Monday, October 17, 2011

தமிழ்மணம் பெயரில் மட்டும்


     இந்த உலகத்திலே யாராக இருந்தாலும் ஏன் எதற்கு எப்படின்னு கேள்வி கேட்டே அதற்கு பிறகு ஒத்துக்கொள்கிறான். அது அவனை படைத்த இறைவனே நேரில் வந்த போது கூட நீ யார் என்ற கேள்வியையே கேட்டிருக்கின்றனர். விமர்சனத்திறகு  அப்பாற்பட்டு யாரும் இல்லை.
     ஒரு இயக்கத்தை நடத்துபவர் என்றால் அதில் ஆயிரம் கேள்விகள் வரத்தான் செய்யும் .முடிந்தவரை  நாகரிகமாக அதற்கு பதில் சொல்லலாம். இல்லை இதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லைன்னு ஒதுங்கி விடலாம் . அதை விட்டு விட்டு படிக்கவே  கண் கூசும் அளவிற்கு கேவலமாக காலையிலிருந்து மாலை வரை அங்கேயே  உட்கார்ந்தூ வேலை வெட்டி இல்லாமல் பதில் போட்டுக்கொண்டு தன்னுடைய கீழ்தர புத்தியை காட்டிய கொடுமையை என்னவென்று சொல்வது .
     இப்போது நமது  சகோதர , நண்பர்களின் பதிவுகள் தொடர்ந்து வெளிவருவதால்  திரும்பவும்  அதே வார்த்தைகளை  இங்கே உபயோகிக்க விரும்ப வில்லை ..டெரார் கும்மியில் அந்த கேவலப் பேச்சுக்களை கேட்டு எனக்கு ரத்தம் கொதித்தாலும் சக நண்பர்கள் பொருமை காத்ததால் அங்கே கமெண்ட் இடாமல் விட்டு விட்டேன் .
    பதிவுக்கும் , அங்கே இருக்கும் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல்
 "...சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்..."  
     இந்த  வார்த்தை அங்கே வரவேண்டிய அவசியம் என்ன ..?அதுவும் எந்த ஒரு முஸ்லீமும் அடுத்தவரை முதலில் பார்க்கும் போது சொல்லும் அழகிய வார்த்தை “உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் “ இதை திரித்து கேவலமாக பேச யார் உரிமை கொடுத்தது. ஒரு தனி பதிவர் சொன்னால் ஏதோ அறியாமல் உளறிவிட்டார் என்று 0.001ன்னாவது நினைக்கலாம் .ஒரு தள நிர்வாகியே  சொல்லுவதென்றால் ....??????
     இதை தனிப்பட்ட மெயிலில் கேட்கும் போதே சாக்கு போக்கு சொன்னவர். உடனே அவருடைய பிளாகில்  இது உனது தனிப்பட்ட மொழியா..??? அரசியல்வாதி சொல்லவில்லையா..?? கோயில் கும்பாபிஷேகத்தில் சொல்லவில்லையா..?? என்று பதிவிட என்ன அவசியம்..!! இந்த வார்த்தை அரசியல்வாதி  ஓட்டு கேட்டுவரும் போது மட்டுமே  சொல்வான் , கோயில் கும்பாபிஷேகம் தினமுமா நடக்கிறது ..ஆனால் ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமை பார்த்தாலே  சொல்லுவானே...!!! பெரியவர் சிரியவர் என்ற அளவுகோல் இல்லாமல் இல்லாமல் எல்லோரும் சொல்லும் சொல் அல்லவா..!!! அரபு நாடுகள் போய் வந்தவரை கேட்டால் அதன் பெருமையை சொல்வாரே
எச்சரிக்கை :
    உடனே தமிழ்மனத்திலோ  இல்லை தன்னோட பிளாகிலோ  கண்டிப்பாக மண்ணிப்பு கேட்டே ஆக வேண்டும் . இந்த அறிவிப்பு  இந்த வாரத்துக்குள்  வரவேண்டும் .கொஞ்ச நாள் போனால் மறந்து விடுவார்கள்
    இவர்களால் என்ன செய்யமுடியும் என்று நினைத்தால் ...??? அடுத்த வாரம் எங்கள் நிறுவனம் மூலமாக அரசுக்கு ரெட் நோட்டீஸ்(கோரிக்கை) அனுப்பப்படும் அதை தொடர்ந்து  அரப் எமிரேட்டில் தமிழ்மணம் சுவடு இல்லாமல் நீக்கப்படும் .
      இதே நிலை வளைகுடா நாடுகளில் உள்ள மற்ற இஸ்லாமிய அரசுக்கும் கோரிக்கை போகும் .அங்கும் தமிழ்மணம் நீக்கப்படும்
வளைகுடாநாடுகளில் தமிழ்மணத்தின் பக்கமே திறக்காது.என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்  .திருந்த ஒரு சான்ஸ் மட்டுமே

