Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, January 30, 2012

கேசரி.....!!

53 என்ன சொல்றாங்ன்னா ...

             வழக்கமா வாக்கிங் போகிற வழியில ((நீ வாங்கிங் எல்லாம் போவியான்னு யாரும் கேட்கப்பிடாது )) புதுசா ஒரு டிராவல் திறந்தாங்க. பார்க்கிறதுக்கு நல்லா கண்ணுக்கு குளிர்ச்சியா ஏகப்பட்ட லைட்ஸ்,  டெக்ரேசன் ஒரே  அமர்க்களமா இருந்துச்சி. எங்கயாவது புதுசா  ஏதாவது திறந்தா  நமக்குதான் வேடிக்கையா இருக்குமே. உள்ளே போய் பார்ததுல ஒரு பிளேட் கேசரி ஃபிரி ...... கேசரியின்  மணம் குணத்தில் (உபசரிப்பில் ) சொக்கி போய் அடுத்த பிளேட் எக்ஸ்டிரா .....(( ஃபிரியா கிடைச்சா ஃபினாயிலும் குடிப்போமுல்ல )).
அலோ..அலோவ்வ்வ்வ்வ்
          
        காலை மதியம் என இரெண்டு வேளை வரும் போதும் போகும் போதும் ஒரு லுக்.....அடுத்த நாள்  ஊருக்கு ஒரு டிக்கெட் அங்கேயே போட்டேன் . ஒரு பிளேட் கேசரி கிடைத்தது.  கூச்சப்படாமல்  இன்னொரு பிளேட் வாங்கினேன் . திரும்பவும் அந்த பக்கம் வரும்போதும் போகும் போதும் ஒரு லுக் , ஒரு ஸ்மைல் ....
        நாலாவது நாள் கடை திறக்கல...ஒரு வேளை கேசரி  தீர்ந்திருக்குமோ..???... அதுக்கடுத்த நாள்..நோ  ஓபன் ...அந்த வாரம் முழுக்க திறக்கல...... வேலை பிசியில்  பிறகு நான் கவனிக்கல அதுக்கும் அடுத்த வாரம்  பார்த்தால்  வேறு ஒரு பார்ட்டி அங்கே வந்து சலூனுக்கு உள்ள  டெக்ரேஷன் ஆரம்பிச்சாங்க . கடை காலி ....அவ்வ்வ்வ்வ்வ்வ் .
ஹி...ஹி....  எங்கே பிடிங்க பார்க்கலாம்
       
      நடுவில் ஃபிரியாக ஐஞ்சு நாள் லீவு கிடைக்க ..இங்கே இருந்து வெட்டியா பொழுதை போக்குவதை விட ((  உள்ள வேலையிலும் அதைதான் செஞ்சிகிட்டு இருக்கோங்கிறது வேற விஷயம்   ஹி..ஹி....  )) ஊருக்கே  போகலாம் ஆனால் ஃபிளைட் டைமிங்கை  மாற்ற வேற ஒரு டிராவல்ஸுக்கு போகும் போதுதான் தெரிஞ்சுது . யாருமே  மாற்றி தரமாட்டாங்கங்கிர விஷயம் ..
        நிறைய டிராவல்ஸுல  ஃபிளைட் ஸீட் காலி இருக்கான்னு கூட சொல்ல மாட்டேங்கிறானுங்க படுபாவி பசங்க ((ஒய் திஸ் கொலவெறியோ )) ..கடைசியில் ஒரு ஆள் கேட்டது நாளை மறு நாள் ஒரு சீட் இருக்கு .ஐ வில் சேஞ்ஜ்  ஆனா 600 Dhs   அதிகம் வேனுமின்னு . நான் போனாப்போகுது 400 Dhs வரை தர ரெடி .ஆனா பயபுள்ள ஒரு நயா பைசா குறைக்க தயாரில்ல . கடைசியில் ஒரு ஹைதராபாத பெண் DNATA வில் எதுக்கும் டிரை செய்யுங்கன்னு ஒரு அட்வைஸ்....!! . மற்ற ஷாப்கள் இரவு 11, 12 மணி வரை திறந்திருக்க    ஆனால் கொடுமை இரவு 8 மணி ஆனாலே  டிராவல்ஸை பூட்டிகிட்டு போயிடுறாங்க .
ஆ...இ....ஊ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

       அடுத்த நாள் DNATAவில் போய் பார்க்க நம்ம நாட்டு ஏரியாவில் ஒரு மலையாளி பெண் .ஒன்னும் பேசாமல்  டிக்கெட்டை நீட்டினேன். டேட் சேஞ்ச்  வேனும் . பெயரை பார்த்ததும் ஒரு புன்(ண்)சிரிப்புடன் நீங்க பிலாக் எல்லாம் எழுதுவீங்களான்னு ஒரு கேள்வி . நான் தலையாட்டி வைத்ததும். ((  அவங்க பிலாகர் இல்ல ஆனா ஒன்லி ரீடர் )). ஏக கலகலப்பு , சிரிப்பு ......ரசிகையாம் .((அடங்கொப்புறானே....)). ஸ்டேண்டிங்கில போனாலும் பரவாயில்லை .எப்படியாவது ஒரு சீட் கன்ஃபார்ம் செய்து கேட்டேன் . இன்னைக்கே போரீங்களான்னு ஒரு நக்கல. 
நவ் வீ ஆர் ஃபிரென்ஸூஊஊஊஊஊ

