Thursday, December 9, 2010

உணர்வு பூர்வமான பாடல்கள் -- தொடரோ தொடர்


       பெண்களின் உணர்வுகளை சொல்லும் பாடல்களை  எழுத அழைத்த நீரோடை அக்கா மலீக்கா அவர்களுக்கு நன்றி.. எப்போதோ  போட வேண்டியது இது ஜொஞ்சம் லேட்டாக்கியதில் மற்ற  சகோஸ் எல்லாரும்  விளையாடி விட்டு போனதும் கொஞ்சம் லேட்டா மைதானத்துக்கு  உள்ளே வந்திருக்கிறேன் . எனக்கு பிடிச்ச பாடல்களை அவர்கள் எல்லாருமே போட்டு விட்டதால்   என்ன செய்ய  அதனால என் மனசுக்குள்ள  எப்பவும் ஓடிக்கிட்டு இருக்கும் பாடல்களை இங்கே தொகுத்திருக்கிறேன் . 
     அது பெண்களின் உணர்வுகளை  சொல்லுதா இல்லையான்னு அவங்க கிட்டதான் கேக்கனும் 


  பாண்டித்துரை  படத்தில வரும்
என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே..
கண்ணு உறங்கும் பொழுதும்
உன் எண்ணம் உறங்கவில்லையே...
என் ராசாதி ராசனிருந்தா
நான் வேறேதும் கேக்கவில்லையே...
என் மாமா என் பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவையில்லையே...

உன்மேல ஆச வச்சு உள்ளுக்குள்ள பாசம் வச்சு
ஆளான அன்னக் கிளி நான்...
பூமால கோத்துவச்சு போட ஒரு வேள வச்சு
போடாம காத்திருக்கேன் நான்..
வேண்டாத சாமி இல்ல வேற வழி தோணவில்ல
ஏங்காம ஏங்கி நின்னேன் நான்
போடாத வேலி ஒண்ணு போட்டு வச்ச நேரம் ஒண்ணு
பாடாத சோகம் ஒண்ணு பாடிவரும் பொண்ணு ஒண்ணு
என் ராகம் கேக்கவில்லையா
மாமா இன்று ஏதாச்சும் வார்த்தை சொல்லய்யா,,,

பொன்னான கூண்டுக்குள்ள பூட்டி வச்ச பச்சக்கிளி
கண்ணீரு விட்டுக் கலங்கும்
கண்ணான மாமன் எண்ணம் காட்டாறப் போல வந்து
எப்போதும் தொட்டு இழுக்கும்.
உன்ன எண்ணி நித்தம் நித்தம் ஓடுதய்யா பாட்டுச்சத்தம்
பொண்ணோட நெஞ்சம் மயங்கும்
ஓத்தயில பூங்கொலுசு தத்தளிச்சுத் தாளம் தட்ட
மெத்தையில செண்பகப் பூ பாடுக்குள்ள சோகம் தட்ட
பாடாம பாடும் குயில் நான்
மாமா உன்ன கூடாம வாடும் மயில் நான்.

  கும்பக்கரை தங்கைய்யா
தென்றல் காற்றே தென்றல் காற்றே  சேதி ஒன்னு கேட்டியா  
கன்னிப்பூவு கன்னில் நூறு கோலம் போட்டா பாத்தியா
மாமன் முகத்தை பார்த்துதான் வந்து வந்து சேர சொல்ல மாட்டியா

இந்த பூமியும் அந்த வானமும் இருக்கும் கோலம் மாறலாம் இந்த ஆசையும் செஞ்ச பூசையும் என்றும் மாற கூடுமோ

    அன்னக்கிளி

 அன்னக்கிளி உன்னை தேடுதே ஆறு மாசம் ஒருவருஷம்
 அவரம்பூ மேனி வாடுதே அன்னக்கிளி உன்னை
தேடுதே ஆறு மாசம் ஒருவருஷம் அவரம்பூ மேனி வாடுதே


வசந்த மாளிகை
 கலைமகள் கைப் பொருளே - உன்னை
கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் - உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ கலைமகள்
  
