Saturday, June 19, 2010

இப்படியும் இருக்கலாம்

         வித விதமா டேஸ்ட் பாக்குறதில உள்ள ருசி ( சாப்பாட்டிலங்ன்னா ) ஒருதடவை வந்துட்டா அது அத்தனை சீக்கிரம் போகாது . அந்த வகையில இங்குள்ள பெரும்பாலான ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கிறேன் .ஒரு சைனா கடைய கூட விட்டது இல்லை அதுவும் தேடித்தேடி ஒவ்வொரு கடையிலும் சில ஐட்டங்கள் சூப்பராக இருக்கும் . அதனால் யார் என்ன சொன்னாலும் முயற்சி செய்து பார்த்து விடுவதுண்டு. 

         ஏன் சொந்த புராணம்ன்னு பாக்குறீங்களா விசயம் இருக்கு. வேலை காலையில மட்டும்ங்கிறதால மதியம் மூக்கு புடைக்க தின்னுட்டு தூங்குவதே மீதி வேலை. அப்ப ஒரு சில வருடங்களுக்கு முன்ன சாப்பாடு பிரமாத ருசியா இருந்ததால ஒரு கடையில கணக்கு வச்சி சாப்பிட ஆரம்பிச்சேன் . மதியம் தூங்கி விழிக்கும் போது  லேசா நெஞ்சி வலிக்கிற மாதிரி உணர்வு . ஒரு வேளை கேஸ் பிராப்ளமா இருக்கும்ன்னு விட்டுட்டேன். அடுத்த நாள் இதே போல இருந்ததால உஷாரா ஆயிட்டேன்.

          மறு நாளில் அங்கிருந்த உணவு பொருட்களை சிலதை தியாகம் செஞ்சிட்டு மாற்றி பாத்ததில வலி சற்று குறைந்த மாதிரி தெரிந்தது . ஆனா வயிற்று வலி வந்துடுச்சு . ( இது வலி மட்டும்தான் ) அடுத்த நாள் கூர்ந்து கவனித்ததில பிரச்சனை தெரிந்தது. அது கிளாஸ் கழுவும் லிக்யூட்.

          ஒரு  தண்ணீர் குடிக்கும் கிளாசில் தண்ணீரை வேகமா ஊத்திப் பாருங்க . அதில் வரும் நுரை வேகமாக ஒரு சில வினாடிகளில் அடங்கி போனால் . உங்க தண்ணீர் சுத்தமான தண்ணீர் . மற்றும் நீங்க நல்லா கிளாசை சுத்தம் செஞ்சிருக்கீங்கன்னு அர்த்தம் . இல்லாட்டி அதில டிஸ்வாஷ் லிக்யூட் இன்னும் கலந்திருக்குன்னு அர்த்தம் . பாத்திரம் சுத்தம் செய்யும் ( ஒரு துளி போதும் வீட்டையே சுத்தமாக்கிடும் ) ரசாயனம் உங்க வாழ்க்கையையே மாத்திடும்

       என்ன காரணம்ன்னு தெரியாமலேயே டாக்டரிடம் போய் கண்ட டெஸ்ட் எடுத்து தேவையில்லாம பணம் , உடல் நிலையை  அப்புறம் ,  கூட இருப்பவங்களையும் ஏன் கஷடப்படுத்தனும் .முடிஞ்ச வரை என்ன ஏதுன்னு நாமலே பாக்குரது நல்லது. அதாவது தெரிஞ்சா மட்டும் . இல்லாட்டி நேரா ஐ சி யூ தான். 

               கடை ஓனரிடம் சொல்லியும் ஒன்னும் ஆகல .அதனால அங்கு போவதும் இல்லை. இன்னும் நண்பர்கள் சிலர் போவதுண்டு . தலைவிதியை யாரால் மாத்த முடியும் .நான் போறதை நிறுத்தியதும் எல்லாம் சரியாகிவிட்டது ( அதில இன்னென்னு கடைசியில சொல்றேன் )
                                      படம்  : சகோ கீதா அவர்கள்  (  வடகம்  நல்லதா  கிளிக் டிஸ்கி  )
       பொதுவா ஒரு பொருள் நமக்கு அலர்ஜியா மாறதுக்கு நிறைய காரணம் இருக்கு . நாம நினைக்கிறோம் காலையில சாப்பிட்ட இட்லி சரியில்ல ., மதியம் சாப்பிட்ட பாயாசம் சரியில்ல.. ஆனா உண்மை அது இல்ல . ஆனா நேத்து சாப்பிட்ட டின் ஃபுட்டா கூட இருக்கும் . அதனால திடீர்ன்னு இந்த பொருளாலதான் வந்துச்சின்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா பாத்துட்டு அதை விட்டுடுங்க . அதுவுமில்லாம  சிலருடைய உடல்வாகு , நோய் எதிர்ப்பு சக்தி , வயசு அதாவது செரிக்கிர தன்மை இதுவும் ஒரு காரணமா இருக்கும்.

         சர்க்கரை நோய் உள்ள வங்க பழங்களை சாப்பிட்டு விட்டு அரை மணிநேரம் கழித்து உணவு சாப்பிட்டால் சர்க்கரை அளவு சமமாக இருக்கும் .  இல்லாவிட்டால் அளவு கூட காட்டும் . இதனாலேயே பழங்களை கண்டால் அவங்க பயப்படுவாங்க. உங்களுக்கு ஒன்னு தெரியுமா ? பேரிச்சம் பழம் அதிக இனிப்பு சுவை உடையது . சர்க்கரை வியாதி உள்ள வங்க ஐந்து பழம் ஒரு நாளைக்கு தாராளமா சாப்பிடலாம்.

         எந்த ஒரு பதப்படுத்த பட்ட பொருளும் . அது அப்பவே உபயோகிக்க இல்லை. அதுக்கு எதிர்பட்ட காலநிலைக்கு மட்டுமே . உதாரணம்  ஊருகாய்  , கருவாடு , வடகம் . இது அனைத்தும் கோடைகாலத்தில் காய வைத்து குளிர் காலத்தில உபயோகிக்க வேண்டிய ஐட்டங்கள் . இது உடலுக்கு சூடுதரும் பொருள். அதனால்தான் அந்த கால பெரியோர்கள் வெயில காலத்தில தயாரித்து குளிர்காலத்தில உபயோகப்படுத்தினங்க. ஆனா நகரத்தில நாம எது ஈஸியா இருக்கோ அதை மட்டுமே செய்வதால் எதனால் இதுன்னு தெரிய மாட்டேங்குது.

        அதனால ஏதாவது ஒரு சமையல் பொருட்களில் சந்தேகம் வந்தால் அதை மாற்றி இரண்டு குழம்பு செய்திருந்தால் அன்று ஒன்றை மட்டும் சாப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும் . சிலருக்கு தயிர் , முருங்கைகாய் , கத்திரிகாய்  , கருவாடு இப்படி அலர்ஜி ( அது உயர் ரத்த அழுத்தமாகவோ ,  சர்க்கரை அளவு அதிகம் அல்லது குறைவாகவே  ) இருக்கும்..

           அந்த கடையில் அதிகம் சேர்பது அஜின மோட்டோ..இதை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிறு மட்டும் தொந்தி விழும் . நெஞ்சு எரிச்சல் வரும் .அதை தனிக்க பெப்ஸி ,கோக் சாப்பிட வேண்டி வரும் . அந்த கப்ஸிய குடிச்சா என்ன வரும் உங்களுக்கே தெரியும்.


145 என்ன சொல்றாங்ன்னா ...:

எல் கே said...

/அஜின மோட்டோ../

ithu theriyama neraya porulla kalakaraanga. kettu vera vangitu poranga kadailaa

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆஆஆஆஆஆ எனக்கு ஆயா வாணாஆஆஆஆஆஆஆம்ம்ம்

எல் கே said...

//ஆஆஆஆஆஆஆஆ எனக்கு ஆயா வாணாஆஆஆஆஆஆஆம்ம்/

paati enna solreenga

முற்றும் அறிந்த அதிரா said...

படிச்சதும் பதிவு தொடரும்.

ஹப்பி பாதேர்ஸ்டே ஜெய்..லானி.

முற்றும் அறிந்த அதிரா said...