      பெட்டி எல்லாம் ரெடி இப்பவே ஏர்போர்ட் போகசொன்னாலும்  ஓக்கேன்னேன்..பயபுள்ள அப்பவே ஈவினிங் 8 மணி ஃபிளைட்டு 5 மணிக்கு துபாய் ஏற்போர்டில்  இருங்கன்னு கன்ஃபோர்ம் செய்து குடுத்தாங்க. சர்வீஸ் சார்ஜ் ஒரு ரூபாய் கூட வாங்கல .பிலாக் ஒரு பொழுது போக்குன்னு நினைச்சுகிட்டு இருக்கும் போது இப்படி ஒரு ரெஸ்பான்ஸான்னு இனி ஒழுங்கா எழுதுறேன்னு சொன்னேன் . அதெல்லாம் வேனாம் உங்க வழியிலேயே  போங்க மாறவேனாமுன்னு ஒரு அட்வைஸ் .தொடர்ந்து எழுதும் படி ஒரு வேண்டுதல்
      ஏன்னு கேட்டதுக்கு பிலாக் எப்பவுமே  ரத்தகளரியாதான் இருக்கு .ஃபிரியா யாரும் எழுதுறதில்ல. அதனால நான் ஒரு சில பிளாக்தான் போவேன்னு சொன்னாங்க .முதல் தடவை சந்திப்பாக இருப்பதால் பக்கத்து கேண்டினில் கேசரி ஆர்டர் செய்தாங்க . இருக்கிற இடத்தை மறந்து  கத்திவிட்டேன்  திரும்பவும் கேசரியாஆஆஆஆஆஆஆஆ      

Saturday, January 7, 2012

விழிப்புணர்வு ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

67 என்ன சொல்றாங்ன்னா ...
           
             கால நேரங்களை படைத்தது  இறைவன் செயல்தான். அந்த நேரங்களில்  நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைச்சா நல்ல நேரம். ஏதாவது  பிடிக்காத விஷயம் நடந்தா கெட்டநேரமா  நினைச்சுக்கிரோம். ஆனா சில நேரம் நாம வாய திறந்து சொல்லி அது மாதிரியே ஏதாவது நடந்திட்டால்  அவ்வளவுதான் . ஒரு பக்கம் நமக்கு நல்லபேர் கிடைக்கும்  அடுத்த பக்கமோ  கெட்டபேர்தான் .
        
    இந்த வகையில பிளாக் வாழ்க்கையில விழிப்புணர்வு  பதிவு அவசியமாங்கிற கேள்வி மனசுல ஓடிகிட்டு இருக்கு . பல சமயம்   மொக்கையா ஓட்டுறது பெட்டரோன்னும் தோனுது . நியூட்டனின் எதிர்வினை கொள்கைதான் காரணம் ஹா..ஹா..
    பொதுவா எல்லாருடைய வீடுகளிலும்  கிச்சனில்தான் ஃப்ரிட்ஜ்   இருக்கும் . காரணம் ஏதாவது அவசரத்துல எடுக்க வசதியான இடம் கிச்சன்தான். ஆனா மாத்தி யோசிக்கும்  போது  ரொம்பவும் டேஞ்சரா  தெரிஞ்சுது. இதை ஒரு அரபி வீட்டில  சொன்னேன் . அந்த ஃபிரிஜ்ஜில ஒரு ஒட்டகத்தையே  உள்ளே நுழைக்கலாம்  அவ்வளவு பெரிசு .
    ஆனா அவர் கண்டுக்கல..இத்தனை  வருஷமா இருக்கு , தான் பார்த்த வரை பல பேர் வீட்டில இப்பிடிதானே  இருக்கு எந்த பிராப்ளமும் இல்லையேன்னு அவர் கவலை படல. நான் சொல்லிய நாலாம் நாள்  காலையிலேயே என்னைய தேடி வந்துட்டார்  .காரணம் ஃபயர் ...  கிச்சன் , அதை ஒட்டிய இரெண்டு ரூம் ,ஒரு பாத்ரூம் , ஃபிலிபைனி ரெஸ்ட் ரூம் எல்லாமே  காலி ..  இது நடந்தது எல்லாம் அரைமணி நேரத்துக்குள்ளேயே  ....அந்த இடத்தில் பிலிபைனி 2 பேர் மட்டுமே இருந்ததால்  எஸ்கேப்...இது நடந்தது அதிகாலை  3 மணி போல 

     விஷயம்  இதுதான் அவர்கள் வீட்டில இருந்த குழந்தைகள் கேஸ் பர்னரை லேசாக திருகி விட்டிருக்கு இரவின் கடைசி நேரமா இருந்ததால  யாரும் கவனிக்கல..  லேசா  லீகேஜ்  ஆன கேஸ் கிச்சன் பூரா ஆகிருக்கு. எந்த லைட்டும் , எக்ஸாஸ்ட் ஃபேனும் ஓடல..  தற்போது குளிர் காலமா இங்கே  இருப்பதால   லேட்டா ஆட்டோமேடிகா ஃபிரிட்ஜின் கம்ப்ரசர் ஆன் ஆனதால அதோட ஸ்விட்ஜில எழுந்த லேசான தீப்பொறி (ஸ்பார்க்)  ஒட்டு மொத்த ஃபயரா மாறிட்டுது .
    ஏற்கனவே  அறை முழுக்க கேஸ் பரவி இருந்ததால ஆயில் பெயிண்டிங் சுவர் வரை தொடர்ந்து எரிந்து விட்டது .ஃபிலிபைனி  பெண் அலறி அடித்து எழும்பி அரபியை எழுப்பி வருவதுக்குள் உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் எரிந்து விட்டது .சுவர் வரை கிரேக் ஆகிட்டுது
    மொத்த வீடும் கரெண்ட் இல்லாமல் இருக்க டெம்ரவரியா அந்த ஏரியாவை மட்டும்  விட்டு விட்டு மற்றதை ஆன் செய்து குடுத்தேன் .அரபி  :   நீ சொன்னதால என் வீடு எரிஞ்சுதா ..???  என் வீடு எரியப்போவது  உனக்கு தெரியுமா..??? 
நான் :  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

டிஸ்கி : இதால வரும் நீதி நமக்கு தெரிஞ்சாலும் வாயை திறக்கக்கூடாது .

