிய சட்டம் இரு நாட்டு ஒப்புதலின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் மட்டுமே, சவுதிக்கு வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தலாம்'' என்றார்.

நன்றி : தினமலர்

ஏதோ இப்போதுதான் இந்த சட்டம் வந்ததுபோல் தமிழ் நாட்டு பத்திரிக்கைகளும்,மற்ற ப்ளாகிலும் நிறைய செய்திகள்.உண்மையிலேயே இந்த சட்டம் வந்தது 1993ம் வருடம் ஆகஸ்ட் 19ம் தேதி.. நான் மும்பை(அப்போது பாம்பே)யில் இண்டர்வியூ முடிந்து விசா சப்மிட் ஆன அதேதினம் இந்த சட்டம் வந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் மெட்ராஸ் திரும்பி வந்தேன்.(3 மாசம் முடிந்து பிறகு ரியாத் போனது தனிக்கதை)
P.C.C.(போலிஸ் க்ளியரன்ஸ் சர்டிபிகேட்) இது நீங்கள் எங்கு பாஸ்போர்ட் எடுத்தீர்களோ (மெட்ராஸ்,திருச்சி)நேரடியாக ஒருஜினல் பாஸ்போர்டுடன் அப்ளிகேசன் +பணம்(1993 ல் 100ரூபாய்) தந்தால் 2 நாளில் ( பாஸ்போர்ட் கடைசிப்பக்கம் ஒரு சீல் + ஒரு துண்டு பேப்பர் ) கிடைக்கும்..
புதிதாக பாஸ்போர்ட் எடுப்பவர்கள் கூடவே இந்த P.C.C.(போலிஸ் க்ளியரன்ஸ் சர்டிபிகேட்) எடுத்து வைத்துக் கொண்டால் பிறகு நாய் அலைச்சல் பேய் அலைச்சல் இருக்காது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

Friday, January 22, 2010

நினைவில் நின்ற பாடல்-3

0 என்ன சொல்றாங்ன்னா ...

Wednesday, January 20, 2010

நினைவில் நின்ற பாடல்-2

0 என்ன சொல்றாங்ன்னா ...


jeeta tha jiske liye jiske liye marta tha - 2
ek aisi ladki thi jise main pyar karta tha - 2
jeeta tha jiske liye jiske liye marta tha
ek aisi ladki thi jise main pyar karta tha - 2

kitni mohabbat hain mere dil mein
kaise dikhau usse - 2
deewangi ne paagal kiya hain
kaise bataun usse - 2
mitaane se bhi na mitegi meri dastaan
ek aisi ladki thi jise main pyar karta tha - 2

meri nazar mein mere jigar mein
tasveer hai yaar ki - 2
meri khushi ka yeh zindagi ka
saugaat hai pyar ki - 2
usike liye hain mere toh yeh dono jahan
ek aisa ladka tha jise main pyar karti thi - 2
jeeti thi jiske liye jiske liye marti thi
ek aisa ladka tha jise main pyar karti thi - 2

jaan se bhi jyada chaha tha jisko
usne hi dhoka diya - 2
nadaan thi jo kutch bhi na samjhi
chahat ko ruswaa kiya - 2
bana ke usi ne ujada mera aashiyaan
woh kaisi ladki thi jise tu pyar karta tha
ek aisi ladki thi jise main pyar karta tha
jeeti thi jiske liye jiske liye marti thi
ek aisa ladka tha jise main pyar karti thi
ek aisa ladka ha jise main pyar karti thi
ek aisa ladka tha jise main pyar

Tuesday, January 19, 2010

இது தேவையா?