LK said...
//ஆஆஆஆஆஆஆஆ எனக்கு ஆயா வாணாஆஆஆஆஆஆஆம்ம்/

paati enna solreenga/// பாதேர்ஸ்டேக்கு பார்ட்டி செலிபிரேட் பண்ண முடியாமல் நேக்கு பெயிண்ட் வந்திடும்போல இருக்கே...... ஜெய்..லானி, இதை என்னவெனக் கேட்கவே மாட்டீங்களோ???? பாட்டியாமே.... பேபியைப் பார்த்து:)

எல் கே said...

ஹிஹிஹி

எல் கே said...

athira fathersday ku enna celebration unga veetla

Riyas said...

சூப்பர் பதிவு.. சாப்பிட்டில் இவ்வளவு குழப்பமா..?
இனி சாப்பாட்ட நிறுத்திடனும்... அப்ப குழப்பம் வராதில்ல எப்படி நாஙகளும் யோசிப்பமில்ல..

Sir, unable to publish to Tamilish in UAE (server problam) is it true.. i could'nt publish in Tamilish..

இமா க்றிஸ் said...

ஒரு வித்தியாசத்துக்கு ஜெய் சீரியசாக ஒரு இடுகை போட்டால் அதை மதிக்காமல், ஆ....யா வடை என்று என்ன கதை ரெண்டு பேரும்?

நல்ல கருத்துச் சொல்லி இருக்கிறீங்கள் ஜெய்லானி.
(அது சரி... அந்தப் படம் என்ன சொல்லுதாம்?)

ஹேமா said...

இது சிந்தனைக்குரிய பதிவு ஜெய்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெய்.இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க.

தமிழிஸ் ல இணைச்சிருக்கேன் பதிவை.

எல் கே said...

//Sir, unable to publish to Tamilish in UAE (server problam) is it true.. i could'nt publish in Tamilish..//

not only in UAE. all the regions have problem. its taking long time

கொல்லான் said...

//இது உடலுக்கு சூடுதரும் பொருள். அதனால்தான் அந்த கால பெரியோர்கள் வெயில காலத்தில தயாரித்து குளிர்காலத்தில உபயோகப்படுத்தினங்க. //
இந்த காலத்துல உடம்பு கெட பெரியவங்க சொன்ன முறைகளை ஒழுங்கா பின்பற்றாததும் ஒரு காரணம்.

எல் கே said...

//இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெய்//

தந்தையர் தின வாழ்த்துக்களை நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்களோ ???

நாடோடி said...

ந‌ல்ல‌ விச‌ய‌ம் ஜெய்லானி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அரளி விதை டிப் பிரை சாப்ட்ட நல்லதாம் வேணும்னா டிரை பண்ணிப் பாருங்களேன்

kavisiva said...

அஜினமோட்டோ பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அதற்கு பதில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கலாம்.

ஹேமா said...

LK....
//இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெய்//

தந்தையர் தின வாழ்த்துக்களை நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்களோ ???

ஓ...அப்பிடி ஒரு தினமா இண்ணைக்கு.
சரி சரி அப்போ உங்களுக்கும் வாழ்த்து
"பாவம் கடி கார்த்திக்".
(எல்லா இடமும் உங்க பெயரை பரப்புற முயற்சி)

Pragash said...

யோவ் ஜெய்லானி! என்னய்யா, ஏகத்துக்கும் பீதியை கெளப்புறீங்க? ஆனாலும் நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. நானும் மாசத்தில முப்பது நாளும் கடையில தான் விழுங்கிண்டிருக்கேன்.

எல் கே said...

//ஓ...அப்பிடி ஒரு தினமா இண்ணைக்கு.
சரி சரி அப்போ உங்களுக்கும் வாழ்த்து //

not today . its tomorrow only.. thanks for wishes

என் கொ.ப. செ நீங்கதான்

dheva said...

Nijamthaan jeylaani....! kadaila saapidura ellarukkum ithu pirachanithaan..especilly in UAE....!

Payanulla news...!

aama intha birhday birthday nnu solreaangale ...yarukku...?

vanathy said...

ஜெய், சூப்பர். பயனுள்ள தகவல்கள்.

கடவுளே!!!!! இனிமேல் ஜெய்யை யாரும் கிண்டல் செய்யக் கூடாது.

மாதேவி said...

நல்ல ஆரோக்கிய பதிவு.

தப்ப ஒரேவழி... கரண்டிபிடிப்பதுதான் :)

தந்தையர்தின வாழ்த்துகள்.

r.v.saravanan said...

பயனுள்ள தகவல்கள் ஜெய்லானி thanks

ஜெய்லானி said...

@@@LK--//ithu theriyama neraya porulla kalakaraanga. kettu vera vangitu poranga kadailaa//

உண்மைதான் தல. அதன் விளைவு யாருக்கும் தெரியல . ருசி மட்டுமே தெரியுது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//ஆஆஆஆஆஆஆஆ எனக்கு ஆயா வாணாஆஆஆஆஆஆஆம்ம்ம் //

பூஸாரே !!நாலு கால் பாய்ச்சலில் வர வேனாமா ?. எப்பவும் கட்டிலுக்கு கீழேயே இருந்தால் எப்பூடி தெரியும்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@LK--//ஆஆஆஆஆஆஆஆ எனக்கு ஆயா வாணாஆஆஆஆஆஆஆம்ம்/

paati enna solreenga //

சட்னி போச்சே.. அந்த கவலை. இது பாட்டி இல்லை பேபி..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//படிச்சதும் பதிவு தொடரும்.//

அப்ப இன்னும் படிக்கலையா..க்கி..க்கி..

//ஹப்பி பாதேர்ஸ்டே ஜெய்..லானி. //

ஓ... பேபி.. சொல்றதாஆஆஆ அப்பவும் தந்தையர் தினம் நாளைக்குதானே...இன்னைக்கி இல்லையே... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira --//paati enna solreenga/// பாதேர்ஸ்டேக்கு பார்ட்டி செலிபிரேட் பண்ண முடியாமல் நேக்கு பெயிண்ட் வந்திடும்போல இருக்கே...... ஜெய்..லானி, இதை என்னவெனக் கேட்கவே மாட்டீங்களோ???? பாட்டியாமே.... பேபியைப் பார்த்து:) //

கேட்டுட்டேன் மேலே பாருங்க . நீங்க எப்பவும் பேபிதான் என்ன 95 வயசுதானே ஆகுது . இன்னும் நாலு வயசு போனாதானே பாட்டி ஹி..ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@LK--//ஹிஹிஹி
athira fathersday ku enna celebration unga veetla//

சூடா பால் , அப்புறம் மீன் ஃபிரை பூஸாருக்கு இதான் பிடிக்குமுன்னு நினைக்கிறேன். பாக்கலாம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Riyas--//சூப்பர் பதிவு.. சாப்பிட்டில் இவ்வளவு குழப்பமா..?
இனி சாப்பாட்ட நிறுத்திடனும்... அப்ப குழப்பம் வராதில்ல எப்படி நாஙகளும் யோசிப்பமில்ல..//

ரியாஸ் இது குழப்பமில்ல உண்மை கடைகளில் என்ன நடக்குதுன்னு வெளிய யாருக்கும் தெரியாது. போட்டி , ருசி இதுக்கு பின்ன நிறைய இருக்கு..

//Sir, unable to publish to Tamilish in UAE (server problam) is it true.. i could'nt publish in Tamilish..//

நானும் அனுப்பினேன் சரியான பதில வரல . பாக்கலாம்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இமா--//ஒரு வித்தியாசத்துக்கு ஜெய் சீரியசாக ஒரு இடுகை போட்டால் அதை மதிக்காமல், ஆ....யா வடை என்று என்ன கதை ரெண்டு பேரும்?//

டிஸ்கிய கிளிக் பன்னிப்பாருங்க.. இது அவங்களுக்காக போட்டது....

//நல்ல கருத்துச் சொல்லி இருக்கிறீங்கள் ஜெய்லானி.(அது சரி... அந்தப் படம் என்ன சொல்லுதாம்?) //

அது வடகம்ன்னு வாசனை ருசிக்கு போடும் கலவை ஊருகாய் மாதிரி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வ‌.அன்சாரி said...