Monday, January 2, 2012

2012 +++++ 100

56 என்ன சொல்றாங்ன்னா ...

             ஒரு காலத்துல  பத்திரிகைகளுக்கு  கார்டில எழுதிப்போட்டா அது அச்சில வர குறைந்தது (அப்படியே வந்தா) 2 மாசமாவது ஆகும் . இப்போது கூகிள் குடுத்த வரத்தால சில நிமிடங்களில்  நம்மால பதிவிட முடிகிறது .பதிலிடவும் முடிகிறது .

           சமைத்தாலோ  இல்லை  கடையில் போய் வாங்கினாலோ  மட்டும்தான் சாப்பிடவே  முடியும் .அதை விட்டுவிட்டு  சாப்பாடோ  இல்லை நீரோ தானே  வாய்க்கு வந்தால் போதும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதுப்போலதான் எல்லோரையுமே  தன்னைமாதிரியே (ஙே) அறிவாளியா  நினைப்பதும் .
            ஒருவருக்கு சமையல் மட்டுமே  வரும் .அவரைப்போய் கவிதை எழுத சொல்ல முடியுமா..?. ஒரு ஓவியரைப்போய்  புனைவு எழுத வைக்க முடியுமா..? .யாருக்கு எது வருமோ அவரால் அது மட்டும்தான் முடியும் . நமக்கு பிடித்திருந்தால் நேரம் இருந்தால் மறுமொழி இடலாம் . பதிவுலகில் ரீடரில் மட்டுமே  எத்தனையோ  பேர்  படித்துவிட்டு போய்விடுவார்கள். அவர்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் :-) .


            திரட்டிகள்  என்பது வெறும் ஓட்டை மட்டுமே முதல் காரணியாக வைத்து  செயல்படுபவை . அதில் குறுக்கு வழியில் எப்படி முதலில் வருவது என்பதும் பல பதிவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதில் முதலிடம் பிடித்து அதில் ஒரு முட்டையை கூட வாங்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை .
         சிலருக்கு எப்படியாவது ஹிட்ஸ் வாங்கனுமின்னு  மதம் ,மொழி , இணங்களை போற போக்கில தெரிந்தும்  தெரியாத மாதிரி கிள்ளிவிட்டுட்டும் போறதுண்டு . அதுக்காக நாமளும் வரிந்துகட்டிகிட்டு  போவது சரியில்லை. என்னதான் ஃபில்டர் காப்பி போட்டாலும் சில நேரம் டம்ளரில் காஃபி டஸ்ட்  இறங்கிடும் அதுக்காக காஃபி குடிக்காமலா போயிடுறோம் இல்லையே...கடைசியில டம்ளரில்  கொஞ்சம் வச்சிட்டுதானே  போரோம் .அது மாதிரி இதுகளை சிலநேரம் கண்டுக்காம போயிட்டே இருக்கனும் .
              இதுவுமில்லாம நா எப்படியாவது இருப்பேன். ஊருக்கு மட்டுமே  உபதேசம் என்பது மாதிரி பசுத்தோல் போர்த்திய புலிகளும்  பதிவுலகை எப்போதும் காரசாரமாக வைத்திருக்காமல் கொஞ்சம் அமைதியாக கலகலப்பாக வைத்திருப்பது நல்லதுதானே..!! .
            சிலருக்கு பதிவை காபி பேஸ்ட் செய்வது ரொம்ப பிடிச்ச மேட்டர் . ஏன்னு கேட்டா அவங்களுக்கு இது எப்படி தெரியுன்னு நினைச்சி (அது வேற பாஷையில இருந்தாலும் ) அப்படியே வாமிட் செய்வது .அடப்பாவிங்களா...
     உலகத்திலே மூலையில  எங்கேயோ  நடந்த சின்ன விஷயத்தை  ஊதி பெருசாக்கி ஆணாதிக்கம் , பெண்ணாதிக்கமுன்னு பரபரப்பாகவே செய்தி வெளியிடுவது (ஆனா யார் அது என்ன அதுன்னு கடைசிவரை சொல்லவே மாட்டாங்க )  என்ன கொடுமை ச...

