Saturday, August 7, 2010

ஜெய்லானி டீவியில்-சமையல்--1

        கூவத்தை ஒட்டிய டவுன் ஹாலில் ஜெய்லானியை தேடி அப்துல் சவுண்ட் குடுத்துகிட்டே வர அங்கே ஒரு பாட்டுசத்தம் மெதுவா கேக்க அங்கே ஒரு கொசுவை பிடித்து வைத்து ஜெய் பாடி கொண்டிருக்கிறார்

     கடித்தது யாரோ நீதானே
     கடிவாங்கியது யாரோ அது நாந்தானேஏஏஏ
     நீதானே எனை கடித்தாய்
     நாந்தானே உனை அடித்தேன்
     புரிந்தது ஏதோ கொஞ்சம் எனக்கூஊஊ

         மூக்கில் ஒன்று கடித்ததம்மா ..
        கடித்ததும் உடனே தடித்தம்மா

‘’ஸ்டாப்...ஸ்டாப்....................தல இதுனென்ன தனியா உட்காந்து புலம்புறீங்க ‘’
வாய்யா நாட்டாமை வரவங்க எல்லாம் வந்துட்டாங்களா “
ம் ஆனா அதுல ஒருத்தர் பெண் வேசத்துல வந்திருக்கார் முன்ன பின்ன பார்த்த மாதிரி இருக்கு
ஓய் ஒழுங்கா சொல்லுயா முன்னயா இல்ல பின்னாயா “
“ அய்யா சாமி ஆளை விடுங்க எனக்கு தெரியல “
ம். இது நல்ல பிள்ளைக்கு அழகு வாய்யா போய் பார்க்கலாம் .இதை பார்த்தா ஷீட்டிங் எடுக்குற இடமாவா இருக்குது நா அப்பவே சொன்னேன் நல்ல இடமா பாருன்னு கேட்டாத்தானே“


எல்லாமே ரியலா இருக்கோனும் நம்ம ஜெய்லானி டீ வியில ஓக்கே .. ..கேமரா ரெடி........ஆக்‌ஷன்


வணக்கம் ..இன்னைக்கி நாம் பார்க்க போவது  ஜெய்லானி டீவியில சமையல் செய்வது எப்படின்னு சொல்ல வந்திருக்காங்க என்னவெல்லாம் செய்யபோறாங்கன்னு பார்க்கலாம் .உங்களை நீங்களே அறிமுகம் செஞ்சிக்கோங்க  “ முதல்ல நீங்க சொல்லுங்க “ உங்க பேரு

இத்தனை நாள பேபியா , பாட்டியா பழகிட்டு இப்ப போய்  பேர கேட்டா கண் கலங்குது ரத்த கண்ணீரே வருது புஸ் பூஸ்ன்னு இதயம் அடிக்குது... சரி,,சரி.. நா கேக்கல இப்பிடி சொல்லியே மனசை கரைச்சிடுறீங்க உங்க இடத்தில போய் நில்லுங்க “


அடுத்தது நீங்க சொல்லுங்கமா “  மிஸ்டர் இது என்ன இத்தனை நாள் மாமின்னு அன்பா கூப்பிட்டுட்டு பகிடியா “
மாமி அது வேறஏஏஏ இது வேறஏஏஏ இது டீவீ புரோக்கிராம்  சரி கண் கலங்காதீங்க பக்கத்தில டிஸ்யூ பண்டலே இருக்கு எடுத்துக்கோங்க..!! போய் அந்த டேபிள் பக்கத்துல இருங்கோ“


 சரி அடுத்து நீங்க சொல்லுங்க “ ஹலோ ஜெய் போன தடவை  போட்டிய ஆரம்பிச்சதே நாந்தான் தெரியுமா..? நினைவு இருக்கட்டும் இல்லாட்டி கதை சொல்லியே உங்களை அழவச்சிடுவேன் ஜாக்கிரதை ..பீ கேர் ஃபுல் “
”  வேண்டாம்மா வனி , சாரி கால வைக்க மரந்துட்டேன் . என்னைய விட்டுடுங்கோ .இல்லாட்டி என் கோட்டை வச்சு காமெடி பன்னிடுவீங்க . சரி இன்னைக்கு நாட்டாமை நீங்கதான் அப்படியே சைடுல நில்லுங்கோ.. “ 
நேயர்களே..!!  இவங்க இன்னைக்கு சிறப்பு விருந்தினர் . எல்லாத்தையும் டேஸ்ட் பாத்து சொல்லப்போறாங்க .”” அடுத்தது நீங்க சொல்லுங்க “  என் பேர் என்னது ஆ மறந்து போச்சு நா ஸீரியசா திங்க் பன்னிகிட்டே இருக்கேன் ஆனா காமெடியா வந்துகிட்டே இருக்கு அதனால இன்னைக்கி வரைக்கும் நா எல் போர்ட் தான் ..
ஓக்கே நீங்க அப்படிக்கா போய் நில்லுங்க “” 


 சார் ,அம்மா ஐயா வாங்க நீங்க யாரு “அட தல என்னை தெரியலையா நாந்தான் எல் கே “ஏன்  தல என்னாச்சு ஏன் இந்த வேஷம் ’  போன புரோகிராமுக்கு வேஷம் போட்டது அதான் அப்படியே வந்துட்டேன் “ சரி போனாப் போகுது அப்படி அந்த கேபின் பக்கமா போய் இருங்க “  அடுத்தது நம்ம அப்பாவி தங்கமணி இப்பிடி சொன்னாதான் பிடிக்குமாம் ரொம்ப்ப நன்றி “
உங்க இட்லியை தவிர ஏதாவது செய்யுங்க அடுத்தது நீங்க. என் பேரு மஹி எனக்கு பிடிச்சதூஊஊ “ சரி அப்படி போய் செய்யுங்க அப்ப வந்து பாத்துக்கிரேன் “ “ (மனசுக்குள் தப்பிச்சேண்டா சாமி ஏதாவது நொன்ன கேள்வி கேக்காம விட்டாரே மஹி ).

அடுத்ததா வந்திருக்கிறது ‘யோவ் என்னய்யா நாடகத்திலேந்து தப்பிச்சு வந்திட்டிங்களா .இது என்ன டிரஸ் புரியலையே “ என்ன ஓய் என்னை அடையாளம் தெரியலையா இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறியா” “ ஹி..ஹி.. ஒன்னுமில்ல நைட்டு அடிச்ச மப்பு அதான் கொஞ்சமா கண்ணுதெரியல ஒரு நாலு அடி தள்ளி நின்னா சரியா கண்டு பிடிச்சுடுவேன்”  “ ஓ இவர் நம்ம மங்குணி ஓக்கே என்னது கையில ஒன்னுமில்லாம வந்திருக்கீறீரு.

“ அதாம்ல நம்ம ஸ்டைலு அப்புறமா கவனி உமக்கே புரியும்” “ ஓக்கே ..ஓக்கே போங்க அப்படி நில்லுங்க  

”     இவர் பேர் அப்துல் காதர் இவரும் இன்னைக்கு ஏதோ செய்யரேன்னு சொல்லிட்டு வந்திருக்கார் “   “ அடப்பாவி மனுஷா நா எப்பயையா சொன்னேன் கோத்து விட்டுட்டியே சார் கொஞ்சம் மரியாதையா சொல்லுங்க இங்கே கேமரா ஓடிகிட்டு இருக்கு இது ஒரு ரியாலிட்டி ஷோ “ உனகென்ன மரியாதை பண்ணாடை , இப்பிடி மாட்டி உட்டுட்டியே அவ்வ்வ்  சரிபோய் நில்லுயா அப்படி “உனக்கு டிஸ்கவுண்ட் தரேன்


”  என்னது நிறைய பேர் பேரு குடுத்திருந்தாங்க இன்னும் கானலையே  என்ன ஆச்சி ஒரு வேளை அப்படியே எஸ் ஆயிட்டாங்களோ பயபுள்ளங்க நியுசே தெரியல “ “ பேசாம இதிலேயே கானவில்லைன்னு அறிவிச்சுடலாமா

   எல்லாரும் கோரஸாக நீங்க ஏதோ செய்யுரேன்னு சொன்னீங்களே என்ன ஆச்சு ” “ சரிங்க   அந்த அண்டாதானே அது கடைசியில வரும் ” 

ஒக்கே போட்டியில செய்ய ஆரம்பிங்க எது நல்லா வருதோ அவங்களுக்கு பிரைஸ் கிடைக்கும் . எது சுத்தமா சரி யில்லையோ அவங்களுக்கும் பிரைஸ் கிடைக்கும்”  ஓக்கே ஆரம்பிங்க....
 “ ஹலோ மஹி என்னது எல்லாரும் சுறுசுறுப்பா இருக்காங்க ஏதாவது செய்ய நீங்க என்னடான்னா பொருமையா போன் பண்ணிகிட்டு இருக்கீங்க”  “ ஹலோ இது என்னோட ஹஸ்ஸுகிட்ட போன் பண்ரேன்  .எப்பவும் அவர்தான் சமையல், நா போட்டோ மட்டும் தான். அதான் என்ன செய்யலாமுன்னு யோசனை கேக்குரேன் “
“ மங்கு நீங்க என்னா ஒன்னும் செய்யாம வேடிக்கை பாத்துகிட்டு இருக்கீங்க “ “ இன்னும் நிறைய நேரம் இருக்கு அது வரை ஒரு குட்டி தூக்கம் போட்டுகிரேன். சரியா. கால் மணிரேரத்துக்கு முன்னே என்னைய எழுப்பு “  மனசுக்குள் ((ச்சே நாசமா போவ கடைசியில என்னை அலாம் டைம் பீசா ஆக்கிட்டானே படுபாவி )) சத்தமா...சரிங்க சார் .தூங்குங்க .