//ரியாஸ் இது குழப்பமில்ல உண்மை கடைகளில் என்ன நடக்குதுன்னு வெளிய யாருக்கும் தெரியாது. போட்டி , ருசி இதுக்கு பின்ன நிறைய இருக்கு..
//நூரு சதம் உண்மை

சாருஸ்ரீராஜ் said...

நல்ல பயனுள்ள பதிவு தந்தையர் தின வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

@@@ஹேமா--//இது சிந்தனைக்குரிய பதிவு ஜெய்.//

வாங்க குழந்தை நிலா ..!!இது ஏதோ சின்ன ஹோட்டலில் நடக்குதுன்னு நினைக்க வேண்டாம் . பெரிய ஹோட்டலிலும் நடக்குது.

//இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெய்.இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க.//

நாளை தந்தையர் தினம் அதைதான் அவர்கள் அப்படி சொன்னது.. எனக்கு வருவது செப்டம்பரில் ஆனா கொண்டாடுவதில்லை..

//தமிழிஸ் ல இணைச்சிருக்கேன் பதிவை.//

இங்கு முடியவில்லை சர்வர் பிராப்ளாம் . நானும் யாரிடமும் இது வரை கேட்டதில்லை. இனைத்ததுக்கு மிக்க நன்றி .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காஞ்சி முரளி said...

நல்ல பயனுள்ள பதிவு ஜெய்லானி.....

உணவகத்தில் சாப்பிடுவதைவிட பட்டினியா இருக்கலாம்... இது என் பாலிசி...
5 ஸ்டார் ஓட்டலினுள் நுழைந்து பார்த்தால் தெரியும்... அவிங்க சுத்தப்பத்தி....

ஆக மொத்தம்...
பயனுள்ள பதிவு...

வாழ்த்துக்கள்...

நட்புடன்..
காஞ்சி முரளி...

ஹைஷ்126 said...

@@@இமா--//ஒரு வித்தியாசத்துக்கு ஜெய் சீரியசாக ஒரு இடுகை போட்டால் அதை மதிக்காமல், ஆ....யா வடை என்று என்ன கதை ரெண்டு பேரும்?//) ஏன் இவ்ளோ புகைவருது??? :)))

சௌந்தர் said...

அஜின மோட்டோ// நிங்கள் சொல்வது உண்மை தான்

Menaga Sathia said...

என்ன ஜெய்லானி என்ன ஆச்சு..நல்ல பதிவா போட்டிருக்கிங்க...பாராட்டுக்கள்!!

சுசி said...

ரொம்ப நல்ல ஒரு பதிவுங்க. இது நிறைய பேருக்கு நடந்திருக்கலாம். எல்லாரும் உங்கள மாதிரி அறிவு பூர்வமா சிந்திச்சா எவ்ளோ நல்லா இருக்கும்.

ஹூம்..

GEETHA ACHAL said...

ரொம்ப ரொம்ப நல்ல பகிர்வு...சூப்பராக எழுதி இருக்கின்றிங்க...இது பலருக்கும் கண்டிப்பாக நடந்து இருக்கலாம்...குறிப்பாக வெளியில் சாப்பிடுபவர்களுக்கு....நன்றி...

Asiya Omar said...

சரி.ரொம்ப சரி.நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் இடுகை.

Chitra said...

சந்தேகங்களை விளக்கும் இந்த பதிவு நல்லா இருக்குங்க.... :-)

ஜெயந்தி said...

வீட்டுலயே நிறைய பேர் பாத்திரம் கழுவுவது அறைகுறையாக இருக்கும். அதில் ஒட்டியிருக்கும் கிளினிங் பவுடர் அல்லது சோப் அவ்வளவும் வயிற்றுக்குள்தானே போகும்.

athira said...

இப்போதான் முழுவதும் படித்தேன் ஜெய்..லானி, நல்ல தகவல்கள் + அனுபவம்.

அதனால் யார் என்ன சொன்னாலும் முயற்சி செய்து பார்த்து விடுவதுண்டு. /// எங்கள் வீட்டிலும் இதே நிலைமையே. தெரியாத உணவென ஏதும் இருக்கக்கூடாதென.... அனைத்தும் சுவை பார்ப்பதுண்டு.... இதுவரை எந்தப் பிரச்சனையும் வந்ததாக நினைவில்லை:).

athira said...

LK said...
athira fathersday ku enna celebration unga veetla///
எல்கே இங்கதான் பெரீஈஈஈஈய பார்ட்டி நடக்குது...போய்ப் பாருங்கோ..

http://haish126vp.blogspot.com/2010/06/blog-post_19.html

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்ல பயனுள்ள பதிவு !!

Unknown said...

சொல்லுங்க ... சொல்லுங்க ...

ஜெய்லானி said...

@@@LK--//Sir, unable to publish to Tamilish in UAE (server problam) is it true.. i could'nt publish in Tamilish..//

not only in UAE. all the regions have problem. its taking long time //

அதாங்க புரியல . இங்க எடிசலாட் ல கேட்டா பிளாக் பன்னலன்னு சொல்றாங்க.. அதான் ஒன்னும் புரியல... பார்க்கலாம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எச்சரிக்கை; எச்சரிக்கை!
நல்லதொரு முன்னெச்செரிக்கை கொடுக்கும்
குறிப்புக்கள். அதில்,
//உங்களுக்கு ஒன்னு தெரியுமா ? பேரிச்சம் பழம் அதிக இனிப்பு சுவை உடையது . சர்க்கரை வியாதி உள்ள வங்க ஐந்து பழம் ஒரு நாளைக்கு தாராளமா சாப்பிடலாம். //
என்ற குறிப்பு, சர்க்கரை வியாதியால் அவதிப்படுவோருக்கு மிக அவசியமான
குறிப்பு.
நகைச்சுவையான இடுகைகளூடே இதுபோன்றும் அடிக்கடி குறிப்புக்கள்
தாருங்கள் ஜெய்...லானி!

தூயவனின் அடிமை said...

டாக்டர் ஜெய்லானி வாழ்க.
தல சொல்லவே இல்ல டாக்டர் ஆகிய விஷயம்,
நல்ல விஷயம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டிங்க....
ஜெய்லானி ரொம்ப நல்லவரு............................

ஜெய்லானி said...

@@@கொல்லான்--//இது உடலுக்கு சூடுதரும் பொருள். அதனால்தான் அந்த கால பெரியோர்கள் வெயில காலத்தில தயாரித்து குளிர்காலத்தில உபயோகப்படுத்தினங்க. //

இந்த காலத்துல உடம்பு கெட பெரியவங்க சொன்ன முறைகளை ஒழுங்கா பின்பற்றாததும் ஒரு காரணம்.//

முதல்ல அவங்க சொல்றத காது குடுத்து கேக்குறது இல்ல அதான் நம்மோட பலவீனம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எம் அப்துல் காதர் said...

பார்த்தா செரிக்கிறமாதிரி நம்ம டேஸ்ட்டுக்கு ஒரு நல்ல படமா போடக் கூடாதா தல!ஹி ஹி.

இது என்ன வடாகம் அது இதுன்னு போட்டுக் கிட்டு.. வயித்த காலியா வச்சுக்கிட்டு பார்ட்டிக்கு வந்துடுங்க. நாளைக்கி "அப்பா" க்கள் தினமாம். நாமெல்லாம் இப்படியே கல்யாணமாகம சுத்திக் கிட்டிருந்தா எப்படி?? கல்யாணம் கட்டிக்கிட்டா வீட்ல நல்லவிதமா சாபிடலாம்ல,, சரி சரி அப்புறமா இதப் பத்தி பேசிக்கிவோம்.

ஜெய்லானி said...

@@@LK--//இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெய்//

தந்தையர் தின வாழ்த்துக்களை நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்களோ ???//

ஆமா தல அதுவும் நாளைக்குதான் .இது ஒரு வேளை அட்வான்ஸா இருக்குமோ என்னவோ..!!
:-)).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பொன் மாலை பொழுது said...

எனக்கு செவுத்த்ல முட்டிக தோணுது. முட்டிகட்டுமா வேணாமா?
அனுமதி வேண்டும் ஜெய்லா............................

ஜெய்லானி said...

@@@நாடோடி--//ந‌ல்ல‌ விச‌ய‌ம் ஜெய்லானி...//

வாங்க தல .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ராஜவம்சம் said...