டிஸ்கி :- இந்த ஒரு பதிவுக்கு மட்டுமே  என் பிளாகில தமிழ்மண ஓட்டுபட்டை இருக்கும் . யாராவது ஓட்டுபோடாம இதுவரை இருந்தா சந்தோசமாகவோ  இல்லை துக்கமாகவோ  ஒரு தடவை வந்து குத்திட்டு போங்க . என் அடுத்த பதிவிலிருந்து நான் தமிழ்மணத்தை டைவேர்ஸ் செய்கிரேன் ஆர்டர்..ஆர்டர்......!!!!J

60 என்ன சொல்றாங்ன்னா ...:

Jaleela Kamal said...

எச்சரிக்கை :
உடனே தமிழ்மனத்திலோ இல்லை தன்னோட பிளாகிலோ கண்டிப்பாக மண்ணிப்பு கேட்டே ஆக வேண்டும் . இந்த அறிவிப்பு இந்த வாரத்துக்குள் வரவேண்டும்

MANO நாஞ்சில் மனோ said...

வளைகுடா நாடான பஹ்ரைனிலும் தமிழ்மணத்திற்கு ஆப்பு காத்திருக்கிறது....

Mohamed Faaique said...

எதுக்கு சார்.. ஒரு வாரம் 2 வாரம்’னு... தூக்கி வீசிடுங்க....

அப்துல்மாலிக் said...

தமிழ்மணமே மன்னிப்புகேள்


தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

நான் இன்னைக்கு காலையிலேயே தூக்கிட்டேன் தமிழ்மணத்தை....

ஆமினா said...

//எச்சரிக்கை ://

கண்டிப்பாக வேணும் இந்த மத வெறியன்களுக்கு!

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//

எச்சரிக்கை :
உடனே தமிழ்மனத்திலோ இல்லை தன்னோட பிளாகிலோ கண்டிப்பாக மண்ணிப்பு கேட்டே ஆக வேண்டும் . இந்த அறிவிப்பு இந்த வாரத்துக்குள் வரவேண்டும் //


வாங்க ஜலீலாக்கா வாங்க..!! அறிவிலி பயபுள்ள யோசிக்க டைம்வேனுமில்ல அப்படியே நாட்டாமை கணக்கா வெத்தலையை போட்டுகிட்டு தீர்ப்பு எழுதிடக்கூடாதுதானே ஹி.ஹி....அதான் :-)))
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

HajasreeN said...

mano தமிழ் மனத்த துகினது தான் அதிசயம், அவருக்கு ஆல்ரெடி இன்டலி கூட சண்டை எண்டு சொன்னாரு

Unknown said...

சக பதிவர்களை திட்டும் தமிழ்மணத்தை தூக்கி எறிவோம்

vanathy said...

ஜெய், என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. இப்படி ப்ளாக் உலகமே கொந்தளிக்கும்படி நிலமை வந்தமைக்கு என்ன காரணமாக இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே.