என்னது திடீர்ன்னு ஒரே கண்ணு எரிச்சலா இருக்கு யாருங்க அது ஒரு மூட்டை வெங்காயத்தை உறிக்கிறது ”  இதெல்லாம் உங்க வூட்டு ஹோம் வொர்க் இங்க செய்யக்கூடாது “ மாமீ  பிளிஸ் எப்பவும் நீங்க கண்ண கசக்கிட்டு இருந்துட்டு இன்னைக்கு இங்கே எல்லாரையும் கசக்க வச்சிட்டீங்களே “ “ பாருங்க கண்ணு மட்டுமா கலங்குது ..மூக்குமில்ல ஒழுவுது “
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டிஸ்கி: ஒரு வாரத்தில போடனுங்கிற ஆர்டர்ல  வந்த தொடர் பதிவு இது அதனால்.இதில அறிமுகம் மட்டும் இருக்கு .இன்னும் அட்டகாசம் அடுத்த பதிவில் , இப்ப வந்தவங்க நல்ல மூக்கு பிடிக்க சாப்பிட்டு  போங்க

தொடரும்     

         

121 என்ன சொல்றாங்ன்னா ...:

Riyas said...

வந்தாச்சு வந்தாச்சு.. எல்லாம் எனக்குத்தான வாசிச்சிட்டு வரேன்..

முற்றும் அறிந்த அதிரா said...

ஐ எனக்குத்தான் எல்லாமேஏஏஏஏஏ

முற்றும் அறிந்த அதிரா said...

ஆங்........ ஆங்...... ‘......’ டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்....

முற்றும் அறிந்த அதிரா said...

சரி சரி சமாதானமாப் போயிடலாம்.... முதலாவதாக வந்தவருக்கு.... இனிப்பெல்லாம் கொடுங்க... 2வதாக வந்தவருக்கு(அது நானேதான்:)) உறைப்பெல்லாம்... மொத்தமா...:))

kavisiva said...

நான் தான் நாலாவது. அதனால நாலாவதா இருக்கற சிக்கன் டிக்கா எனக்குதான் யாருக்கும் தரமாட்டேன்

kavisiva said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அந்த டிசர்ட்டும் எனக்குதான். எனக்கே எனக்குத்தான் பூசுக்கு கூட கிடையாது

முற்றும் அறிந்த அதிரா said...

கவி டிசேர்ட் உங்களுக்குத்தான் எனக்கு வாணாம், ஆனா... சிக்கின் டிக்..டிக்... தரமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ஜெய்யின் உரை படிச்சு சிரிச்சு சிரிச்சு சாப்பிட்டதில புரையேறிவிட்டது... ஆபத்துக்குப் பாவமில்லை, அந்த கிரேப்ஸ் ல ஒரு நிறைய சீனி போட்டு ஜூஸ் பிளீஸ்.. உக்கு..உக்கு.. இருமல் வேற.... ஸ்ரொப்.. ஸ்ரொப் ஆரங்க சமையல் எல்லாம் முடிஞ்சபிறகும் வெங்காயத்தை உரிக்கிறது:)....

Riyas said...

எல்லா சாப்பாடும் என்னமா இருக்குது அப்பிடியே பிளாக்கோட சேர்த்து துண்ணோனும் போலிருக்கு..

அந்த இட்லி எங்க சேட்டன்கிட்ட வாங்கினதா..

kavisiva said...

அந்த இட்லி அப்பாவி தங்கமணி பிராண்ட் இட்லின்னா எனக்கு வேணாம்.

vanathy said...

டைட்டில் ஸாங் சூப்பர்.

அவங்க இங்கேயும் பேரை சொல்லவே இல்லையா?
ஹை! நாட்டாமை போஸ்டை அப்துல் காதரிடம் இருந்து புடுங்கியாச்சா???

சிறப்பு விருந்தினர் - சரியான தேர்வு ..ஹிஹி.

இட்லியை தவிர - வேணாம் உந்த ஐடியா சரிவராது. அப்ப படத்தில் இருக்கும் இட்லிகள் தங்கமணியின் இட்லிகள் இல்லையா???
//ஹலோ இது என்னோட ஹஸ்ஸுகிட்ட போன் பண்ரேன் .எப்பவும் அவர்தான் சமையல், நா போட்டோ மட்டும் தான். அதான் என்ன செய்யலாமுன்னு யோசனை கேக்குரேன் “//
haha...

எம்பி தான் டிசர்ட் செய்தாரா? சூப்பரா இருக்கு. அப்படியே ரெசிப்பியும் குடுங்கோ மங்குனி
சூப்பர். கலக்கிட்டீங்க.

கூப்பிட்டதும் வந்து பதிவு போட்டதற்கு மிக்க நன்றி, ஜெய்.

Riyas said...

@@@athira..
//சரி சரி சமாதானமாப் போயிடலாம்.... முதலாவதாக வந்தவருக்கு.... இனிப்பெல்லாம் கொடுங்க//

இனிப்பு சாப்பிட்டா அம்மா திட்டும்.. எனக்கு உறைப்புத்தான் வேனும்..அ...

Riyas said...

சாப்பாட்டுச்சண்டையில ஓட்டுப்போட மறந்துட்டன் இப்ப குத்திட்றன்..

Unknown said...

// இப்ப வந்தவங்க நல்ல மூக்கு பிடிக்க//

கூவம் பக்கத்துல சமைச்சா இப்பிடித்தான்

vanathy said...

ஸ்ரொப்.. ஸ்ரொப் ஆரங்க சமையல் எல்லாம் முடிஞ்சபிறகும் வெங்காயத்தை உரிக்கிறது:)....
சமையல் போட்டி முடிஞ்சுதா? யாரும் சொல்லவேயில்லை.

முற்றும் அறிந்த அதிரா said...

7/8/10 7:29 PM
vanathy said...


அவங்க இங்கேயும் பேரை சொல்லவே இல்லையா?/// எவிங்கள பற்றிக் கதைக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
.......................................

Riyas said...
@@@athira..
//சரி சரி சமாதானமாப் போயிடலாம்.... முதலாவதாக வந்தவருக்கு.... இனிப்பெல்லாம் கொடுங்க//

இனிப்பு சாப்பிட்டா அம்மா திட்டும்.. எனக்கு உறைப்புத்தான் வேனும்..அ...
/// ஜெய்..லானி, ஓடிவாங்கோ, முதல்ல நாட்டாமையைக் கூப்பிடுங்க.... இதுக்கு ஒரு தீர்ப்பைச் சொல்லிப்போட்டு, மிச்ச வேலையைப் பார்க்கச் சொல்லுங்க:))

முற்றும் அறிந்த அதிரா said...

vanathy said...
ஸ்ரொப்.. ஸ்ரொப் ஆரங்க சமையல் எல்லாம் முடிஞ்சபிறகும் வெங்காயத்தை உரிக்கிறது:)....
சமையல் போட்டி முடிஞ்சுதா? யாரும் சொல்லவேயில்லை
//// பறவாயில்லை கால் வச்ச வனீஈஈ, வந்திட்டீங்க, சும்மா போகாமல் டிஷ் எல்லாத்தையும் கழுவி துடைச்சுவிடுங்கோவன்:))... நாங்க கொஞ்ச நேரம் “கார்ட்ஸ்” வி”ழை”யாடப்போறம்:))

kavisiva said...