இன்னைக்கு நாங்கதான் கிடைச்சமா!!!

ஹி ஹி சாப்பாட்டு கம்பெனியில வேழை செய்கிறேன்

நல்லப்பதிவு பகிர்வுக்குநன்றி

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//அரளி விதை டிப் பிரை சாப்ட்ட நல்லதாம் வேணும்னா டிரை பண்ணிப் பாருங்களேன் //

கை வசம் ஒரு மூட்டை இருக்கு . இங்க சாப்பிடுறீங்களா இல்லை பார்ஸலா. டேஸ்டுக்கு நா கேரண்டி. க்கி..க்கி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@kavisiva--//அஜினமோட்டோ பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அதற்கு பதில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கலாம். //

அப்படி ஒரு ருசி தேவையா என்ன ..இயற்கையா இருக்கும் வாசனையும் ருசியும் போதுமே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெய்லானி.. உங்களுக்கு அழகிய பூங்கொத்து. இன்றுபோல எல்லாவளமும் பெற்று வளமோடு வாழ அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.

ஜெய்லானி அருமையா சொல்லிருக்கீங்க.. அஜினமோட்டோ சேர்க்காத ஹோட்டலே கிடையாது. நானும் அக்பரும் ஓட்டல் சாப்பாடு பெரும்பாலும் சாப்பிடுவதே கிடையாது. தவிர்க்கமுடியாத சமயத்துலதான் ஓட்டலுக்கு போறது.. எல்லாமே எங்க சமையல்தான். இதுல கிடைக்கிற திருப்தி எதுலயும் கிடைக்காது.. சரிதானே..

மனோ சாமிநாதன் said...

நல்ல சிந்தனை மிக்க பதிவு.

எந்த உணவை சாப்பிட்டாலும் சாப்பிட்ட உடனேயே உறங்குவதென்பது உடலுக்கு மிகவும் கெடுதல். வயிற்றிலிருக்கும் உணவு செரிக்காது பல வழிகளில் உடம்பைக் கஷ்டப்படுத்தும்.

உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!

நிலாமதி said...

விழிப்புணர்வூட்டும் பதிவுக்கு நன்றி . வாழ்த்துக்கள்.

வேலன். said...

அருமையான பதிவு.தொடரும்..னுபோட்டிருக்கலாமே...பேரீச்சம் பழம் தகவல் இப்போதுதான்சார் கேள்விப்படுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

செந்தில்குமார் said...

சாப்பிடும் போது ரொசனை செஞ்ச சாப்பிட்ட சாப்பாடு உடம்புல ஒட்டாது ஜெய்லானி அண்னே...
என்னதான் நீங்க சொன்னாலும் வளைச்சு வச்சு கட்ர அலுங்களுக்கு இதேல்லாம் காதுல விலாது...

கொஞ்சமாவது யோசிக்கிராங்களா பருங்க...

இவன்
செந்தில்குமார்.அ.வெ

Madumitha said...

உபயோகமான பதிவு.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Geetha6 said...

super!!

அன்புடன் மலிக்கா said...

ரெண்டுமூனுநாள் லீவ்போட்டதுல தப்பாப்போச்சி.
என்ன துத்துதுதுதுது பொறந்தநாளா அண்ணாத்தே பாத்தேளா நம்மகிட்டகூட சொல்லவேயில்லை..

ஆனாலும் இப்போ தெரிஞ்சிகீனியல்லன்னு ஆரோ சொல்லுதாவோ.

எந்நாளும் பொன்னாளாய்
ஏக இறைவனின் அருள்பெற்று
ஏற்றமுடன் ஈருலகிலும் வாழ
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்..

ஆகா வச்சாச்சி ஆப்பூ அல்லாகடைகளுக்கும் இல்லை இல்லை அஜினமோட்டோகடைகளுக்கு.
பதிவு சூப்பர்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான பதிவு ஜெய்லானி! தவிர்க்கப்பட வேண்டியவை ப்ரோசன் உணவுகள், டின், கேனில் அடைக்கப்பட்ட உணவுகள், அஜினோமோட்டோ கலந்த உணவு (இதை மோனோசோடியம் குளுட்டோமேட் என்றும் சொல்வார்கள், அஜினோமோட்டோ என்பது கம்பெனி வைத்த பிரான்ட் பெயர்).

கிட்டத்தட்ட எல்லா சைனீஸ், மலாய், தாய், கொரியன் உணவுகளுமே அஜினோமோட்டோ கலந்ததுதான்! சூப், நூடுல்ஸ் (மேகி, கேனார்) போன்றவற்றிலும் அஜினோமோட்டொ உள்ளது, இது 2 வயத்துக்கு குறைந்த குழந்தைகளுக்குக் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது. மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம் (நிரூபனம் செய்யப்படாத ரிப்போர்ட்டுகள் உள்ளன). இந்தியாவில் இப்போது வரும் மேகி நூடுல்ஸில் அஜினோமோட்டோ இல்லை (பாக்கெட்டிலயே போட்டிருக்கும்).

பேக்கட் உணவுகளில் அஜினோமோட்டோ என்று போடமாட்டார்கள், மோனோ சோடியம் குளுட்டமேட் (Monosodium Glutamate) என்றுதான் போடுவார்கள், கன்டென்ட்சில் நாம்தான் படித்துப்பார்த்து வாங்க வேண்டும்!

Vidhya Chandrasekaran said...

பயனுள்ள தகவல்கள்.

Jaleela Kamal said...

யாருக்கு பிறந்த நாள்.
ஒரே குழப்பம்

Jaleela Kamal said...

//என்ன காரணம்ன்னு தெரியாமலேயே டாக்டரிடம் போய் கண்ட டெஸ்ட் எடுத்து தேவையில்லாம பணம் , உடல் நிலையை அப்புறம் , கூட இருப்பவங்களையும் ஏன் கஷடப்படுத்தனும் .முடிஞ்ச வரை என்ன ஏதுன்னு நாமலே பாக்குரது நல்லது. அதாவது தெரிஞ்சா மட்டும் . இல்லாட்டி நேரா ஐ சி யூ தான். //

சரியா சொல்லி இருக்கீஙக்
ஹோட்டலில் தினம் சாப்பிடுபவர்கள், இடையில் வேற ஹோட்டல் மாற்றி சாப்பிடுவது நல்லது

Jaleela Kamal said...

அருமையான பகிர்வு

வடகம் பற்றியு பதிவு போடனும்.

முத்து said...

பார்ரா இந்த புள்ள என்னமா யோசிக்குது

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான பதிவு ஜெய்லானி! தவிர்க்கப்பட வேண்டியவை ப்ரோசன் உணவுகள், டின், கேனில் அடைக்கப்பட்ட உணவுகள், அஜினோமோட்டோ கலந்த உணவு (இதை மோனோசோடியம் குளுட்டோமேட் என்றும் சொல்வார்கள், அஜினோமோட்டோ என்பது கம்பெனி வைத்த பிரான்ட் பெயர்).

கிட்டத்தட்ட எல்லா சைனீஸ், மலாய், தாய், கொரியன் உணவுகளுமே அஜினோமோட்டோ கலந்ததுதான்! சூப், நூடுல்ஸ் (மேகி, கேனார்) போன்றவற்றிலும் அஜினோமோட்டொ உள்ளது, இது 2 வயத்துக்கு குறைந்த குழந்தைகளுக்குக் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது. மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம் (நிரூபனம் செய்யப்படாத ரிப்போர்ட்டுகள் உள்ளன). இந்தியாவில் இப்போது வரும் மேகி நூடுல்ஸில் அஜினோமோட்டோ இல்லை (பாக்கெட்டிலயே போட்டிருக்கும்).

பேக்கட் உணவுகளில் அஜினோமோட்டோ என்று போடமாட்டார்கள், மோனோ சோடியம் குளுட்டமேட் (Monosodium Glutamate) என்றுதான் போடுவார்கள், கன்டென்ட்சில் நாம்தான் படித்துப்பார்த்து வாங்க வேண்டும்!//////


யோவ் பன்னி நீயா!!!! சத்தியமா நம்ப முடியல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
யோவ் பன்னி நீயா!!!! சத்தியமா நம்ப முடியல!//

ஹி...ஹி...ஹி!

