உன் ஒற்றை புன்னகையில் என் உள்ளம் கவர்ந்தாயே
உன் சுவாச மூச்சினிலே என் சுற்றம் மறந்தேனே
உன் பாச உணர்வுகளில் என் நாட்கள் நகர்ந்தடி
எனை பார்த்து போனரெல்லாம் பரிகாசம் செய்தாரே
உன் ஆசை அதிர்வலையில் நான் மூழ்கித்தான் போனேனே
செல்ல சினுங்கலில் தலை சுற்றி போனதடி
வீனே எனை தேடித்தான் பார்கின்றேன் .கனவினிலே
கிடைக்கிரதே எனை தவிர ஏன் ஆனேன் இப்படியானேன்
காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும்
மனம் கொண்ட மயக்கம் தடமாறலியே
உன் ஒற்றை முகமே என் மனதில் சொல்லுதே
உன் கண்ணில் நீர் வழிகிறதோ என் நினைவாலே
அந்த ஒவ்வொரு துளியாலும் என் இதயம் உருகுதே
பெண்: ஏனோ தெரியல சாரல் காற்றிலும் அனலாய் மாறுதே
அனலாய் மாறுதே தேகம் அலைபோல் ஆனதே
வீசும் பூவின் மனத்தில் புயலாய் போகுதே தலைவா
புயலாய் போகுதே வரும் காலமாவது வசந்தமாகாதோ.........
Saturday, August 28, 2010
இதுதான் காதலா--!!
வெளியீடு ஜெய்லானி at Saturday, August 28, 2010 Labels: கவுஜ..கவுஜ.. 115 என்ன சொல்றாங்ன்னா ...Friday, August 20, 2010
ரிங் டோனா இல்லை என் டோனா
வெளியீடு ஜெய்லானி at Friday, August 20, 2010 Labels: அனுபவம், சிந்தனை 139 என்ன சொல்றாங்ன்னா ... போன பதிவுல வந்த அனுபவம் என் ஃபிரண்டு ஒருவனுக்கு வந்தது .முடிவு மட்டும் என்னுடையது . இதில வருவது நானே பல்ப் வாங்கிய மெகா அனுபவம்தான் . நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனை ( டியூட்டி டைமில் ) கிண்டல் கேலி கும்மியதின் விளைவு அன்னைக்கு அவஸ்தை பட வேண்டியதாகி விட்டது . அவனும் நல்ல பிள்ளையா எதுவுமே வாய திறக்கல
ஒரு நல்ல ரிங்டோன் ( ராத்திரியில கேட்டா சின்ன பிள்ளங்ககூட தானா உச்சா போய்டுவாங்க அவ்வளவு டெர்ரர் ) காப்பி பண்ண அவனுடைய மெமரி கார்ட கழட்டி என்னுடைய மொபைலில் போட்டு காப்பி செஞ்சேன் . அது வரை நல்லாதான் போச்சு. இது நடந்தது காலை 7 மணி இருக்கும்
![]() |
எலியார் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் |
எப்படியும் கால் மணிக்கு ஒரு தடவையாவது நம்மளை கூப்பிட்டு கழுத்தறுக்கும் யாரும் அன்னைக்கு 9 மணி வரைக்கும் கூப்பிடலை .பயபுள்ளைங்க திருந்திட்டானுங்க போலன்னு நினைச்சு போனை எடுத்து பார்த்தா நா போனை ஆன் பண்ணவே இல்லை . சரின்னு ஆன் பண்ணி வச்ச உடனே ரிங் தங்கமணி கிட்டேயிருந்து இது எப்பத்திலோந்து போனை ஆஃப் பண்ணி வைக்கும் பழக்கமுன்னு , பேசிக்கிட்டு இருக்கும் போதே ஆட்டோமாடிக்கா ஆஃபாகி ரீஸ்டார்ட் ஆனது . சரி பேட்டரிதான் சரியா இன்னைக்கு சார்ஜ் ஆகலையோன்னு பார்த்தா சரியாதான் இருந்துச்சி. உடனே தங்ஸ் கிட்டேயிருந்து திரும்ப ரிங் வந்துச்சு அதென்ன பேசிகிட்டேயிருக்கும் போது புது பழக்கம் லைன கட்பன்..ற..து......திரும்பவும் ரீஸ்டார்ட்..