அதிரா, ரியாஸ் சண்டை வேண்டாம். ரெண்டுபேரும் எல்லாத்தையும் எனக்கு கொடுத்திடுங்கோ. அந்த இட்லியை மட்டும் ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்கோங்கோ :)

முற்றும் அறிந்த அதிரா said...

kavisiva said...
அதிரா, ரியாஸ் சண்டை வேண்டாம். ரெண்டுபேரும் எல்லாத்தையும் எனக்கு கொடுத்திடுங்கோ. அந்த இட்லியை மட்டும் ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்கோங்கோ :)/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), கவி அது அப்பாவித் தங்கமணி பிராண்ட் இட்லியாமே.... :)), எனக்கு வாணாம்:)) பூஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... உஸ் அப்பா முடியல்ல:))

ப்ரியமுடன் வசந்த் said...

யோவ் ஜெய்லானி இட்லி சாப்ட்டு ரெண்டு மாசமாச்சு நாக்குல எச்சி ஊற வைக்கிறேயேய்யா போச்சு நாளைக்கு 200 ரியால் அவுட்டு...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

படங்கள் கலக்கல்.. நகைச்சுவை நல்லா வந்திருக்கு.. இன்னும் கொஞ்சம் ப்ரொக்ராம ஆர்கனைஸ் பண்ணியிருக்கலாம்.. :))

ஹி ஹி.. எனக்கு கடைசி படத்துல இருக்கறத மட்டும் கொடுத்தாப் போதும் :))))))

//நா ஸீரியசா திங்க் பன்னிகிட்டே இருக்கேன் ஆனா காமெடியா வந்துகிட்டே இருக்கு//

அடப்பாவீஈஈஈஈஈஈ

//தொடரும்//

சிவப்பு கலர்ல.. கொட்டை எழுத்துல.. வேனாம்.. சமாதானமாப் போயிடலாம்..

சீமான்கனி said...

ஹலோ இது அநியாயம் நீங்களே இப்படி வெறும் படத்தை போட்டா நாங்கலாம் பாவம் இல்லையா...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஒரு வேளை அப்படியே எஸ் ஆயிட்டாங்களோ பயபுள்ளங்க நியுசே தெரியல “ “ பேசாம இதிலேயே கானவில்லைன்னு அறிவிச்சுடலாமா”

ஹா... ஹா... ஹா...

Asiya Omar said...

இணைத்த படங்கள் சூப்பர்.

Unknown said...

முதல் பந்திக்கு வந்தவங்க எல்லாம் மொய் வச்சுட்டு கிளம்புங்க. நாங்களும் சாப்பிடனும்.

சாந்தி மாரியப்பன் said...

எனக்கு டெஸர்ட் மட்டும் போதும்...

தூயவனின் அடிமை said...

தல சும்மா பூந்து விளையாடி இருக்கீங்க, தொடருங்கள்.........

தூயவனின் அடிமை said...

தல ரொம்ப பசிக்குது, இப்படியெல்லாம் போட்டு உம் முடியல......

sakthi said...

::))

பொன் மாலை பொழுது said...

சமையலுக்கும் உங்களுக்கும் நெறயவே உறவிருக்கு போல. :)
ஆமா? கூகிள் ல இருந்து தானே இந்த படங்கள ஆட்டைய போட்டீங்க ஜெய்லா??

Unknown said...

ரியாலிட்டி ஷோ ரொம்ப நல்லா இருக்கு..
படங்கள் எல்லாம் பசியினை தூண்டுகிறது

இலா said...

ஜெய்! டைட்டில் சாங் இன்ஸ்பிரேஷன் எங்க இருந்து ??!!! சரி சரி பூரிக்கட்டை கிடைச்சதா??!!! அப்புறம் இவ்வளவு சமைச்சீங்களா?! எனக்கும் ஒரு சந்தேகம் தான் :))

எம் அப்துல் காதர் said...

//ஹை! நாட்டாமை போஸ்டை அப்துல் காதரிடம் இருந்து புடுங்கியாச்சா??? சிறப்பு விருந்தினர் -
சரியான தேர்வு ..ஹிஹி.//

கொடுக்குற மாதிரி கொடுதுப்புட்டு,, இதெல்லாம் ரொம்ப அழிசாட்டியம்ங்க. ஹா..ஹா..

எம் அப்துல் காதர் said...

நான் இப்படியே ஓடிடவா பாஸ், இருங்க அந்த துண்டையும் சொம்பையும், படிக்கணையும் வாணிட்ட கொடுத்துட்டு... ஹி ஹி, யாரங்கே அந்த வெத்திலை பாக்கு சுண்ணாம்பு எல்லாத்தையும் நாட்டாம கிட்ட கொடுங்கப்பா!!

எம் அப்துல் காதர் said...

//நான் தான் நாலாவது. அதனால நாலாவதா இருக்கற சிக்கன் டிக்கா எனக்குதான் யாருக்கும் தரமாட்டேன்//

கவி, ஸ்ஸ்ஸ் ரகசியமா நாம பங்கு போட்டுக்குவோம். அந்த டிக்கா நமக்கும்
கொஞ்சம் ஹி ஹி ஹிஸ்டம். “தலை”க்கி காதுல உழுந்தா (யப்பா அதுக்கு கண்ணு காது மூக்கு வாயி) எல்லாமே காது தான்னு யார் சொன்னதுன்னு நான் சொல்லமாட்டேன்னு சொல்ல மாட்டேன். ஹா ஹா

எம் அப்துல் காதர் said...

// இப்ப வந்தவங்க நல்ல மூக்கு பிடிக்க//

//கூவம் பக்கத்துல சமைச்சா இப்பிடித்தான்//

பெரிய லெவல்ல fund இல்ல பாஸ், அதான் இப்படி, அட்ஜஸ்ட் பண்ணிகோங்க!ஹி ஹி

எம் அப்துல் காதர் said...

//முதல் பந்திக்கு வந்தவங்க எல்லாம் மொய் வச்சுட்டு கிளம்புங்க. நாங்களும் சாப்பிடனும்//

தல இப்படி ஒரு டெக்னிக்கை சொல்லி சாப்பிடுறவங்க வயத்தில பீதிய கெளப்பிடா தீங்க...அப்புறம் ...???

எம் அப்துல் காதர் said...

அந்த லாஸ்ட்டா உள்ள (ITEM# 11) மட்டும் எனக்கு போதும் பாஸ். அது தான் எனக்கு சிம்ப்லி சிம்பிள். ஹி..ஹி..(ஆமா ஷர்ஜாவுல உள்ள மாஸ் ஹோட்டல இந்நேரம் இழுத்து மூடி இருப்பானே) ஹா.. ஹா..

எம் அப்துல் காதர் said...

அமர்க்களம் + அதகளம் பண்ணிடீங்க பாஸ்!! இத பாராட்டாம சாப்பிட்டு போனா வ(ஹி..ஹி..)று வலிக்கும்.

vanathy said...

யோவ் முன்னாள் நாட்டாமை,
//இருங்க அந்த துண்டையும் சொம்பையும், படிக்கணையும் வாணிட்ட கொடுத்துட்டு... ஹி ஹி, யாரங்கே அந்த வெத்திலை பாக்கு சுண்ணாம்பு எல்லாத்தையும் நாட்டாம கிட்ட கொடுங்கப்பா!!//

இன்னும் பழைய ஆள் மாதிரி சொம்பு தூக்கிட்டு.. நான் நல்ல கூலிங் கண்ணாடியும், கோக் பாட்டிலும் கொண்டு வரேன். நீங்கள் உங்கள் சொம்பு, இன்னபிற பொருட்களை பரணிலை போடுங்கோ.

ஹேமா said...

ஜெய் ...உண்மையாவே இட்லி சாப்பிட்டு எவ்ளோ காலமாச்சு.இப்ப இட்லி பசிக்குது.இங்க இட்லி நினைச்ச உடன வாங்கவும் முடியாது.இட்லி சமைக்கவும் தெரியாது.இண்ணைக்கு இட்லி சாப்பிடுறவங்க எல்லாருக்கும் வயிறு வலிக்கணும்.சாபம் குடுக்கிறேன் !

ஜெய்லானி said...

@@@Riyas--//வந்தாச்சு வந்தாச்சு.. எல்லாம் எனக்குத்தான வாசிச்சிட்டு வரேன்..//

வாங்க ரியாஸ் ..எல்லாத்தையும் சாப்பிட வயித்துல இடம் இருக்கா..ஹா..ஹா.. இங்கள் வருனைக்கும் கருத்துக்கும் நன்றி

இமா க்றிஸ் said...

புது நாட்டாமைக்கு நல்வரவு.
//நான் நல்ல கூலிங் கண்ணாடியும், கோக் பாட்டிலும் கொண்டு வரேன். நீங்கள் உங்கள் சொம்பு, இன்னபிற பொருட்களை பரணிலை போடுங்கோ.// ;)))

ஜெய்லானி, ஒரு மூட்டை வெங்காயத்திலயும் சீனிச்சம்பல் செய்யப் போறாங்க. ;))

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஸ்டாப்..ஸ்டாப்...