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
யோவ் பன்னி நீயா!!!! சத்தியமா நம்ப முடியல!//

ஹி...ஹி...ஹி!///////////


நக்கலு,இவ்வளவு அறிவை எங்கையா ஒளிச்சு வைச்சு இருந்த

கொல்லான் said...

பன்னி சார், நீங்களா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கொல்லான் said...
பன்னி சார், நீங்களா ?//

யோவ் கம்பேனி சீக்ரெட்லாம் வெளிய சொல்லிக்கிட்டு, அப்படியே அமுக்குங்கய்யா!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இந்த இடுகையப் படிச்சதுமே நெஞ்சு வலி வித் வயித்துப்போக்கு வர்ற மாதிரி இருக்கு.. ஹி ஹி.. கண்டிப்பா சாப்பாடு காரணமில்ல.. ஏன்னா ரொம்ப நாளா எதுமே சாப்பிடல்ல :))

எனக்கும் ஒரு சந்தேகம்.. இதப் பத்தி சாப்பிடும் போதே யோசிச்சீங்களா? இல்ல சாப்பிட்டு முடிச்சு குறட்டையோட யோசிச்சு எழுதினீங்களா? :)))

இப்னு அப்துல் ரஜாக் said...

காக்கா,அஸ்ஸலாமு அலைக்கும்.உங்கள் பிளாக் சிறந்ததாக தேர்வு பெற்று - வெளிவந்துவிட்டது.

ஜெய்லானி said...

@@@ஹேமா--//தந்தையர் தின வாழ்த்துக்களை நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்களோ ???

ஓ...அப்பிடி ஒரு தினமா இண்ணைக்கு.
சரி சரி அப்போ உங்களுக்கும் வாழ்த்து
"பாவம் கடி கார்த்திக்".
(எல்லா இடமும் உங்க பெயரை பரப்புற முயற்சி) //

வாங்க!! இதுல என் நிலைதான் மோசம் இன்னொரு தடவையா பிறந்து வர முடியும். ””பாவம் கடி கார்த்திக் ‘’பட்டம் நல்லா இருக்கே க்கி..க்கி...

ஜெய்லானி said...

@@@PRAKASH--//
யோவ் ஜெய்லானி! என்னய்யா, ஏகத்துக்கும் பீதியை கெளப்புறீங்க? ஆனாலும் நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. நானும் மாசத்தில முப்பது நாளும் கடையில தான் விழுங்கிண்டிருக்கேன்.//

மாப்பி , பாத்துகோங்க . அப்புறம் பின்னாடி ரெட் லைட் எரியும் . நீங்க தான் செக் பன்னனும் எது சரி எது சரியில்லைன்னு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@LK--//ஓ...அப்பிடி ஒரு தினமா இண்ணைக்கு.
சரி சரி அப்போ உங்களுக்கும் வாழ்த்து //

not today . its tomorrow only.. thanks for wishes

என் கொ.ப. செ நீங்கதான் //

பாஸ் !! , அந்த பொருளாளர் பதவியை மட்டும் எனக்கு குடுத்துடுங்களே போதும் . நானும் அப்பாலிக்கா ஓரமா குந்திக்கினுகீறேன் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@dheva--//Nijamthaan jeylaani....! kadaila saapidura ellarukkum ithu pirachanithaan..especilly in UAE....!//

கடைகளுக்குள் வரும் போட்டிகளால இப்படி ஆகுது. இது யாருக்கும் புரியறது இல்லங்கிறதுதான் வருத்தமான விஷயம் .

Payanulla news...!

aama intha birhday birthday nnu solreaangale ...yarukku...? //

தல இன்னைக்கு தந்தையர் தினமல்லவா அதான் அப்படி . நா ஒரு பிளாக்கில போட்ட கமெண்டுக்கு இங்க வந்து நம்ம ஆளு திரியை கொளுத்தி போட்டது எப்படி வெடிக்குது பாருங்க..ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய், சூப்பர். பயனுள்ள தகவல்கள்.//

வாங்க வான்ஸ்!!

//கடவுளே!!!!! இனிமேல் ஜெய்யை யாரும் கிண்டல் செய்யக் கூடாது. //

ஏன் என்ன ஆச்சி ..இது என்ன சின்ன புள்ள தனமா அவ்வ்வ்வ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மாதேவி--//நல்ல ஆரோக்கிய பதிவு. தப்ப ஒரேவழி... கரண்டிபிடிப்பதுதான் :)

தந்தையர்தின வாழ்த்துகள்.//

வாங்க !!கரண்டி பிடிச்சாலும் , மேல சொன்ன பொருட்கள் + சுத்தம் ரொம்பவும் முக்கியம். இல்லாட்டி கஷ்டம்தான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//பயனுள்ள தகவல்கள் ஜெய்லானி thanks //

வாங்க குடந்தை..!!சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வ‌.அன்சாரி--//ரியாஸ் இது குழப்பமில்ல உண்மை கடைகளில் என்ன நடக்குதுன்னு வெளிய யாருக்கும் தெரியாது. போட்டி , ருசி இதுக்கு பின்ன நிறைய இருக்கு..//

நூரு சதம் உண்மை //

வாங்க அன்சாரி !! சரியா புரிஞ்சிகிட்டீங்க . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சாருஸ்ரீராஜ்--//நல்ல பயனுள்ள பதிவு தந்தையர் தின வாழ்த்துக்கள். //

வாங்க !!சந்தோஷம்!! உங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி--//நல்ல பயனுள்ள பதிவு ஜெய்லானி.....//

வாங்க வாத்தியார்...

//உணவகத்தில் சாப்பிடுவதைவிட பட்டினியா இருக்கலாம்... இது என் பாலிசி...//

ஊரில இருந்த வரை நானும் அப்படித்தான் . இங்கே கொஞ்சம் சோம்பேரி அதான் அப்படி

//5 ஸ்டார் ஓட்டலினுள் நுழைந்து பார்த்தால் தெரியும்... அவிங்க சுத்தப்பத்தி....//

மிக சரியா சொன்னீங்க நானும் பாத்திருக்கேன் . அதை பாத்தா வயித்த கலக்கும் . ஜென்மத்துக்கும் யாரும் போகமாட்டாங்க

//ஆக மொத்தம்...பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்...
நட்புடன்..
காஞ்சி முரளி...//உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹைஷ்126--//.
@@@இமா--//ஒரு வித்தியாசத்துக்கு ஜெய் சீரியசாக ஒரு இடுகை போட்டால் அதை மதிக்காமல், ஆ....யா வடை என்று என்ன கதை ரெண்டு பேரும்?//) ஏன் இவ்ளோ புகைவருது??? :))) //

வாங்க சகோ.!! அப்ப எனக்கு மொக்கைதான் சரியா வருமுன்னு சொல்றங்க போல . இதுல டிஸ்கிய கிளிக்குனா தெரியும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@soundar--//அஜின மோட்டோ// நிங்கள் சொல்வது உண்மை தான் //

ஆ... சவுந்தரிடம் நல்ல பேரா. அப்ப இது நல்ல இடுக்கைதான் சந்தேகமே வானாம் ..ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--//என்ன ஜெய்லானி என்ன ஆச்சு..நல்ல பதிவா போட்டிருக்கிங்க...பாராட்டுக்கள்!!//

ஹா..ஹா... இது நம்ம கீதா ஆச்சல் மேடம் அவங்க கேட்ட துக்கு பதில் போடப்போய் இப்படி வந்துடுச்சி அதான் (டிஸ்கியிலயும் , படமும் ). ஆனா டிரேட் மார்க் மொக்கை விடப்போரது இல்ல. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சுசி--//ரொம்ப நல்ல ஒரு பதிவுங்க. இது நிறைய பேருக்கு நடந்திருக்கலாம்.//

ஆமாங்க ,யாரும் எதுக்குன்னு புரியாமலேயே இருக்காங்க . ஆனா இது வீட்டிலேயும் நடக்கும் .

//எல்லாரும் உங்கள மாதிரி அறிவு பூர்வமா சிந்திச்சா எவ்ளோ நல்லா இருக்கும்.