படத்துல இருப்பது நீயான்னு யாரும் கேட்டுடாதீங்க மீ -க்கு 3 வயசுதான் ஆகுது ஹி..ஹி... 
               நமக்கு தெரியாததை தெரிந்துக்கொள்வதும் தெரிந்ததை மற்றவர்க்கு சொல்வதும்தான் நல்ல பதிவர்க்கு அழகு அது மொக்கையாக இருந்தாலும் கூட 
டிஸ்கி : நான் இப்பிடியெல்லாம் சொல்லுவேன்னு நம்பிட்டீங்களா.. ஹய்யோ...ஹய்யோ.....!!  புது வருடம் கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்வில் வரும் எல்லா நாளும் நல்ல நாளே. இனியும் வரும் நாட்கள்  நலமுடனும் வளமுடனும் வாழ நல்வாழ்த்துக்கள் many more happy   happy returns  of day  ((ஆனா ஒரு வயசு அதிகமா போய்டுமே..அவ்வ்வ்  ))

டிஸ்கி :  ஒரு வழியா மொக்கையா போட்டு இதை 100வது பதிவா ஆகிட்டேன் .இதில் உள்ள அனைத்து ஃபாலோயர்களும் ஒரே இடத்துல கூடுவதாக இருந்தால்  முட்டை வித் மட்டன் பிரியாணி என் செலவு . சைவ பிரியர்களுக்கு வெஜ் பிரியாணி . :-)

Friday, September 23, 2011

ஸ்பெஷல் ஜுஸ்

54 என்ன சொல்றாங்ன்னா ...

      பாக்கெட்டுகளில்  அடைக்கப்பட்டு வரும் ஜுஸ்கள் விலைக்குறைவாக இருக்கும் மர்மம் பற்றி பலதடவை யோசித்திருக்கிறேன் . அதே  பழங்களை ஃபிரெஷாக  வாங்கும் போது விலை அதிகம் . என்னதான் மொத்தமாக வாங்கினாலும் . தயாரிப்பு செலவு  அடக்க விலை , தொழிலாளர்கள் , மிஷனரிகள் , டிரான்ஸ் போர்ட் இப்ப்டி பல விஷயங்கள் இருக்கே..!!
     ஒரு பழத்தை  ஜூஸாக செய்தால் அதிக பட்சம் இரெண்டு நாள் வரும். அதுக்கு மேல் அதுக்கு கேரண்டி கிடையாது. இது இல்லாமல்  இதை பாக்கெட் செய்யும் போது முழுக்க முழுக்க 100 சதம் ஜுஸ் மட்டுமே  வைக்க முடியாது .இதனால்தான் .சில கெமிக்கல் சேர்த்து விற்பனைக்கு வருகிறது.  ஒரு சில மில்லி க்கும் மிக க்குறைவாக சேர்ப்பதால் நமது உடம்புக்கு ஒன்னும் ஆகாது .இதுவே இந்த பொருட்களில் கலப்படம் செய்தால் நமது உடம்பு தாங்காது . அதிகளவு சர்க்கரையும் , சிலதில் போதை ஐட்டமும் சேர்ப்பதால்தான் நாமும் இதற்கு அடிமைப்பட்டு தொடர்ந்து வாங்குகிறோம் .
   
  உதாரனமாக சாதாரன லெமன் ஜுஸை  சில மணி நேரங்களுக்குள் உபயோகப்படுத்திட வேண்டும். இல்லா விட்டால் அதன் நிறம் கருப்பாக மாறி விடும் .இருக்கும் பாத்திரத்தையும் வீனாக்கிவிடும் .இதற்குதான் அதே நிறத்தை கொடுக்கும் சில கெமிக்ல்லை  சேர்த்தால் ஒரு வருடம் ஆனாலும் அப்படியே  இருக்கும் . ((ஆனா உங்கள்  உடம்புக்குதான் கேரண்டி இல்லை ஹி..ஹி.. )). 
    ஓகே திரும்பவும், முதல் வரியிலிருந்து ஆரம்பிக்கிறேன் .ஒரு சில தயாரிப்புகளில் உதாரணம் மாங்காய் .ஜுஸ் கட்டியாக இல்லாமல் தண்ணீர் அதிகம் சேர்த்து போல்  இருக்கும் .சிலதில் ஜுஸாகவே  இருக்கும் .அதுவும் மாம்பழம்தான் , இதுவும் மாம்பழம்தான் அப்புறம்  ஏன் இந்த இரெண்டு வகை  குவாலிட்டி. ஒன்றில் கெமிக்கல் எக்ஸ்ராக்ட்  அதிகம் இருக்கும் . மற்றொன்றில்  மாம்பழ ஒரிஜினல் ஜுஸாகவே இருக்குமுன்னு நினைச்சா நீங்க கண்டிப்பாக  ஏமாளிதான் .
      இரெண்டிலுமே  வாசனை க்குதான் மாம்பழம் இருக்கும் கலர் சேர்த்து இருப்பார்கள்.வருடம் முழுவதும் மாம்பழம் எங்கிருந்து வருமுன்னு யோசிக்கும் போது உண்மை புரியும் . எனது இத்தனை சந்தேகத்துடன்  ஒரு புகழ் பெற்ற கம்பெனிக்குள் உள்ளே நுழைந்தேன்.((  இதை அது மாதிரி கம்பெனி நிர்வாகிகள் படிச்சால் என்னை கம்பெனி உள்ளே  விடுவானுங்களான்னு தெரியல ..ஹி...ஹி.. )) .
     