  தில்லனா மோகனாம்பாள்
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
சுவாமி
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா இந்தச்
சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன (2)

நவரசமும்
முகத்தில் நவரசமும்
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனிரசமும் (2)
கண்டு
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார் (2)
பாவை என் பதம் காண நாணமா (2)
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா (2)
மாலவா வேலவா மாயவா சண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன் (2)
மோகத்திலே என்னை மொழ்க வைத்து (2)
ஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல் (2)
மாலவா வேலவா மாயவா சண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

மானாட மலராட மதியாட நதியாட
மங்கை இவள் நடனமாட
வானாட மண்ணாட கொடியாட இடையாட
வஞ்சி இவள் கைகளாட
சுவையோடு நானாட எனை நாடி இது வேளை
விரைவினில் துணையாக ஓடி வருவாய்
தூயனே மாலவா மாயனே வேலவா
எனையாளும் சண்முகா வா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா இந்தச்
சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

      ஆனந்த கும்மி

    ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ..மைன மைனா  
   குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஓ  மைனா மைனா 
   தளிர் இது மலருது தானா  இது ஒரு தொடர்கதை தானா 
   ஒரு மனம் இனையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா 
 
       உல்லாச பறவைகள்  
 
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்

செந்தாழம் பூவைக்கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூரப் பொட்டும் வைத்து தேலாடும் கரையில் நின்றேன்
பாரட்ட வா.... சீராட்ட வா...
நீ நீந்த வா... என்னோடு...
மோகம் தீருமே....
ம்ம்ம்... ஆஆஆ....

      அவள் ஒரு தொடர்கதை  

அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தயடி
இதில் சுற்றம் என்பது மந்தயடி
அடி என்னடி உலகம் இதில் எதனை கலகம்

        உனக்காகவே வாழ்கிரேன்

கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை

  கோபுரங்கள் சாய்வதில்ல   
 இதில் வரிகளை எழுதுவதை விட பாட்டையே கேளுங்கள் ..சொல்ல முடியாத துயரத்தை சொல்ல முடியாமல் தவிக்கும் அருமையான வரிகள் ((பொல்லாங்கு செய்வோர் எல்லாம் ஆண்கள்தாண்டி இந்த வரியை தவிர )) 




 
       இதுல எல்லா வரிகளுமே  அமர்க்களமா இருக்கும் சிலது மட்டும் தொடர் , பக்கம் அதிகமா ஆகிடும் அதனால சில பாடல்களில்  சின்னதா ஆரம்பம் மட்டும் போட்டிருக்கிரேன் 

74 என்ன சொல்றாங்ன்னா ...:

Riyas said...

வந்துட்டோமில்ல...

Riyas said...

ஐ,,, வட

Riyas said...

படிச்சுட்டு வாறேன்..

Riyas said...

நிறைய சோகமாகவேயிருக்கே

எனக்கு உல்லாசப்பறவைகள் பாடல்.. தெய்வீகராகம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஜென்சியின் குரல்இனிமை அழகு.. உனக்காகவே வாழ்கிறேன் பாடலும் அன்னக்கிளி பாடலும் பிடிக்கும்..

Riyas said...

தில்லானா மோகனம்பால் பாட்டல்லாம் போட்டு நீங்க எங்க தாத்தா வயசு என்பதை நிருபிச்சிட்டுங்க ஜெய்லானி ஹா ஹா ஹா

Chitra said...

1980 அப்புறம் சினிமா பாட்டு கேட்பதையே விட்டுட்டீங்களோ?

Vijiskitchencreations said...

wow Jeylani. enna oree paadu paadi elloraium varavazaikiringa.
enakkum intha paddu ellaam pidikum. one small problem sila paadal ellaam enga grandparents eppovodum paaditee irupanga.
anaanul antha songs ellaamee arumai.
enna jey enaku tamil nhm work akavillai.

ப.கந்தசாமி said...

ஜமாய்ச்சுட்டீங்க போங்க.