எல்லோரும் எந்திரிங்க...சாபிட்டது வரைக்கும் போதும்.. அப்படியே பில் செட்டில் பண்ணிட்டு கிளம்புங்க...

யாரும் அழக்கூடாது..

அடுத்தது நாங்க சாப்பிடணுமில்ல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் neeyum jey maathiriye pakkam pakkamaa pathivu poda aaramichchuttaa...

நாடோடி said...

ச‌மைய‌ல் க‌ளை க‌ட்டுது... போட்டோ தான் நாக்குல‌ எச்சில் ஊற‌ வைக்குது.. ந‌ட‌த்துங்க‌..

Vidhya Chandrasekaran said...

ரைட்டு...நான் ரெஸ்டாரெண்ட் ரிவ்யூ போட வேண்டியது தான்.

ஜெய்லானி said...

@@@athira--// ஐ எனக்குத்தான் எல்லாமேஏஏஏஏஏ //


வாங்க..பேபி அதிராவுக்கு எல்லாத்தையும் சாப்பிட உங்க சின்ன வயத்துல இடம் இருக்கா ..!!

//ஆங்........ ஆங்...... ‘......’ டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்....//

அழுவாதீங்க அந்த கடைசி தட்டு உங்களுக்குதான்

//சரி சரி சமாதானமாப் போயிடலாம்.... முதலாவதாக வந்தவருக்கு.... இனிப்பெல்லாம் கொடுங்க... 2வதாக வந்தவருக்கு(அது நானேதான்:)) உறைப்பெல்லாம்... மொத்தமா...:))//

அப்ப சிக்கன் டிக்கா..எடுத்துகோங்க .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@kavisiva--//நான் தான் நாலாவது. அதனால நாலாவதா இருக்கற சிக்கன் டிக்கா எனக்குதான் யாருக்கும் தரமாட்டேன் //

வாங்க.. உங்களுக்கு இல்லாததா..எல்லாத்திலேயும் பத்து தட்டு இருக்கு கவலைப்படாதீங்க .அப்ப ஒன்னு போதுமா..

//ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அந்த டிசர்ட்டும் எனக்குதான். எனக்கே எனக்குத்தான் பூசுக்கு கூட கிடையாது//

காரத்துக்கு கூட இனிப்பும் சாப்பிட்டா(நிறைய) அப்புறம் வயிறு வலிக்கும் (இது வயிற்றெரிச்சல் இல்லை ஹி..ஹி..)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//கவி டிசேர்ட் உங்களுக்குத்தான் எனக்கு வாணாம், ஆனா... சிக்கின் டிக்..டிக்... தரமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ஜெய்யின் உரை படிச்சு சிரிச்சு சிரிச்சு சாப்பிட்டதில புரையேறிவிட்டது... ஆபத்துக்குப் பாவமில்லை, அந்த கிரேப்ஸ் ல ஒரு நிறைய சீனி போட்டு ஜூஸ் பிளீஸ்.. உக்கு..உக்கு.. இருமல் வேற.... ஸ்ரொப்.. ஸ்ரொப் ஆரங்க சமையல் எல்லாம் முடிஞ்சபிறகும் வெங்காயத்தை உரிக்கிறது:)....//


கீழே தொடருமுன்னு போட்டிருக்கேனே கவனிக்கலையா..அவ்வ்வ்வ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

r.v.saravanan said...

படங்கள் பார்த்தவுடன் பசி எடுக்குது ஜெய்லானி

கடி பாட்டு நல்லா கடிக்குது சாரி இருக்குது

Anonymous said...

ஜெய்லானி சார் பாட்டு சூப்பர் ஆனா எந்த ராகத்தில் பாட வேண்டுமென்னு சொல்லவே இல்லை ...அப்புறம் items எல்லாம் சூப்பர் எல்லாமே எனக்கு தான் இப்பவே சொல்லிட்டேன் ..அப்பாவி தங்கமணி செஞ்ச இட்லி தானே அது அப்போ சூபேரா தான் இருக்கும் ..

சிநேகிதன் அக்பர் said...

அடப்பாவிங்களா... வயித்தெரிச்சலை கிளப்பிட்டிங்களே...

வயிறு அநியாயத்திற்கு பசிக்குது. சாப்பாட்டுக்கு நான் எங்கே போவேன்.

ஜெய்லானி said...

@@@Riyas--//எல்லா சாப்பாடும் என்னமா இருக்குது அப்பிடியே பிளாக்கோட சேர்த்து துண்ணோனும் போலிருக்கு..//

ஹா..ஹ.. பாத்து ரியாஸ் ..ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க

//அந்த இட்லி எங்க சேட்டன்கிட்ட வாங்கினதா..//

சேட்டன் இட்லி இப்பிடியா இருக்கும்..நல்லா பாருங்க ரியாஸ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@kavisiva--//அந்த இட்லி அப்பாவி தங்கமணி பிராண்ட் இட்லின்னா எனக்கு வேணாம்.//

தட்டில இருப்பதை பாத்துமா சந்தேகம் அதை தட்டில வைக்க முடியாது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//டைட்டில் ஸாங் சூப்பர்.//

வாங்க..வாங்க..ஹா....ஹா..சந்தோஷம்

//அவங்க இங்கேயும் பேரை சொல்லவே இல்லையா? //

எங்க சொல்றாங்க..ரொம்ப கஷ்டம்..அவ்வ்வ்வ்
//ஹை! நாட்டாமை போஸ்டை அப்துல் காதரிடம் இருந்து புடுங்கியாச்சா??? //

ஹி..ஹி... சமைக்க விட்டுட்டேன். பாக்கலாம் என்ன செய்றாருன்னு..க்கி..க்கி...

//சிறப்பு விருந்தினர் - சரியான தேர்வு ..ஹிஹி./

இப்பிடி ஐஸ் வச்சாதான் அடுத்த பதிவுல நம்மல சுத்தல்ல விட மாட்டீங்க.ஹி..ஹி..

//இட்லியை தவிர - வேணாம் உந்த ஐடியா சரிவராது. அப்ப படத்தில் இருக்கும் இட்லிகள் தங்கமணியின் இட்லிகள் இல்லையா??? //

இல்ல ..இல்ல ..அது வேற பிராண்டு ..பாத்தா தெரியலையா ..சாஃப்டா இருக்கும் போதே..!!
//ஹலோ இது என்னோட ஹஸ்ஸுகிட்ட போன் பண்ரேன் .எப்பவும் அவர்தான் சமையல், நா போட்டோ மட்டும் தான். அதான் என்ன செய்யலாமுன்னு யோசனை கேக்குரேன் “//
haha... //

ஹா..ஹா.. அவங்க இன்னும் பார்க்கல..பார்த்தா என்ன சொல்ல போறாங்களோ..

//எம்பி தான் டிசர்ட் செய்தாரா? சூப்பரா இருக்கு. அப்படியே ரெசிப்பியும் குடுங்கோ மங்குனி //

அவர்தான் கையில ஒன்னும் கொண்டு வரலையே அதுவுமில்லாம ஆள் தூங்குது இப்ப

//சூப்பர். கலக்கிட்டீங்க.கூப்பிட்டதும் வந்து பதிவு போட்டதற்கு மிக்க நன்றி, ஜெய்.//

வாங்க ..வாங்க,சந்தோஷம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Riyas
@@@athira..
//சரி சரி சமாதானமாப் போயிடலாம்.... முதலாவதாக வந்தவருக்கு.... இனிப்பெல்லாம் கொடுங்க//

இனிப்பு சாப்பிட்டா அம்மா திட்டும்.. எனக்கு உறைப்புத்தான் வேனும்..அ...//

ரியாசுக்கு உறைப்பா மக்கா நல்லா கேட்டுகோங்க இது தொடர் ..அடுத்த பதிவில் கிட்டும் கிட்டும் ஹி..ஹி..

//சாப்பாட்டுச்சண்டையில ஓட்டுப்போட மறந்துட்டன் இப்ப குத்திட்றன்..//

சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கே.ஆர்.பி.செந்தில்--// இப்ப வந்தவங்க நல்ல மூக்கு பிடிக்க//

கூவம் பக்கத்துல சமைச்சா இப்பிடித்தான் //

அட வாங்க ..!!உங்களுக்கும் விருந்து இருக்கு நல்லா சாப்பிட்டுட்டு போங்க.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//ஸ்ரொப்.. ஸ்ரொப் ஆரங்க சமையல் எல்லாம் முடிஞ்சபிறகும் வெங்காயத்தை உரிக்கிறது:)....
சமையல் போட்டி முடிஞ்சுதா? யாரும் சொல்லவேயில்லை.//

இன்னும் இல்ல அதான் கீழே தொடரும் போட்டிருக்கேன். பாக்கலையா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira
@@@vanathy

அவங்க இங்கேயும் பேரை சொல்லவே இல்லையா?/// எவிங்கள பற்றிக் கதைக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). //

புரிஞ்சா சரிதான் ..ஹா..ஹா..ஹ..