  ஒரு பக்கம் வாழைப்பழம் , மாம்பழம் , கொய்யா இப்படி நிறைய ஐட்டங்கள் இருந்தது.. ஒவ்வொன்னா  பார்த்துகிட்டே போனேன் .  இதன் இன்னொரு ஸைடில  உருளை கிழங்குகள் டன் கணக்கில்  இருந்துச்சி .நான் இதை வித்தியாசமா பார்த்ததை கண்டு நைஸாக என்னை  வேறு பக்கம் கொண்டு போய்ட்டார் .இப்போதுதான் என்னோட ஒட்டு மொத்த சந்தேகமும் தீர்ந்தது அடப்பாவமே...!! வாழைப்பழம் கிலோ 3 ரூபாய்  ஆனா உருளை கிழங்கு ஒரு ரூபாய்தான் ,,,, வித்தியாசம் புரிந்தது.
    அப்படின்னா நாம மாம்பழமுன்னு நினைச்சு குடிப்பது முழுக்க மாம்பழஜுஸ் இல்லை. உருளை கிழங்கு ஜுஸ்தான், கொய்யா ஜுஸ் கிடையாது கொய்யா எஸன்ஸ்  கலந்த உருளை ஜுஸ்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் . உள்ளே நாலு வித (ஙே) ஜுஸ் குடுத்தாங்க ..குடித்துகிட்டே வந்தேன் . உருளை சேர்ப்பதால் பழசாறுக்கு அடர்த்தி அதிகம் கிடைக்கிறது செலவும் இல்லை .உடலை குறைக்க விரும்புபவர்கள் இதை குடிச்சால் உடல் குறையாது மாறாக கூடவே செய்யும் ஏன்னா  உருளையில் கார்போ ஹைட்டேட் மிக அதிகம். சர்க்கரை வியாதி உள்ளவங்க இதை அதிகம் சாப்பிடக்கூடாது . ஆனா இதை வெளியில சொல்லாம ரொம்பவும் ஈஸியா ஏமாத்திடறாங்க .யாருக்கும் தெரியாது .கவர்ச்சிகரமா யாரையாவது வைத்து விளம்பரம் செய்தால் அக்கா மாலா, கப்சி  மாதிரி எது குடுத்தாலும் நமது மக்கள்  வாங்கி குடிப்பாங்க .விளம்பரம்தானே முக்கியம் .

     வெளியில்  எதையும் வாங்கி குடிக்க வேண்டாம் .முடிந்த வரை பழங்களாக வாங்கி வீட்டிலேயே பழச்சாறு செய்யுங்கள். வெளியே நீண்ட தூரம் போக நேர்ந்தால் ஒரு பாட்டிலில் கொண்டுப்போங்கள். முடிந்த வரை சொந்தமாக கொண்டு போவதால் போலியிலிருந்து தப்ப முடியும் .எந்த வித கெமிக்கல் சேர்க்காத ஒரிஜினல் ஜுஸ் குடித்த திருப்தியும் உங்களுக்கு கிடைக்கும் இனி அடுத்த தடவை யாராவது பாட்டிலில்  மாம்பழம் அது பெயர்......ன்னு சொன்னால் சொன்னவங்க  முகத்துல சுடு தண்ணீயை ஊத்திடுவேன்னு சொல்லுங்க ஹி..ஹி...

Sunday, September 11, 2011

நம்பிக்கை ..???

78 என்ன சொல்றாங்ன்னா ...