Philosophy Prabhakaran said...

நல்ல தேர்வுகள் ஜெய்லானி... அனா இதெல்லாம் போதாது தீயா வேலை செஞ்ச பழைய ஜெயலாணியை பார்க்கணும்...

Unknown said...

அருமையான பாடல்களின் தொகுப்பு.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அனைத்தும் அருமையான கிளாசிக் கலக்சன்..

சிறந்த தேர்வுகள்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எல்லாமே நான் பொறக்காததுக்கு முன்னாடி வந்த படமாச் சொல்லியிருக்கீங்க?? எங்க பாட்டி கிட்ட ஒப்பினியன் கேட்டுட்டு வாறேன் :)

சாந்தி மாரியப்பன் said...

நல்ல தேர்வுகள்..

அந்நியன் 2 said...

இதுதானா இதுதானா
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமயானேன்
இதழ பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிகொள்வேன்.

Anniyan Song

நன்றி அண்ணே, இந்தப் பாடலையும் சேர்த்து இருந்தால் ஆறு மாசக் குழந்தையும் கருத்து சொல்லியிருக்கும் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

எல் கே said...

soopar songgs

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.. லிரிக்ஸ் போட்டு அசத்திடீங்களே... எல்லா பாடலும் நல்லா இருக்கு.. :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்கு ஒரு சந்தேகம். ச்சே உன் ப்ளாக் வந்தா சந்தேகமும் கூடவே வருதுப்பா. ஓகே. குட்

அன்புடன் மலிக்கா said...

அண்ணாததே! மிக மிக அருமையான பாடல்கள். அதிலும் எனக்கு மிகவும் பிடித்தபடல்கள் இருகிறது நான் எப்படி அதை போடமறந்தேன்.[பாண்டிதுரை]மற்றும் [உனக்காகவே வாழ்கிறேன்] சூப்பர் கடைசி கண்கலங்க வச்சிடுச்சி.
[அத சொல்லவே வேணாம் எப்போதும் எனக்குமட்டும்தான்]
நிஜமாளுமே உணர்ப்பூர்வமான பாடல்கள்தான்.

அதுசரி நீரோடை சரி அதென்ன அக்கா மலீக்கா. இது நமக்கே கொஞ்சம் இல்லையில்லை நெறயவே ஓவராத்தெரியலை..
உண்மைய உரக்கச்சொல்லுகிர நேரம் வந்தாச்சின்னு நெனக்கிறேன். ஹா ஹா ஹா

Mohamed Faaique said...

onnume.. therinja paadala illaye...

ஜெய்லானி said...

@@@Riyas--//வந்துட்டோமில்ல.../

வாங்க..வாங்க...!! வரவேற்பதில் தமிழினத்துகுக்கு இனை உலகில் யாருமில்லை..!! :-))

//ஐ,,, வட //

வடை மட்டுமில்ல சட்னி , இட்லி பொடி , சாம்பார் எல்லாம் இன்னைக்கி உங்களுக்குதான் :-)
//படிச்சுட்டு வாறேன்..//

தப்பூஊஊஊஊஊஊ பாடிட்டு வாங்க
//நிறைய சோகமாகவேயிருக்கே //

மேலே முதல்ல போட்டதை படிக்கலையா..மற்ற சகோஸ் எல்லாருமே போட்டதும் என்ன செய்ய அதான் சோகம் கொஞ்சமா ...

//எனக்கு உல்லாசப்பறவைகள் பாடல்.. தெய்வீகராகம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஜென்சியின் குரல்இனிமை அழகு.. உனக்காகவே வாழ்கிறேன் பாடலும் அன்னக்கிளி பாடலும் பிடிக்கும்..//

மத்ததை யூ டியூப்பில் பாருங்க , சிலது கிடைக்கல பார்க்கும் போது தெரியும் .
//தில்லானா மோகனம்பால் பாட்டல்லாம் போட்டு நீங்க எங்க தாத்தா வயசு என்பதை நிருபிச்சிட்டுங்க ஜெய்லானி ஹா ஹா ஹா //