இப்பிடியே ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை வந்ததால என்ன செய்வதுன்னு தெரியல டென்ஷனுக்கு மேல டென்ஷன் . மேனேஜரையே சமாளிச்சுடலாம் தங்ஸ சமாளிக்க முடியுமா .?. ஒரு வழியா அதுக்கு பரிகாரம் என்னன்னு பார்த்ததுல புளுடுத்-ஐ ஆன் பண்ணி வைத்தால் ரிஸ்டார்ட் ஆகல . தப்பிச்சேன்னு ரிலாக்ஸ் ஆனேன் .ஆனா இந்த நிம்மதி அரை மணிநேரம் கூட நீடிக்கல. பக்கத்துல யார் புளு டூத் ஆன்ல இருக்கோ அவங்களுக்கு மெசேஜ் அனுப்ப வான்னு உடனே என் ஸ்கிரீனில் வரும் .
![]() |
நா சொல்றதை நல்ல பிள்ளையா கேக்கோனும் |
இதுப் போல அவங்க ஸ்கிரீனினும் ரிசீவ் பண்ணவான்னு கேக்கும் . பயந்துகிட்டு யூசர் பேர மாத்தி வச்சேன் .இல்லாட்டி இவனுககிட்ட மாட்டிகிட்டு யார் தர்ம அடி வாங்குறது . அப்ப தான் புரிஞ்சுது இது வைரஸின் வேலைன்னு . டியூட்டி டைமும் முடிஞ்சி ப்போச்சி சரி மீதியை நாளைக்கு டியூட்டி டைமிலேயே பாத்துக்கலாம் இப்ப சொந்த நேரத்துல நம்ம சொந்த வேலைய பார்த்தா பாவமுன்னு நினைச்சிகிட்டு மதியம் நல்லா சாப்பிட்டுட்டு தூங்க ஆரம்பிச்சேன்
சரியா அரை மணிநேரத்துல போன் தூக்க கலக்கத்தில பாதி கண்ணை திறந்து பார்த்தா புது நெம்பர் ஒரு பங்ளாதேஷி. ”பொந்து பாய் தும் முஜே மிஸ் கால் கியா “ ( சகோ நீ எனக்கு மிஸ்ட் கால் செஞ்சியான்னு அர்த்தம் ) ..நான் “இல்லையே “ “ அப்ப இது உன் நெம்பர்தானே “ ஆமா இது என் நெம்பர்தான் “ ”என்னது இது சின்ன புள்ளதனமா”ன்னு கேக்க நா உடனே சமாளிச்சிகிட்டு சாரி ராங் நம்பரா போயிடுச்சி போலன்னு சொல்லி வச்சிட்டேன்.
![]() |
ஏன் என்னை பாக்க மாட்டீங்களா நானும் பேபிதான். |
இப்பிடி மதியம் முழுக்க என் தூக்கம் போனதுதான் மிச்சம் .அதுவா யாருக்காவது லிஸ்டில இல்லாத புது நெம்பருக்கு மிஸ்ட் கால் குடுக்கும் , லோக்கலாவது பரவாயில்லை .ஒரு ஆள் ஓமானிலிருந்து போன் பண்ணி திட்டினான் . இப்பிடியே ஒரு பஞ்சாபி பொண்னு ( அதுக்கு என்ன கஷ்டமோ ) , கடைசியா அரபி பொண்ணு ( 20 வயசாவது இருக்கும் , எப்படி வயசு தெரியுமுன்னு குறுக்கு கேள்வி யாரும் கேக்க பிடாது ) திட்டிய போதுதான் மண்டையில உறைச்சது. ஆஹா இது போலீஸ் கேசா போயுடுமோன்னு . முதல் வேலையா பேட்டரி , சிம் வரை தனியா கழட்டி வச்சிட்டேன்
ஒரு நாள போன் இல்லாட்டி எவ்வளவு கஷ்டம் .எவ்வளவு லாபமுன்னு எனக்கு அன்னைக்குதான் தெரிஞ்சுது . கஷ்டம் நமக்கு வேலை ஆகாது . லாபம் ஒரு பயபுள்ள போன் பண்ணி திட்டமாட்டான் .