டிஸ்கி :- ஜோசியத்தை  நம்பாதவங்களுக்கு  இந்த பதிவு இல்லை
    கடிகாரம் கண்டுப்பிடிக்காத  காலங்களில் சூரிய , சந்திரனின் நிலையை வைத்து பருவகாலங்களை கணக்கிட்டான், அதை வைத்தே  விவசாயம்  நடந்தது. மழைக்காலங்களில் வேலை இல்லாத போது இருக்கும் அறிவை பயன் படுத்தி  சேமிப்பை வளர்த்தான். ஜோதிடம் என்பது இவர்களை பொறுத்த வரை வான சாஸ்திரம், அறிவியல் .ஜோதிடம் ஆரம்பிச்சது அதிகமில்லை சுமார்  கிமு 1200 லிருந்து கி மு 400 வரை தான்னு வாக்கிய பஞ்சாங்கம் சொல்லுது . இதுக்கு பிறகு வந்தது எண் கணிதம் ஏன்னு கேட்டா அப்போ டெலஸ்க்கோப் கண்டுப்பிடிக்க படல அதனால துல்லியமா எதுவும் சொல்வதுக்கில்லையாம் .
    இதை இன்னும் நல்லா படிக்க உள்ளே போனா ((குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுபவனுடைய நிலைதான்னு இன்னும் எத்தனை நாளைக்குதான் சொல்றது )) கிணற்று தவளை மாதிரி 7 கிரகம்+ 2 நிழல் கிரகம்  உள்ளேயேதான் சுற்றி சுற்றி வரனும். நமது கேலக்சியில(பால் வீதி மண்டலம் ) லட்சக்கணக்குல  சூரியனும் சந்திரனும் , நட்சத்திரங்களும் கண்டுபிடிச்சு அதுக்கு பேர் வைச்சு கட்டு படியாகாததால, அதுக்கு நெம்பர் போட்டு வச்சிருக்கான் இப்போதுள்ள மனுஷன் .ஆனால் அங்கே ..?
    அந்த கிரகத்துக்கும் நம்ம மனுஷ உடலுக்கும் என்ன சம்பந்தமுன்னு கேட்டா உடனே பதில் வருவது சூரியனிடமிருந்து நமக்கு ஒளி வருது , அது இல்லாம உயிர் வாழ முடியாது , சந்திரன் சுழற்சியால அமாவாசை , பவுர்ணமி அன்னைக்கி அலை அதிகம் இருக்கும் . இதை தவிர வேறு லாஜிக் பதில் வரவே வராது . ((இதை பத்தி சொல்லப் போனா பெரிய தொடரா போயிடுங்கிறதால  இதோடு நிறுத்திக்கிறேன் )).
    ஒரு வேளை கடிகாரமே கண்டுப்பிடிகாத காலத்தில் மழை எந்த மாசத்துல பெய்யும் , காற்று எந்த திசையில் அடிக்குமுன்னு எழுதி வச்சதுக்கு இது தேவைப்படலாம். ஆனா அதுபடியா நடக்குது.?  மனித உடலுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை .அப்புறம் அதனால் தோஷம் எப்படி வரும் ((ஹய்யோ  ஒரு வழியா பாயிண்டுக்கு வந்துட்டேன் )) மனிதனை படைத்த அந்த இறைவன், உடலில் எங்காவது ஒரு குறை வைத்தானா .? இல்லையே .இந்த உடம்பும் இவனுடைய ஆணைக்கு எதிர்பார்க்காமல், இரவு பகல் பாராமல் உழைக்குதே..!!  அப்படி இருக்கும் போது, இவன் வேலை எதுவும் செய்யாமல், சோம்பேறியா இருப்பதுக்கு, ராகு காலம் எமகண்டம்ன்னு,  தானே ஒரு பட்டம் குடுத்து வச்சிருக்கான் . எதிராளி சீக்கிரமே முன்னுக்கு வரவிடாமல் செய்வதுக்கு  என்ன வழின்னு யோசிச்சதுல கிடைச்சது செவ்வாய் தோஷம் , நாக தோஷம் , உச்சத்துல சனி இதெல்லாம் .
       எனக்கு தெரிஞ்ச ஒருவர் சுமார் 10 வருச காலமா பெண் கிடைக்காமல் அவதிப்படுகிறார். இந்த தோஷம் உள்ளதால லேட்டாகிட்டே  போதுன்னு ஒரே புலம்பல் . இவ்வளவுக்கும் அவர்  குடும்பம் படிக்காத குடும்பம் இல்லை . அறிவு ஜீவிகள்தான் . ஆனா வேலைக்காகல . நானும் எவ்வளவோ சொல்லியும் சரி வரல. எறும்பு ஊர கல்லும் தேயும் ஒரு நாள், தேய்ந்தது  ஆனால் காலம் போனதே..நான் சொன்னது இதுதான்.
    எத்தனையோ தெய்வங்களை வணங்குகிறீர்கள்  ஓக்கே , இதுவும் போதாமல் கூடவே ஒரு குல தெய்வம் .அதுக்கூடவா உங்களுக்கு நல்லது செய்யாது. அதன் மீதுமா நம்பிக்கை இல்லை .இப்படி எல்லா தெய்வங்களை விடவா உங்களுக்கு இந்த ஜோதிடம் பெரியதாக போய் விட்டது .
    உடம்பில் ஓடும் இரத்தம் எப்போதாவது இது நல்ல நேரம் இல்லை நான் ஓடமாட்டேன்  என்று சொன்னதா..? கிட்னி எப்போதாவது தன்னுடைய நேர காலத்தை மாற்றி இருக்கா ..? நாம் உறங்கினாலும் சுவாசமும் , இதயமும்  உறக்கம் இல்லாமல்  வேலை செய்யுதே  .எப்போதாவது அது ராகு காலம் எமகண்டம் பார்த்து இருக்கா..?
  மேலே சொன்னது நம்முடைய கன்ட்ரோல் இல்லை ஓக்கே . இந்த நேரங்களில்  நீங்க சாப்பிடாமல் , குடிக்காமல் இருந்து இருக்கீங்களா..? அட்லீஸ்ட் யூரின், டாய்லட்  போகாமல்..? ஒரு வேளை பயணத்தில் இருந்தால் ஓடிக்கிட்டு இருக்கும் வாகனத்தை விட்டு இறங்கி அங்கேயே நிற்பீங்களா..? ஏற்போர்ட்டில், பஸ் ஸ்டாண்டுகளில் , ரயில்வே ஸ்டேஷன்களில் அந்த நேரங்களில் எதுவும் இயங்காதுன்னு சொன்னால் நீங்கள் அங்கேயே அமைதியா இருப்பீங்களா..?
   இறைவன் படைத்த படைப்பில் எதுவும் கெட்ட நேரமோ , அதில் குறையோ இல்லை .நாம் பார்க்கும் பார்வையில்தான் எல்லாமே இருக்கு . காமாலை கண்டவனுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் இருக்கும் .பூனை குறுக்கே  போனால் அதுக்குதான் நேரம் சரியில்லை  வண்டி சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது. ((உண்மை காரணம் அது ஓடி விட்டதாக  நினைத்து பயந்து அங்கேயே சிறிது நின்று விடுகிறது , நமது கவனமும் சிதறி, அதன் மேலே வண்டியை ஏற்றி விடுகிறோம் )).
   உங்கள் ஜாதகத்தை (ஙே )  இன்னும் பத்து பேரிடமும் காட்டுங்கள்,  .அந்த பத்து பேரும்  பத்து விதமாதான் சொல்லுவார்கள். அந்த பத்தும் தலை சுற்றும் விதமாதான் சொல்லுவார்கள் . ரோலக்ஸ் வாட்ச், டயோட்டா காரில் போய் கேளுங்கள் அது ஒரு விதமாகவும் , பழைய சட்டை, வாடகை சைக்கிளில் போய் கேளுங்கள் அப்போது ஒரு விதமான பலனும் சொல்வார்கள் . கொடுக்கும் பணத்துக்கேற்ப பலன் கிடைக்கும் .
    இருக்கும் இந்த ஒரே ஒரு வாழ்கையில் வாலிபம் போனால். எத்தனை கொட்டிக்கொடுத்தாலும் அது திரும்ப வரப்போவதில்லை . இதை எல்லாம் நினைத்து பின்னால் அழுவதுக்கு பதில் இப்போதே ஒருமுடிவுக்கு வாங்கன்னு சொன்னேன் .நான் இத்தனை சொல்லிய பிறகு இப்போது ஒரு வழியா மனம் திருந்தி மணம் செய்யப்போகிறார். அவருக்கு என வாழ்த்துக்கள் .
  -இல்லை இதில் எனக்கு நம்பிக்கை இருக்குன்னு சொல்பவர்கள் உங்கள் ஜோதிடரிடம் கீழே உள்ள கேள்வியை கேளுங்கள். போட்டிக்கு வருபவர்கள்  கீழே கமெண்டில் தெரிவிக்கலாம் .அப்படி சரியாக சொன்னால்............ ..
என்னுடைய வரும் அடுத்த இரெண்டு வருட சம்பளம் மொத்தமாக தருகிறேன். அப்படி அவர் போட்டியில் தோற்றுவிட்டால், அவருக்கு அரேபிய படி ........தண்டனை (( அது எதுவா வேண்டுமானாலும் இருக்கும் ))   ரெடி ஸ்டாட் மியூசிக்  
 1  .அடுத்த இரெண்டு வருடம் கழித்து நான் இதே நாள் இதே நேரம் எங்கே இருப்பேன்..?
2  . நான் என்ன வேலையில் இருப்பேன். எனக்கு என்ன சம்பளம் கிடைக்கும் ...?
3.  அப்போது நான் என்ன கலர் டிரஸ் போட்டிருப்பேன் ..?.
4  .என் பக்கத்தில் யாரெல்லாம் இருப்பார்கள் .?.
5 .  தலையில் எத்தனை வெள்ளை முடி இருக்கும் ..? இல்லை இருக்காதா..?
 6 .  இதே நேரம் என்ன செய்து கிட்டு  இருப்பேன் .
    இறைவன் கொடுத்த சுய அறிவை கொண்டு மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள் .அடுத்த வேளை தான்  என்ன சாப்பிடப்போகிறோம் என்று சொல்ல முடியாதவர்களா நமது எதிர் காலத்தை சரியா சொல்ல முடியும் .