@@@Riyas
@@@@athira..
//சரி சரி சமாதானமாப் போயிடலாம்.... முதலாவதாக வந்தவருக்கு.... இனிப்பெல்லாம் கொடுங்க//

இனிப்பு சாப்பிட்டா அம்மா திட்டும்.. எனக்கு உறைப்புத்தான் வேனும்..அ...
/// ஜெய்..லானி, ஓடிவாங்கோ, முதல்ல நாட்டாமையைக் கூப்பிடுங்க.... இதுக்கு ஒரு தீர்ப்பைச் சொல்லிப்போட்டு, மிச்ச வேலையைப் பார்க்கச் சொல்லுங்க:)) //

அதான் பத்து தட்டு இருக்குன்னு சொன்னேனே . கவலைப்படாதீங்க .. நாட்டாமை இப்ப வேடிக்கை வேற பஞ்சாயத்துல பிசி..

@@@vanathy said...
ஸ்ரொப்.. ஸ்ரொப் ஆரங்க சமையல் எல்லாம் முடிஞ்சபிறகும் வெங்காயத்தை உரிக்கிறது:)....
சமையல் போட்டி முடிஞ்சுதா? யாரும் சொல்லவேயில்லை//

ஹா..ஹா.. அடுத்த தொடரில் முடிவு தெரியும் .என்னாச்சுன்னு
//// பறவாயில்லை கால் வச்ச வனீஈஈ, வந்திட்டீங்க, சும்மா போகாமல் டிஷ் எல்லாத்தையும் கழுவி துடைச்சுவிடுங்கோவன்:))... நாங்க கொஞ்ச நேரம் “கார்ட்ஸ்” வி”ழை”யாடப்போறம்:))//

ஆஆஆ..வங்க இதுல நாட்டமை தெரியுமாஆஆஆ.பாத்து கேட்டுடப்போகுது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

முத்து said...

உன்கிட்ட தான் கத்து கொள்ளணும் எப்படி மொக்கை போடுறதுன்னு

ஸாதிகா said...

ஜெய்லானி தொல்லைகாட்சியின் அட்டகாசம் தாங்க முடியலே.

ஜெய்லானி said...

@@@kavisiva--//அதிரா, ரியாஸ் சண்டை வேண்டாம். ரெண்டுபேரும் எல்லாத்தையும் எனக்கு கொடுத்திடுங்கோ. அந்த இட்லியை மட்டும் ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்கோங்கோ :)//

ஹா..ஹா.. கவி இது தங்க மணி இட்லி இல்ல . தைரியமா சாப்பிடுங்க..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//
@@@kavisiva said...
அதிரா, ரியாஸ் சண்டை வேண்டாம். ரெண்டுபேரும் எல்லாத்தையும் எனக்கு கொடுத்திடுங்கோ. அந்த இட்லியை மட்டும் ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்கோங்கோ :)/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), கவி அது அப்பாவித் தங்கமணி பிராண்ட் இட்லியாமே.... :)), எனக்கு வாணாம்:)) பூஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... உஸ் அப்பா முடியல்ல:)) //

ஹி..ஹி.. அதிஸ் அவங்க இட்லியை வைக்க தட்டு இல்ல அம்மிதான் கொண்டு வரனும் .படத்தை பார்தாலே தெரியல..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ப்ரியமுடன் வசந்த்--//யோவ் ஜெய்லானி இட்லி சாப்ட்டு ரெண்டு மாசமாச்சு நாக்குல எச்சி ஊற வைக்கிறேயேய்யா போச்சு நாளைக்கு 200 ரியால் அவுட்டு...//

என்னய்யா..?? இட்லி கிடைக்காத ஊர்லயா இருக்கே.. இங்கே எந்த கடைக்கு போனாலும் நம்ம ஊர் ஐட்டம் எல்லாம் கிடைக்கும். ஹா..ஹ.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//படங்கள் கலக்கல்.. நகைச்சுவை நல்லா வந்திருக்கு.. இன்னும் கொஞ்சம் ப்ரொக்ராம ஆர்கனைஸ் பண்ணியிருக்கலாம்.. :)) //

ஹா..ஹா.. இருங்க ..இருங்க ..இது இன்னும் முடியல மீதியும் இருக்கு அப்ப வரும் பாருங்க ..

//ஹி ஹி.. எனக்கு கடைசி படத்துல இருக்கறத மட்டும் கொடுத்தாப் போதும் :)))))) //

உங்களுக்கு இல்லாத்தா ..அப்படியே எடுத்துக்கோங்க..

//நா ஸீரியசா திங்க் பன்னிகிட்டே இருக்கேன் ஆனா காமெடியா வந்துகிட்டே இருக்கு//

அடப்பாவீஈஈஈஈஈஈ //

ஹா..ஹா......க்கி..க்கி...

//தொடரும்//

சிவப்பு கலர்ல.. கொட்டை எழுத்துல.. வேனாம்.. சமாதானமாப் போயிடலாம்.. //

சரி என்னாகுதுன்னு தொடர் முடிவுல பாக்கலாம்..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சீமான்கனி--//ஹலோ இது அநியாயம் நீங்களே இப்படி வெறும் படத்தை போட்டா நாங்கலாம் பாவம் இல்லையா...//

ஹா..ஹா.. அப்ப படத்தை மட்டும்தானா பாத்தீங்க.. ஓக்கே..ஓக்கே.. சாப்பாடு அந்த மாதிரி இருக்கில்ல.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//ஒரு வேளை அப்படியே எஸ் ஆயிட்டாங்களோ பயபுள்ளங்க நியுசே தெரியல “ “ பேசாம இதிலேயே கானவில்லைன்னு அறிவிச்சுடலாமா”

ஹா... ஹா... ஹா...//

வாங்க நிஜாம் பாய்..!! ஹா..ஹா. ஆமா யாருமே வராதப்ப என்ன செய்யுரதாம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@asiya omar--// இணைத்த படங்கள் சூப்பர்.//

வாங்க ஆஸியாக்கா..!!சந்தோஷம் விருதுக்கும்
மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--//முதல் பந்திக்கு வந்தவங்க எல்லாம் மொய் வச்சுட்டு கிளம்புங்க. நாங்களும் சாப்பிடனும்.//

வாங்க கலா .!!நிறைய இருக்கு அமைதியா சாப்பிடுங்க நோ டென்ஷன்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்--// எனக்கு டெஸர்ட் மட்டும் போதும்...//

வாங்க சாரல் அப்ப மீதி எதுவும் வேனாமா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ப.கந்தசாமி said...

இது என்ன புதுக்கூத்து ?

Unknown said...

jailani machan..
jailani machan...

yen ethuvarikum nalathaney poikitu erunchu....

முடியலை. நான் அழுதுடுவேன்..

ok tata..

coments potenla..choclate anupati ungalium sami kanai kuthipudum ammam choliputen..

வேலன். said...

எல்லாம் அவரே சொந்தமாக சமையல் செய்து எடுத்த படங்கள். இதைப்போல் கக்கு மாணிக்கம் குகூளில் இருந்து ஆட்டைய போட்டதுனு சொல்றார்பாருங்க். அவருககும் ஒரு பிளேட் தாருங்கள். அப்புறம் வாயே திறக்க மாட்டார்(அல்வாக இருந்தால் விஷேஷம்)
வாழ்க வளமுடன்,
வேலன்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. ஒபெனிங் சாங் சூப்பர்..
"பாட்டு பாடி கொசுவுக்கு கோவம் வர வச்சிட்டீங்களே.??"
அதான் போட்டு தாக்கிருக்கு...??"

செப் அறிமுக படலம்.. அருமை..
அதென்ன... ஒரே இட்லி மயமா இருக்கு???
படங்கள் எல்லாமே தூள்...!!

சாருஸ்ரீராஜ் said...

ஒபெனிங் சாங் சூப்பரா இருக்கு , இத்தனை பேர் சமையலையும் ஒரே நேரத்தில காமிச்சுடுவிங்களா?

நான் ஆட்சேபிக்கிறேன் எங்க கேக் ராணி மஹியை சமைக்க தெரியாதுன்னு சொல்றதுக்கு .....

படங்கள் எல்லாம் சூப்பர்.