மறு நாள் டியூட்டி நேரத்துல கடையில கொண்டு போய் கார்ட் , போன் எல்லாத்தையும் ரீ ஃபேர்மேட் செஞ்சதால 100 திர்ஹமோட தப்பியது . ஒரு தடவை சொந்த கம்ப்யூட்டரில இந்த வேலைய செஞ்சி நான் பட்ட அவஸ்தை ஒரு மெகா தொடரே போடலாம் . அதிலிருந்து யாரிடமும் எதுவும் போன் வழியா வாங்குவதுமில்லை கொடுப்பதுவுமில்லை.
![]() |
பயபுள்ள இங்கேதானே இருந்தான் , ஜஸ்ட் மிஸ்ட் |
இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி..
Saturday, August 14, 2010
செல் ஃபோன் கிளீனிங்
வெளியீடு ஜெய்லானி at Saturday, August 14, 2010 Labels: அனுபவம், சிந்தனை, மாத்தி யோசி 128 என்ன சொல்றாங்ன்னா ... மனுசனுக்கு வாயில பல் இருக்கோ இல்லையோ கையில மொபைல் போன் இல்லாத ஆளே இல்லைன்னு சொல்ற அளவுக்கு போன் இப்ப எல்லாருகிட்டயும் இருக்கு.. பல் போனா சொல்போச்சி .பழமொழி இப்ப செல் போனா எல்லாம் போச்சிங்கிற அளவுல இருக்கு.
ஒரு காலத்துல பேச மட்டுமே இருந்த போனில் இப்ப மனுச தேவைக்குள்ள மீடியா ,நெட் வரை வந்துடுச்சி .அதுக்குள்ள தேவைக்கு அதிகமான அளவு மெமரியும் கூடவே வருது. இப்படி பட்டதை காப்பாத்த பெரும்பாடா இருக்கு. அதில ஒன்னு தண்ணீரில் விழுவது . .பெண்களுக்கு கிச்சனில வைக்கும் போதும் , சில சமயம் பேசிக்கிட்டே அப்படியே சம்பாரில் போட்டு விடுவதும் உண்டு ., ஆண்களுக்கு சாப்பிடும் போதும் இல்லை. பாத்ரூமில் , வேலை செய்யும் இடத்திலும் இப்பிடி ஆகி விடுகிறது.
என்னதான் புதிய போனாக இருந்தாலும் , கேரண்டி , வாரண்டி இருந்தாலும் தண்ணீரில் (லிக்யூட் ) விழுந்தது என்று சொன்னால் அதுக்கு தனியாக செலவு செய்யனும் . செலவு போகட்டும் .அதில் உள்ள மேட்டரும் இல்ல போயிடும். தண்ணீரில் உள்ள உப்பு போனில் உள்ள எலக்டிரானிக் போர்டை ஷார்ட் ஷர்க்யூட்டாக்கி விடும் .