Wednesday, September 7, 2011

வாங்க பழகலாம் ...1

61 என்ன சொல்றாங்ன்னா ...

      எவ்வளவு நாளைக்குதான் இப்படி காதில ரத்தம் வரும் அளவுக்கு மொக்கையா பதிவு எழுதுவீங்க . மாறுதலுக்காக நானே பாராட்டுர மாதிரி ஒரு டெக்னிகல்  பதிவு எழுதுங்களேன்னு  கேட்டுக்கொண்ட இவருக்கு  இந்த பதிவை டெடிகேட் செய்கிறேன்.

(( யாருக்கோ நூடுல்ஸ் ரொம்பவும் பிடிக்குமுன்னு சொனாங்களே..!! ))

        மின்சார வீட்டு உபயோக பொருட்களில் பொதுவா இந்திய தயாரிப்புகளில் இல்லாத சிறப்பு ஜப்பான் , இத்தாலி  , சில ஃபிரான்ஸ் தயாரிப்புகளில்  இருக்கு .அது சில நேரங்களில்  நன்றாக இருந்தாலும் தவறாக நினைப்பதால் நிறையப்பேர் இதனை தெரிந்திருப்பார்களான்னு எனக்கு தெரியல .உதாரணம்  இஸ்திரி பெட்டி , எக்ஸாஸ்ட்  பேன் , எலக்டிரிக் இண்டக்‌ஷன்  அடுப்பு  , எலக்டிரிக் குக்கர் , வால் பேன் ((நல்லா கவனியுங்க சீலிங் பேன் இல்லை)) .
        இந்திய தயாரிப்புகளில் இது வைக்காததுக்கு காரணம் இது தான்  மிகச் சரியாக 220 , 240 ஓல்டேஜ் வருவதில்லை .இது சில நேரங்களில் வெறும் 80 லிருந்து 280 வரை கூட வரும் . அதுக்கு தகுந்த மாதிரி வைண்டிங்க காயில் உள்ளே இருக்கும் .  ஆனால் இங்கே வெளி நாட்டில (துபாய் ) மிகச்சரியாக ஓல்டேஜ் இருக்கும் .ஒரு சில மில்லி கூட,  கூட குறைய இருக்காது. அதை சரிகட்ட கெப்பாஸிட்டர் பேங்க் ஒன்னும் கூடவே இருக்கும் .
((  இது ஹீட்டர்ல இருக்கும் ))
      