ரசனைக்கு வயசு முக்கியமா என்ன .. ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

//Chitra--//1980 அப்புறம் சினிமா பாட்டு கேட்பதையே விட்டுட்டீங்களோ? //

வாங்க டீச்சர் வாங்க..!! அப்படின்னு இல்ல அதிகம் ரசிப்பது பழைய பாட்டுக்கள்தான் ஹா..ஹா.. அதுகாக 90 வயசுன்னு நினைச்சிடாதீங்க உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Vijisveg Kitchen --// wow Jeylani. enna oree paadu paadi elloraium varavazaikiringa.//

வாங்க.வாங்க..!! பாட்டுக்கள் அப்படி பட்டதுதானே ..தொடர்ன்னு அழைத்தும் விட முடியலையே
// enakkum intha paddu ellaam pidikum. one small problem sila paadal ellaam enga grandparents eppovodum paaditee irupanga. //

அப்போ சக்ஸஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
// anaanul antha songs ellaamee arumai.
enna jey enaku tamil nhm work akavillai.//

ம் ..ஓக்கே ..சொன்ன வ்ழி முறையில டிரை செய்யுங்க கண்டிப்பா வரும் . அது வரவே அடம் பிடிச்சா இ-கலப்பை http://thamizha.com/project/ekalappai இதில் இருக்கு இதுவும் ஏறக்குறைய NHM ரைட்டர் மாதிரி ஆனா சில அட்வாண்டேஜ் இருக்காது .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD--// ஜமாய்ச்சுட்டீங்க போங்க.//
வாங்க ..வாங்க ..!! பெரியவங்களுக்கு பிடிக்காமலா இருக்கும் ((எப்படியோ சமாளிச்சாச்சு ))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@philosophy prabhakaran--// நல்ல தேர்வுகள் ஜெய்லானி... அனா இதெல்லாம் போதாது தீயா வேலை செஞ்ச பழைய ஜெயலாணியை பார்க்கணும்..//.

வாங்க..பிரபா..வாங்க..சில நேரங்கள் படிவுலகத்தில் நடப்பதை பார்த்தால் ஏன் வந்தோமுன்னு இருக்குது. விட்டுப்போகவும் முடியல . இந்த தடுமாற்றம்தான் இன்னும் ஆடிகிட்டு ச்சே...ஓடிகிட்டு இருக்கு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--// அருமையான பாடல்களின் தொகுப்பு.//

வாங்க....வாங்க..!! அதை எழுதியவர்களுக்கே அந்த பெருமைகள் பாடியவர்களுக்கே அதன் சிறப்புக்கள்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

GEETHA ACHAL said...

ஆஹா...ஜெய்லானி ரொம்பவும் அருமை...எனக்கும் ஆனந்த கும்மி படத்தில் இடம் பெற்று இருக்கும் அந்த பாடல் மிகவும் பிடிக்கும்....நன்றி...

ஜெய்லானி said...

@@@வெறும்பய--//அனைத்தும் அருமையான கிளாசிக் கலக்சன்..சிறந்த தேர்வுகள்.. //

வாங்க ஜெ ..!! இன்னும் நிறைய இருக்கு 10க்குள்ள செலக்ட பண்னதான் கஷ்டமே ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்..//எல்லாமே நான் பொறக்காததுக்கு முன்னாடி வந்த படமாச் சொல்லியிருக்கீங்க?? எங்க பாட்டி கிட்ட ஒப்பினியன் கேட்டுட்டு வாறேன் :) //

வாங்க சந்தூஸ்..நான் அங்கே போட்ட கமெண்டுக்கு இங்கே பழிய தீர்துட்டீங்க ஹா..ஹா.. பாட்டிய நலம் விசாரிச்சதா சொல்லுங்க ((அப்போதான் நல்ல ஓப்பீனியனா சொல்லுவாங்க )).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல் --// நல்ல தேர்வுகள்..//

வாங்க..அமைதியாக்கா ..!!அப்படியா நீங்கள் சொன்னா சரிதான் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அந்நியன் 2--//

இதுதானா இதுதானா
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமயானேன்
இதழ பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிகொள்வேன்.