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ--//வளைகுடா நாடான பஹ்ரைனிலும் தமிழ்மணத்திற்கு ஆப்பு காத்திருக்கிறது....//

வாங்க மனோ வாங்க..!! இந்த ஆப்பு அவரா கேட்டு வாங்கி வச்சிகிட்டது ஹா..ஹா... :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mohamed Faaique--//எதுக்கு சார்.. ஒரு வாரம் 2 வாரம்’னு... தூக்கி வீசிடுங்க. //


வாங்க ஃபாயிக் வாங்க..!! கொலைகுற்றமாக இருந்தாலும் விசாரிக்க டைம்குடுக்கனுமில்ல ...இந்த பதிவு முடியும் போது ஓட்டுப்பட்டை இருக்காது .ஓட்டுப்பட்டை இருக்கும் வரை அது தமிழ்மணத்தின் ஃபிரென் பெஜில இந்த போஸ்ட் வரும் அதான் விட்டு வச்சிருக்கேன் .
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அப்துல்மாலிக்--//தமிழ்மணமே மன்னிப்புகேள்
தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள். //

வாங்க அப்துல் வாங்க ..!! இப்போதாவது அந்த அறிவிலிக்கு புரியுதான்னு பார்க்கலாம் :-).அவர் மண்ணிப்பு கேட்கும் நாளை எதிர்பார்ப்போம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

UNMAIKAL said...

Click the link below and read.

1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...

2.தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.

3.தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!

4.தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

5.தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!

6.தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?

7.தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..

8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க

9.மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!

10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?

11.தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா

12.அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >

13.தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???

14.தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்

15.தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!

16.விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?

17.தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...

19.தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்

20.தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!

21.யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை

22.பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

23.தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?

24.சீ தமிழ் மனமே ..

25.தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ?

UNMAIKAL said...

Click the link below and read.

26.மண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்

27.தமிழ்மணம்-உண்மைய சொன்னா கசக்கிறதா?

28.அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்ம'ண/ன‌'ம்

29.தமிழ்மணமே மன்னிப்புக்கேள் 3

30. தமிழ்மணம் பெயரில் மட்டும்

31.தமிழ்மணத்தின் வக்கிர புத்தி

.

வெளங்காதவன்™ said...

ஹி ஹி ஹி....

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
பகிர்வுக்கு நன்றி சகோ

அப்புறம் தமிழ்மண கடைசி ஓட்டு உங்களுக்குத்தான் போட்டுயிருக்கிறேன் என்று நினைக்கிறேன்

அப்துல் பாசித் வேறே எப்படி தமிழ்மணத்தை தூக்குறதுன்னு விளக்கி பதிவு போட்டு இருக்கிறார்

அதை பயன்படுத்த போறேன்

நன்றி சகோ

தூயவனின் அடிமை said...

தான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், யாரும் கேட்க கூடாது என்று நினைப்பது, தமிழன் பண்பாடு அல்ல. தமிழ்மணமே உடனே மன்னிப்புகேள்.

ஹுஸைனம்மா said...

எனது கண்டனங்களும்.

ப.கந்தசாமி said...

என்னங்க இப்படி? அந்த ஆளுக்கு கிறுக்குப் பிடிச்சுப் போச்சா? அடுத்தவங்க மத நம்பிக்கையை கேலி செய்யக் கூடாது என்கிற அடிப்படை நாகரிகம் இல்லாத ஆளு எதுக்கு லாயக்கு?

rajamelaiyur said...

I will remove Tamilmanam vote label tomorrow

Starjan (ஸ்டார்ஜன்) said...

தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்.

முற்றும் அறிந்த அதிரா said...

ஜெய்.. நான் இன்று ஒவ்வொருவரின் தலைப்பும் மேலே வரும்போது என்ன என்று தெரியாமல் தலைப்பை மட்டுமே பார்த்துவிட்டுப் போனேன்... இனி ஒவ்வொன்றாகப் படித்தால்தான் புரியும்.

