Friday, February 25, 2011

வசந்த மாளிகை ..!!

86 என்ன சொல்றாங்ன்னா ...

          இங்கே  நான் இருக்கிற  இடத்துக்கு   கொஞ்ச தூரத்துல  ஒரு பில்டிங் இருக்கு .  கீழே  கடைகள்  மற்றும் மேலே இரெண்டு  ஸ்டோரி  பில்டிங்.... மெயின் ஏரியாவில  காலியா ரொம்ப நாளா இருப்பதை பார்த்துட்டு  அக்கம் பக்கம் கேட்டதுல.. அங்கே  யார் போனாலும் அடுத்த நாளே  அந்த இடத்தை விட்டு ஓடிடறாங்களாம் .
       இன்னும் விலாவாரியா  விசாரிச்சதுல  அதுல பேய் ஒன்னு இருந்துகிட்டு  யாரையும் தங்க விடறதில்லை அப்படின்னு  சொன்னாங்க .சரி அதுல ஒரு கதை (ஙே ) இது . ஒரு மந்திரம் தெரிஞ்ச ஆள்  உள்ளே வந்தாரு நான் இருக்கேன் என்ன சொல்றீங்கன்னு கேட்டதுக்கு பத்தாயிரம் திர்ஹம்ஸ் (( ஊருக்கு ரூ ஒரு லட்சத்து பதிமூணாயிரம் ))  தரேன்னு பில்டிங்க் ஓனர் சொல்லி இருக்காரு .

       மந்திரம் தெரிஞ்ச ஆள் காலையிலேயே வந்து  மந்திரம் ஓத ஆரம்பிச்சிடாரு.. இரவு வரை இது தொடர்ந்து இருக்கு அரபியும்  மூனு வேலைக்கும் வந்து சாப்பாடு பார்ஸல் குடுத்துட்டு  பார்த்துட்டு போனாரு . மறு நாள் காலையில வந்து பார்க்கும் போது  நம்ம மந்திர வாதியை  காணல..தேடிப்பார்க்கும் போது  மொட்டை மாடியில  தண்ணீத்தொட்டி  வைக்கும் இட்த்தில  தூங்கிகிட்டு இருந்தாரு . அவர் பேரை சொல்லி தேடிய போதுதான் அவருக்கே  விழிப்பு வந்திருக்கு ((காலை ஐந்தரை மணி )).
          அப்புறமென்ன கீழே வர அங்கே  படிக்கட்டு எதுவும் இல்லாத இடத்தில எப்படி இறங்கி வருவாரு..வேறு வழி இல்லாம ஃபயர் சர்வீஸுக்கு  போன் செய்து கிரேன் கொண்டு வந்துதான் இறக்கி விட்டாங்க . தரையில கால் பட்டதோ இல்லை அடுத்த வினாடியே ஆள் தலை தெறிக்க ஓடிட்டாரு .யாருடைய கேள்வி பதிலையும் கேட்கும் மன நிலையில்  அவர் இல்லை .அதுல இருந்த பேய் தூங்கும் போது அவரை மெதுவா மேலே கொண்டு போய் வைத்து விட்டது.
          


நான் மெதுவா அந்த அரபியை  கேட்டேன் . நான் வேனா அங்கேயே  இருக்கேன் .அதிகமில்லை ஜெண்டில் மேன் அந்த பில்டிங்கில ஒரு பிளாட் என் பேருக்கே குடுத்திடு  .நானே  இருந்துக்கிரேன்.. ஒரு மாசம் பார் . நான் இருப்பதை பார்த்துட்டு  அப்புறம் எல்லாருமே  அங்கே  வருவாங்கன்னு சொன்னேன் . உனக்கும் பிசினஸ் ஆச்சி லாபம்தானேன்னு சொன்னேன் .பயபுள்ளை இல்லன்னு சொல்லிட்டான் வேனா மூனு வருஷம் ஃபிரியா இருன்னு சொல்றான் . ஒரு பிளாட் ஃபிரியா குடுக்க ஆசை இல்லை மொத்த பில்டிங்கும் காலியா ரெண்டு வருஷமா இருக்கேன்னு மரமண்டுக்கு புரியல  ..
     
       உருவம் உள்ள மனுஷங்களே  என்னை பார்த்து பயப்படும் போது , உருவம் இல்லாத பேய் என்னை பார்த்து பயப்படாதா...என்ன  ? இதை அந்த அரபிக்கு யாராவது எடுத்து சொல்லுங்களேன்...!!  ஜெய்லானி டிவி ஸ்டேஷனை இடம் மாத்தலாமுன்னு பார்த்தா சரி வரலையே . இங்கே இருக்கும் பதிவர்கள் இது மாதிரி இடம் இருந்தால் தெரிவிக்கலாம் தனி கமிஷன்  தரப்படும் ஹி..ஹி...J)             

Thursday, February 10, 2011

ஒரு ரூபாயில் மருத்துவம் ...!!!