20 என்ன சொல்றாங்ன்னா ...
இரவு 10.30 மணி இருக்கும் அரபிக்கள் வாழும் ஏரியாவில் கடைதெருவின் பக்கம் நடந்து போகும் போது(குளிருக்கு டீ குடிக்க), ஒரு கடையின் வாசலின் அடுத்துள்ள கார் பார்கிங்கில் சிறுக்கூட்டம்.அந்த இடத்தில் வெளிச்சமும் கம்மி .ஒரு இளவயது ச்சுரித்தார் அழுதுக்கொண்டு இருக்க சுற்றிலும் பாக்கிஸ்தானிகலும், நம்ப முல்லை பெரியாறு தண்னீ தராத பயல்கலும் சுறுசுறுப்பாக இருக்க இதென்னடா இந்தியாவுக்கு வந்த சோதனை என்று கூட்டத்தை விலக்கி எட்டிப்பார்தால் காரினுல் அந்த இளவயது ச்சுரித்தாரின் சாயலில் ஒன்னோ ஒன்னரையோ வயசுள்ள குழந்தை. அது அம்மாவை பார்த்து என்னை தூக்கு தூக்கு எனறு அழ.காரின் கன்ணாடி மேலே இருக்க கார் உள்ளே பூட்டி இருக்கு.
விஷயம் இதுதான் அம்மா தன் பிள்ளையை காரினுல் விட்டு விட்டு சாவியும் இக்னீஷியனில் இருக்க கடையினுல் போய்விட்டு வரும் 2 நிமிஷத்தில் குழந்தை ஆட்டோ டோர் சுவிச்சில் கையை வைத்து தட்ட கார் உள்ளே பூட்டிக் கொண்டது. காரும் புதிய கார் என்பதால் திறக்க முயன்ற எல்லா முயற்சியும் படுதோல்வி. இந்த கலோபரத்தில் போலீசும் வந்து பார்த்து விட்டு பூட்டு திறப்பவர்க்கு போன் செய்ய அவர் டிராபிக்கில் மாட்டிகொண்டு, வர ஒரு மணி நேரம் ஆகும் என்று சொல்ல, அவள் கணவருக்கு போன் செய்து வேறுசாவி கொண்டு வர சொல்ல அவரும் டிராபிக்கில் மாட்டிகொண்டார்.இப்போது குழந்தை ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்து விட்டது.
அப்போதுதான் என் மண்டைக்குள் ஒரு மின்னல் ஏன் குணா கமலாக மாறக்கூடாது. உடனே என் மொபைல் போனை எடுத்து ஸ்கிரீனில் ஸ்கிரின்சேவரை ஓடவிட்டு விளையாட்டு காட்ட அழுகை நின்று சினேகமாக சிரிக்க, மகனே நல்ல சான்ஸ் விட்டுடாதே என்று உடனே ஆட்டோ லாக் பட்டனை சுட்டிகாட்டி தட்டசொல்ல குழந்தை சிரித்துக் கொண்டே தன் இரண்டு பிஞ்சு கைகளால் தட்டி தட்ட பட்டன் அன்லாக் ஆக உடனே வெகுவேகமாக வெளியே இருந்து கார் கதவை திறந்து விட்டேன்.குழந்தையை தூக்கி அம்மா கையில் தர,ஒரு மெகா போட்டியே வைத்திருக்கலாம்.அம்மா பிள்ளைக்கு தந்த முத்தம் எத்தனை????..’’அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்’’(எங்கொ படித்தது)அந்த உணர்சிகரமான சீனை பார்த்த போலீஸ் உள்பட அனைவருடைய கண்களிலும் ஆனந்த கண்ணீர். மூன்று நான்கு பாஷைகளில் சொன்னதின் அர்த்தம் இதுதான்.மதராஸிக்கு மூளை இருக்கு..
கேட்டதும் வெட்கமாக இருந்தது(இருக்காதா பின்ன..தமிழ்நாட்டின் அரசியல் பாவம் இவர்கலுக்கு தெரியவில்லை.)அந்த பெண் சில சலவை நோட்டுக்களை சுருட்டி என்கையில் வைத்து பஹுத் பஹுத் சுக்ரியா என்று அழுத்த ,அந்த கையை பிடித்து நறுக் என்று கடிக்கத் தோன்றியது. செய்யும் உதவிக்கு இவ்வுலகில் விலை இருக்கா? விலை இருந்தால் அதன் பெயர் உதவியா ! வியாபாரமா?நான் கேட்க, உதடுகள் துடிக்க பேச்சுவராமல் சிலையாக அவள் நிற்க.குழந்தை கைகொட்டி சிரிக்க. நான் நடந்தேன் என்வழியே...............

டிஸ்கி: 1. குழந்தைகளை எப்போதும் நமது கண்காணிப்பில் வைக்கவேண்டும்.
2.உதவி என்ற சொல்லுக்கு தவறான முன்னுதாரனமாக வேண்டாம்.

Monday, January 18, 2010

நினைவில் நின்ற பாடல்-1

2 என்ன சொல்றாங்ன்னா ...