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன்--//தல சும்மா பூந்து விளையாடி இருக்கீங்க, தொடருங்கள்.........//

ஹா..ஹா.. இன்னும் மெயின் மேட்டரே வரலையே..
//தல ரொம்ப பசிக்குது, இப்படியெல்லாம் போட்டு உம் முடியல......//

அப்படியே ஒரு பிளேட்டை உங்க பக்கம் இழுத்துக்கோங்க.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@sakthi--// ::)) //


வாங்க ..!!வாங்க..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்-//சமையலுக்கும் உங்களுக்கும் நெறயவே உறவிருக்கு போல. :) //

ஹா..ஹா....நீங்க சுத்தி சுத்தி எங்க வரீங்கன்னு புரியுது பாஸ்..உள் குத்து பயங்கரமாயில்ல இருக்கு..

// ஆமா? கூகிள் ல இருந்து தானே இந்த படங்கள ஆட்டைய போட்டீங்க ஜெய்லா?? //

ஒரு தட்டு உங்களுக்கு தனியா இருக்கு ..பப்ளிக்குல போட்டு குடுத்துடாதீங்க..ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சிநேகிதி--// ரியாலிட்டி ஷோ ரொம்ப நல்லா இருக்கு..படங்கள் எல்லாம் பசியினை தூண்டுகிறது //

வாங்க ..!!சந்தோஷம் ..இது செய்யறதுல நீங்களும் கில்லாடிதானே இந்த வாரம் செஞ்சி பாத்துடுங்க.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இலா--//ஜெய்! டைட்டில் சாங் இன்ஸ்பிரேஷன் எங்க இருந்து ??!!! //
வாங்க..!! எனக்கு இந்த மாதிரி மொக்கை பாட்டு ஈஸியா வரும் சமையத்துல எங்கயாவது இது மாதிரி போடுவதுண்டு.

//சரி சரி பூரிக்கட்டை கிடைச்சதா??!!! //


க்கி..க்கி..நாந்தான் எஸ்ஸாயிட்டேனே //

//அப்புறம் இவ்வளவு சமைச்சீங்களா?! எனக்கும் ஒரு சந்தேகம் தான் :))//

இதில ஒன்னு ரெண்டு செய்ததுண்டு விஷ பரிட்சைகளில் இறங்குவது எனக்கு வாழைப்பழம் சாப்பிடுவது மாதிரி ..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சசிகுமார் said...

ஏதாவது மிச்சம் இருக்கா இல்லை எல்லோரும் சாப்பிட்டு முடிச்சாச்சா

kavisiva said...

//இதில ஒன்னு ரெண்டு செய்ததுண்டு விஷ பரிட்சைகளில் இறங்குவது எனக்கு வாழைப்பழம் சாப்பிடுவது மாதிரி ..ஹி..ஹி..//

ஆனா நீங்க சமைச்சதை சாப்பிடுபவருக்கு விஷம் மாதிரி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

அல்க்சஜ்ட்பல்க்ச்ப் அச்டப்ச்டப் க்சஜ்ப்ஜ்சஜ்ப்ஸ்...

அட இருங்கப்பா சாப்டுகிட்டு இருக்கேன்ல..

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//ஹை! நாட்டாமை போஸ்டை அப்துல் காதரிடம் இருந்து புடுங்கியாச்சா??? சிறப்பு விருந்தினர் -
சரியான தேர்வு ..ஹிஹி.//

கொடுக்குற மாதிரி கொடுதுப்புட்டு,, இதெல்லாம் ரொம்ப அழிசாட்டியம்ங்க. ஹா..ஹா//


தொடர் கடைசியில தெரியுங்க பொருங்க..ஹா..ஹ..
//நான் இப்படியே ஓடிடவா பாஸ், இருங்க அந்த துண்டையும் சொம்பையும், படிக்கணையும் வாணிட்ட கொடுத்துட்டு... ஹி ஹி, யாரங்கே அந்த வெத்திலை பாக்கு சுண்ணாம்பு எல்லாத்தையும் நாட்டாம கிட்ட கொடுங்கப்பா!!//

அது அந்த காலமப்பா..இப்ப லேப்டாப்பு ,ரேபான் கிளாஸ் , லேண்ட் ரோவர் வண்டி இதான் ஸ்டையில் அதை குடுத்துட்டு போங்க..

//கவி, ஸ்ஸ்ஸ் ரகசியமா நாம பங்கு போட்டுக்குவோம். அந்த டிக்கா நமக்கும்
கொஞ்சம் ஹி ஹி ஹிஸ்டம். “தலை”க்கி காதுல உழுந்தா (யப்பா அதுக்கு கண்ணு காது மூக்கு வாயி) எல்லாமே காது தான்னு யார் சொன்னதுன்னு நான் சொல்லமாட்டேன்னு சொல்ல மாட்டேன். ஹா ஹா//

யோவ் உனக்கு வச்சிருக்கிற டிக்கால மட்டும் நாட்டு மருந்து (( அதுவும் மாட்டுக்கு குடுக்கிறது ))கலந்து வச்சிருக்கேன் .திருப்தியா சாப்பிடு நாளைக்கு நல்லா இருந்தா பாக்கலாம் ஹி..ஹி..

//பெரிய லெவல்ல fund இல்ல பாஸ், அதான் இப்படி, அட்ஜஸ்ட் பண்ணிகோங்க!ஹி ஹி//

உஸ்..ரகசியத்தை வெளிய சொல்லக் கூடாது. அப்பறம் ஸ்டுடியோவை யாராவது விலைக்கு கேட்டா.

////முதல் பந்திக்கு வந்தவங்க எல்லாம் மொய் வச்சுட்டு கிளம்புங்க. நாங்களும் சாப்பிடனும்//

தல இப்படி ஒரு டெக்னிக்கை சொல்லி சாப்பிடுறவங்க வயத்தில பீதிய கெளப்பிடா தீங்க...அப்புறம் ...???//

ச்சே.ச்சே..என் சர்வீஸ் எப்பவும் ஃபிரிதான் பயப்படாதீங்க . கத்திய காட்டியெல்லாம் மிரட்ட மாட்டேன்..ஹி.ஹி..

//அந்த லாஸ்ட்டா உள்ள (ITEM# 11) மட்டும் எனக்கு போதும் பாஸ். அது தான் எனக்கு சிம்ப்லி சிம்பிள். ஹி..ஹி..(ஆமா ஷர்ஜாவுல உள்ள மாஸ் ஹோட்டல இந்நேரம் இழுத்து மூடி இருப்பானே) ஹா.. ஹா..//

யோவ்..ய்யோவ்..ய்யோவ்..ஒரு வேளைக்கா பாத்துய்யா. கொஞ்சம் தண்ணி குடிக்கவாவது இடம் இருக்கட்டும்..
//அமர்க்களம் + அதகளம் பண்ணிடீங்க பாஸ்!! இத பாராட்டாம சாப்பிட்டு போனா வ(ஹி..ஹி..)று வலிக்கும்.//

ஹி..ஹி.. இது அறிமுகம்தான் இன்னும் வரும் வரும்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//யோவ் முன்னாள் நாட்டாமை,
//இருங்க அந்த துண்டையும் சொம்பையும், படிக்கணையும் வாணிட்ட கொடுத்துட்டு... ஹி ஹி, யாரங்கே அந்த வெத்திலை பாக்கு சுண்ணாம்பு எல்லாத்தையும் நாட்டாம கிட்ட கொடுங்கப்பா!!//

இன்னும் பழைய ஆள் மாதிரி சொம்பு தூக்கிட்டு.. நான் நல்ல கூலிங் கண்ணாடியும், கோக் பாட்டிலும் கொண்டு வரேன். நீங்கள் உங்கள் சொம்பு, இன்னபிற பொருட்களை பரணிலை போடுங்கோ.//

அதானே ..சரியா கேட்டீங்க ..இன்னும் பழைய நினைவில இருந்து கிட்டே..புதுசுக்கு மாறுங்க பாஸ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹேமா--//ஜெய் ...உண்மையாவே இட்லி சாப்பிட்டு எவ்ளோ காலமாச்சு.இப்ப இட்லி பசிக்குது.இங்க இட்லி நினைச்ச உடன வாங்கவும் முடியாது.இட்லி சமைக்கவும் தெரியாது.இண்ணைக்கு இட்லி சாப்பிடுறவங்க எல்லாருக்கும் வயிறு வலிக்கணும்.சாபம் குடுக்கிறேன் ! //

வாங்க குழந்தை நிலா..இது ரொம்ப ஈஸி.. அரிசி .உளுந்தை தனித்தனியா ஊற வச்சு அதை மிக்ஸியில அரைச்சு வைத்து செய்யலாம் தோசைக்கு அதில வெந்தயம் சேர்தால் நல்லா வரும் . இட்லி குக்கர் ஹைப்பர் மர்கெட்டில் பாருங்க .இல்லை ஊரிலிருந்து யாராவது வந்தால் கொண்டு வரச்சொல்லுங்க சிம்ளி மேட்டர் இது. டோண்ட் ஓர்ரி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா--//புது நாட்டாமைக்கு நல்வரவு.
//நான் நல்ல கூலிங் கண்ணாடியும், கோக் பாட்டிலும் கொண்டு வரேன். நீங்கள் உங்கள் சொம்பு, இன்னபிற பொருட்களை பரணிலை போடுங்கோ.// ;)))

ஜெய்லானி, ஒரு மூட்டை வெங்காயத்திலயும் சீனிச்சம்பல் செய்யப் போறாங்க. ;)) ///

ஆஅ...அதுக்குள்ள கண்ணெரிச்சல் தாங்கலையே.. அவங்களுக்கு இனிப்பு பிடிக்குமா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வெறும்பய--//

ஸ்டாப்..ஸ்டாப்... //

ஹலோ..எப்பவும் சாப்பிடறவங்களை விரட்டாதீங்க.