128 என்ன சொல்றாங்ன்னா ...

         ஆரம்பத்துல  கவிஞர் பட்டம் குடுத்தாங்க ..அதுக்கு தகுந்த மாதிரி  கவிதைங்கிற பேர்ல இங்கே  இரெண்டும்  மூஞ்சி புக்கில சிலநேரம்  கிறுக்கி சில பல பேரை தடுமாறி விரட்டியும் இருக்கிறேன் .. இன்னொன்னு ((இது ரைட்டர் ))  வைட்டிங்க் லிஸ்டில இருக்கு .அதுப்போட நேரம் கிடைக்கல... 
பெட்ரோல் விலை +  ஸ்பெக்ட்ரம்  ஊழல்   
      
         சமீபத்தில  டால்டா  அடச்சே.....டாகுடர் பட்டம் கிடைச்சி அது சம்பந்தமா ஒரு பதிவு கூட போடாட்டி அது சரில்லை ...கூடவே  நர்ஸ் கேட்டும் அவர் தரல..சரி போனா போகட்டும் எங்காவது ஒரு மலை உச்சியில ஒத்தைக்கு ஒரு கிளினிக்  திறக்காமலா போயிடப்போரேன்.. ((மக்கா எங்காவது போலீஸ்  தொந்திரவு இல்லாத இடமா சொல்லுங்க ..கமிஷன் உங்க சுவிஸ் அக்கவுண்டுக்கு அனுப்பிடரேன் ))  அதனால இதில் ஒரு மருத்துவக்குறிப்பு சொல்றேன் கேட்டதும் இல்லாம முடிஞ்சா உபயோகித்துப் பாருங்க..ஓக்கே ....!! இனி சீரியஸ்  

       நமது உடம்பில  நாளுக்கு நாள்  கொழுப்பு சத்து சேர்ந்து கிட்டுதான் இருக்கு. முறையா உடற்பயிற்ச்சி செய்யும் போது அது தானா குறையும் . அப்படி இல்லாமப்போகும் போது அது ரத்தத்தில சேர்ந்துகிட்டே இருக்கும் . ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமா  சேரும் போதுதான் ஹார்ட் அட்டாக்  வரை போகும் ..ஆனா அதுல வர மிகக் குறைந்த அளவுதான் மூட்டு வலி . ஏன் அந்த இடங்களில் சில மெல்லிய ரத்தகுழாய்களில்  கொழுப்பு சேர்ந்து ரத்த ஓட்டத்தை தடை செய்திடும்... ஆரம்ப காலத்தில  மறத்து போனமாதிரி தெரியும்  ..சிலருக்கு கால் கை உப்பிப்போகும்...உட்கார்ந்தே இருப்பாங்க 

      இந்த மூட்டு வலி சிலருக்கு மாச, ஏன் சிலருக்கு வருஷ கணக்குல கூட இருக்கும் .எத்தனையோ  டாக்டர் ( ஒரிஜினல் ) கிட்ட போய் காட்டினாலும் அவர் சில பல டெஸ்ட் செய்ய சொல்லி ஆட்டோமேடிக்கா நமது பர்ஸை  குறைச்சி  பல்ஸை அதிகமாக்கி பட்டை பட்டையா மருந்து மாத்திரையை குடுத்து அனுப்புவார் . அப்போதைக்கி சரியாகி  கொஞ்ச நாள் கழிச்சி திரும்பவும் வந்துடும்.. நாமளும் பழைய டாக்டரை ( ஒரிஜினல் ) நல்லா திட்டிட்டு  வேற புது டாக்டரை பார்க்க போயிடுவோம்  ..இது ஒரு தொடர் கதையாகி போகும்..  இது வீட்டில் இருப்பவங்களுக்கு ..இதே  வெளியே  வேலைக்கு போகும் ஆண்களா இருந்தா ரொம்பவும் பாவம்.  சிலருக்கு அலைய முடியாமல் வேலையே  போகும் பரிதாப நிலையும் வரலாம் .