தமிழ்மணம் எங்கிருக்கென்றே எனக்குத் தெரியாது, இதுவரை இணைந்ததில்லை, அதனால ஆருக்கும் வோட் பண்ணவுமில்லை. அது ஒரு நிறுவனமாக்கும் என்று மட்டும் எண்ணியிருந்தேன்.

குறையொன்றுமில்லை. said...

என் கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவிச்சுக்கரேன் அ நாகரிகபேச்சுக்களுக்கு எதிர்ப்புக்குரல் கொடுக்கத்தான் வேனும்.

செங்கோவி said...

தமிழ்மண எதிர்ப்புப்பதிவுகளிலேயே ’சரியான இடத்தில்’ தாக்கியிருக்கும் ஒரே பதிவு இது தான்...நன்றி நண்பரே..

ஒரு வாரத்தில் மன்னிப்புக் கேட்காவிடில், அந்த கோரிக்கை அனுப்புவது எப்படி என்றும் ஒரு விளக்கப்பதிவு போடுங்கள், எமது குவைத் கிளைக்கு உதவும்.

நன்றி.

எம் அப்துல் காதர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்மணம் தற்போது விளக்கம் வெளியிட்டுள்ளது. பார்க்க http://blog.thamizmanam.com/archives/359

F.NIHAZA said...

மதங்களை தாக்குவதென்பது...இழி நிலையின் உச்சம்....
அந்த உச்சத்திலிருந்து சாக்கடையில் விழப்போவது நிச்சயம்...

பொருத்திருந்து பார்ப்போம்....
எல்லாம் அறிந்தவன்...இறைவன்....
அல்லாஹ் போதுமானவன்....

Riyas said...

சரியான பதிலடி.. தொடருவோம்,,

இல்யாஸ் said...

தமிழ்மணமே மன்னிப்புக்கேள். தமிழ்மணத்திற்கு எனது கண்டனங்கள்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ஜெய்லானி...
அடிக்க வேண்டிய இடத்தில் அதிரடியாக மிகச்சரியான மரண அடியாக அடித்து இருக்கிறீர்கள். இனியும் மசியவில்லை எனில்... கோ அஹெட்... விதி வலியது.

smart said...

///அடுத்த வாரம் எங்கள் நிறுவனம் மூலமாக அரசுக்கு ரெட் நோட்டீஸ்(கோரிக்கை) அனுப்பப்படும் அதை தொடர்ந்து அரப் எமிரேட்டில் தமிழ்மணம் சுவடு இல்லாமல் நீக்கப்படும் . இதே நிலை வளைகுடா நாடுகளில் உள்ள மற்ற இஸ்லாமிய அரசுக்கும் கோரிக்கை போகும் .அங்கும் தமிழ்மணம் நீக்கப்படும் வளைகுடாநாடுகளில் தமிழ்மணத்தின் பக்கமே திறக்காது.என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .திருந்த ஒரு சான்ஸ் மட்டுமே///
அதுதான் லாபநோக்கற்ற தளம் என்று சொல்லியாச்சே அப்புறம் இதனால் என்ன நஷ்டம் அவர்களுக்கு? அவர்களின் சார்வருக்குத் தான் இஸ்லாமிய நாடுகளுக்கெல்லாம் டிராபிக் தாராமல் வேலை மிச்சம்

smart said...

தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம்.
பதிவுலகில் மதவாத சக்தி தவறாகப் பயன்படுகிறதா?

UNMAIKAL said...

2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

Unknown said...

ஏ ஏமரா மன்னா.. வெள்ளைக்கொடிய வச்சே எவ்வளவு நாளூக்கு காலத்த ஒட்டுவே...உசுப்பேத்திட்டானே பெயரிலி...பொறுத்தது போதும்...பொங்கியெழுந்து கண்டனபதிவை போடு....
போட வச்சிட்டானே...பரங்கித்தலையன்.....
http://ponsenthilkumar.blogspot.com/2011/10/blog-post_17.html

வ‌.அன்சாரி said...