//எல்லோரும் எந்திரிங்க...சாபிட்டது வரைக்கும் போதும்.. அப்படியே பில் செட்டில் பண்ணிட்டு கிளம்புங்க...//

பில்லா...நீங்க ஏதோ அட்ரஸ் மாறி வந்துட்டீங்கலா

// யாரும் அழக்கூடாது..

அடுத்தது நாங்க சாப்பிடணுமில்ல...//

ஓஹ் அதுதானா..வாங்க பாஸ். உங்களுக்கு ஸ்பெஷலா தனியா இருக்கு .வாங்க ஒரு கலக்கு கலக்குவோம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@RAJ--//
"க்ளிக்" செய்து படியுங்கள்.

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம். //

பார்த்தேன் . யாரும் யாரையும் ,மனசை மாத்த முடியாது . படைத்த இறைவனை தவிர. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//

யோவ் neeyum jey maathiriye pakkam pakkamaa pathivu poda aaramichchuttaa...//


இல்ல பாஸ் இது அது மாதிரி ஆகிட்டுது . பாதியில விட்டா அப்புறம் புரியாது அதான். அடுத்த முறை ஆகாது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Thenammai Lakshmanan said...

ஐயயோ பசிக்குது..ம்படிக்கவே முடில..இரு ஜெய் சாப்பிட்டு வர்றேன்..

ஜெயந்தி said...

சமையல் நிகழ்ச்சியில சமைச்சதா? சூப்பரா இருக்கே. அடுத்த வாரம் செய்முறை விளக்கம் போடுங்க.

காஞ்சி முரளி said...

ஜெய்லானி சார்...
சமைச்சு வைச்சா... சாப்பிடுற ஆளு நானு...!
நம்ம மரமண்டைக்கு இதெல்லாம் புரியாதுங்கோ சாமியோ...!

வரட்டா...!

நட்புடன்...
காஞ்சி முரளி...

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி இதுல உன் ஸ்டைல் மிஸ்ஸிங் . கொஞ்சம் இடிக்குதேப்பா ???? மெயில் பாரு

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அடுத்தது நம்ம அப்பாவி தங்கமணி இப்பிடி சொன்னாதான் பிடிக்குமாம் //
ஹி ஹி ஹி... நீங்க ரெம்ப நல்லவருங்க... (இது வரைக்கும் படிச்ச வரைக்கும்... இனி எப்படி எல்லாம் வாரி இருக்காரோ... ஹும்... பாப்போம்...)

//உங்க இட்லியை தவிர ஏதாவது செய்யுங்க//
அதான பாத்தேன்... அடுத்த வரிலேயே வெச்சாரே ஆப்பு...

மகிய அநியாயத்துக்கு வாரி இருக்கீங்க... எங்க சங்கம் சார்பா நோட்டீஸ் வரும்...வெயிட்...

வேணும்னே அழகழகா இட்லி படம் எல்லாம் போட்டு என்னை வெறுபேத்தின ஜெய்லானி டௌன் டௌன்... டௌன் டௌன் சொல்லணும்னு நெனைக்கற மத்த தாய் குலங்கள் இங்க சேந்துக்கலாம்...

ஜெய்லானியோட சேந்து தங்கமணி இட்லிய பழிச்ச கவிசிவா, அதிரா, டௌன் டௌன்...

//sandhya said அப்பாவி தங்கமணி செஞ்ச இட்லி தானே அது அப்போ சூபேரா தான் இருக்கும் ..//
சந்தியா வாழ்க வாழ்க...

ஹா ஹா ஹா... வழக்கம் போல சிரிச்சே முடியல பாஸ்... ஹா ஹா ஹா

ஜெய்லானி said...

@@@நாடோடி--//ச‌மைய‌ல் க‌ளை க‌ட்டுது... போட்டோ தான் நாக்குல‌ எச்சில் ஊற‌ வைக்குது.. ந‌ட‌த்துங்க‌..//

வாங்க ..!!வாங்க ..!! சாப்பிடுங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வித்யா--//ரைட்டு...நான் ரெஸ்டாரெண்ட் ரிவ்யூ போட வேண்டியது தான்.//

போடுங்க ..போடுங்க ..முதல் கஸ்டமரா நா வரேன் .. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--// படங்கள் பார்த்தவுடன் பசி எடுக்குது ஜெய்லானி //

அப்ப உங்களுக்கு ஜீரண உறுப்புகள் உங்க உடம்புல சரியா வேலை செய்யுதுன்னு அர்த்தம் .ஆர் யூ பர்ஃபெக்ட் ஆல் ரைட்..ஓக்கே..!!

//கடி பாட்டு நல்லா கடிக்குது சாரி இருக்குது //

ஹி..ஹி.. ரொம்ப சந்தோஷம் கடிச்சதுக்கு..ச்சே..நல்லா இருந்த்துக்கு..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@sandhya--//ஜெய்லானி சார் பாட்டு சூப்பர் ஆனா எந்த ராகத்தில் பாட வேண்டுமென்னு சொல்லவே இல்லை ...//

வாங்க..!!இதுக்கு பேரு கொசு ராகம்...இதிலதான் பாடனும். பாடிப் பாருங்க..ஹி..ஹி..

//அப்புறம் items எல்லாம் சூப்பர் எல்லாமே எனக்கு தான் இப்பவே சொல்லிட்டேன் ..அப்பாவி தங்கமணி செஞ்ச இட்லி தானே அது அப்போ சூபேரா தான் இருக்கும் ..//

ம் இதுக்குதான் விதி வலிதுன்னு சொல்வாங்க ..எதுக்கும் ஒருதடவை ஆமை ஜோசியம் பாருங்க ..ஏதாவது பரிகாரம் இருக்கும்..ஹா..ஹ.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அக்பர்--//அடப்பாவிங்களா... வயித்தெரிச்சலை கிளப்பிட்டிங்களே...//

வாங்க அக்பர்..!!கூல்..கூல்...ஹா..ஹா...

//வயிறு அநியாயத்திற்கு பசிக்குது. சாப்பாட்டுக்கு நான் எங்கே போவேன். //

அப்ப இன்னும் சாப்பிடலையா..அதான் க்கி..க்கி.. இதுல முதல்ல ஐஸ் கிரீமை சாப்பிடுங்க..அப்புறம் பிரியாணிதான் ...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@முத்து--//உன்கிட்ட தான் கத்து கொள்ளணும் எப்படி மொக்கை போடுறதுன்னு //

அட வாய்யா ..! எங்கே ஆளையே கானோம்..!!இந்த விஷயத்துல நான் டபிள் எம் ஏ.தெரியுமா..ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//ஜெய்லானி தொல்லைகாட்சியின் அட்டகாசம் தாங்க முடியலே.//

வாஙக ஸாதிக்காக்கா..!! இதுக்கு ரிமோட் எல்லாம் இல்ல.ஆஃப் பண்ண . ஊருக்கு போற வரை மொக்கையோ மொக்கைதான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD--//இது என்ன புதுக்கூத்து ?//

வாங்கய்யா..!!நீங்க எதை சொல்றீங்க.ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@siva--//

jailani machan..
jailani machan...

yen ethuvarikum nalathaney poikitu erunchu....

முடியலை. நான் அழுதுடுவேன்..//

அது ஒன்னுமில்ல ஒரு தொடருக்கு கூப்பிட்டாங்க அதான் இது. ஒரு அறிமுகம் வேனுமில்ல.

