வருஷம் முழுவதும் ஏதாவது ஒரு கருப்பொருளை பிடித்துக்கொண்டு அதுக்கு ஒரு நினைவு நாளை அனுசரிக்கின்றோம். அம்மாவை மதிக்காத எத்த்னையோ பேர்கள் இருந்தாலும் அன்னையர் தினம் , அதுப்போல ஆசிரியர் தினம் , செவிலியர் தினம் , இப்படி பல பெயரில் தினம் தினம் கொண்டாடி வரும் போது ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினம் என்று. யாரும் வெளிப்படையாக நோட்டிஸ் ஒட்டா விட்டாலும் முட்டாள்கள் தினமாகவே நாமெல்லாம் கொண்டாடி வருகின்றோம்.
காதலர் தினம் என்றாலும் சரி , அதில் ஏதாவது அர்த்தம் இருக்கும். சூர்பனகை மாதிரி இருந்தாலும் நீ சீதை மாதிரி கொள்ளை அழகுன்னு யாருகூட வாவது சும்மா பிட்ட போட்டு கிட்டுவாவது இருக்கலாம் இந்த முட்டாள்கள் தினத்தில் அப்படி என்ன இருக்கு.. ரூம் போட்டு யோசித்தாலும் ஒன்னும் புரியல. சரி அரசாங்கமாவது ஒரு நாள் லீவு விட்டாலும் புண்ணியமா போகும் அதுவும் இல்ல
காலையில் முழித்த மூஞ்சில அதிர்ச்சி ஆரம்பிக்கும் .டீ கப்பில வெறும் சுடுத்தண்ணீர் நல்லா ஏமாந்தீங்களா , இட்லி தட்டு காலியா மூடி இருக்கும் அப்புறம் சில S M S நீங்க பிச்சைக் ச்சே.. பணக்காரனாயிட்டீங்கன்னு . பஸ்ல , ஆபீஸுல , தலை ச்சுற்றி இரவு வீடு வரும வரைக்கும் நாள் முழுவதும் இந்த தொந்தரவு .இதில் மனைவி முதல் கொண்டு அனைத்து மனித மனங்களும் கிண்டல் கேலி செய்யும். அப்படி என்னதான் ஆசையோ
உண்மையில நாம எல்லாருமே தினமும் ஏதாவது ஒரு வகையில எங்கையாவது ஏமாந்துகிட்டுதான் இருக்கோம். இரண்டு ரூபாய் காய்கறியை பத்து ரூபாய் கொடுத்து கிட்டு , பஸ்சில ஐந்து ரூபாய் தந்துட்டு மீதி ஒன்னு அம்பது சில்லரை வாங்காம (கிடைக்காம் ) ஒரு ரூபாய்க்கு லாயக்கு இல்லாத டீவீடீய பத்து ரூபாய் குடுத்து வாங்கி மூனு மணி நேரம் நேரத்தை வீனாக்கி , மாமியார் தரும் காது குடுத்து கேக்க முடியாத திட்டு , சாபம் மற்றும் மருமகளின் கண்ணீர் விடும் சீரியல் இப்படி
பத்திரிக்கையை பிரித்தால் ஒவ்வொரு காலத்திலும் (பத்தியிலும்) யாராவது வீட்டை விட்டு ஓட்டம் , தலையில கல்லை தூக்கிபோட்டு விட்டு கள்ள..>>> ஓட்டம் , இப்படி அடுத்தவர்களை ஏமாற்றும் செய்தி தினமும் வருகிறது.
இதில் இன்று மட்டும் (ஏப்ரல்-1 ) விஷேஷமாக ஏமாற்றுவது என்பது. நாம் நம்மையே ஏமாத்துவது போலத்தான். ஆசையை காட்டி ஓட்டு வாங்கியது அந்தகாலம் . பணத்தையும் , குவாட்டர் , பிரியாணியை காட்டி ஓட்டு வாங்குவது இந்த காலம் .எட்டு மணிநேரம் வேலை பாத்துட்டு வீட்டுக்கு (அரசு ஊழியர் ) வந்தது அந்த காலம் . மூனு மணிநேரம் , கையூட்டுடன் வேலை பார்பது இந்த காலம் .அடுத்தவரை ஏமாற்றி எத்தனை காலம் வாழ முடியும் . அதில் உண்ணும் உணவு !!!!. இப்படி எத்தனையோ>>>>>>>
அதனால் யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டாம் . இந்த ஒரு நாளாவது. நாம் மனிதனாக இருக்க முயல்வோம். மனித நேயத்தை காப்போம். அல்லது காப்பாற்ற முயற்ச்சிப்போம்.
டிஸ்கி::: இது யாரையும் குறிப்பிட்டு போட்ட பதிவு அல்ல .ஆண் , பெண் அனைவருக்கும் சேர்த்து பொதுவாக போட்டது.