Anniyan Song

நன்றி அண்ணே, இந்தப் பாடலையும் சேர்த்து இருந்தால் ஆறு மாசக் குழந்தையும் கருத்து சொல்லியிருக்கும் தொடரட்டும் வாழ்த்துக்கள்.///

வாங்க அந்நியன் 2.. பாவம் நாட்டமை வேடமே நல்லதான் இருந்துச்சி .. இப நைட்டெல்லாம் தூக்கம் வருதா ..இல்லையா..?

பழைய பாடல்கலில் உள்ள ரசனை, இப்போ வரும் அதிரடி இசையை விரும்ப மாட்டேங்கிரது .என்ன செய்ய உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தமிழ் உதயம் said...

அற்புதமான பாடல்கள். சில அரிய பாடல்களையும் தொகுத்துள்ளீர்கள்.

சாருஸ்ரீராஜ் said...

எல்லா பாட்டுமே அருமை நல்ல தேர்வு...

அமுதா கிருஷ்ணா said...

கோபுரங்கள் சாய்வதில்லை அருமையான பாடல்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்பப் பழைய பிரிண்ட்டா இருக்கே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தெய்வீக ராகம், தெவிட்டாத பாடல்.....!

pudugaithendral said...

அருமையான தெரிவுகள். பலது நான் எப்போதும் விரும்பும் பாடல்கள்

Anonymous said...

பாடல்கள் அனைத்துமே அருமையான தேர்வு.

எங்க போய்ட்டீங்க?? ரொம்ப நாள் ஆளையே காணோமே???

காஞ்சி முரளி said...

ஜெய்லானி சார்...
முக்கியமான தகவல்...
உங்க ஊர்ல... அதாவது ஷார்ஜவில... சிறுத்தைபுலி ஒண்ணு...
நேற்று நடுசாலையில் சுற்றி திரிந்ததாமே... இன்னைக்கு தினகரன் நாளிதழில் பார்த்தேன்...

உங்களை பார்க்க வந்திருந்துதோ?

காஞ்சி முரளி said...

நல்ல பாடல்கள் தேர்வு...!

எல்லாப் பாடல்களும் சூப்பர்...!

அதிலும்..
//தில்லனா மோகனாம்பாள்... மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன///
///உனக்காகவே வாழ்கிரேன்.. கண்ணா உனைத் தேடுகிறேன் வா//
இவ்விரண்டும் சூப்பரோ... சூப்பர்...!

Jaleela Kamal said...

வாவ் அருமையோ அருமை

தெய்வீக ராகம், மறைந்திருந்து பார்க்கும், இன்னும் மற்ற பாடல்கள்
ஒரே இப்ப பிளாக்குகளை இனிய கானம் தான்

எல்லா தேர்வும் சூப்பர்.
என்ன எங்க பக்கம் எல்லா வர மாட்டீஙக்லா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி..

சொல்ல ஒண்ணுமேயில்ல..
என்னமோ பண்ணுங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//
ஐயோ எனக்கு கனவு காணோனும், இல்லேன்னா அப்துல்கலாம் கோவிச்சுக்குவார்.....:]]

எஸ்.கே said...

தொகுப்பு மிக அருமை!

மாணவன் said...

அருமையான பாடல்கள் தொகுப்பு நண்பரே,

தொடரட்டும் உங்கள் பணி

ஸாதிகா said...

பாடல்களின் தேர்வு அருமை ஜெய்லானி.கடைசி பாடல் மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு மிகவுமே ரசித்தேன்.

Arun Prasath said...

தில்லனா மோகனாம்பாள் சூப்பர் தல...

ஸாதிகா said...

//Riyas said... 5
தில்லானா மோகனம்பால் பாட்டல்லாம் போட்டு நீங்க எங்க தாத்தா வயசு என்பதை நிருபிச்சிட்டுங்க ஜெய்லானி ஹா ஹா ////Chitra said...

