டிஸ்கி :ஒரு......யின் டைரி தொடர்ச்சி இரெண்டாம் பாகம் ஆரம்பிக்குது. இது இன்னும் தொடரும் போலிருக்குது . இனி யாரும் தொடருக்கு என்னை கூப்பிடுவீங்க..??? (யாரோ புலம்புவது கேட்குது )) ஹி...ஹி..
மார்ச் 2010
எங்கள் கூட வேலை செய்யும் பெங்காலி (பங்ளாதேஷி ) ஒரு மாதிரியான டைப் . எது கேட்டாலும் அவனிடம் எப்போதுமே சரியான பதில் சொல்லமாட்டான் .ராங்கான பதிலே வரும் புதிதாக கேட்பவருக்கு சில நேரம் கோவமே வந்துடும் . ( நமக்கு பழகி போயிடுச்சி ) . அன்றிலிருந்து 2 மாதம் லீவு ஊருக்கு கிளம்பிகிட்டு இருந்தான் . சரி போய் பார்த்து விட்டு வரலாமுன்னு கேம்பிறகு போனால் இரவு 10 மணி ஃபிளைட்டிற்கு 8 மணி வரை ரூமிலேயே இருந்தான் .கேட்டதுக்கு இன்னும் தம்பி கார் கொண்டு வரலை அதுக்காக வெயிட்டிங்னு சொல்லிட்டான் . துபாய் , ஷார்ஜா டிராஃபிக் சமாளித்து போகவே சில சமயம் 3 மணி நேரம் பிடிக்கும் .கடைசியில் இவன் தம்பி வந்து ஏர் போர்ட் போனபோது மணி 11 ஆகி ஃபிளைட் மிஸ்ஸிங் .திரும்ப வந்து விட்டான்
மறு நாள் என்னையும் ஏர்போட் போக கூப்பிட்டான். நான் கராராக சொல்லிவிட்டேன் . மாலை 6 மணி ஃபிளைட்டிற்கு இங்கிருந்து மதியம் 2.30க்கு கிளம்பினால் சரியாக இருக்கும் அப்படி என்றால் வருகிறேன் . அவனும் ஓக்கே சொல்லிட்டான் .
அடுத்த நாள் பாஸ்போர்ட் ரெடியா , டிக்கெட் ரெடியான்னு சொல்லி விட்டு கூடவே கிளம்பினேன் . மதிய நேரம் அவ்வளவா டிராஃபிக் இல்லை .ஒரு வழியா 4 மணிக்கு துபாய் ஏர்போர்ட் போய் விட்டோம் . லக்கேஜ் ஸ்கேனிங் போட்டதும் என்னை போக சொல்லிவிட நான் அங்கேயே இருந்தேன் . பயபுள்ள உள்ளே போன கால் மணி நேரத்திலேயே திரும்ப வந்தான் என்னடா ஆச்சின்னு கேட்டதுக்கு சொல்றான் பாருங்க .ஜெய்லானி ஏர்போர்ட் மாறிப்போச்சுடா. நானும் ஆமாம் இப்ப ரொம்பவும் டெவலபா இருக்கு . அதுக்கும் நீ திரும்ப வந்த்துக்கும் என்ன சம்பந்தமுன்னு கேட்டேன் .
அதுக்கு அவன் சொல்றான் .நாசமா போச்சி நான் போக வேண்டிய ஃபிளைட் ஷார்ஜா ஏர்போர்ட் , ஆனா நாம வந்தது துபாய் ஏர்போர்ட்டுக்குன்னு கூலா சொல்றான் . பெங்காலி பயபுள்ள ஃபிரென்ஷிப் வேண்டாமுன்னு சொன்னாலும் நான் கேட்டாதானே..!!
ஏப்ரல் 2010
டியூட்டி நேரங்களில் டைம்பாஸ் செய்ய பக்கத்துல இருக்கிற ஹோட்டல்தான் வசதி .நொறுக்கு தீனிகளோட நேரம் போவது தெரியாம்ல் கலாய்த்து கொண்டிருப்போம் . ஒரு நாள் கூட வந்த நாலு பேருமே டீ சரியில்லைன்னு சொல்லிகிட்டு இருந்தானுங்க . நான் லைட் டீ ( பால் இல்லாம ) மட்டுமே குடிப்பது வழக்கம். மத்தவங்க ஸ்டிராங் ( வீட்டில் குடிப்பது போல தேயிலை நன்றாக கொதிக்க வைத்தது ) குடிப்பதால் , ஒரு வேளை தேயிலை தூள் புதியதான்னு கேட்டுகிட்டும் , இன்னும் சில பேர் ஒரு வேளை பால் புது டைப்பாக இருக்குமோ , இல்லை சர்க்கரை (சீனி ) சரியில்லையோன்னு ஆளாளுக்கு அப்செடாக இருந்தார்கள்.
வரப்போகிற எல்லாருமே லேசாக முகம் சுளிப்பதை பார்த்து விட்டு ஹோட்டல் மலையாளியிடம் கேட்டேன் . ஏண்டா என்ன ஆச்சி எதுவும் ராங் ஐட்டம் போட்டுட்டியா..? இல்லை எதுவும் பழைய சரக்கா..? பழைய டேஸ்ட் இல்லைன்னு சொல்றாங்களேன்னு கேட்டேன் .