ஹூம்.. //

ஆஹா.. கிண்டல்தானே.. ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@GEETHA ACHAL--//ரொம்ப ரொம்ப நல்ல பகிர்வு...சூப்பராக எழுதி இருக்கின்றிங்க...இது பலருக்கும் கண்டிப்பாக நடந்து இருக்கலாம்... குறிப்பாக வெளியில் சாப்பிடுபவர்களுக்கு....நன்றி...//

வாங்க !!!. இது உங்களுக்கான பதிவுதான் . வடகம் சந்தேகத்துக்கு பதில் இதில் இருக்கு. அதனால் படமும் டிஸ்கியிலும் லிங்க் இருக்கு. சரியா செக் பன்னாம நாம் ஒரு முடிவுக்கு வரக்கூடாது அதனால்தான் மேல குடுத்த உதாரணம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@asiya omar--//சரி.ரொம்ப சரி. நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் இடுகை. //

வாங்க !!சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Chitra--//சந்தேகங்களை விளக்கும் இந்த பதிவு நல்லா இருக்குங்க.... :-) //

எங்க சுத்தினாலும் கரெக்டா பாயிண்ட பிடிச்சிரிரீங்க ளே !! ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி வர வர நீ ஒரு பொறுப்புள்ள போலீஸ் அதிகாரியா மாறிட்டு வர்ற

சிநேகிதன் அக்பர் said...

நல்ல உபயோகமான பதிவு ஜெய்லானி. உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள்.

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி வர வர நீ ஒரு பொறுப்புள்ள போலீஸ் அதிகாரியா மாறிட்டு வர்ற//////////

யாரமாதிரி நம்ம கேப்டன் மாதிரியா

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி--//வீட்டுலயே நிறைய பேர் பாத்திரம் கழுவுவது அறைகுறையாக இருக்கும். அதில் ஒட்டியிருக்கும் கிளினிங் பவுடர் அல்லது சோப் அவ்வளவும் வயிற்றுக்குள்தானே போகும் //

உண்மைதான் அவசரத்துக்கு செய்யும் போது இப்படி வர வாய்ப்பு இருக்கு. பொருமையா பாத்து செய்றது நல்லது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//இப்போதான் முழுவதும் படித்தேன் ஜெய்..லானி, நல்ல தகவல்கள் + அனுபவம். //

ஆஹா.. அப்ப வடை சும்மாவா ?.க்கி..க்கி...

//அதனால் யார் என்ன சொன்னாலும் முயற்சி செய்து பார்த்து விடுவதுண்டு. /// எங்கள் வீட்டிலும் இதே நிலைமையே. தெரியாத உணவென ஏதும் இருக்கக்கூடாதென.... அனைத்தும் சுவை பார்ப்பதுண்டு.... இதுவரை எந்தப் பிரச்சனையும் வந்ததாக நினைவில்லை:). //

இந்த நினைவில்லை இதான் பிரச்சனை.. வியாதிகள் வராத வரை சந்தோஷம்.அப்படி தலை வேதனை வந்தாலும் உஷாராக யோசித்து பாருங்கள் . நிறைய விசயம் பிடிப்படும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@athira--//எல்கே இங்கதான் பெரீஈஈஈஈய பார்ட்டி நடக்குது...போய்ப் பாருங்கோ..

http://haish126vp.blogspot.com/2010/06/blog-post_19.html //

பாத்தேன் போறதுக்குள்ள சட்டி காலி . ஐஸ் வாட்டர் கூட கிடைக்கல ..

இலா said...

நல்ல பதிவு ஜெய்லானி! இந்த விஷயத்தில்ல உண்வகங்களில் ரொம்ப கவனிப்பது அவங்க சானிடரி சர்டிபிகேட்டு....எல்லாருமே "சாட்டிஸ்பேக்ட்ரி" .. என்னவோ....
ரோட் சைட் கடையில் குட்டியா ஒரு பையன் தான் எல்லாமே... டிராஷ் ரிமூவல்... முதல் உணவு பரிமாறுவது வரை...."நாலு கிளாஸ் தண்ணி" என்றால் அதில நாலு விரலும் ஒவ்வொரு கிளாசில இருக்கும்.. அப்பல்லாம் நல்லாவே இருந்தது நம்ம "நோய் எதிர்ப்பு "சக்தி ....

ஜெய்லானி said...

@@@ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி--//நல்ல பயனுள்ள பதிவு !! //

வாங்க !! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கே.ஆர்.பி.செந்தில்--// சொல்லுங்க ... சொல்லுங்க ...//

வாங்க பாஸ் ..!! சொல்லிடறேன் ..சொல்லிடறேன்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//எச்சரிக்கை; எச்சரிக்கை!
நல்லதொரு முன்னெச்செரிக்கை கொடுக்கும் குறிப்புக்கள். அதில்,
//உங்களுக்கு ஒன்னு தெரியுமா ? பேரிச்சம் பழம் அதிக இனிப்பு சுவை உடையது . சர்க்கரை வியாதி உள்ள வங்க ஐந்து பழம் ஒரு நாளைக்கு தாராளமா சாப்பிடலாம். //
என்ற குறிப்பு, சர்க்கரை வியாதியால் அவதிப்படுவோருக்கு மிக அவசியமான
குறிப்பு.
நகைச்சுவையான இடுகைகளூடே இதுபோன்றும் அடிக்கடி குறிப்புக்கள்
தாருங்கள் ஜெய்...லானி!//

இன்ஷா அல்லாஹ் . முயற்சிக்கிறேன். நிஜாம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன்--// டாக்டர் ஜெய்லானி வாழ்க.
தல சொல்லவே இல்ல டாக்டர் ஆகிய விஷயம்,
நல்ல விஷயம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டிங்க....
ஜெய்லானி ரொம்ப நல்லவரு..................//

ஆஹா..!! ஜெய்லானீஈஈஈ.. .உஷாரு.. கத்தியை கையில குடுத்து ஆப்பரேஷன் பன்ன வச்சிடுவாங்க போலிருக்கே..!! அவ்வ்வ்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//பார்த்தா செரிக்கிறமாதிரி நம்ம டேஸ்ட்டுக்கு ஒரு நல்ல படமா போடக் கூடாதா தல!ஹி ஹி.//

அப்ப அனுஷ்கா படம் போடவா ஹி..ஹி..

//இது என்ன வடாகம் அது இதுன்னு போட்டுக் கிட்டு.. வயித்த காலியா வச்சுக்கிட்டு பார்ட்டிக்கு வந்துடுங்க. நாளைக்கி "அப்பா" க்கள் தினமாம். நாமெல்லாம் இப்படியே கல்யாணமாகம சுத்திக் கிட்டிருந்தா எப்படி?? கல்யாணம் கட்டிக்கிட்டா வீட்ல நல்லவிதமா சாபிடலாம்ல,, சரி சரி அப்புறமா இதப் பத்தி பேசிக்கிவோம்.//

டிஸ்கிய கிளிக்கினா அந்த விசயம் வருமே.. பாக்கலையா. இதோ இப்பவே வரேன் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--//எனக்கு செவுத்த்ல முட்டிக தோணுது. முட்டிகட்டுமா வேணாமா? //

யார் வீட்டு செவுத்துல . சரித்திரம் ரொம்ப வும் முக்கியம்னாவ்

//அனுமதி வேண்டும் ஜெய்லா..................//

ஒரு கொலப்பழி எனக்கு வேனுமா என்ன ..ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ராஜவம்சம்--//இன்னைக்கு நாங்கதான் கிடைச்சமா!!!ஹி ஹி சாப்பாட்டு கம்பெனியில வேழை செய்கிறேன் //

அப்ப உண்மையை நீங்கதான் சொல்லனும்..தல . உங்க இடத்துல எப்படின்னு .

//நல்லப்பதிவு பகிர்வுக்குநன்றி //

வாங்க !!சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெய்லானி.. உங்களுக்கு அழகிய பூங்கொத்து. இன்றுபோல எல்லாவளமும் பெற்று வளமோடு வாழ அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.//

இல்ல பாஸ் . எனது மாசம் செப்டம்பரில் வருது. தவிர கொண்டாடும் பழக்கம் மார்கத்தில் இருக்கா என்ன .இது தந்தையர் தினமானதால் கமெண்ட் அப்படி வருது .

//ஜெய்லானி அருமையா சொல்லிருக்கீங்க.. அஜினமோட்டோ சேர்க்காத ஹோட்டலே கிடையாது.//

உண்மைதான் ஆனால் யாரும் இதை ஒத்துக் கொள்ளுவதில்லை.