(Aankh hai bhari bhari aur tum
Muskuraane ki baat karte ho) - 2
Zindagi khafa khafa aur tum
Dil lagaane ki baat karte ho
Aankh hai bhari bhari aur tum
Muskuraane ki baat karte ho
(Mere haalaat aise hai
Ke main kuch kar nahin sakta) - 2
Tadapta hai yeh dil lekin
Main aahein bhar nahin sakta
Zakhm hai hara hara aur tum
Chot khaane ki baat karte ho
Zindagi khafa khafa aur tum
Dil lagaane ki baat karte ho
Aankh hai bhari bhari aur tum
Muskuraane ki baat karte ho
(Zamaane mein bhala kaise
Mohabbat log karte hain) - 2
Vafa ke naam ki ab to
Shikaayat log karte hain
Aag hai bujhi bujhi aur tum
Lau jalaane ki baat karte ho
Zindagi khafa khafa aur tum
Dil lagaane ki baat karte ho
Aankh hai bhari bhari aur tum
Muskuraane ki baat karte ho
(Kabhi jo khwaab dekha to
Mili parchhaaiyaan mujhko) - 2
Mujhe mehfil ki khwaahish thi
Mili tanhaaiyaan mujhko
Har taraf dhuaan dhuaan aur tum
Aashiyaane ki baat karte ho
Zindagi khafa khafa aur tum
Dil lagaane ki baat karte ho
Aankh hai bhari bhari aur tum
Muskuraane ki baat karte ho
Mm hm hm hm hm hm hm hm hm hm - 2

Saturday, January 16, 2010

எது இலவசம்

0 என்ன சொல்றாங்ன்னா ...
தமிழ்நாட்டின் 6 மாவட்டத்திற்கு செலவிடவேண்டிய வளர்ச்சி நிதி, மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கிய ரூ121 கோடியை தன்னுடைய ?? இலவச கலர் டீவீ திட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி செலவிட்டிருக்கிறார். தன்னுடைய சொந்த பணமா இருந்தால் பரவாயில்லை. எல்லாம் மககள் ரத்தமும், வேர்வையும் சிந்தி உழைத்த வரிப்பணம். ஏற்கனவே ஆண்களை தமிழ்”குடி” மகன்களாக்கியதுமில்லாமல் தன்னுடைய குடும்ப டீவீ க்கள் சீரியல் மூலம் வீட்டு பெண்களையும் சிந்திக்க விடாமல் செய்தாகிவிட்டார். ஒருபுறம் விண்னை தொடும் விலைவாசி, மறுபுறம் இருக்கும் நீர்நிலைகளை சரியாக பராமரிக்காமல் மழைப் பெய்தும் விவசாயத்திற்கு நீர் இல்லை.

ஒரேஒரு நாள் சட்டசபைக்கு வந்து கேள்வி கேட்ட எதிர்கட்சி தலைவி ஜெ வுக்கு இன்னும் பதில் சொல்லமுடியவில்லை. இதற்கு வந்த பதில் என்னதெரியுமா?.

"மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில், அரசு நிதியை, தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் எனக் குறிப்பிடப்படவில்லை தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட, 121 கோடி ரூபாய், தமிழக அரசின் இலவச திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் என்று கூறவில்லை. இந்த செலவழிப்பு முரண்பாடானதோ, தவறானதோ அல்ல"

அடங்கொக்கா மக்கா.. தணிக்க குழு அப்படி சொல்லவில்லை இப்படி தான் சொல்லி இருக்கு என...வார்த்தைகளை மாற்றி அறிக்கை விட்டால்..உண்மை பொய்யாகி விடுமா? தொண்ணுறு ஆயிரம் கோடி கடன் இருக்கையில் இலவச திட்டம் தேவையா? கடன் வாங்கி வாங்கி தமிழ்நாட்டை கடன் நாடாக்க வேண்டுமா என்ன?. தவறினை யார் சுட்டிக்காட்டினாலும் திருந்தப்பாருங்கள். அதைவிட்டு விட்டு பழைய கதைகளை சொல்லி மக்களை திசை திருப்பாதீர்கள். என்னதான் இலவசங்களை கொடுத்து மக்களை மயக்கினாலும் ஒருநாள் மக்கள் உங்களை தூக்கி எரிய தயங்க மாட்டார்கள். ஜாக்கிரதை!
எப்படி நீங்கள் பதவிக்கு வர ஜெயலலிதா தவறுகள் செய்தாரோ அதே தவறுகளை நீங்கள் செய்து மீண்டும் ஜெயலலிதா பதவிக்கு வர வழி காட்டுகிறீர்கள்.

Saturday, January 2, 2010

11 என்ன சொல்றாங்ன்னா ...
இப்போது எல்லாருமே ப்லாக்கில் எல்லாவற்றையும் எழுதுவதால் எதை எழுதுவது,எதை விடுவது ...அதனால் கேட்கமட்டுமே இந்த ப்லாக்