6
1980 அப்புறம் சினிமா பாட்டு கேட்பதையே விட்டுட்டீங்களோ?//

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said... 12
எல்லாமே நான் பொறக்காததுக்கு முன்னாடி வந்த படமாச் சொல்லியிருக்கீங்க?? எங்க பாட்டி கிட்ட ஒப்பினியன் கேட்டுட்டு வாறேன் :)//

ஜெய்லானி தொடர் பதிவா எழுதிய அநேகரும் பழைய பாட்ல்களைத்தான் தெரிவு செய்து இருந்தனர்.ஆனால் உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி..? //அப்படின்னு இல்ல அதிகம் ரசிப்பது பழைய பாட்டுக்கள்தான் ஹா..ஹா.. அதுகாக 90 வயசுன்னு நினைச்சிடாதீங்க// இப்படி எல்லாம் நீங்கள் கூவிக்கொண்டு இருப்பதைப்பார்த்துத்தான் கேட்கிறேன்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்...எல்லாமும் சூப்பர் songs ... பெரும்பாலும் இது எல்லாருடைய பிடித்த பாடலாவும் இருக்கும்னு நினைக்கிறேன்... "என்ன மறந்த பொழுதும்" பாட்டு கேட்டு ரெம்ப நாளாச்சு நினைவு படுத்தியதுக்கு நன்றி

மின்மினி RS said...

எல்லா பாடல்களும் அருமை. அருமையான தேர்வு.

அந்நியன் 2 said...

ஒஹ் ... ஹோ ....

ஒ ரசிக்கும் சீமானே
வா
ஜொலிக்கும் உடை அணிந்து
தலுக்கு நடனம் புரிவோம்

பழைய பாட்டை சேர்த்த விதம் அருமை இதையும் சேர்த்து இருந்தால் சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன்.வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

தேர்வுகள் அனைத்தும் அருமை. பெரும்பாலும் ராஜாவின் பாடல்கள்தான் மனதில் நிற்கிறது.

கலையன்பன் said...

அனைத்துப் பாடல்களின் தொகுப்பின்மூலம்
உங்க தனித் தன்மையை நிரூபித்து விட்டீர்கள்.

வேற ஏது சந்தேகம் இருந்தா... புது பதிவு
போடலாமே?

குறையொன்றுமில்லை. said...

அருமையான பதிவுகள்.வாழ்த்துக்கள்.

Harini Nagarajan said...

நல்ல பதிவு! இதுல ஒன்னும் சந்தேகம் கேக்கலியா??

ம.தி.சுதா said...

அத்தனையும் ரசனைக்குரியவையே...

தங்களின் பதிவுகள் எனது ரிடரில் வரவில்லை பரிசோதித்த விட்டு சொல்கிறேன்...

ஜெய்லானி said...

@@@LK --//soopar songgs //

வாங்க ..!!வாங்க.. !!ஒரு டவுட்டு .இந்த வார்த்தைய டிக்ஸ்னரில தேடினா ஒன்னுமே காட்ட மாட்டேங்குதே...!! எந்த லேங்குவேஜ்ல தேடனும் ...ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Ananthi--//வாவ்.. லிரிக்ஸ் போட்டு அசத்திடீங்களே... எல்லா பாடலும் நல்லா இருக்கு.. :-) //

வாஙக்..வாங்க..!! தாய்குலங்கள் சொல்லிட்டா அப்போ சரிதான் , நல்ல பாட்டுக்கள்தான் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//எனக்கு ஒரு சந்தேகம். ச்சே உன் ப்ளாக் வந்தா சந்தேகமும் கூடவே வருதுப்பா. ஓகே. குட் //

வாங்க போலீஸ்..!!சந்தேகம் வந்தா உடனே கேட்டுடனும் , அதான் மனசுக்கு நல்லதாம் டாக்டர் சொன்னார் ( இது வேற டாக்டர் )ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Mahi said...

நல்ல தொகுப்பு ஜெய் அண்ணா! ஒரு கிளி உருகுது-சாங் எங்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷல்! உங்க மாம்ஸூ காலேஜ் ஸ்டேஜ்ல முதல்முதலா ஃப்ளூட்-ல வாசித்த பாடல் அது..இதை கேட்டாலே கொசுவர்த்தி சுத்த ஆரம்பிச்சிடுவார்! :)

mohamedali jinnah said...

கம்ப்யூட்டரிலிருந்து குரங்குவரை...பல கட்டுரை தந்து அசத்துறீங்க ..சகல கலா சன்டியர் .நல்ல சமையல் அருமையான பாட்டுடன் இனிமையான சங்கீதம் .போக மனமில்லை .கட்டுரையோடு கமெண்ட்ஸ் ஒரு நல்ல கூட்டு.

r.v.saravanan said...

அருமையான கிளாசிக் கலக்சன்..

Ahamed irshad said...

Good Collection Jailani..

சாமக்கோடங்கி said...

ஓரளவுக்கு பொருத்தமான கலக்சன்... ஆனா இந்தப் பாடல்களை அடிக்கடி கேட்க எனக்குத் தோன்றுவது இல்லை.. என்னமோ தெரியல..

இந்தப் பக்கம் வந்து வேற ரொம்ப நாள் ஆச்சு...

மாதேவி said...

நல்ல பாடல்களின் தொகுப்பு ஜெய்லானி.

சீமான்கனி said...

அண்ணாதே பாடல் தொகுப்பு பயங்கரமா இருக்கு எனக்கும் பிடிச்சிருக்கு ஆஹா தொடர் பதிவா..."உனக்காகவே வாழ்கிரேன்" ணா...இல்ல..."உனக்காகவே வாழ்கிறேன்" ணா... நாங்களும் கேட்ப்போம்ல.....

தினேஷ்குமார் said...

//ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது//
//கலைமகள் கைப் பொருளே - உன்னை
கவனிக்க ஆள் இல்லையோ//

எல்லாமே அருமையான பாடல்கள் நான் அடிக்கடி கேட்க்கும் பாடல்கள் இது அண்ணே

இங்கேயும் கொஞ்சம் வாங்க அண்ணா
http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_3727.html

மனோ சாமிநாதன் said...

எல்லாமே அருமையான தேர்வு! முக்கியமாய் 'கலைமகள் கைப்பொருளே' பாடல் ஆழமான அர்த்தமும் இனிமையும் கொண்டது! 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' பாடலும் அருமையான தேர்வு. அந்தப்பாடல் வெளி வந்தபோது பட்டி தொட்டியெல்லாம் ஒரு கலக்கு கலக்கியது!!

Geetha6 said...

அருமை!

Vijiskitchencreations said...

all the songs selections are awesome.
I like gopura vasaleele movie & all songs too.

Unknown said...

//கலைமகள் கைப் பொருளே - உன்னை
கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் - உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ –கலைமகள்//

சீமான்கனி said...

அண்ணாதே கொஞ்சம் இந்த பக்கம் வாங்க...

http://ganifriends.blogspot.com/2010/12/blog-post_19.html

எம் அப்துல் காதர் said...

//Chitra--//1980 அப்புறம் சினிமா பாட்டு கேட்பதையே விட்டுட்டீங்களோ? //

ஜெய்லானி said...
// வாங்க டீச்சர் வாங்க..!! அப்படின்னு இல்ல அதிகம் ரசிப்பது பழைய பாட்டுக்கள்தான் ஹா..ஹா.. அதுகாக 90 வயசுன்னு நினைச்சிடாதீங்க //

செலக்சன் அப்படி தானிருக்கு!! ஹி..ஹி..

எம் அப்துல் காதர் said...

ரெண்டு புதுப் பாட்டு போடக் கூடாதா?? எல்லாப் பட்டுமே ஒரே சோகம் தில்லானாவைத் தவிர்த்து!! இதுல எங்க வந்தது உணர்வு பூர்வம். ரொம்பதான்..!!

Thenammai Lakshmanan said...

அருமையான கலெக்‌ஷன் ஜெய்..:))

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))