அது ஒன்னுமில்ல ஜெய்லானி .எல்லாமே அதே குவாலிட்டி சாதனம்தான் . இந்த டீ கெட்டிலை உள்ளே சுத்தம் செய்து கிட்டதட்ட ரெண்டு மாசம் ஆகிரதேன்னு நாந்தான் இன்னைக்கி காலையில நல்லா கிளீன் செய்தேன் . ஒரு வேளை அதுதான்னு நினைக்கிறேன்னு சொன்னான் பாருங்க .
எனக்கு தல சுற்றியதுல ஒரு செகண்ட் நான் பூமியிலதான் இருக்கிறேனோன்னு சந்தேகமே வந்துட்டுது.
மே 2010
மாலை நேரம் பக்கத்துல இருக்கும் காஃபிடீரியாவில்ஒரு காக்டெயிலும் (நம்புங்க ஜுஸ்தான் ), பர்கருமாக கூடவே நிறைய ஃபிரெஞ்ச் ஃபிரையை வைத்துகிட்டு எதை முதலில் ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சிகிட்டு இருக்கும் போது .ஒரு பெங்காலி உள்ளே வந்தான் . எனக்கு எதிரில் உள்ள சீட்டில் உட்கார்ந்துகிட்டு ஷ்வர்மா ஆர்டர் செய்தான் .
ஊரிலிருந்து வந்து ரெண்டு நாள்தான் ஆகிறதாம் .இந்த நாட்டிற்கு புதுசாம் . பரஸ்பரம் நலம் விசாரிச்சி கிட்டு இருக்கும் போதே அவன் கேட்ட சிக்கன் ஷ்வர்மா வந்தது. நான் கடை ஆளிடம் பேசிகிட்டு திரும்பி பார்ப்பதுக்குள் முழுதும் சாப்பிட்டு விட்டான் .நன்றாக இருந்த்து போல இன்னொன்னு கேட்டான்
””பாய் சாப் ஷ்வர்மா பஹுத் அச்சா ஹை , அவுர் ஏக் தியோ மகர் பேப்பர் தோடா கம் ரக்கோ”” அப்படின்னு சொன்னான் .((சகோ ஷவர்மா ரொம்ப நல்லா இருக்கு ஆனா அதுல கொஞ்சமா பேப்பர் சுத்தி குடுன்னு கேட்டான் )) பாருங்க .. அடப்பாவி ஷ்வர்மாவுல சுத்தி இருக்கிற பேப்பரை பிரிச்சி போட்டுட்டு சாப்பிடனுமுன்னு கூட தெரியலப் போலிருக்கு. அவ்வ்வ்வ் .
ஜுன் 2010
ஒரு பொன் மாலைப்பொழுதில் பார்க்கில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது ஒரு ஆள் என் பக்கம் வந்து நலம் விசாரிச்சார் .((எப்படித்தான் கண்டுப்பிடிக்கிறானுங்களோ தெரியலை)) நானும் சின்னதா ஒரு புன்னகை செய்தேன் .
அவர் ஒரு கைரேகை ஜோசியராம் (( இந்த ஊருல கிளியை வச்சி செஞ்சா நேரே ஜெயில்தான் )) .ராசியை பத்தி பேசிகிட்டு இருந்தார் .நமக்கு ராசி நல்லா இருந்தா ஏன் வெளிநாட்டுக்கு வரோம் ஹி..ஹி...அவருக்கு கையை பார்த்தாலே கடந்த காலம் , நிகழ்காலம் , எதிர்காலம் எல்லாமே தெரியுமாம் .நானும் எல்லாத்துக்கும் தலையை ஆட்டி வைத்தேன் நமக்கும் நேரம் போகனுமில்ல ஹா..ஹா.
கடந்தகாலம்தான் தெரியுமே அதுக்கு ரீவியூ எதுக்கு . நிகழ்காலம் இங்கே கொஞ்சம் வெயில் ஒன்னும் சொல்றதுக்கில்ல . எதிர்காலம் தெரிஞ்சா டேஞ்சர் . அதில் ஒரு திரில் , சுவாரஸ்யம் இருக்காது .ஆக மொத்தம் எனக்கு இதில் நம்பிக்கையே கிடையாது .. முழு எதிர்காலமே சொல்கிறேன் . 30 Dhs கொடுங்கன்னு கேட்டார்.
நான் சொன்னேன் ஓக்கே நான் 100 Dhs தருகிறேன் .எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கன்னு . அவரும் ஆர்வமாக சொல்லுங்கன்னார் . கேள்வி இதுதான் . நான் உங்களூக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல வாங்கி தரும் அடுத்த வேளை என்ன சாப்பிடுவீங்கன்னு சரியா சொன்னா அதோடு இந்த 100 Dhs உங்களுக்கேன்னு சொன்னேன் .
அவர் முகத்துல ஈ ஆடவில்லை . அமைதியாக இருந்தவர் .மெதுவாக அந்த இடத்தை விட்டு காலி செய்தார் . எங்கிட்டேயேவா...?..!!
டிஸ்கி நெ 2 : இது வரை பொருமையாக படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன் . இந்த தொடரை இன்னும் தொடரனுமான்னு நீங்கதான் சொல்லனும் :-)