அப்படி அதில லிக்யூட் உள்ளே போனால் ,இல்லை தண்ணீரில் விழுந்து விட்டால் உடனே எவ்வளவு சீக்கிரம் பின் பக்க கவரை திறக்க முடியுமோ திறந்து முதலில் பேட்டரியை கழட்டவும்.. பிறகு சிம் கார்ட் , மெமரி கார்டையும் கழட்டி ஒரு முறை மெதுவாக நல்ல துணியால் துடைக்கவும்
முழு கவரையும் கழட்டதெரிந்தால் கழட்டவும் , அப்படி தெரியாவிட்டால் நன்றாக உதறி அதிலுள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றுங்கள் .ஹேர் டிரையர் வீட்டில இருந்தால் அதனால்
குறைந்த அளவு சூடு காற்று வருமாறு வைத்து போனை அதன் அருகில் காட்டலாம் . கவனம் அதிக சூடு போனில் உள்ள சால்டரை உருக செய்து விடும்.
கடைசியாக ஸ்கிரின் கீழ் பக்கம் வருமாறு சூரிய ஒளி படும் இடத்தில வைத்து எடுத்தால் சரியாகி விடும் . ஸ்கிரின் மேல் பக்கம் இருக்குமாறு வைத்தால் நீராவி ஸ்டீம் ஸ்கிரினில் வந்து ஒட்டிக்கொண்டு ஸ்கிரீனை கெடுத்து விடும் .அப்புறமென்ன . மீண்டும் சிம்மை போட்டு ஆன செய்யவும் .அதுப்போல பேட்டரியை துடைத்து விட்டு போடவும் சரியாகிவிடும்..
சரி இதெல்லாம் , பொறுமையா , அழகா செய்ய கூடியவங்களுக்கு. டிப்ஸ் , ஆனா என்னை மாதிரி தடாலடியாக செய்ய கூடியவங்களுக்கு இது ஒத்து வராது .பேசாம கடையில குடுத்துட வேண்டியதுதான் . நா என்ன செஞ்சேன்னு கேக்கலைலையே.
அதிகமில்லை ஜெண்டில்மேன்ஸ்.அதை அப்படியே ஒரு துணியில் சுற்றி துணி துவைக்கும் மிஷினில் டிரையரில் போட்டு விட்டு போய் ஒரு காஃபி சாப்பிட்டு விட்டு வந்து பார்த்த போது எல்லாம் சரியாகி இருந்துச்சி 10 நிமிடத்தில் மேட்டர் ஓவர் .
இது மாதிரி எப்பவாவது நடந்தா டிரை பண்ணி பாருங்க .ஆனா ஒரு கண்டிஷன் அது உங்க சொந்த மொபைல் ஃப்போனா இருக்கனும் அம்புட்டுதான .
Saturday, August 7, 2010
ஜெய்லானி டீவியில்-சமையல்--1
வெளியீடு ஜெய்லானி at Saturday, August 07, 2010 Labels: தொடர் பதிவு, மாத்தி யோசி, மொக்கை டிவி 121 என்ன சொல்றாங்ன்னா ... கூவத்தை ஒட்டிய டவுன் ஹாலில் ஜெய்லானியை தேடி அப்துல் சவுண்ட் குடுத்துகிட்டே வர அங்கே ஒரு பாட்டுசத்தம் மெதுவா கேக்க அங்கே ஒரு கொசுவை பிடித்து வைத்து ஜெய் பாடி கொண்டிருக்கிறார்
கடித்தது யாரோ நீதானே
கடிவாங்கியது யாரோ அது நாந்தானேஏஏஏ
நீதானே எனை கடித்தாய்
நாந்தானே உனை அடித்தேன்
புரிந்தது ஏதோ கொஞ்சம் எனக்கூஊஊ
மூக்கில் ஒன்று கடித்ததம்மா ..