முந்தயது
"தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்"

இரண்டாவதாக
"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால்தான் அறியாமல் எழுதியவைஅல்ல என்பதை புரிந்துகொள்ளமுடியும்.


பெயரிலி சொன்னதுக்கு தமிழ்மணம் பொறுப்பேற்க முடியாது என்பது ஏற்புடயதாக இல்லை
பதிவர்களை கேவலமாக திட்டும் தம்ழ்மணமே மன்னிப்புகேள்.

அன்புடன் மலிக்கா said...

இறைவனின் சாந்தியையும் சமாதானத்தையும் விரும்பாதவர்கள் வேறு எதை விரும்புவார்கள்..

நானும் நீக்கி விடுகிறேன் அண்ணாத்தே!

Radhakrishnan said...

''இந்த ஒரு பதிவுக்கு மட்டுமே என் பிளாகில தமிழ்மண ஓட்டுபட்டை இருக்கும் . யாராவது ஓட்டுபோடாம இதுவரை இருந்தா சந்தோசமாகவோ இல்லை துக்கமாகவோ ஒரு தடவை வந்து குத்திட்டு போங்க . என் அடுத்த பதிவிலிருந்து நான் தமிழ்மணத்தை டைவேர்ஸ் செய்கிரேன் ஆர்டர்..ஆர்டர்......!!!!J''

இதை நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்கிறேன். நன்றி.

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ--//நான் இன்னைக்கு காலையிலேயே தூக்கிட்டேன் தமிழ்மணத்தை..//

வாங்க மனோ வாங்க..!! நான் கொஞ்ச லேட் .இந்த பதிவு முடியும் போது .அந்த ஓட்டு பட்டை இதில் இருக்காது :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஆமினா //எச்சரிக்கை ://

கண்டிப்பாக வேணும் இந்த மத வெறியன்களுக்கு! //

வாங்க சகோஸ் வாங்க.!! இங்கே வச்ச வெடி வேறு இடத்துல வெடிச்சிடுச்சி :-) உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@HajasreeN--// mano தமிழ் மனத்த துகினது தான் அதிசயம், அவருக்கு ஆல்ரெடி இன்டலி கூட சண்டை எண்டு சொன்னாரு //

வாங்க .வாங்க..!! அது ஒன்னுமில்ல இண்ட்லி யில சில ஆல்டரேஷன் செய்வதால் சில நேரம் ஓட்டு பட்டை வெளியே தெரிவதில்லை :-).உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வைரை சதிஷ்--//சக பதிவர்களை திட்டும் தமிழ்மணத்தை தூக்கி எறிவோம் //

வாங்க சதீஷ் வாங்க..!! கடைசி வரை அவர் சொன்னதை ஒத்துக்கொள்ளவில்லை இதுதான் ’பெரியவர்க்கு’ அழகு :-).ஒரு முன்னுதாரணம் . .உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy --//ஜெய், என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. இப்படி ப்ளாக் உலகமே கொந்தளிக்கும்படி நிலமை வந்தமைக்கு என்ன காரணமாக இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே. //

வாங்க வான்ஸ் வாங்க..!! நல்ல வேளை நீங்க படிக்கல. உன்னால என்ன செய்யமுடியுங்கிற ஆணவம்தான் இதுமாதிரி செயல்களுக்கு காரணம் ஹ..ஹா..:-) உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@UNMAIKAL --///

Click the link below and read. //

உங்களுடைய தொடர் சேகரிப்பிற்கு நன்றி :-)

ஜெய்லானி said...

@@@வெளங்காதவன் --//

ஹி ஹி ஹி.... //


வாங்க ..வாங்க ...!! இதென்ன ஹீரோ சிரிப்பா இல்ல நம்பியார் சிரிப்பா ஹி..ஹி... ஒன்னும் புரியலையே :-)உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹைதர் அலி --//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
பகிர்வுக்கு நன்றி சகோ //

அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)

// அப்புறம் தமிழ்மண கடைசி ஓட்டு உங்களுக்குத்தான் போட்டுயிருக்கிறேன் என்று நினைக்கிறேன் //

நானும் கடைசி ஓட்டா இந்த மாதிரி பதிவுக்கு போட்டது மட்டும் தான் :-)

//அப்துல் பாசித் வேறே எப்படி தமிழ்மணத்தை தூக்குறதுன்னு விளக்கி பதிவு போட்டு இருக்கிறார்

அதை பயன்படுத்த போறேன் //

அடுத்த பதிவு வெளிவரும் போது இங்கே ஓட்டுப்பட்டை இருக்காது .இது எனது தனிப்பட்ட முடிவு மட்டுமே :-).உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

நன்றி சகோ

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன் --//தான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், யாரும் கேட்க கூடாது என்று நினைப்பது, தமிழன் பண்பாடு அல்ல. தமிழ்மணமே உடனே மன்னிப்புகேள். //

வாங்க இளம்தூயவன் வாங்க .!! கடைசியில் விளக்கம் சொல்லாமலேயே சொன்னவரை கழட்டி விட்டதுதான் பரிதாபம் . உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா --//எனது கண்டனங்களும்.//

வாங்க சகோஸ் வாங்க ..!! சந்தோஷம் .உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD ---//என்னங்க இப்படி? அந்த ஆளுக்கு கிறுக்குப் பிடிச்சுப் போச்சா? அடுத்தவங்க மத நம்பிக்கையை கேலி செய்யக் கூடாது என்கிற அடிப்படை நாகரிகம் இல்லாத ஆளு எதுக்கு லாயக்கு? //

வாங்க ஐயா வாங்க..!! ஒரு வேளை அக்காமாலா மாதிரி எதுவும் குடித்திருப்பாரோ என்னவோ ஹி..ஹி... :-)உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@"என் ராஜபாட்டை"- ராஜா -//

I will remove Tamilmanam vote label tomorrow //

வாங்க சார் வாங்க..!! புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிறகும் உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் ) --//தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள். //

வாங்க பாஸ் வாங்க..!!புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிறகும் உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//ஜெய்.. நான் இன்று ஒவ்வொருவரின் தலைப்பும் மேலே வரும்போது என்ன என்று தெரியாமல் தலைப்பை மட்டுமே பார்த்துவிட்டுப் போனேன்... இனி ஒவ்வொன்றாகப் படித்தால்தான் புரியும். //

வாங்க அதிஸ் வாங்க..!! இது ஒரு தொடர் எழுத வேண்டிய அளவுக்கு விஷியம் உள்ளே இருக்கு .:-)

//தமிழ்மணம் எங்கிருக்கென்றே எனக்குத் தெரியாது, இதுவரை இணைந்ததில்லை, அதனால ஆருக்கும் வோட் பண்ணவுமில்லை. அது ஒரு நிறுவனமாக்கும் என்று மட்டும் எண்ணியிருந்தேன்.//

நல்ல வேளை தெரியாமல் இருந்ததே நல்லதுதான் போலிருக்கு :-) உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி
17/10/11 8:14 PM

ஜெய்லானி said...

@@@Lakshmi --//என் கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவிச்சுக்கரேன் அ நாகரிகபேச்சுக்களுக்கு எதிர்ப்புக்குரல் கொடுக்கத்தான் வேனும். //

வாங்க லஷ்மியம்மா வாங்க..!! இது உடனே எடுத்த முடிவு இல்லை .விளக்கம் கேட்டுதான் எடுத்த முடிவு .ஆனாலும் அவர் சரியான விளக்கம் குடுக்கிரமாதிரி தெரியலை .உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@செங்கோவி--//தமிழ்மண எதிர்ப்புப்பதிவுகளிலேயே ’சரியான இடத்தில்’ தாக்கியிருக்கும் ஒரே பதிவு இது தான்...நன்றி நண்பரே.. //

வாங்க பாஸ் வாங்க..!! மெயிலில் விளக்கம் கேட்டபோதே என்ன செய்துவிடமுடியுங்கிர திமிர்தான் பதிலா வந்தது. வல்லவனுக்கு வல்லவன் பூமியில் இல்லாமலா இருப்பான் :-)

//ஒரு வாரத்தில் மன்னிப்புக் கேட்காவிடில், அந்த கோரிக்கை அனுப்புவது எப்படி என்றும் ஒரு விளக்கப்பதிவு போடுங்கள், எமது குவைத் கிளைக்கு உதவும். நன்றி. //

ரொம்பவும் ஈஸிதான்.நடுநிலையாளர்களுக்காக விட்டுவிட்டேன் . ஆனால் அவரின் பிலாகில ஒரு ஜோக் அடித்திருக்கிறார் . அதை நினைத்துதான் சிரித்துக்கொண்டிருகிரேன் :-) உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர் --//

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்மணம் தற்போது விளக்கம் வெளியிட்டுள்ளது. பார்க்க http://blog.thamizmanam.com/archives/359 //

வாங்க பாஸ் வாங்க .!!அங்கே என்னுடைய பதிலை பாருங்க .உங்களுக்கே புரியும் :-)உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@F.NIHAZA --//

மதங்களை தாக்குவதென்பது...இழி நிலையின் உச்சம்....
அந்த உச்சத்திலிருந்து சாக்கடையில் விழப்போவது நிச்சயம்... //

வாங்க வாங்க..!! இத்தனை எதிர்ப்பு வருமுன்னு அவர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

//பொருத்திருந்து பார்ப்போம்....
எல்லாம் அறிந்தவன்...இறைவன்....
அல்லாஹ் போதுமானவன்.... //

இறைவன் , பதிவுலக ஒற்றுமையை வெளியுலகிற்கு காட்டி விட்டான் .அல்ஹம்துலில்லாஹ் :-).உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Riyas --//சரியான பதிலடி.. தொடருவோம்,, //

வாங்க ரியாஸ் வாங்க..!! இனி இதுப்போல நடக்காது என்ரே நம்புவோம் :-)உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இல்யாஸ்--//தமிழ்மணமே மன்னிப்புக்கேள். தமிழ்மணத்திற்கு எனது கண்டனங்கள் //

வாங்க..வாங்க..!! மன்னிப்பு என்பது பெரியோர்களின் செயல் .குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை . :-)உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ப.கந்தசாமி said...

சவுதியில் தமிழ்மணம் தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிகிறேன். உங்களுடைய முயற்சியை பாராட்டுகிறேன். மற்றும் உங்கள் கருத்தை முழு மனதுடன் ஆதரிக்கிறேன்.

ஆனால் பலர் இந்த தவறு செய்தவருக்கு வக்காலத்து வாங்குவதைப் பார்க்க கோபம் வருகிறது.

அணில் said...

இவ்வளவு நாள் தெரியாமலே இருந்திக்கிறேன். கண்டனத்திற்குரிய வார்த்தைகள். ஒருபோதும் ஏற்க முடியாது. பதிவுலகிலும் சமய நல்லிணக்கனத்தை சீர் கெடுக்க நினைக்கும் கயவர்களிடமிருந்து தள்ளி நிற்பதே சிறந்தது.

RMY பாட்சா said...

இப்ப தான் தெரியும் மனசு வலிக்குது,கண்டனத்திற்குரிய வார்த்தை,

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))