// நானும் அக்பரும் ஓட்டல் சாப்பாடு பெரும்பாலும் சாப்பிடுவதே கிடையாது. தவிர்க்கமுடியாத சமயத்துலதான் ஓட்டலுக்கு போறது.. எல்லாமே எங்க சமையல்தான். இதுல கிடைக்கிற திருப்தி எதுலயும் கிடைக்காது.. சரிதானே..//

உண்மைதான் ..துபாயில இதுக்கு முன்ன ரியாதில (சவுதி ) இருக்கும் போது சொந்த சமையல்தான் . இங்கதான் சோம்பேறித்தனம். பார்த்து பார்த்து செய்யும் சமையல் ருசி வேறு எதிலும் வருவதில்லை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மனோ சாமிநாதன்--//நல்ல சிந்தனை மிக்க பதிவு. //
இது சகோ கீதா ஆச்சலுக்காக போட்டது. வடகம் பதிவிற்காக

//எந்த உணவை சாப்பிட்டாலும் சாப்பிட்ட உடனேயே உறங்குவதென்பது உடலுக்கு மிகவும் கெடுதல். வயிற்றிலிருக்கும் உணவு செரிக்காது பல வழிகளில் உடம்பைக் கஷ்டப்படுத்தும்.//

சரிதான் . ஆரம்பத்தில இருந்தது பிறகு பழகிவிட்டது யோகா செய்வதால் எந்த பிரச்சனையும் வருவதில்லை இறைவன் அருளால்.

//உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!//

பிறந்த நாள் இப்ப இல்லைங்க . தந்தையர் தினம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நிலாமதி--//விழிப்புணர்வூட்டும் பதிவுக்கு நன்றி . வாழ்த்துக்கள். //

வாங்க !!சந்தோஷம் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வேலன்--//அருமையான பதிவு. தொடரும்.. னுபோட்டிருக்கலாமே... பேரீச்சம் பழம் தகவல் இப்போதுதான்சார் கேள்விப்படுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன். //

தொடர் பதிவா ??? ஹி..ஹி.. மொக்கையா..அதான் தொடருதே..!!

உண்மைதாங்க..!!பேரிச்சம் பழம் பத்தி போட ஆரம்பிச்சா கொறஞ்சது மூனு இடுகையாவது போட வேண்டி வரும் . அவ்வளவு விசயம் இருக்கு அதுல.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@செந்தில்குமார்--//சாப்பிடும் போது ரொசனை செஞ்ச சாப்பிட்ட சாப்பாடு உடம்புல ஒட்டாது ஜெய்லானி அண்னே... //

சரிதாங்க ஆனா சாப்பிட்டதும் கொஞ்சம் யோசிப்பது தப்பு இல்லைங்க


// என்னதான் நீங்க சொன்னாலும் வளைச்சு வச்சு கட்ர அலுங்களுக்கு இதேல்லாம் காதுல விலாது...
கொஞ்சமாவது யோசிக்கிராங்களா பருங்க...//

அதாங்க பிரச்ச்னையே... ஒரு கஷ்டம் வந்ததும் அழுது புலம்புவதை விட முன்னமே ஜாக்கிரதையா இருப்பது நல்லதுதானே !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Madumitha--//உபயோகமான பதிவு.
பிறந்தநாள் வாழ்த்துக்கள். //

வாங்க !!சந்தோஷம் .(பிறந்தநாள் இல்லங்க தந்தையர் தினம் ) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Geetha6 --//super!! //

வாங்க !! கீத் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//ரெண்டுமூனுநாள் லீவ்போட்டதுல தப்பாப்போச்சி. //

உங்களுக்கும் எடிசலாட்டுக்கும்தான் எழாம் பொருத்தமா இருக்கே!! மாசத்தில பாதி கிடைக்கிறதில்ல

//என்ன துத்துதுதுதுது பொறந்தநாளா அண்ணாத்தே பாத்தேளா நம்மகிட்டகூட சொல்லவேயில்லை..
ஆனாலும் இப்போ தெரிஞ்சிகீனியல்லன்னு ஆரோ சொல்லுதாவோ. //

இல்லீங்கோ!! நான் பொறந்தது. செப்டம்பரில முதல் பாதியில் . இன்னைக்கு தந்தையர் தினம்..

// எந்நாளும் பொன்னாளாய்
ஏக இறைவனின் அருள்பெற்று
ஏற்றமுடன் ஈருலகிலும் வாழ
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.. //

வாழ்த்துக்கு நன்றி..ஆனா பிறந்த நாள் மார்க்கத்தில இல்லையே..!! நாதான் பச்ச கொயந்தை ஆச்சே அப்ப சரி...

//ஆகா வச்சாச்சி ஆப்பூ அல்லாகடைகளுக்கும் இல்லை இல்லை அஜினமோட்டோகடைகளுக்கு.
பதிவு சூப்பர்.. //

என் அனுபவம் யாருக்கும் வரக்கூடாது இல்லையா அதுக்குதான் இப்படி . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பன்னிக்குட்டி ராம்சாமி --//இதை மோனோசோடியம் குளுட்டோமேட் என்றும் சொல்வார்கள், அஜினோமோட்டோ என்பது கம்பெனி வைத்த பிரான்ட் பெயர்).//

உன்மைதான் தல . வனஸ்பதியை டால்டான்னுதானே சொல்றோம். டால்டா கம்பெனிப்பேர்.

இந்த அஜின மோட்டோவை பத்தி எழுதினா நிறைய எழுத வேண்டி வரும் .அதனால சுருக்கமா போட்டேன் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வித்யா--//பயனுள்ள தகவல்கள். //

வாங்க !!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//யாருக்கு பிறந்த நாள்.
ஒரே குழப்பம் //

யாருக்கும் இல்லை . அதாவது தந்தையர் தினம்..

//
சரியா சொல்லி இருக்கீஙக் ஹோட்டலில் தினம் சாப்பிடுபவர்கள், இடையில் வேற ஹோட்டல் மாற்றி சாப்பிடுவது நல்லது //

உடம்புக்கு ஏதாவது வித்தியாசம் தெரிஞ்சா உடனே பாக்கனும். அதான் முக்கியம்

//அருமையான பகிர்வு

வடகம் பற்றியு பதிவு போடனும்.//

போடுங்க அவலுடம் எதிர் பார்கிறோம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கோமதி அரசு said...

நல்ல பயனுள்ள பதிவு,ஜெய்லானி.

உணவே மருந்து.நம் உடம்புக்கு ஒத்துக் கொள்ளும் உணவை உண்டால் மருந்து தேவை இல்லை.

Mahi said...

பயனுள்ள பதிவு ஜெய்அண்ணா.வெளியில் சாப்பிடும்போது,ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசிக்கவைச்சுட்டீங்க,நன்றி!

பி.கு.,:
இதுக்காக உங்க ஆக்கபூர்வமான சந்தேகம்-பதிவுகளை டிலே பண்ணக்கூடாது..விரைவில் அடுத்த சந்தேகம் கேளுங்கோ..ஓ..ஓ!:):):)

Thenammai Lakshmanan said...

உண்மை ஜெய்லானி.. பாத்திரம் கழுவும் லிக்விடும் ஒரு காரணிதான்.. நல்ல பகிர்வு நன்றீ

ஜெய்லானி said...

@@@முத்து--// பார்ரா இந்த புள்ள என்னமா யோசிக்குது //

யாரை முத்து..!! என்னையா இல்ல நம்ம ப குட்டியையா .!!

//யோவ் பன்னி நீயா!!!! சத்தியமா நம்ப முடியல!//
@@@பன்னிக்குட்டி ராம்சாமி--//ஹி...ஹி...ஹி! //

@@@முத்து--//நக்கலு,இவ்வளவு அறிவை எங்கையா ஒளிச்சு வைச்சு இருந்த //

ஆள பாத்து ஏமாந்துட்டியே முத்து . ப குட்டி எம் பி பி எஸ் படிச்ச கம்ப்பவுண்டர் தெரியாதா.!! ஹி..ஹி..

@@@கொல்லான்--//பன்னி சார், நீங்களா ? //

இல்ல..!! அவரு சைனிஸ் வைத்தியர் திலகம்..