கடித்ததும் உடனே தடித்தம்மா
‘’ஸ்டாப்...ஸ்டாப்....................தல இதுனென்ன தனியா உட்காந்து புலம்புறீங்க ‘’
”வாய்யா நாட்டாமை வரவங்க எல்லாம் வந்துட்டாங்களா “
”ம் ஆனா அதுல ஒருத்தர் பெண் வேசத்துல வந்திருக்கார் முன்ன பின்ன பார்த்த மாதிரி இருக்கு”
”ஓய் ஒழுங்கா சொல்லுயா முன்னயா இல்ல பின்னாயா “
“ அய்யா சாமி ஆளை விடுங்க எனக்கு தெரியல “
”ம். இது நல்ல பிள்ளைக்கு அழகு வாய்யா போய் பார்க்கலாம் .இதை பார்த்தா ஷீட்டிங் எடுக்குற இடமாவா இருக்குது நா அப்பவே சொன்னேன் நல்ல இடமா பாருன்னு கேட்டாத்தானே“
எல்லாமே ரியலா இருக்கோனும் நம்ம ஜெய்லானி டீ வியில ஓக்கே .. ..கேமரா ரெடி........ஆக்ஷன்
”வணக்கம் ..இன்னைக்கி நாம் பார்க்க போவது ஜெய்லானி டீவியில சமையல் செய்வது எப்படின்னு சொல்ல வந்திருக்காங்க என்னவெல்லாம் செய்யபோறாங்கன்னு பார்க்கலாம் .உங்களை நீங்களே அறிமுகம் செஞ்சிக்கோங்க “ முதல்ல நீங்க சொல்லுங்க “ உங்க பேரு
”இத்தனை நாள பேபியா , பாட்டியா பழகிட்டு இப்ப போய் பேர கேட்டா கண் கலங்குது ரத்த கண்ணீரே வருது புஸ் பூஸ்ன்னு இதயம் அடிக்குது...” ”சரி,,சரி.. நா கேக்கல இப்பிடி சொல்லியே மனசை கரைச்சிடுறீங்க உங்க இடத்தில போய் நில்லுங்க “
”அடுத்தது நீங்க சொல்லுங்கமா “ ”மிஸ்டர் இது என்ன இத்தனை நாள் மாமின்னு அன்பா கூப்பிட்டுட்டு பகிடியா “
“” மாமி அது வேறஏஏஏ இது வேறஏஏஏ இது டீவீ புரோக்கிராம் சரி கண் கலங்காதீங்க பக்கத்தில டிஸ்யூ பண்டலே இருக்கு எடுத்துக்கோங்க..!! போய் அந்த டேபிள் பக்கத்துல இருங்கோ“
”சரி அடுத்து நீங்க சொல்லுங்க “ ஹலோ ஜெய் போன தடவை போட்டிய ஆரம்பிச்சதே நாந்தான் தெரியுமா..? நினைவு இருக்கட்டும் இல்லாட்டி கதை சொல்லியே உங்களை அழவச்சிடுவேன் ஜாக்கிரதை ..பீ கேர் ஃபுல் “
” வேண்டாம்மா வனி , சாரி கால வைக்க மரந்துட்டேன் . என்னைய விட்டுடுங்கோ .இல்லாட்டி என் கோட்டை வச்சு காமெடி பன்னிடுவீங்க . சரி இன்னைக்கு நாட்டாமை நீங்கதான் அப்படியே சைடுல நில்லுங்கோ.. “
நேயர்களே..!! இவங்க இன்னைக்கு சிறப்பு விருந்தினர் . எல்லாத்தையும் டேஸ்ட் பாத்து சொல்லப்போறாங்க .”” அடுத்தது நீங்க சொல்லுங்க “ என் பேர் என்னது ஆ மறந்து போச்சு நா ஸீரியசா திங்க் பன்னிகிட்டே இருக்கேன் ஆனா காமெடியா வந்துகிட்டே இருக்கு அதனால இன்னைக்கி வரைக்கும் நா எல் போர்ட் தான் ..”
ஓக்கே நீங்க அப்படிக்கா போய் நில்லுங்க “”
சார் ,அம்மா ஐயா வாங்க நீங்க யாரு “”அட தல என்னை தெரியலையா நாந்தான் எல் கே “” ஏன் தல என்னாச்சு ஏன் இந்த வேஷம் ’ போன புரோகிராமுக்கு வேஷம் போட்டது அதான் அப்படியே வந்துட்டேன் “ சரி போனாப் போகுது அப்படி அந்த கேபின் பக்கமா போய் இருங்க “ அடுத்தது நம்ம அப்பாவி தங்கமணி இப்பிடி சொன்னாதான் பிடிக்குமாம் ””ரொம்ப்ப நன்றி “
உங்க இட்லியை தவிர ஏதாவது செய்யுங்க ” அடுத்தது நீங்க.” ”என் பேரு மஹி எனக்கு பிடிச்சதூஊஊ “ சரி அப்படி போய் செய்யுங்க அப்ப வந்து பாத்துக்கிரேன் “ “ (மனசுக்குள் தப்பிச்சேண்டா சாமி ஏதாவது நொன்ன கேள்வி கேக்காம விட்டாரே –மஹி ).
அடுத்ததா வந்திருக்கிறது ‘’யோவ் என்னய்யா நாடகத்திலேந்து தப்பிச்சு வந்திட்டிங்களா .இது என்ன டிரஸ் புரியலையே “ என்ன ஓய் என்னை அடையாளம் தெரியலையா இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறியா” “ ஹி..ஹி.. ஒன்னுமில்ல நைட்டு அடிச்ச மப்பு அதான் கொஞ்சமா கண்ணுதெரியல ஒரு நாலு அடி தள்ளி நின்னா சரியா கண்டு பிடிச்சுடுவேன்” “ ஓ இவர் நம்ம மங்குணி ஓக்கே என்னது கையில ஒன்னுமில்லாம வந்திருக்கீறீரு.”
“ அதாம்ல நம்ம ஸ்டைலு அப்புறமா கவனி உமக்கே புரியும்” “ ஓக்கே ..ஓக்கே போங்க அப்படி நில்லுங்க
” இவர் பேர் அப்துல் காதர் இவரும் இன்னைக்கு ஏதோ செய்யரேன்னு சொல்லிட்டு வந்திருக்கார் “ “ அடப்பாவி மனுஷா நா எப்பயையா சொன்னேன் கோத்து விட்டுட்டியே ” சார் கொஞ்சம் மரியாதையா சொல்லுங்க இங்கே கேமரா ஓடிகிட்டு இருக்கு இது ஒரு ரியாலிட்டி ஷோ “ உனகென்ன மரியாதை பண்ணாடை , இப்பிடி மாட்டி உட்டுட்டியே அவ்வ்வ்” சரி” போய் நில்லுயா அப்படி “உனக்கு டிஸ்கவுண்ட் தரேன்”
” என்னது நிறைய பேர் பேரு குடுத்திருந்தாங்க இன்னும் கானலையே என்ன ஆச்சி ஒரு வேளை அப்படியே எஸ் ஆயிட்டாங்களோ பயபுள்ளங்க நியுசே தெரியல “ “ பேசாம இதிலேயே கானவில்லைன்னு அறிவிச்சுடலாமா”
எல்லாரும் கோரஸாக ”நீங்க ஏதோ செய்யுரேன்னு சொன்னீங்களே என்ன ஆச்சு ” “ சரிங்க அந்த அண்டாதானே அது கடைசியில வரும் ”
ஒக்கே போட்டியில செய்ய ஆரம்பிங்க எது நல்லா வருதோ அவங்களுக்கு பிரைஸ் கிடைக்கும் . எது சுத்தமா சரி யில்லையோ அவங்களுக்கும் பிரைஸ் கிடைக்கும்” ஓக்கே ஆரம்பிங்க....”
“ ஹலோ மஹி என்னது எல்லாரும் சுறுசுறுப்பா இருக்காங்க ஏதாவது செய்ய நீங்க என்னடான்னா பொருமையா போன் பண்ணிகிட்டு இருக்கீங்க” “ ஹலோ இது என்னோட ஹஸ்ஸுகிட்ட போன் பண்ரேன் .எப்பவும் அவர்தான் சமையல், நா போட்டோ மட்டும் தான். அதான் என்ன செய்யலாமுன்னு யோசனை கேக்குரேன் “
“ மங்கு நீங்க என்னா ஒன்னும் செய்யாம வேடிக்கை பாத்துகிட்டு இருக்கீங்க “ “ இன்னும் நிறைய நேரம் இருக்கு அது வரை ஒரு குட்டி தூக்கம் போட்டுகிரேன். சரியா. கால் மணிரேரத்துக்கு முன்னே என்னைய எழுப்பு “ மனசுக்குள் ((ச்சே நாசமா போவ கடைசியில என்னை அலாம் டைம் பீசா ஆக்கிட்டானே படுபாவி )) சத்தமா...சரிங்க சார் .தூங்குங்க .
”என்னது திடீர்ன்னு ஒரே கண்ணு எரிச்சலா இருக்கு யாருங்க அது ஒரு மூட்டை வெங்காயத்தை உறிக்கிறது ” இதெல்லாம் உங்க வூட்டு ஹோம் வொர்க் இங்க செய்யக்கூடாது “ மாமீ பிளிஸ் எப்பவும் நீங்க கண்ண கசக்கிட்டு இருந்துட்டு இன்னைக்கு இங்கே எல்லாரையும் கசக்க வச்சிட்டீங்களே “ “ பாருங்க கண்ணு மட்டுமா கலங்குது ..மூக்குமில்ல ஒழுவுது “
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
டிஸ்கி: ஒரு வாரத்தில போடனுங்கிற ஆர்டர்ல வந்த தொடர் பதிவு இது அதனால்.இதில அறிமுகம் மட்டும் இருக்கு .இன்னும் அட்டகாசம் அடுத்த பதிவில் , இப்ப வந்தவங்க நல்ல மூக்கு பிடிக்க சாப்பிட்டு போங்க
தொடரும்
Tuesday, August 3, 2010
தாய்ப்பால் வாரம் (வரம் )
வெளியீடு ஜெய்லானி at Tuesday, August 03, 2010 Labels: சிந்தனை, மாத்தி யோசி 116 என்ன சொல்றாங்ன்னா ... ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் முதல் தேதிய உலக தாய்ப்பால் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவிச்சு இருக்கு. ஆனா வசதியா அதையெல்லாம் மறந்துட்டு நட்பு தினமா கொண்டாடுறோம். ஹி..ஹி.. ஏன்னா நாம வளந்துட்டோம் .இனி அதுக்கு அவசியமில்லை அதன் காரணம்
எந்த ஒரு குழந்தைக்கும் அது பிறந்து முதல் ஆறு மாசம் வரை தாய்பாலே போதும் . எந்த எக்ஸ்டிரா பிட்டிங்கும் தேவையில்லை. இறைவன் குடுத்த வரம் அப்படி ஆனா இந்த பிசாசு மட்டும் அங்கையும் நம்மை சும்மா விடுமா அது லக்டோஜன் கம்பெனி வழியா நல்லா இருக்கிற அம்மாவையும் ஆமா மா போட வச்சு காசுக்கும் கேடு , உடலுக்கும் கேடு பிள்ளைக்கும் கேடுன்னு நம்மை வாங்கஆட்டி வைக்குது.
வீட்டில குழந்தையை பாக்க வரும் மக்களும் இப்ப இந்த கலர் இல்ல அந்த கலர் டப்பாவை வாங்கி குடு அப்பதான் பிள்ளை நல்லா கருப்பா அழகா இருக்குமுன்னு சொல்லி பிறக்கும் போது நல்லா அசிங்கமா வெள்ளை வெளேருன்னு இருக்கும் பிள்ளாயை நாலு ஐந்சு மாசத்துல அழகா கருப்பா ஆக்கிடுறாங்க
தாய் பால கொடுப்பதால் தாய்க்கு வரும் நன்மையை பாருங்க..
· என்னைக்காவது திட்டனுமுன்னு தோனினா உன்னை ராத்திரி பகல்ன்னு கண்ணு முழிச்சி வளர்தேனே..!! அதுக்கு இதான் நன்றியா –இப்பிடி திட்டிகிட்டே இருக்க ஒரு சான்ஸ் கிடைக்கும். இல்லாட்டி அந்த சான்ஸ் வாழ்கையில கிடைக்கது
· தொன்னூறு சதவீதம் கருப்பை புற்று நோய் மற்றும் மார்பக புற்று நோய் வரும் வாய்ப்பு இல்லை-.நோய் வந்தா அவங்களுக்கு மட்டுமா கஷ்டம் வீட்டிலுள்ள எல்லாருக்குமேதானே கஷ்டம் ஆஸ்பத்திரி அலைச்சல் பண ,மன நஷ்டம்.
· பிரசவத்திற்கு பின் வரும் அதிகப்படியான இரத்த போக்கை கட்டு படுத்தி கருப்பை தன் பழைய நிலைக்கு சுருங்க உதவுகிறது
· எடை குறைந்து பழைய உடலைமைப்பை பெறவும் உதவுகிறது .இதுக்குன்னு தனியா வாக்கிங்கோ , ஓடிங்கோ .தேவையில்லை .அதை பாக்க நமக்கு நல்லாவா இருக்கும்
கொடுப்பவர்களும் ஏதோ தர்மம் பன்னுவது மாதிரி வேண்டா வெறுப்பா குடுக்காமல் நல்ல மனநிலையில் கொடுப்பது நல்லது. இல்லாட்டி வளர்ந்து பெரியவர்களானால் அந்த மன நிலையில்தான் இருப்பார்கள். அதாவது நாம் டென்ஷனில், கோபத்தில் இருக்கும்போது வரும் வியர்வைக்கும் சாதாரன நிலையில் இருக்கும் போது வரும் வியர்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை ஆராய்ச்சி நிறுபித்து இருக்கு
தாய்ப்பால் குழந்தையின் உரிமை. எங்கே குடுத்தால் புற அழகு கெட்டு போயிடுமுன்னு நினைச்சா . புள்ளையின் அக (பாசம்) அழகிலிருந்து சீக்கிரம் விலகிப்போயிடுவீங்க.
தாய்ப்பால் இறைவனின் அருட்கொடை ஆனால் பால் பவுடர் மனிதனின் சரிகட்டும் குளோனிங் முயற்ச்சி. ஆனா இப்ப அதுக்கும் ஆள் புடிக்கும் வேலை நடக்குது வெளிநாட்டில பாட்டில கிடைக்குதாம் .டோர் டெலிவரியும் உண்டாம் . பாட்டிலுக்கு இத்தனை டாலர்ன்னு விலை
இதென்னடா வம்பாபோச்சின்னு பார்தால் அம்மா வேலைக்கு போறாங்களாம் ஆயா வீட்டில இருக்காங்கலாம். பிள்ளயை கவனிக்க முடியாது அதனால் நே கொஸ்டின் .சரி இதில கலப்படம் பண்ணிட மாட்டான்களா..?
நமது ஊரில இது எப்படியிம் வர இன்னும் 20 வருஷமாவது ஆகும் . அது வரையவது தாய்ப்பாலின் அருமையை நாம் மற்றவர்க்கு எடுத்து சொல்வோம் ( இன்னைக்கு ஏதாவது ஒரு சந்தேகம் கேக்கனுமே....என்ன கேக்கலாம்)
பசும்பால் நல்லதுன்னு அதுக்கு மாற்று வழியும் கண்டு பிடித்திருக்கும் நாம. குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா...?,,,!!
Subscribe to:
Posts (Atom)