     இதை செலவே இல்லாமல் குணமாக்க  முடியும்..அதுவும்  வீட்டில்  இருக்கும் பொருளைக்கொண்டே  ..என்ன ஆச்சிரியமா இருக்கா... !!  இதுப்போல எத்தனையோ  பொருட்கள்  இருக்கு ஆனா நமக்கு அதன் அருமை ,பெருமை  புரிவதில்லை.. என் கூட வேலை பார்க்கும் ஒருவரின் உறவினருக்கு இந்த பிரச்சனையால்  நடக்கவே சிரமப்பட்டார்.. அப்போது நான் சொன்னேன் .இது மாதிரி செய்யுங்க போதுமுன்னு..சந்தேகத்தோடவே போனார்  அடுத்த நாள்  பயங்கர சந்தோஷத்தோட வந்து சொன்னார்.. இது கடந்த மூனு வருஷமா இருக்கு ஆனா இன்னைக்கி காலையில எழுந்திருச்சதும் பார்த்தேன் . ரொம்ப நன்றி என் வாழ்க்கையில மூட்டு வலியே வந்ததில்லை போல உணர்ந்தேன் என்றார் நான் சொன்னேன் எப்பவாவது திரும்ப வருவது மாதிரி இருந்தா இதை திரும்பவும் செய்யுங்க போதுமுன்னேன்  ...

       விஷயம் இதுதான்  வீட்டில் இருக்கும் வெள்ளை பூண்டு நாலு அதாவது நாலு பல்  எடுத்து அதை கத்தியால்  சின்ன சின்னதா நறுக்கி கொள்ளவும். அதை அரைக்கவோ நசுக்கவோ கூடாது. இரவு  தூங்கப்போகும் போது  அதாவது பெட்டில போய் தூங்கப்போகும் கடைசி நேரத்தில  அப்படியே வாயில் போட்டு முழுங்கி தண்ணீர் குடிக்க வேண்டியதுதான் ..தட்ஸ் ஆல்..... மறு நாள் காலை எழுந்து பார்க்கும் போது வித்தியாசம் தெரியும் ..

       காரணம்  இது ரத்தத்தின் அடர்த்தியை கொஞ்சம் குறைப்பதால இதயம் பம்ப் செய்ய அதிக மெனக்கெடுவதில்லை சாதாரனமாகவே பம்ப் செய்வதால் . ரத்தம் உடல் முழுக்க அதன் முழு பலத்துடன் பாய்வதால் மூட்டுக்களில்  தேங்கி இருக்கும் கொழுப்பு தானாக கரைந்து அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுகிறது ..நான்கு பூண்டுப்பல் ஒரு விலையே  இல்லை அப்படியே இருந்தாலும் அது அதிகபட்சம் ஒரு ரூபாய்  வருமா..? 
 அடுத்த தடவை யாருக்காவது  மூட்டு வலி மாதிரி இருந்தால் , தெரிந்தால்  டக்டரிடம் போவதுக்கு முன்  இதை செய்யுங்கள்.. தெரியாத வருக்கும் தெரியப்படுத்துங்கள்.. எல்லா புகழும் இறைவனுக்கே...!!  
    

Wednesday, February 2, 2011

some use full links

28 என்ன சொல்றாங்ன்னா ...
Let it reach the 110 Crores Indians and the remaining if any.
 

K
indly, share this valuable information wherever possible.


1.  If you see children Begging anywhere in TAMIL NADU, please contact:
 
"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.

2.  Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address. 
www.friendstosupport.org 

3. Engineering Students can register in 
www.campuscouncil.com to attend Off Campus for 40 Companies.

4. Free Education and Free hostel for Handicapped/Physically Challenged children.
Contact:- 9842062501 & 9894067506.

5. If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by  Kodaikanal   PASAM Hospital . From 23rd March to 4th April by German Doctors.

Everything is free. Contact : 045420-240668,245732
"Helping Hands are Better than Praying Lips"

6. If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put them into any near by Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.

7.  By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So let all of us lend our hands to fight GLOBAL WARMING.
 
  -Plant more Trees.
  -Don't waste Water & Electricity.      
 
  -Don't use or burn Plastics

8.  It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth.
"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them"
9.   Special phone number for Eye bank and Eye donation: 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information about how to donate eyes plz visit these sites. 
http://ruraleye.org/ 

10.  Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba Institute Banglore. 10.
Contact : 9916737471 

11. Medicine for Blood Cancer!!!! 
'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. Its available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create Awareness. It might help someone. 


Cancer Institute  in Adyar, Chennai 


Category:  
Cancer 
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: Near Michael School
Phone:  044-24910754  044-24910754 ,   044-24911526  044-24911526 ,  044-22350241   044-22350241
 

12.  Please CHECK WASTAGE OF FOOD
 
If you have a function/party at your home in India and
food gets wasted, don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke, This is the number of Child helpline.

They will come and collect the food. Please circulate this message which can help feed many children. 

AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN  
 இதை   மெயிலில்  அனுப்பிய சகோ  அப்துல் ரஷீத் அவர்களுக்கு  ந்ன்றி