    எங்காவது ஓல்டேஜ் குறைய ஆரம்பிச்சால் இந்த கெப்பாஸிட்டர் பேங்க் அதை சரி கட்டும் .நம்ம் ஊரில இந்த வசதி வர எனக்கு தெரிஞ்சி இன்னும் 100 வருஷம் ஆகுமுன்னு நினைக்கிறேன். ஓக்கே அந்த ஐட்டம் என்னன்னு இன்னும் சொல்லலையே  அதான் தெர்மல் ரெஸிஸ்டெர். இது நாம உபயோகிக்கும் எலக்டிரிக் பொருட்களுக்கு அதன் வாட்டேஜ் ( சாப்பிடும் அளவு ) க்கு தகுந்த மாதிரி அதன் ஆம்பியர்களில் ((சாப்பிடும் அளவு அதாவது பெருந்தீனி ))  வைத்திருப்பார்கள் .
     இது அதன் சூடு (ஹீட்) தேவையான அளவுக்கு மேல் போனால் உடனே இது எரிந்துப்போகும் . அதாவது மேலே நான் குறிப்பிட்ட உங்க எலக்டிரிக் சாமான்கள் வீனாகிப்போச்சுன்னு அர்த்தம் . அதை குப்பையில்தான் போடனும் . இதுதான் இது வரை நடந்து வரும் வழக்கம் . ரிப்பேர் செய்யும் அளவுக்கு  செய்யும் பணத்தில்  ஒன்று புதுசாவே வாங்கிடலாம் . ஆனால் உண்மையில் உங்கள் எலெக்டிரிக் பொருட்களில்  ஹீட்டரோ  , காயிலோ  கெட்டுப்போய் விடவில்லை. நம்பினால் நம்புங்கள் இந்த தெர்மல் ரெஸிஸ்டர்தான் எரிந்து போய் விட்டது.
     இந்த எரிந்த ரெஸிஸ்டரை நாம் பார்த்தால் புத்தம் புதுசாவே தெரியும் .ஆனால் மல்டி மீட்டரில் , கனெக்டிவிடி பார்த்தால் கனெக் ஷன் தெரியாது . இதை மட்டும் எடுத்து விட்டு திரும்ப அந்த வயர்களை இனைத்து டேப் செய்தால் போதும் .இன்னும் குறைந்தது இரெண்டு வருடமாவது  அது வேலை செய்யும் .அதுக்கு மேலே உங்க தலையெழுத்து எப்படியோ அப்படி உழைக்கும்  ஹி..ஹி..
(( இந்த மாடல் ஃபேனில் இருக்கும் ))

     சரி இதை எப்படி கண்டுப்பிடிப்பது . உங்கள் எலெக்டிரிக் குக்கர் , இண்டெக்‌ஷன் அடுப்பு , எலெக்டிரிக்  இஸ்திரி பெட்டி , பின் பக்க கதவை அதன் ஸ்குருவை கழட்டி விட்டு பார்த்தால் பின்னால் தெரியும் ஹீட்டர்  பிளேட்டில் ஒரு சின்ன உருளை ( உருளைகிழங்கு இல்லை மக்கா ))  சிலிண்டரில் அதனை வைத்து ஸ்குரு செய்திருப்பார்கள். அதிலிருந்து ஒரே கலரில் மெல்லிய வயரில் பார்க்கும் போதே தெரியும் . இதை பெண்கள் கூட செய்யலாம் .
           ஆனால் எக்ஸாஸ்ட் ஃபேனில் , வால் பேனில் ஹீட்டர் கிடையாது  அதுக்கு  பதிலாக சிங்கிள் காயில் இருக்கும் . அந்த காயில் இருக்கும் பின் பக்க டோரை கழற்றி விட்டு  பார்க்கும் போது அது தெரியாது .ஆனால் காயிலை சுற்றி மொத்தமான பேப்பர் , பேப்பரால் ஒட்டி இருப்பார்கள் . நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் .அந்த மொத்த பேப்பரை கவணமாக பிய்த்து வெளியே எடுக்கனும் .
         அதுக்குள்ளே போகும் இரெண்டு வயரிகளில் ஏதாவது ஒரு பக்கம் வயரில் இந்த தெர்மல் ரெஸிஸ்டரை இனைத்து இருப்பார்கள் . இங்கே உள்ள தெர்மல் ரெஸிஸ்டர் முன்பு பார்த்த அளவுக்கு இருக்காமல்  சின்னதா மஞ்சள் கலரில் இருக்கும் .((முன்பு சொன்ன  ஐட்டங்களில் வெள்ளை கலரில் இருக்கும் ))இங்கே வாட்டேஜ் அதிகம் இருக்காததால் அளவில் சின்னதா இருக்கும் . தெர்மல் ரெஸிஸ்டரை மெதுவாக கட் செய்து விட்டு வயரை நேரிடையாக சால்டரோ இல்லை அப்படியே ஜாயின் செய்து டேப் ஒட்டி விட்டால் போதும் . பிய்த்த மொத்த பேப்பரை திரும்ப ஒட்ட வேண்டிய அவசியம் கூட இருக்காது
      திரும்ப கழட்டிய ஸ்குருக்களை அதன் அதன் இடத்தில் மாட்டி ஓட விடுங்கள் இப்போது ஃபேன் இயங்க ஆரம்பிச்சுடும் . புதுசாக ஒன்னு வாங்க வேண்டியதில்லை .இந்த வேலையை செய்ய அதிக பட்சம் உங்களுக்கு அரை மனிநேரம் கூட ஆகாது .இதுக்காக வெளியே யாரையும் எதிர்பார்க்கவும் தேவை இருக்காது .பணமும்  மிச்சமாகும் J

  டிஸ்கி :-  உங்களையும்  ஒரு டெக்னிகல் ஆசாமியாக ஆக்கும் என்னுடைய சிறிய முயற்சி இது . தேவைப்படும் போது இன்னும் இதுப்போல டெக்னிக் பதிவுகள் இந்த பிளாகில்  தொடரும். அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை  விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி..