Showing posts with label மொக்கை டிவி. Show all posts
Showing posts with label மொக்கை டிவி. Show all posts

Monday, February 13, 2012

எசப்பாட்டு

51 என்ன சொல்றாங்ன்னா ...
டிஸ்கி :  இடிப்பார் இல்லா......மண்ணன்   கெடுப்பார் இலானும்  கெடும் இலவசமா வாங்கிட்டு ...எதிர் கட்சின்னு  ஒன்னைகூட விட்டு வைக்காத தமிழ் நாட்டு மக்களை நினைச்சா ஹி...ஹி....  ரொம்ப பெருமையா இருக்கு

இது அரசியல் பதிவுன்னு நினைச்சு ஆட்டோ ஷேர் ஆட்டோனு செலவு செய்துகிட்டு வராதீங்க ..நான் அந்தளவுக்கு ஒர்த இல்ல ஹி...ஹி....





கொசு பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் கரெண்ட் வருவதில்லை
ஒரு கடி மறைய மறுகடி தெரிய
பிளாஸ்டிக் உடம்பு  இல்லை
உடல் பெட் ஷீட் மூடி முடிவதில்லை
பிளாஸ்டிக் உடம்பு இல்லை
உடல் பெட்ஷீட் மூடி முடிவதில்லை

கொசு  பறந்த பிறகும்
கடியின் தழும்புகள் அழிவதில்லை
கடித்த காயம் நூறு கண்ட பிறகும்
உடல் அரிப்பு  நிற்ப்பதில்லை
ஒரு முறைதான் கொசு  கடிப்பதினால்
வருகிற வலி யாரும் அறிவதில்லை
கனவினிலும் பகல் நினைவினிலும்
அழுகிற என் மனம் புரிவதில்லை
(கொசு பேசும்...)

பகலியே எரியும் ஸ்டீட் லைட்டை கண்டுகொள்ள யாருமில்லை
என்னிடம் அனுமதி வாங்கி கரெண்டும்  இங்கே போவதில்லை
தாத்தாவினால் 4 மணிநேரம்  அம்மாவினால் 8 மணிநேரம்
5 வருஷம் உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
கொசுபேட்டினால் அடிக்க பேட்டினில் கூடசார்ஜ் இல்லை
கொசு கடிச்சு போன பின்னே மலேரியா டைஃபாய்டு மட்டும் எனக்கே சொந்தமடா
(கொசு பேசும்...)

உலகத்தில் எத்தனை கொசு உள்ளது
அது  என்னைய  மட்டும் கடிச்சு கொண்டாடுது
இன்னொரு முறை கடிக்க திண்டாடுது
வலி உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
கண்ணீர் துளி வந்து முட்டியதால்
இந்த முக்கும் இங்கே முனங்கியது
சாக்கடையில் உள்ள கொசுக்களெல்லாம்
அட  வீட்டிற்குள்ளே குடி புகுந்தது
கரெண்ட்  வந்தால்தால் ஃபேன் இருக்கும்
அறையில் கொசுக்களும் பறந்து விடும்
அழுகை வரும் அழுகை அழுகையா வரும்
கரெண்ட் போனால் விம்மல் கூட கலந்து வரும்
கொசு பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் கரெண்ட் வருவதில்லை
ஒரு கடி மறைய மறுகடி தெரிய
கண்ணாடி உடம்பு  இல்லை
உடல் பெட் ஷீட் மூடி முடிவதில்லை
கண்ணாடி உடம்பு இல்லை
உடல் பெட்ஷீட் மூடி முடிவதில்லை
கொசு பேசும் வார்த்தை .......
(கொசு பேசும்..)

Saturday, September 3, 2011

ஒரு .......டைரி....!!!-----3

88 என்ன சொல்றாங்ன்னா ...

                      ஜுலை 2010
      ரூம் மேட்டுடன் ஒரு விடுமுறை நாளின் மாலை நேரம் சிட்டியை  வலம் வந்தோம் . பேசிக்கொண்டே  வரும் போது அவன் சொன்னான் . காலையிலிருந்தே காது லேசாக அடைப்பது போல இருக்கு  பேசுவது எதுவும் சரியா கேக்கலன்னு சொன்னான் .((ஒரு வேள நம்ம போடும் மொக்கைக்கு பயந்துட்டானோ )) இங்கே ஒரு சையண்டிஸ்ட் வேஸ்டா ((யாரு நாந்தேன் )) இருக்கும் போது கிடைச்ச சான்ஸ விடலாமா வா பக்கத்திலிருக்கும் கிளினிக்குக்கு போகலாமுன்னு வலு கட்டாயமாக கூட்டிகிட்டு  போனேன் . 
        போன  இடத்தில் ஒரு ரிஷப்ஷனிஸ்ட் புன்சிரிப்புடன் (ஆடு மாட்டிகிச்சுங்கிரமாதிரி )டாக்டரிடம் உள்ளே அழைத்துப்போனாள்.அங்கே இருந்ததோ மொத்தமே எங்களை சேர்ந்தது நாலே பேர்தான் . ரூம் மேட்டை அந்த ராட்சத நாற்காலியில் உட்கார வைத்து காதுக்குள் லேசான சுடுதண்ணியை ஸ்பிரே செய்து ஒரு ரூபாய்க்கு பஞ்சை வைத்து சுத்தம் செய்து  (ரெண்டு காதுக்கும் சேர்த்து ) 150 Dhs   வாங்கிகிட்டார் . நண்பன் அழுதுகிட்டே மொய் வச்சான் .
    திரும்ப வரும் போது அமைதியா வந்தான் . ஏண்டா என்ன ஆச்சி இப்பதான் காது நல்லா கேட்குமே ஏன் பேசாமல் வருகிறாய்ன்னு கேட்ட்துக்கு . ஏதாவது ஒன்னு தப்பி தவறி என் வாயில் வந்தா நீ உடனே என்னை ஐ சி யூ விலேயே அட்மிட் செய்துடுவாய் அதான் வாயை திறக்கவே பயமா இருக்குன்னு சொன்னானே பார்க்கலாம் .
     இப்பல்லாம் எந்த பிரச்சனை இருந்தாலும் உஷரா வாயை திறப்பதே இல்லை. ஒரு வேளை பயபுள்ள திருந்திட்டானோ ...!! 

                    ஆகஸ்ட் 2010
இந்த தொடர் இதிலாவது முடியுமா..??  பொறுமையை சோதிக்கிறானே...!!!

      ஒரு கஞ்சப்பய  அன்னைக்கி பார்த்துதான் விருந்துக்கு கூப்பிட்டான் , என்னது இது ஏதாவது மழைவறதுக்கு அறிகுறியா ?  இல்லை , நம்ம ஏழரை என்னைய விட்டுட்டு  போய்ட்டுதான்னு சந்தேகப்பட்டுகிட்டே கூட போனேன் . ஏதோ வீட்டுல சந்தோஷமான விஷயம் நடந்திருக்குப்போல . ஒரு 3 ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி வைத்தான் . (( நானும் அவனும் மட்டுமே )).
     எதை பத்தியும் கவலைப்படாதேன்னு நிறைய  ஐட்டங்கள் ஆர்டர் செய்தான் .அன்லிமிட் பஃபே டைப்  ஒரு வழியா சாப்பிட்டு முடிந்ததும். தன்னோட கிரடிட் கார்டை குடுத்தான் . கொண்டு போன சர்வர் அதே வேகத்துடன் திரும்ப வந்தான் . கார்டு வேலை செய்யலையாம் . இதென்ன சோதனைன்னு நினைச்சிகிட்டே  டெபிட் கார்டை சர்வரிடம் நீட்டினான் . திரும்பவும் சர்வர்  அதே வேகத்துடன் திரும்ப வந்து இந்த கார்டும் வேலை செய்யலைன்னு திரும்ப குடுத்துட்டான்.
      இரெண்டு கார்டும் ஒரே பேங்க்தான் .என்ன பிரச்சனைன்னு தெரியல , வெளியே இருக்கும் ஏ டி எம்மில்  போய் என்னை எடுத்து வரும் படி சொன்னான் . நானும் ரெண்டு கார்டையும் வாங்கி கிட்டு வெளியே வந்தேன் .   கார்டு இரெண்டுமே  ஏ டி எம்மில் சரியாகவே வேலை செய்தது . பணம்  எடுத்துக்கிட்டு வரும் போது சரியாக என் பாஸ் வந்து என் கையபிடிச்சி உடனே வா (ஹெட்) ஆஃபீஸில நெட் ஒர்க் வேலை செய்யலன்னு காருக்குள்ளே தள்ளி விட்டார் .
    நான் நிலைமைய சொல்லி முடிக்கும் போது கார் கிட்ட தட்ட20 கிலோ மீட்டர்  போய் விட்டிருந்தது. அப்புறம் வேறு ஆள்கிட்டே பணம் குடுத்து அனுப்பும் போது அதிக மில்ல ஒரு 3 மணிநேரம் போய்டிருந்துச்சி .கொலவெறியில உட்கார்ந்திருந்ததா  தகவல் .((நான் ஒரு 10 நாள் கழிச்சிதான் அவனையே பார்த்தேன்)) .ம்ம்ம்ம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்  ஹோட்டல் போகும் போது என்னிடம் போன் கையில் இல்லை ரூமிலேயே மறந்து வச்சிட்டு போய்ட்டேன்    
                        செப்டம்பர்  2010
      ஏதோ புதுசா ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனுக்காக ஒரு பிரபல இன்ஸ்டிடியூட்டில  15 நாளைக்கு டிரைனிங்காக அனுப்பி வச்சாங்க . அங்கே ஆண்களை  விட பெண்களே  அதிகம் . ஒரு வேளை ஆண்களுக்கு படிப்பே ஏறாதோ  என்னவோ .  
    முதல் நாள் புரபஷர் மாதிரி ஒருத்தர் வந்து அரைமணி நேரம் சொந்த புராணத்தை பாடினார் . என்ன கொடுமை இது எங்கே போனாலும் இவனுங்க தொல்லை தாங்கமுடியலைப்பா ..!!  அதுல முக்கியமா  அவர் சொன்னது இதுதான் .அவரும் அதே ((இதே))  இன்ஸ்டிடியூஷனில் படித்து அங்கேயே அவருக்கு வேலை கிடைத்து இருக்கு அதை பெருமையா சொன்னார் .
     இங்கே படிப்பு அவ்வளவு மட்டமாவா இருக்கு .வெளியே வேலை கிடைக்காமதான் .இவர் இங்கேயே  வேலை பார்க்குறார்  போல. இதுல நாம் இங்கே படிச்சால் என்ன ஆகுறது அவ்வ்வ்வ்.. அடுத்த நாளிலிருந்து இந்த ஏரியா பக்கமே தலை வச்சி படுக்கல..ஹி...ஹி...
நா வரமாட்டேன் ....நா வரமாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்...!!

                 அக்டோபர்  2010     
      ஒரு யூ எஸ் பி டிரைவை வைரஸ் செக் செய்துகிட்டு இருக்கும் போது அதுல ஏகப்பட்ட மால்வேர் டிடக்ட் ஆகிட்டே இருந்துச்சி . அதுல இருக்கும் ஒவ்வொரு exe ஃபைலையும்  போல்டர் exe பைலா அது டூப்ளிகேட்டா காப்பி செய்து இருந்தது தெரிய வந்துச்சி .  ஒரு கட்டத்துல அது அப்படியே மேற்கொண்டு  தொடராம அப்படியே நின்னுடுச்சி  .எந்த ஒரு கீபோர்ட் , மவுஸும் செயல்படல .
      கம்ப்யூவை ஒரு தடவை அப்படியே ஸ்விட்ஜ் ஆஃப் செய்துட்டு திரும்ப ஆன் செய்தால் கருப்பு ஸ்கிரீனில்  சீடி டிரைவில இருப்பதை வெளியே எடுத்து விட்டு ஆன் செய்யும் படி சொன்னது . அப்படி இல்லாவிட்டால் ரீஸ்டார்ட்  செய்யும் படி சொன்னது . உள்ளே இருக்கும் 80 ஜிபி ஐட்டமும் காலி ப்போலன்னு நினைச்சி ஒரே பீலீங் .
     என்ன செய்தாலும் அதே கருப்பு ஸ்கிரீன் அதே ரீஸ்டார்ட் . கிட்ட தட்ட 3 மணி நேரமும்  டிரை செய்தும் ஒன்னும் ஆகல . கடைசியா  பி சி பின் பக்க கதவை திறந்து விட்டு காற்று அடிக்கும் ஏர் புளோரை வைத்து நன்றாக ((பிராச்சர் ஃபேன் , பவர் சப்ளை உள்ளே , அவுட் ஃபேன் )) காற்றடித்து உள்ளே இருக்கும் தூசியை வெளியேற்றினேன்.
     திரும்ப ஆன் செய்யும் போது எந்த தொந்திரவும் செய்யாமல் நல்ல பிள்ளையை போல அமைதியா வேலை செய்தது.  பவர் சப்ளையிலோ  அல்லது பிராச்சர் மேலே இருக்கும் ஃபேன் இதுல ஏதாவது தூசி சேர்ந்தாலோ  அல்லது சின்ன எலக்டிரிக் தடங்கல் வந்தாலும் கம்ப்யூ ஸ்லோவா ஆகிடும்.
இதுல உள்ள நீதி என்னன்னா  அவரசப்பட்டு  எந்த முடிவுக்கும் லேசுல வந்திடப்படாது. சர்வீசுக்கு விட்டா உள்ளே உள்ள ஐட்டங்கள் (டேட்டாக்கள்)  களவு போக வாய்ப்பு உள்ளது. முடிந்த வரை நாமேதான் பார்க்கனும்
                 நவம்பர்  2010   
            இது வரை மத்தவங்களுக்கு பல்ப் குடுத்து வந்த எனக்கு மொத்தமா பல்ப் கிடைச்ச கதை இது அவ்வ்வ்வ்...மேலே நன்பணின் கிரெடிட் கார்டு அனுபவங்களால், கிரெடிட் கார்டுகளை வெளியே கொண்டு போவதில்ல்லை . அதுக்கு பதில் டெபிட் கார்டை கொண்டு போனேன். ஒரு ஷாப்பிங்  மாலில் மாடியில் 50 க்கு பர்ஸேஸ் செய்தேன் . அதுக்கு பிறகு கீழே வந்து 500க்கு பர்ஸேஸ் செய்யும் போது பணம் இல்லைன்னு ரிசிப்ட்  வந்தது. இதென்ன கொடுமை
     மூனு தடவை புல்லிங் செய்தும் இல்லைன்னே வந்தது .பிலிப்பைனி பொன்னு ஒரு மாதிரியா என்னை பார்க்க இப்பதான் மேலே பர்ஸேஸ் செய்தேன் பார்ன்னு ரிசிப்டை காட்ட வேறு ஆள் மூலம் மேலே கொண்டு போய் புல்லிங் செய்ய சரியா ரிசிப்ட் வந்துச்சி . நான் பழைய மூனு பில்லையும்  கையோடு கொண்டு வந்துட்டேன். ( இதான் என்னோட புத்திசாலிதனம் )இதிலென்ன் பல்புன்னு கேக்குறீங்களா மேலே படிங்க
     அடுத்த அரை மணிநேரம் கழிச்சு அதே பேங்கில் போய் பனம் எடுக்க போகும் போது 2000 திரம்ஸ்   குறைவா காட்டியது . பயந்து போய் மினி ஸ்டேட்மெண்ட் பார்க்க பர்ஸேஸ்  500 நாலு தடவை காட்டியது .இதுல வேடிக்கை ஒரு தடவைதான்  சரியான பில் மற்ற மூனும் தவறான பில்லே வந்தது.  ஆக பர்ஸேஸ் செய்த நேரம் இரவு என்பதால் பொழுது விடியும் வரை பொறுமையா இருந்தேன்
    மறு நாள் காலை ரிஜக்டாக இருந்த மற்ற மூனு பில்லும் என் கைவசம் இருந்த்தால் பேங்கில் காட்ட நீன்ன்ன்ன்ண்ட இடைவேளைக்கு (எதுக்கும் ஒரு லிட்டர் பால் குடிச்சிட்டு போங்க  நிறைய பேச தெம்பு வேனும் )பிறகு ஃபார்ம் எழுதி கொடுத்து அது செக் செய்து திரும்ப வர 15 நாள் பிடிச்சது. அது வரை டென்ஷன் தான் . அன்றிலிருந்து எங்கே போனாலும் நோ டெபிட் கார்டு  , ஒன்லி கேஷ்தான் .
   இதில் உள்ள நீதி : கார்டு யூஸ் செய்பவர்கள் . பண்ம் இல்லைன்னு வந்தாலும் அந்த துண்டு சீட்டை பத்திரமா வாங்கி வைக்கனும் , முடிந்த வரை அடுத்த அரை மணி நேரத்தில் சரியான அளவு பணம்தான் எடுக்கப்பட்டிருக்குதான்னு  உங்க பேங்க் அக்கவுண்டை செக் செய்யனும் .இல்லாவிட்டால் பின்னால் வருத்தப்படனும் . தப்பாக தெரிந்தால் 2 நாட்களுக்குள் பேங்கிற்கு உடனே போகனும் .இல்லாவிட்டால் பணம் கிடைக்காது .
                      டிஸம்பர் 2010 
யப்பா கடிதாங்க முடியல..!!  யாராவது காப்பாத்துங்கோவ்வ்வ்வ்வ்வ்

     வேலை நேரத்துல நம்ம ஃபிரண்டுக்கு அவன் லவர் கிட்டேயிருந்து போன் .(( இந்த பொண்ணுகளுக்கு மிஸ்டு காலை தவிர வேறு ஒன்னுமே தெரியாது )) கிட்ட தட்ட முக்கால் மணி நேரமா பேசினான் .திரும்ப வர மாதிரி தெரியல இதுவேலைக்காகாதேன்னு   கிட்டக்க போய் கேட்டதுல முக்கிய விஷயம்  இதுதான்  
      சீக்கிரமா அவனையே  கல்யாணம் செய்துக்குறேன் நம்புன்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டு இருக்கு . இவன் நம்பாத மாதிரியே  பேசிசிகிட்டு இருந்தான் . இந்த லவ்வு கிட்டதட்ட ஓரு வருஷமா ஓடிகிட்டு இருந்தது .இப்ப நம்ம்மாட்டேங்கிறானேன்னு எனக்கும் வருத்தம் . ஆண்கள் ஏமாற்றிதான் நாம இது வரை கேட்டிருக்கோம் .இங்கே இதென்ன புதுசா நம்ம பய கொ(கெ)ஞ்சிறானேன்னு எனக்கு ஆச்சிரியம் .
     இருந்தும் அவங்கள் பேச்சில நாம குறுக்கே போக்க்கூடாதுன்னு பேசாம இருந்தேன். கடைசியா இவன் சொன்னான் உங்க வீட்டில யாரையும் நான் நம்பமாட்டேன் அதுவும் கடைசியா கேட்டது. ஏன் நம்ம மாட்டேங்கிறே .அதுக்கு இவன் சொல்றான் இதையே தான் உங்க மூத்த அக்கா என்னிடம் சொல்லிச்சு , அப்புரம் வெளிநாட்டு மாப்பிள்ளையை பாத்ததும்  என்னைய கைவிட்டுடுச்சி “  பிறகு உன்னோட இன்னொரு அக்காவும் அதேதான் சொல்லிச்சு , அப்புறம் வசதியா ஒருத்தனை பாத்ததும் அவனையே  கல்யாணம் செய்துகிச்சு .
     இப்ப நீயும் அதே டயலாக்கை சொல்றே. அதான் நம்ம முடியலே”  ன்னு  சொன்னானே  பார்க்கலாம். அதுக்கு பிறகு எதிர் முனையிலிருந்து பதிலையே கானோம் போன் கட்..      
   விடாமுயற்சி கேள்விபட்டு இருக்கேன் .இது மாதிரி ஒரே வீட்டில ரூட் விடற  விடாமுயற்சியை கேட்டதே இல்லை .இது மாதிரி ஃபிரெண்டுகளை வச்சிருக்கேனேன்னு இப்போ அவனோட மூட் அவுட் எனக்கு வந்துருச்சி  அவ்வ்வ்வ்வ்J)

    ஒரு வழியா தொடரை முடிச்சிட்டேன்னு நினைக்காதீங்க .இன்னும் நாலு வேற தொடர் பாக்கி இருக்கு .யாரோ  கூப்பிட்ட நினைவு இருக்கு ஆனா சட்டென்னு நினைவுக்கு வரல :-)

பிளேடு குறிப்பு :- ஒரு அன்பு சகோதரியின்  வேண்டுக்கோளுக்காக மட்டும் சில  மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது . அவருக்கு என் நன்றி :-)

Saturday, August 20, 2011

ஒரு ............டைரி....!!!-----2

65 என்ன சொல்றாங்ன்னா ...

டிஸ்கி :ஒரு......யின் டைரி தொடர்ச்சி இரெண்டாம் பாகம் ஆரம்பிக்குது. இது இன்னும்  தொடரும் போலிருக்குது . இனி யாரும் தொடருக்கு என்னை கூப்பிடுவீங்க..??? (யாரோ புலம்புவது கேட்குது )) ஹி...ஹி..  
                                             மார்ச்  2010
      எங்கள் கூட வேலை செய்யும்  பெங்காலி (பங்ளாதேஷி ) ஒரு மாதிரியான டைப் . எது கேட்டாலும் அவனிடம் எப்போதுமே  சரியான பதில் சொல்லமாட்டான் .ராங்கான பதிலே வரும் புதிதாக  கேட்பவருக்கு சில நேரம் கோவமே வந்துடும் . ( நமக்கு  பழகி போயிடுச்சி ) . அன்றிலிருந்து  2 மாதம் லீவு ஊருக்கு  கிளம்பிகிட்டு இருந்தான் . சரி போய் பார்த்து விட்டு வரலாமுன்னு கேம்பிறகு போனால் இரவு 10 மணி ஃபிளைட்டிற்கு  8 மணி வரை ரூமிலேயே இருந்தான் .கேட்டதுக்கு இன்னும் தம்பி  கார் கொண்டு வரலை அதுக்காக வெயிட்டிங்னு சொல்லிட்டான் . துபாய் , ஷார்ஜா டிராஃபிக் சமாளித்து போகவே சில சமயம் 3 மணி நேரம்  பிடிக்கும் .கடைசியில் இவன் தம்பி வந்து ஏர் போர்ட் போனபோது மணி 11 ஆகி ஃபிளைட் மிஸ்ஸிங்  .திரும்ப வந்து விட்டான்
   மறு நாள் என்னையும் ஏர்போட்  போக கூப்பிட்டான். நான் கராராக சொல்லிவிட்டேன் . மாலை 6 மணி ஃபிளைட்டிற்கு இங்கிருந்து மதியம் 2.30க்கு கிளம்பினால் சரியாக இருக்கும் அப்படி என்றால் வருகிறேன் . அவனும் ஓக்கே சொல்லிட்டான் .
    அடுத்த நாள் பாஸ்போர்ட் ரெடியா , டிக்கெட் ரெடியான்னு சொல்லி விட்டு  கூடவே கிளம்பினேன் . மதிய நேரம் அவ்வளவா டிராஃபிக் இல்லை .ஒரு வழியா 4 மணிக்கு துபாய் ஏர்போர்ட்  போய் விட்டோம் . லக்கேஜ் ஸ்கேனிங்  போட்டதும் என்னை போக சொல்லிவிட நான் அங்கேயே இருந்தேன் . பயபுள்ள உள்ளே போன கால் மணி நேரத்திலேயே  திரும்ப வந்தான் என்னடா ஆச்சின்னு கேட்டதுக்கு சொல்றான் பாருங்க .ஜெய்லானி ஏர்போர்ட் மாறிப்போச்சுடா. நானும் ஆமாம் இப்ப ரொம்பவும் டெவலபா இருக்கு . அதுக்கும் நீ திரும்ப வந்த்துக்கும் என்ன  சம்பந்தமுன்னு கேட்டேன் .
   அதுக்கு அவன் சொல்றான் .நாசமா போச்சி  நான் போக வேண்டிய ஃபிளைட் ஷார்ஜா ஏர்போர்ட் , ஆனா நாம வந்தது  துபாய் ஏர்போர்ட்டுக்குன்னு கூலா சொல்றான் . பெங்காலி பயபுள்ள ஃபிரென்ஷிப் வேண்டாமுன்னு சொன்னாலும் நான் கேட்டாதானே..!!

                      ஏப்ரல்  2010
       டியூட்டி நேரங்களில் டைம்பாஸ் செய்ய பக்கத்துல இருக்கிற ஹோட்டல்தான்  வசதி .நொறுக்கு தீனிகளோட நேரம் போவது தெரியாம்ல் கலாய்த்து கொண்டிருப்போம் . ஒரு நாள் கூட வந்த நாலு பேருமே டீ சரியில்லைன்னு  சொல்லிகிட்டு இருந்தானுங்க . நான் லைட் டீ ( பால் இல்லாம )  மட்டுமே குடிப்பது வழக்கம். மத்தவங்க ஸ்டிராங் (  வீட்டில் குடிப்பது போல தேயிலை நன்றாக கொதிக்க வைத்தது )  குடிப்பதால் , ஒரு வேளை தேயிலை தூள் புதியதான்னு  கேட்டுகிட்டும் , இன்னும் சில பேர் ஒரு வேளை பால் புது டைப்பாக இருக்குமோ , இல்லை சர்க்கரை (சீனி ) சரியில்லையோன்னு  ஆளாளுக்கு அப்செடாக இருந்தார்கள்.
    வரப்போகிற எல்லாருமே  லேசாக முகம் சுளிப்பதை பார்த்து விட்டு ஹோட்டல் மலையாளியிடம் கேட்டேன் . ஏண்டா என்ன ஆச்சி எதுவும் ராங் ஐட்டம் போட்டுட்டியா..? இல்லை எதுவும் பழைய சரக்கா..? பழைய டேஸ்ட் இல்லைன்னு சொல்றாங்களேன்னு கேட்டேன் .
     அது ஒன்னுமில்ல  ஜெய்லானி .எல்லாமே அதே குவாலிட்டி சாதனம்தான் . இந்த டீ கெட்டிலை உள்ளே சுத்தம் செய்து கிட்டதட்ட  ரெண்டு மாசம் ஆகிரதேன்னு நாந்தான் இன்னைக்கி காலையில  நல்லா கிளீன் செய்தேன் . ஒரு வேளை அதுதான்னு நினைக்கிறேன்னு சொன்னான் பாருங்க .
      எனக்கு தல சுற்றியதுல ஒரு செகண்ட் நான் பூமியிலதான் இருக்கிறேனோன்னு சந்தேகமே வந்துட்டுது.
                  மே 2010


      மாலை நேரம் பக்கத்துல இருக்கும் காஃபிடீரியாவில்ஒரு காக்டெயிலும் (நம்புங்க ஜுஸ்தான் ), பர்கருமாக கூடவே நிறைய ஃபிரெஞ்ச் ஃபிரையை  வைத்துகிட்டு  எதை முதலில்  ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சிகிட்டு இருக்கும் போது .ஒரு பெங்காலி உள்ளே வந்தான் . எனக்கு எதிரில் உள்ள சீட்டில் உட்கார்ந்துகிட்டு  ஷ்வர்மா  ஆர்டர் செய்தான் .
    ஊரிலிருந்து வந்து ரெண்டு நாள்தான் ஆகிறதாம் .இந்த நாட்டிற்கு புதுசாம் . பரஸ்பரம் நலம் விசாரிச்சி கிட்டு இருக்கும் போதே அவன் கேட்ட சிக்கன் ஷ்வர்மா வந்தது. நான் கடை ஆளிடம் பேசிகிட்டு திரும்பி பார்ப்பதுக்குள்  முழுதும் சாப்பிட்டு விட்டான் .நன்றாக இருந்த்து போல இன்னொன்னு கேட்டான்
  ””பாய் சாப் ஷ்வர்மா பஹுத் அச்சா ஹை , அவுர் ஏக் தியோ மகர் பேப்பர் தோடா கம் ரக்கோ”” அப்படின்னு சொன்னான் .((சகோ  ஷவர்மா  ரொம்ப நல்லா இருக்கு ஆனா அதுல கொஞ்சமா பேப்பர் சுத்தி குடுன்னு கேட்டான் ))  பாருங்க .. அடப்பாவி ஷ்வர்மாவுல சுத்தி இருக்கிற பேப்பரை பிரிச்சி போட்டுட்டு சாப்பிடனுமுன்னு கூட  தெரியலப் போலிருக்கு. அவ்வ்வ்வ் .
                    ஜுன் 2010


       ஒரு பொன் மாலைப்பொழுதில்  பார்க்கில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது ஒரு ஆள் என் பக்கம் வந்து நலம் விசாரிச்சார் .((எப்படித்தான் கண்டுப்பிடிக்கிறானுங்களோ தெரியலை)) நானும் சின்னதா ஒரு புன்னகை செய்தேன் .
    அவர் ஒரு கைரேகை ஜோசியராம் (( இந்த ஊருல கிளியை வச்சி செஞ்சா நேரே  ஜெயில்தான் )) .ராசியை பத்தி பேசிகிட்டு இருந்தார் .நமக்கு ராசி நல்லா இருந்தா ஏன் வெளிநாட்டுக்கு வரோம் ஹி..ஹி...அவருக்கு கையை பார்த்தாலே  கடந்த காலம் , நிகழ்காலம் , எதிர்காலம் எல்லாமே தெரியுமாம் .நானும் எல்லாத்துக்கும் தலையை ஆட்டி வைத்தேன்  நமக்கும் நேரம் போகனுமில்ல ஹா..ஹா.
   கடந்தகாலம்தான் தெரியுமே அதுக்கு ரீவியூ எதுக்கு . நிகழ்காலம் இங்கே கொஞ்சம் வெயில் ஒன்னும் சொல்றதுக்கில்ல . எதிர்காலம் தெரிஞ்சா டேஞ்சர் . அதில் ஒரு திரில் , சுவாரஸ்யம் இருக்காது .ஆக மொத்தம் எனக்கு இதில் நம்பிக்கையே கிடையாது .. முழு எதிர்காலமே சொல்கிறேன் . 30 Dhs கொடுங்கன்னு  கேட்டார்.
     நான் சொன்னேன் ஓக்கே நான் 100 Dhs தருகிறேன் .எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கன்னு . அவரும் ஆர்வமாக சொல்லுங்கன்னார் . கேள்வி இதுதான் . நான் உங்களூக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல வாங்கி தரும் அடுத்த வேளை என்ன சாப்பிடுவீங்கன்னு சரியா சொன்னா அதோடு இந்த 100 Dhs  உங்களுக்கேன்னு சொன்னேன் .
     அவர் முகத்துல ஈ ஆடவில்லை . அமைதியாக இருந்தவர் .மெதுவாக அந்த இடத்தை விட்டு காலி செய்தார் . எங்கிட்டேயேவா...?..!!

டிஸ்கி நெ 2 : இது வரை பொருமையாக படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன் . இந்த தொடரை இன்னும் தொடரனுமான்னு நீங்கதான் சொல்லனும் :-)

Friday, August 12, 2011

ஒரு ............டைரி....!!!

59 என்ன சொல்றாங்ன்னா ...

             இந்த தொடர் பதிவை  விஜி கிரியேஷன்ஸ் ஆரம்பிச்சி வச்சி நமக்கு பிட் நோட்டிஸ்அழைப்பிதழ் அனுப்பினாங்க அதுவும் இந்த மாசம் கடைசிக்குள்ள போடுங்கன்னு அன்பு கட்டளையோட அதாவது போன டிஸம்பர்ல... அதுக்கு பிறகு  குட்டி சுவர்கமும்  கூப்பிட்டு  பார்த்தாங்க .அதுக்குள்ள புது வருஷமும் ஆரம்பிச்சி ஜனவரியும் ஓடி இப்போது ஆகஸ்டு பாதி முடியப்போகுது , நேரம் ஆக இரெண்டு காரணம்  ஒன்னு  ஆனி பிடுங்கல்  அடுத்தது  ஒரே நேரத்தில இதே மாதிரி பதிவு எல்லா இடத்திலும் வந்தா கொஞ்சம் போர் அடிச்சுடுற மாதிரி தெரியும் அதான் ஹி..ஹி.. :-)
      எனக்கு டைரி எழுதப் பிடிக்காது.. பிடிக்காதுன்னு கிடையாது ஆனால் , என்னிக்காவது  எதிலாவது மாட்டினால் இதுவே ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி ஆகிடும் . வேற  வினையே  வேனாம் ஹி..ஹி..  ((சோம்பேறின்னு சொல்ல அசிங்கம்)) இதுல ஒரு பக்கத்துல ஒரு வருஷத்தை அடைக்க முடியுமா சந்தேகம்தான் அதனால முடிஞ்சளவு  போட்டுகிட்டு வரேன் .
                 ஜனவரி 2010

          சில்லென்று வீசும் ஒரு பொன்மாலை பொழுதுல பக்கத்தில இருக்கும் பார்க்கில போய் உட்கார்ந்தேன் . மீடியமான கூட்டம் குழந்தைகளின் தத்தி தத்தி  நடக்கும் அழகும் , பாட்டிகளின் ((ஆண்டீஸ்)) வாக்கிங்கும் அழகாய் போய் கொண்டு இருந்துச்சி .  அதுக்கும் பக்கத்தில  ஒரு புல் வெளியில இங்கே பால் விளையாடாதிங்கன்னு போட்ட இடத்தில்  அனுஷ்காக்களும் , நமிதாக்களும் ஷட்டில் காக் விளையாடிகிட்டு இருந்தாங்க . அழகானவங்க விளையாடும் போது  யார் போய் அவங்களை தடுக்க போறாங்க . நானும் அதை வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன் .
          கரெக்டா பத்தாவது நிமிஷம் அனுஷ்கா விட்ட அடியில பந்து என் பக்கம் எதிர்பாராம திடீர்ன்னு வந்ததுல நான் கொஞ்சமா தடுமாறினதுல கால் வழுக்கியதுதான் தெரியும் எண்ட அம்மேஏஏஏஏஏன்னு ஒரு பயங்கர சத்தம்.,  வந்த சத்தத்தில  பயந்து போய்  நானும் ஐயோன்னு கத்த பிறகுதான் தெரிஞ்சுது ..நான் கட்டில விட்டு கீழே விழுந்தது.  சாரி , விழுந்தது ஒரு ஆள் மேலே., .என்னோட கை அந்த ஆள் தொண்டைகுழியை  அழுத்த, என்னோட மொத்த வெயிட்டும்  அந்த  ஆள் வயித்துல ....

         அப்பவும் பாதி தூக்கத்துல ஒரு சந்தேகம் யாரு இது புதுசா நம்ம ரூமில நமக்கு தெரியாம வந்து என் பெட்டுக்கு கீழே படுத்து கிடக்கிறது  .ஒரு வேளை திருடனோன்னு பயம் .நாம ரெண்டு பேரும் போட்ட சத்தத்துல.ரூம் ஃபிரெண்ட் அவனோட சொந்த காரன் மலையாளி  ஓடி வந்து என் கையை எடுத்து விட்டு  டேய் விட்றா  செத்துடப்போறான்னு சொல்ற வரை கை குரல் வளையை விட்டு எடுக்கல (( யாருக்கு தெரியும் தூக்கக் கலக்கத்துல)) 
        விஷயம் இதுதான் ..ஆள் இருப்பது அபுதாபியில , ஊரிலிருந்து  வந்ததும் நைட்  பிளைட்டா இருப்பதால தங்கிட்டு காலையில போக ரூமிற்கு வந்து இருக்கு . எனக்கு நேர் எதிரே ஏசி இருப்பதால குளிர் காற்றுக்காக பயபுள்ள என் கட்டிலுக்கு கீழே  படுத்திருக்கு. ஒரு வழியா அவரை  சமாதானப்படுத்தி  படுக்க வச்சா இதோ  வரேன்னு வெளியே போனவர்தான் திரும்ப ரூம் பக்கம் வரவே  இல்லை . பக்கத்தில  இருக்கிற பள்ளிவாசல்ல தூங்கிட்டு  அப்படியே ஆள் எஸ்கேப்..
ரூம் மேட்டுகிட்ட கேட்டேன். எங்கேடா அவரையும் கானோம் அவரோட பெட்டியையும்  கானோமேன்னு .பெட்டியை நீயே எடுத்து வந்து அங்க குடுன்னு சொல்லி வாங்கிட்டு அங்கிருந்தே போயிட்டார். இப்பல்லாம் யாருமே ரூம் பக்கமே   வரதில்லை ஏன்னு தெரியல . உங்கள் யாருக்காவது காரணம் தெரியுமா ?  தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன் பிளீஸ்..  

                பிப்ரவரி 2010  

            இதுவும் அதே  சில்லென்று வீசும் ஒரு பொன் மாலை பொழுதில் திரும்பவும் அதே பார்க் அதே  வேடிக்கை .ஆனா இது கனவல்ல நிஜம் .புல் வெளியில்  உட்கார்ந்து  வேடிக்கை பார்க்கும் போது  காலில் எதோ ஒரு உணர்வு சின்னதா பிடிச்சி இழுப்பது மாதிரி . விட்டேன் ஒரு உதை.ஏதோ ஒன்னு பறந்து போய்  தூர விழுந்தது. திரும்பவும் வேடிக்கை  தொடர்ந்தது. கொஞ்ச நேரத்தில  அதே உணர்வு  என்னடா இது ஜெய்லானிக்கு வந்த சோதனைன்னு பார்த்தா ஒரூ ஆ மை.,  
         ஆஆஆஆஆமையா இது எப்படி வந்துச்சின்னு   ஆராய்ச்சி செய்ய நேரம் இல்லை ரொம்பவும் பொடிசா இருக்கவே  சரி வரட்டுமேன்னு சொல்லி பக்கத்தில கிடந்த சிகரெட் பாக்கெட்டில போட்டு ரூமிற்கு கொண்டு வந்துட்டேன் . வீட்டுக்கு ஆமை வந்தா வீடு உருப்படாதுன்னு எங்கோ  படிச்ச ஞாபகம் . நாமலே உருப்படாத ஆளு, இதுல ஆமை வந்தா ஒரு வேளை உருப்படுட்டுமோன்னு  நினைச்சு தைரியமா கொண்டு வந்துட்டேன் .
        அது என்ன சாப்பிடும் என்று சரியா தெரியாததால. ஒரு பக்கெட் முக்கால் வாசி தண்ணீர் நிறப்பி அதில் ஆமையை விட அழகா நீந்திகிட்டு இருந்தது. கொஞ்சமா அதுல சோறுப்போட அதை லேசா அது சாப்பிட்டதா ஞாபகம் . வழக்கம் போல மறு நாள் காலை பாத்ரூமில் குளிக்கப் போக பக்கெட்டை பார்க்க..!! பக்கெட் காலி ஆமையை கானலே..!!  சரி ஒரு வேளை எங்காவது ஓரமா இருக்கும் அதுவும் குளிக் போயிருக்குமுன்னு நினைச்சி  நானும் மறந்துட்டேன். 

   திரும்பவும் மதியம் வரும் போது ரூம் மேட் கேட்டான் , அடோய் ஜெய்லானி பாருய்யா அதிசயத்தை ராத்திரி ரூமுக்கு வரும் போது பார்க்கிறேன் உன்னோட பக்கெட்டுக்குள் ஒரு ஆமை நீந்திகிட்டு  இருந்துச்சி .பார்த்துமே  அப்படியே  ஷாக்காகிட்டேன் ..!!  நானும் சரி அப்புறம் ..? அப்புறமென்ன அப்படியே  பக்கெட்டோட டாய்லெட்டுக்குள்ள விட்டு ஃபிளாஷ் அடிச்சிட்டேன் ..ஆனாலும் 5 நிமிஷம் கழிச்சி அது திரும்பவும் வெளியே வந்துச்சி , நான் விடல கடைசியா சுடு தண்ணி ஒரு பக்கெட் விட்டேன் . அது திரும்ப வரவே இல்லைன்னு சொன்னான் .அவ்வ்வ்வ்வ்வ்வ்
   அடேய் படுபாவி அதை கொண்டு வந்ததே  நாந்தாண்டா ..!! அநியாயமா அதை கொன்னுட்டியேன்னு சொல்ல , யாருக்கு  தெரியும் நான் வரும் போது இரவு 2 மணி நீ நல்லா தூங்கிட்டு இருந்தேன்னு கூலா  சொல்ல ...  என்ன செய்ய ..!!  என் கிட்ட வந்த ஆமைக்கு நேரம் சரியில்லை .
நீதி  :-   ஆமை புகுந்தா வீடு இல்ல , ஆமை  உருப்படாது ..!!
இந்த ரெண்டு  மாசத்துக்கே  கதை ஓவரா போனதால மீதி மாதங்கள் தொடரும்...............................................................................................!!                   

Saturday, July 9, 2011

ஆஹா ... சமையல் ..!!

56 என்ன சொல்றாங்ன்னா ...
டிஸ்கி :- இது ஜெய்லானி பிளாக் .தேவையில்லாம கோர்ட் கேசுன்னு அலைய வேனாம் அது உங்க உடம்புக்கு ஆகாது .ஹி..ஹி.. 

இதுக்கே இப்பிடி முழிச்சா என்னாகிறது
   
  எளிமையா அழகா வாசனையா சமையல் குறிப்பு கேட்டு நிறைய பேர் மெயில் செஞ்சாங்க.  தனிதனியா பதில் போடுறதை விட ஒரு பதிவா போட்டா நல்லா இருக்குமேன்னு போட்டிருக்கேன் .
      எப்பவுமே  ஹைஜெனிக்கா சாப்பிட விரும்புகிறவங்க அரிசியை சமைக்கும் போது அதுல கொஞ்சம் டெட்டால் விட்டு கழுவினா 99 சதவிகித கிருமிகள் செத்துடுமாம் . ( ஆனா வாசனை பிடிக்குமான்னு நீங்கதான் சொல்லனும் )
     பிரியாணி எப்பவுமே  ஒரே கலரில்தானா செய்யனும்  கொஞ்சம் வித்தியாசமா  கருப்பு கலரில் செஞ்சிப்பாருங்க . ( கலர் தேவைப்பட்டா உங்க பையனோ  பொண்ணோ பேனாவுக்கு போடும் கருப்பு இங்கை பயன் படுத்தலாம்  )
      ரசம் நல்ல வாசனையா இருக்க பெருங்காயத்துக்கு பதிலா குண்டு மல்லிகை பூவை போடலாம் அப்புறம் பாருங்க வாசனை ஊரையே தூக்கும்.
     இட்லியை ஆவியில் வேக வச்சி சாப்பிட்டு போரடிச்சி விட்டதா   கவலையே  படாதீங்க . அதை முறுக்கு பிழியும் குழாயில போட்டு அப்படியே  எண்ணெயில் பொரிச்சி வையுங்க . வித்தியாசமான இட்லி தயார் ( சட்டினின்னு தனியா வேர சைடு டிஷ் தேவைப்படாது அப்படியே சாப்பிடலாம் )
     பருப்பு போட்டாதான் சாம்பாரா  அதுக்கு பதிலா(வறுத்த ) பட்டானியை போடுங்க என்ன குழம்புன்னு தெரியாம வந்தவங்க தலையை பிச்சிகிடட்டும்
     அசைவம் சமைக்கும் போது என்ன தான் சுத்தம் செஞ்சாலும் சில நேரம் ஸ்மெல் போகாது . அதுக்கு  கவலை படாதீங்க கொஞ்சமா பினாயில் விட்டு கழுவினா வாடை போயிடும் .
     நீங்க வச்சிருந்த மாவுல பூச்சிகள்  வந்திட்டுதா அதை தூக்கியே  போடவேனாம் . அப்படியே  மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினா பூச்சி காணாம போகிடும் ஹி..ஹி... ( வந்தவங்களுக்கு தெரியவா போகுது )
     லெமன் ஜீஸ் பழசு மாதிரி தெரியுதா ..அதுல ரோஸ் மில்க் எஸன்ஸை கலந்துட்டா . ஏதோ  காக்டெயில்ன்னு நினைச்சி வந்தவங்க ஏமாந்துடுவாங்க  (  பால் செலவு மிச்சம் )
      மதியம் திடீர்ன்னு யாராவது விருந்துக்கு வந்துட்டா சமையல் செய்ய நேரம் இல்லையா நோ டென்ஷன் ஒரு வயத்து வலி மாத்திரையை  டீ , காஃபி  யில கலந்து குடுத்துட்டா அவங்களுக்கு சாப்பிட எதுவுமே கேக்க மாட்டாங்க ( டீ ,காபியே  சாப்பிடாதவங்களுக்கு மோர் , ஜுஸ் இருக்கவே இருக்கு )
      சிலருக்கு கருவாடு , கத்திரிகாய் என்றால் அலர்ஜின்னு சொல்லுவாங்க . அப்படி பட்டவங்களுக்கு  ஹமாம் சோப் , லைஃப் பாய் சோப் , சிந்தால் சோப்  இதுல ஏதாவது ஒன்னால அதை கழுவிட்டு சமைச்சா அலர்ஜி வராது .. (இதை போட்டு குளிச்சா அலர்ஜி வராதுங்கிர போது  கழுவினாலும் அலர்ஜி வராதுதானே   ஹி..ஹி...)
     வைட்டமின்    E  குறைவினால  நிறைய வியாதிகள் வராதா டாக்டர்கள் சொல்றாங்க .அதனால  முடிஞ்சளவு  உங்க வீட்டுக்குள்ள ஈ வந்தா வெளியே விடாமா  பிடிச்சி வச்சி ஏதாவது ஒரு கீரையோட சமைச்சி வையுங்க . ( உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் தானே )   
  டிஸ்கி :-  யார் மெயில் செஞ்சி கேட்டாங்கன்னு  நீங்களும் கேட்க வில்லை அதை நானும் சொல்ல வில்லை

Friday, April 1, 2011

சந்தேகம்-7 பாம்பூஊஊஊ

58 என்ன சொல்றாங்ன்னா ...
    
         நம்ம மக்களில் ஒரு சிலரை தவிர பலப்பேருக்கு பேரை கேட்டாலே  சும்மா அதிரும் .  திடீர்ன்னு சொன்னாப் போதும்.  கைக்கால்  ஆட்டோமேடிக்கா உதறல் எடுக்கும்  . இன்னும் சிலருக்கு படத்தை  பார்த்தாலே  பிளாகோ , வெப்ஸைட்டோ  , இல்ல வீடியோவோ  எதுவா இருந்தாலும் பார்க்காமலோ  ஓடி விடக்கூடிய  வியாதியும்  இருக்கு .அதுக்கு ஏதோ ஒரு போபியான்னு சொல்லுவாங்க (ஏதாவது சொல்லிட்டு போவட்டும்  நமக்கென்ன )  . அந்த பேருக்கு சொந்தக்காரர்  திருவாளர் பாம்பு அவர்கள்தான் .
அடிக்கடி  நாம ரெண்டு பேரும் இப்படி ஓடி ஒளியரதா இருக்கே  என்ன செய்யுறது ..!! அவ்வ்
       
      இதுல அதிக விஷம் உள்ளது .ஒரே  கடியில்  ஒரு யானையையே  சாகடித்து விடும் பவர் .சக பாம்பு இனத்தையே சாப்பிடும் குணம் , தைரியமா நிமிர்ந்து அது 6 அடியா இருந்தாலும்  எந்த வித கிராபிக்ஸும் இல்லாம ஸ்டைலா படம் எடுத்து நிக்கிறது நல்ல பாம்புதான் .  இவ்வளவு  டெரரா இருந்தாலும் அதுக்கு நம்ம மனுஷ இனம் குடுத்த பேர் நல்ல பாம்பு “ 
       அது மட்டும் நல்லதா இருந்தா , ஒன்னும் வேலைக்கு ஆகாத  ((அட கடிச்சாலும் தான் ))  தண்ணீப் பாம்புக்குதானே நல்ல பேரை குடுத்து இருக்கனும்.. இதை எழுதும் போதுதான் அந்த பாட்டும் நினைவுக்கு வருது “”  நாதர் முடிமேல் இருக்கும் நல்ல பாம்பே  உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே  “”  .அந்த நாவுக்கரசர்  ( சிவாஜி ) கேட்டப்போ  கூட புஸ்ஸு..புஸ்ஸுன்னு சவுண்டுதான் குடுத்துச்சி .  ((ஒரு வேளை குஷ்பு..குஷ்புன்னு சொல்லிச்சோ  என்னவோ  யாரு கண்டது )) ஆனா ஆள் யாருன்னு கடைசி வரை அதுவும் சொல்லலை ..உங்கள்ள யாருக்காவது  தெரிஞ்சா சொல்லுங்க .பின்னால வரும் சந்ததிகளாவது தெரிஞ்சிக்கட்டும்
     இதுல அடுத்த சந்தேகம் என்னன்னா..பாம்புக்கு காது இருக்கா..???  இது வரை என்னை தவிர எல்லாமே குழப்பவாதியாதான் இருப்பாங்க போலிருக்கு ..ஹி..ஹி... உதா:-  மகுடி  ஊதினா  அது ஆடுவது பார்ப்பது எல்லாமே காது கேட்பதால இல்ல , ஏன்னா அதுக்கு காது இல்ல , அதுக்கு முன்னால அதை ஆட்டுவதால அது இடவலமா பார்ப்பதா  சொல்றாங்க ....அதே சயண்டிஸ்டு  பயபுள்ள சொல்லுது .கீழ் உடல்ல இருக்கும் செதில்களால அது பூமி அதிர்வுகளை வச்சி கண்டுப்பிடிக்குது .  இதுல எது நிஜம், எது பொய்ன்னு   கொஞ்சம் சொன்னா தேவலாம் . சத்தமுன்னு சொன்னா  அது அதிர்வு தானேங்க அது காத்தில போனா என்ன(ரேடார்) கடல் தண்ணீயில போனாதான் என்ன  (சோனார் ) பூமி அதிர்வை தானே சீஸ்மோ கிராஃப் படம் படமா  ((ஹைய்யா.. பாயிண்டுக்கு வந்துட்டேனே ))  காட்டுறாங்க ... அப்போ  அதிர்வு இல்லாம  இருக்கும் இடமே இல்லையே...  (( வெற்றீடத்தில வச்சா  காத்து இல்லாம பாம்பே  செத்துப்போயிடுமே )) இதனால சொல்ல வருவது பாம்புக்கு  காது கேட்குமா  ??? கேட்காதா????

கால்ல ஆணிங்கிறாங்களே  அப்படின்னா  என்னது??????

     மூனாவது  சந்தேகம் (( மூனும் தனி தனி பதிவா போட்டு  அப்புரம் நீங்க ஒரு பாம்போட என்னை தேடி வந்துட்டா )) இந்த பாம்பாட்டிகளும்  இன்னபிற ஆட்களும் ஏன் நல்ல பாம்பை மட்டும் பிடிச்சிகிட்டு வந்து  மகுடி ஊதுறாங்க ....மத்த பாம்பை  பிடிச்சுகிட்டு வந்து  ஊத வேண்டியதுதானே... ஊதிகிட்டே  இருக்க வேண்டியது தானே....  அதுப்போல கீரிப்பிள்ள கூட  சண்டை போட கூட இவங்களுக்கு ஒரு நல்ல பாம்புதானா கேட்குது . மத்த பாம்புகளுக்கு ஒரு தவளை கூட கிடைக்காத பட்சத்துல  இதுக்கு மட்டும் முட்டையும் பாலும் குடுத்து ஏன் அழகுபாக்குறாங்க (வருமானம் வருதுங்கிறதுக்கா)
     பாம்புகள் பொதுவா மரம் ஏறி மற்ற பறவை இனங்கள் கட்டி இருக்கிற கூட்டில உள்ள முட்டைகளை  சாப்பிடுவதா ஒரு அபிப்பிராயம் இருக்கு. அதுவே ஏகப்பட்ட முட்டை போடுதே...!! அப்போ அந்த முட்டைகளை மட்டும் ஏன் அது சாப்பிடுவதில்லை...அந்த நேரம் எதுவும் விரதமா..??  இல்லை நாள் நட்சத்திரம் சரியில்லையா..?
   
எனக்கு தயாரிக்கிறத மனுஷ பயலே நீங்க ஏண்டா குடிக்கிறீங்க...????  :-))

    அமெரிக்கால மட்டும் வருஷத்துக்கு  8 ஆயிரம் பேர் பாம்புக்கடியால  சாகிறாங்க ..மொத்த  உலகத்துல  சுமார்  ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் சாகிறாங்க ..ஒரு புள்ளி விவரம் சொல்றாங்க ..ஆனா சீனாக்காரங்க  எத்தனை பாம்பை வருஷத்துக்கு  சாப்பிட்டு தீர்க்கிறாங்கன்னு  எந்த புள்ளி விவரமும் இல்ல ..நான் வளார்கிறேனே  ம்ம்மி......அப்படித்தான் போய்கிட்டு இருக்கு .. எப்பவாவது  பாம்பை  பார்த்தா  சைனான்னு  சொல்லிப்பாருங்க ...வந்த வேகத்தை விட 12 மடங்கு வேகத்துல  எஸ்கேப்பாயிடும்  J)