Monday, January 2, 2012

2012 +++++ 100

56 என்ன சொல்றாங்ன்னா ...

             ஒரு காலத்துல  பத்திரிகைகளுக்கு  கார்டில எழுதிப்போட்டா அது அச்சில வர குறைந்தது (அப்படியே வந்தா) 2 மாசமாவது ஆகும் . இப்போது கூகிள் குடுத்த வரத்தால சில நிமிடங்களில்  நம்மால பதிவிட முடிகிறது .பதிலிடவும் முடிகிறது .

           சமைத்தாலோ  இல்லை  கடையில் போய் வாங்கினாலோ  மட்டும்தான் சாப்பிடவே  முடியும் .அதை விட்டுவிட்டு  சாப்பாடோ  இல்லை நீரோ தானே  வாய்க்கு வந்தால் போதும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதுப்போலதான் எல்லோரையுமே  தன்னைமாதிரியே (ஙே) அறிவாளியா  நினைப்பதும் .
            ஒருவருக்கு சமையல் மட்டுமே  வரும் .அவரைப்போய் கவிதை எழுத சொல்ல முடியுமா..?. ஒரு ஓவியரைப்போய்  புனைவு எழுத வைக்க முடியுமா..? .யாருக்கு எது வருமோ அவரால் அது மட்டும்தான் முடியும் . நமக்கு பிடித்திருந்தால் நேரம் இருந்தால் மறுமொழி இடலாம் . பதிவுலகில் ரீடரில் மட்டுமே  எத்தனையோ  பேர்  படித்துவிட்டு போய்விடுவார்கள். அவர்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் :-) .


            திரட்டிகள்  என்பது வெறும் ஓட்டை மட்டுமே முதல் காரணியாக வைத்து  செயல்படுபவை . அதில் குறுக்கு வழியில் எப்படி முதலில் வருவது என்பதும் பல பதிவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதில் முதலிடம் பிடித்து அதில் ஒரு முட்டையை கூட வாங்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை .
         சிலருக்கு எப்படியாவது ஹிட்ஸ் வாங்கனுமின்னு  மதம் ,மொழி , இணங்களை போற போக்கில தெரிந்தும்  தெரியாத மாதிரி கிள்ளிவிட்டுட்டும் போறதுண்டு . அதுக்காக நாமளும் வரிந்துகட்டிகிட்டு  போவது சரியில்லை. என்னதான் ஃபில்டர் காப்பி போட்டாலும் சில நேரம் டம்ளரில் காஃபி டஸ்ட்  இறங்கிடும் அதுக்காக காஃபி குடிக்காமலா போயிடுறோம் இல்லையே...கடைசியில டம்ளரில்  கொஞ்சம் வச்சிட்டுதானே  போரோம் .அது மாதிரி இதுகளை சிலநேரம் கண்டுக்காம போயிட்டே இருக்கனும் .
              இதுவுமில்லாம நா எப்படியாவது இருப்பேன். ஊருக்கு மட்டுமே  உபதேசம் என்பது மாதிரி பசுத்தோல் போர்த்திய புலிகளும்  பதிவுலகை எப்போதும் காரசாரமாக வைத்திருக்காமல் கொஞ்சம் அமைதியாக கலகலப்பாக வைத்திருப்பது நல்லதுதானே..!! .
            சிலருக்கு பதிவை காபி பேஸ்ட் செய்வது ரொம்ப பிடிச்ச மேட்டர் . ஏன்னு கேட்டா அவங்களுக்கு இது எப்படி தெரியுன்னு நினைச்சி (அது வேற பாஷையில இருந்தாலும் ) அப்படியே வாமிட் செய்வது .அடப்பாவிங்களா...
     உலகத்திலே மூலையில  எங்கேயோ  நடந்த சின்ன விஷயத்தை  ஊதி பெருசாக்கி ஆணாதிக்கம் , பெண்ணாதிக்கமுன்னு பரபரப்பாகவே செய்தி வெளியிடுவது (ஆனா யார் அது என்ன அதுன்னு கடைசிவரை சொல்லவே மாட்டாங்க )  என்ன கொடுமை ச...

படத்துல இருப்பது நீயான்னு யாரும் கேட்டுடாதீங்க மீ -க்கு 3 வயசுதான் ஆகுது ஹி..ஹி... 
               நமக்கு தெரியாததை தெரிந்துக்கொள்வதும் தெரிந்ததை மற்றவர்க்கு சொல்வதும்தான் நல்ல பதிவர்க்கு அழகு அது மொக்கையாக இருந்தாலும் கூட 
டிஸ்கி : நான் இப்பிடியெல்லாம் சொல்லுவேன்னு நம்பிட்டீங்களா.. ஹய்யோ...ஹய்யோ.....!!  புது வருடம் கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்வில் வரும் எல்லா நாளும் நல்ல நாளே. இனியும் வரும் நாட்கள்  நலமுடனும் வளமுடனும் வாழ நல்வாழ்த்துக்கள் many more happy   happy returns  of day  ((ஆனா ஒரு வயசு அதிகமா போய்டுமே..அவ்வ்வ்  ))

டிஸ்கி :  ஒரு வழியா மொக்கையா போட்டு இதை 100வது பதிவா ஆகிட்டேன் .இதில் உள்ள அனைத்து ஃபாலோயர்களும் ஒரே இடத்துல கூடுவதாக இருந்தால்  முட்டை வித் மட்டன் பிரியாணி என் செலவு . சைவ பிரியர்களுக்கு வெஜ் பிரியாணி . :-)