@@@பன்னிக்குட்டி ராம்சாமி--//யோவ் கம்பேனி சீக்ரெட்லாம் வெளிய சொல்லிக்கிட்டு, அப்படியே அமுக்குங்கய்யா! //

குட்டி..!!டாக்டர் லெவலுக்கு பில்டப்பா சொல்லியிருக்கேன் கமிஷன் வந்திடனும் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//இந்த இடுகையப் படிச்சதுமே நெஞ்சு வலி வித் வயித்துப்போக்கு வர்ற மாதிரி இருக்கு.. ஹி ஹி.. கண்டிப்பா சாப்பாடு காரணமில்ல.. ஏன்னா ரொம்ப நாளா எதுமே சாப்பிடல்ல :)) //

இருங்க இதுக்காக கீடிய சீக்கிரம் ஒரு ரெஸிபி போடரேன் . குடிக்க லெமன் ஜுஸ் போட்டேனே பக்கலையா..

//எனக்கும் ஒரு சந்தேகம்.. இதப் பத்தி சாப்பிடும் போதே யோசிச்சீங்களா? இல்ல சாப்பிட்டு முடிச்சு குறட்டையோட யோசிச்சு எழுதினீங்களா? :)))//

ஹி..ஹி.. பாதி தூக்கத்தில என்னுடைய உளறல்களை ரெக்காட் பன்னி எழுதுனது .( எப்படி தப்பிச்சேன் பாத்தீங்களா ) . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@'ஒருவனின்' அடிமை--//காக்கா,அஸ்ஸலாமு அலைக்கும்.உங்கள் பிளாக் சிறந்ததாக தேர்வு பெற்று - வெளிவந்துவிட்டது.//

வ அலைக்கும் வஅஸ்ஸலாம்..அதுக்கு நான் தகுதியான்னு தெரியல. ஜஸாக்குமுலாஹ் க்கைர். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--//ஜெய்லானி வர வர நீ ஒரு பொறுப்புள்ள போலீஸ் அதிகாரியா மாறிட்டு வர்ற //

யோவ் இப்பிடி மொட்டையா சொன்னா எனக்கு விளங்காது தெரியுமுல்ல . தெளிவா சொல்லுய்யா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அக்பர்-//நல்ல உபயோகமான பதிவு ஜெய்லானி. உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள்.//

வாங்க பாஸ்..!! இது முன்ன நடந்தது.. நான் இப்ப ரொம்ப உஷார் இந்த விசயத்தில. உங்க அன்புக்கும் மற்றும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@முத்து--// யாரமாதிரி நம்ம கேப்டன் மாதிரியா //

ஏன் ரெண்டு பேரும் என்னை போட்டு இப்படி கொழப்புறீங்க கேப்டன்னா யாரு முத்து..நான் ஒரு அப்பாவி யாருன்னே தெரியாது. ஹும்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இலா--//நல்ல பதிவு ஜெய்லானி! இந்த விஷயத்தில்ல உண்வகங்களில் ரொம்ப கவனிப்பது அவங்க சானிடரி சர்டிபிகேட்டு....எல்லாருமே "சாட்டிஸ்பேக்ட்ரி" .. என்னவோ....//


சரியா சொன்னீங்க . சர்டிபிகேட் வந்ததும். நிலைமையே மாறிடும் . அவரச உலகத்தில இது பாஷனா போச்சி..என்னத்த சொல்ல அதான் வியாதி பெருகுது
/ரோட் சைட் கடையில் குட்டியா ஒரு பையன் தான் எல்லாமே... டிராஷ் ரிமூவல்... முதல் உணவு பரிமாறுவது வரை...."நாலு கிளாஸ் தண்ணி" என்றால் அதில நாலு விரலும் ஒவ்வொரு கிளாசில இருக்கும்.. அப்பல்லாம் நல்லாவே இருந்தது நம்ம "நோய் எதிர்ப்பு "சக்தி ....//

யாரும் கேக்குரது இல்ல ...கேட்டாலும் பதில வராது. நாமா அதை விட்டு விலகுவது நமக்கு நல்லது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கோமதி அரசு--//நல்ல பயனுள்ள பதிவு,ஜெய்லானி. உணவே மருந்து.நம் உடம்புக்கு ஒத்துக் கொள்ளும் உணவை உண்டால் மருந்து தேவை இல்லை. //

ரொம்பவும் சரியா சொன்னீங்க ..ஆனா அதை கண்டு பிடிப்பதில் தான் நமது திறமை இருக்கு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mahi--//பயனுள்ள பதிவு ஜெய் அண்ணா. வெளியில் சாப்பிடும்போது, ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசிக்க வைச்சுட்டீங்க,நன்றி! //

உண்மைதாங்க . நம்ம ஆரோக்கியம் நம்ம கையில இல்லையா.. இது பொதுவா எல்லா ஹோட்டலிலும் இருக்கும் எதுக்கும் செக் பன்னிட்டு அவாய்ட் பன்னுங்க.

//பி.கு.,:
இதுக்காக உங்க ஆக்கபூர்வமான சந்தேகம்-பதிவுகளை டிலே பண்ணக்கூடாது..விரைவில் அடுத்த சந்தேகம் கேளுங்கோ..ஓ..ஓ!:):):) //

ஆஹா.. புல்லரிக்குதுங்கோ. அடுத்த பதிவா போட்டுடறேன்..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

முத்து said...

ஜெய்லானி said...

@@@முத்து--// யாரமாதிரி நம்ம கேப்டன் மாதிரியா //

ஏன் ரெண்டு பேரும் என்னை போட்டு இப்படி கொழப்புறீங்க கேப்டன்னா யாரு முத்து..நான் ஒரு அப்பாவி யாருன்னே தெரியாது. ஹும்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி/////////


நரசிம்மா,கஜேந்திரா மாதிரி அருமையான காவிய படைப்புகள் தந்தவர் தான் கேப்டன்.நீயும் அவரை போலவே!

Meerapriyan said...

nizamudeenai vazhimozhikiren. nalla vizhippunarvu kurippugal-nanparkale! enathu valaip puvukkum varukai tharungal-meerapriyan

Vijiskitchencreations said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நல்ல தகவல்.நன்றி.

முத்து said...

சீக்கிரம் மங்கு ப்ளாக் வா

ஸாதிகா said...

//இது சந்தேகப்பதிவு கண்டிப்பாக இல்லை// ரொம்ப பயந்துட்டீங்களா ஜெய்லானி?(இந்த பயம் எப்பவும் இருக்கட்டும்)

Harini Nagarajan said...

ajinomotto nejamaave romba keduthal! itha promote panrathaye niruthanum!

ஜெய்லானி said...

@@@முத்து--//நரசிம்மா,கஜேந்திரா மாதிரி அருமையான காவிய படைப்புகள் தந்தவர் தான் கேப்டன்.நீயும் அவரை போலவே!//

அப்ப அந்த படங்கள் எல்லாம் தமிழா நா தெழுங்குன்னுல்ல நெனச்சேன். க்கி..க்கி..

ஜெய்லானி said...

@@@Meerapriyan--// nizamudeenai vazhimozhikiren. nalla vizhippunarvu kurippugal-nanparkale! enathu valaip puvukkum varukai tharungal-meerapriyan //

வாங்க ஐயா.. சந்தோஷம் ,கண்டிப்பா வரேன் . மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Vijiskitchen--//பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நல்ல தகவல்.நன்றி. //

வாங்க !!இந்த மாசம் இல்லீங்க .செப் 13ல உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@முத்து--//சீக்கிரம் மங்கு ப்ளாக் வா //
நா வரும் போது ஒரு ஈ.. காக்கா கூட இல்லயே..!!

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//இது சந்தேகப்பதிவு கண்டிப்பாக இல்லை// ரொம்ப பயந்துட்டீங்களா ஜெய்லானி?(இந்த பயம் எப்பவும் இருக்கட்டும்) //

ஆஹா..இது வேறயா.. இருங்க அடுத்த பதிவுல வரேன் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Harini Sree--// ajinomotto nejamaave romba keduthal! itha promote panrathaye niruthanum!//

ஆமாங்க..!! உண்மைதான்..!!ஆனா கவர்மெண்ட் அதை தடை செய்யாது . அரசு சாராயமே விக்கும் போது இதை செய்யுமா என்ன ? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))