// ok tata..

coments potenla..choclate anupati ungalium sami kanai kuthipudum ammam choliputen //

சாக்லேட் என்ன ஐஸ் கிரிமே இருக்கே பாக்கலையா ஹா..ஹா.... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வேலன்--//எல்லாம் அவரே சொந்தமாக சமையல் செய்து எடுத்த படங்கள். இதைப்போல் கக்கு மாணிக்கம் குகூளில் இருந்து ஆட்டைய போட்டதுனு சொல்றார்பாருங்க். அவருககும் ஒரு பிளேட் தாருங்கள். அப்புறம் வாயே திறக்க மாட்டார்(அல்வாக இருந்தால் விஷேஷம்)
வாழ்க வளமுடன்,
வேலன்.//

வாங்க ..!! வாங்க ..சரியா சொன்னீங்க ..சாப்பிடாம ஆராய்ச்சி பண்னிகிட்டு இருக்காரு. கடைசி பிளேட் அவருக்குதான்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Karthick Chidambaram said...

Inga onnu paarcel sollunga :) :) :)

ஜெய்லானி said...

@@@Ananthi--//ஆஹா.. ஒபெனிங் சாங் சூப்பர்..
"பாட்டு பாடி கொசுவுக்கு கோவம் வர வச்சிட்டீங்களே.??"
அதான் போட்டு தாக்கிருக்கு...??" //

வாங்க ..!! வாங்க..!! அது போட்டு தாக்கியதுலதாங்க அந்த பாட்டே..ஹி..ஹி..

//செப் அறிமுக படலம்.. அருமை..
அதென்ன... ஒரே இட்லி மயமா இருக்கு???
படங்கள் எல்லாமே தூள்...!! //

அது வந்து..ஹி..ஹி..அது வந்து....வேணாம் அப்புறம் அவங்களுக்கு கோவம் வந்திடும் சொன்னா..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சாருஸ்ரீராஜ்--//ஒபெனிங் சாங் சூப்பரா இருக்கு , இத்தனை பேர் சமையலையும் ஒரே நேரத்தில காமிச்சுடுவிங்களா? //

தொடர் முடிவில தெரியும் அது சஸ்பென்ஸ்.. ஹா..ஹா..

// நான் ஆட்சேபிக்கிறேன் எங்க கேக் ராணி மஹியை சமைக்க தெரியாதுன்னு சொல்றதுக்கு .....//

ஜெய்லானி மொக்கை டீவியில யாரையும் விடுவதில்லை கலாய்ப்புக்கள் தொடரும் ஹி..ஹி.. நே ஸீரியஸ்..பிளீஸ்..

படங்கள் எல்லாம் சூப்பர்.//

ம் சந்தோஷம் .. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//ஏதாவது மிச்சம் இருக்கா இல்லை எல்லோரும் சாப்பிட்டு முடிச்சாச்சா //


வாங்க பாஸ் ,உங்களுக்கு தனியா ஒரு பிளேட் இருக்கு. பயப்படாம தைரியமா வாங்க .. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@kavisiva--//இதில ஒன்னு ரெண்டு செய்ததுண்டு விஷ பரிட்சைகளில் இறங்குவது எனக்கு வாழைப்பழம் சாப்பிடுவது மாதிரி ..ஹி..ஹி..//

ஆனா நீங்க சமைச்சதை சாப்பிடுபவருக்கு விஷம் மாதிரி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

ச்சே..ச்சே.. அதுக்கெல்லாம் சேஃப்டி மருந்து ஆம்புலன்ஸ் எல்லாம் பக்கத்திலேயே இருக்கும் பயப்படாதீங்க..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Indhira--//அல்க்சஜ்ட்பல்க்ச்ப் அச்டப்ச்டப் க்சஜ்ப்ஜ்சஜ்ப்ஸ்...
அட இருங்கப்பா சாப்டுகிட்டு இருக்கேன்ல..//

வாங்க..!!வாங்க..!! பொறுமையா சாப்பிடுங்க ஒன்னும் அவசரமில்லை..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@தேனம்மை லெக்ஷ்மணன்--// ஐயயோ பசிக்குது..ம்படிக்கவே முடில..இரு ஜெய் சாப்பிட்டு வர்றேன்.. //

வாங்க தேனக்கா..!! ஹா..ஹா... சாப்பிடுங்க ..ஸ்பெஷல் பிரியாணி ரெடியா இருக்கு...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... நல்லா நகைச்சுவையா இருக்கு. கூடவே சூப்பர் விருந்தும். :)

Vijiskitchencreations said...

ஜெய் சூப்பர்ங்க. எப்படிங்க உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் எழுத கிடைக்கிறது. கலக்கிட்டிங்க.

ஜெய்லானி said...

@@@விக்னேஷ்வரி--//ஹாஹாஹா... நல்லா நகைச்சுவையா இருக்கு. கூடவே சூப்பர் விருந்தும். :)//

வாங்க ..சந்தோஷம் ..இது அறிமுகம் .மட்டும் இன்னும் சமையல் ஆரம்பிக்கல அவங்க. ரெண்டாவது பார்ட்டில தெரியவரும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Vijiskitchen--//ஜெய் சூப்பர்ங்க. எப்படிங்க உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் எழுத கிடைக்கிறது. கலக்கிட்டிங்க.//

வாங்க ..!! இதுக்கு காரணம் வானி மேடம்தான் . அவங்க கூப்பிட்ட தொடர்தான் இது எல்லா புகழும் வானதிக்கே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Jaleela Kamal said...

ஆஹா கடைசியில் வந்ததால் எல்லாம் தீர்ந்து போச்சா
படங்கள் எல்லாம் சூப்ப்ர்.
படிக்க எரொம்ப சுவரசியம்

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//ஆஹா கடைசியில் வந்ததால் எல்லாம் தீர்ந்து போச்சா
படங்கள் எல்லாம் சூப்ப்ர்.
படிக்க எரொம்ப சுவரசியம்//

உங்களுக்கு தனியா ஒரு பிளேட் எடுத்து வச்சது இருக்கு . பயப்பட வேண்டாம். :-) .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அந்நியன் 2 said...

தமிழர்கள் படையல் சாதம் ஆகா இங்கே பிரமாதம் .

இட்லி பச்சடி சம்ப எனக்கு.

இன்டலி ஒட்டு உமக்கு ..அஹா ..அஹா ..அஹா..ஹா .

சுட்டும் சுடாமல் தோசை கேட்டேன் ..கேட்டவர் மீது கேசைப் போட்டேன்

இன்னும் நிறையா நெய்யைக் கேட்டேன் ...

நாக்கில் சுவைத்திடகொய்யா கேட்டேன் ...

சுவைத்து உறிஞ்சிட சாயா கேட்டேன்..சுகத்தில் அருந்திட

பாயா கேட்டேன் .எதுவும் ..இல்லை ..எதுவும் இல்லை ஹே ..ஹே ....?

கடுகைக் கேட்டேன் ..கருவேப்பிலைக் கேட்டேன் ..

காயை நறுக்க.கத்தியைக் கேட்டேன்.

பூண்டை உடைக்க சுத்தியைக் கேட்டேன்.

வெங்காயம் உறிக்க ஆளைக் கேட்டேன் .

தக்காளி நறுக்க கேள்வி கேட்டேன் ..

கருணைக் கிளங்கே வாங்கிக் கேட்டேன்.

கடிச்சு திங்க மாங்காய் கேட்டேன்..சட்னி வைக்க தேங்காய் கேட்டேன்

..இது வரை இல்லை ..இதுவரை இல்லை ..இனிமேல்தான் அடிக்கணும் கொள்ளை.( வடையை)


நோன்பு மாதம் இதனைப் பார்த்தேன் ...

நொந்து போயி உன்னைப் பார்த்தேன்.

சுட்டவன் எங்கே நானும் பார்க்க..

மற்றவனெல்லாம் தட்டைப் பாக்க....

இவைகளை போயி யாரிடம் கேக்க..எனக்கோ நீயி தருவே கேக்கை.

இழகிய மனமே இருக்கே உனக்கே ..ஹே..ஹே ..ஹே .


அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா.

படையல் நல்லா இருக்கு நானும் புதுசு கையை வச்சால் காசு கீசு கேட்டுற மாட்டியலே.

ஜெய்லானி said...

@@@Mohamed Ayoub K --//அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா.

படையல் நல்லா இருக்கு நானும் புதுசு கையை வச்சால் காசு கீசு கேட்டுற மாட்டியலே.//

வாங்க புது வரவு..!! நா போடுர மொக்கை அளவுக்கு சூப்பரோ சூப்பர்...நம்ம வீட்டுக்கு வந்தவங்ககிட்ட காச கேப்பேனா என்ன ..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Karthick Chidambaram--//

Inga onnu paarcel sollunga :) :) :) //

பார்ஸல் போதுமா பாஸ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))