Friday, February 26, 2010

க்ராஷ் ஆன ஃபைலை என்ன செய்ய

26 என்ன சொல்றாங்ன்னா ...
கம்பியூட்டரோ அல்லது ஒரு குறிப்பிட்ட மென்பொருளோ கிராஷ் ஆகி முடங்கும் போது ஃபைல்கள் சேதமடைய நிறைய வாய்புள்ளது. பொதுவாக அப்ளிகேஷன் மென்பொருள்களில் மற்றும் ஹார்ட்வேர் மென்பொருளில் ஏற்படும் பிழைகள் அல்லது ஒன்றுக்கொன்று முரண்பாடுகளின் காரணமாக செயல் இழப்புகள் ஏற்படுகிறது.

கணிணி செயல் இழப்புகள் ஏற்படாதபோது ஃபைல்கள் திறக்காமல் இருந்தால் அல்லது சேதமடைந்த ஃபைல்கள் நிறைய இருந்தால் அது வைரஸின் வேலைதான் காரணம். இதற்காகவே ஆண்டி வைரஸ் சாஃப்ட்வேரை எப்போதும் அப்டேட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.<">இரண்டு தினத்திற்கு ஒருமுறை பேக் அப் எடுக்க பழகுவது மிகவும் நல்லது

ஃபைல் சிஸ்டத்தில் அல்லது ஹார்டிஸ்கின் ( நீண்ட நேரம் பயன்படுத்துவதால் வரும் சூடு , காற்றாடி வேலை செய்யாததனால் வரும் சூடு , ) குறைபாடுகளினால் வாய்ப்பு அதிகம்.

இதுப்போன்ற நிலைவந்தால் முதலில் ஸ்கேன் டிஸ்க் போன்ற டூல்களை பயன்படுத்தினால் அவை ஹார்டிஸ்கை ஸ்கேன் செய்து பிழைகளை கண்டுபிடித்தும் ஃபைல் ஸிஸ்டத்தையும் சரிசெய்து தரும்

முதலில் மை கம்ப்யூட்டரை இரட்டை கிளிக் செய்து எந்த டிரைவ் வேனுமோ அதன் மீது வலது கிளிக் செய்து ப்ராப்ரடீஸ் > டூல்ஸ் > செக் நவ் தேர்ந்தெடுத்து இரண்டு ஆப்ஷன்களிலும் டிக் செய்து ஸ்டார்ட் செய்யுங்கள். பின் தேவை பட்டால் ரீஸ்டாட் செய்யவும்.

உதாரணமாக வேர்டானது ஒவொரு . doc ஃபைலையும் . wbk ஃபைலாக அதே போல்டரிலேயே பேக்கப் எடுத்து வைக்கும் நாம் இதை வேர்டில் திறந்து . doc ஃபைலைலாக சேவ் செய்யலாம்.

பேக்கப் ஏதும் இல்லாவிட்டால் டேட்டா ரெக்கவரி( கூகிளில் தேடினால் நிறைய கிடைக்கும் ) ப்ரோக்ராமை நாடலாம். இவை பெரும்பாலும் மீட்டு தரும். எத்தனை முடியும் , முடியாது என்றும் சொல்லிவிடும்.

சேதமடைந்துள்ள ஃபைலை அழிக்க முடியவில்லை என்றால் , முதலாவதாக அந்த ஃபைலானது கணினியில் இல்லாமல் அதன் தலை , வால் மட்டும் ( கோஸ்ட் ) இருக்கலாம்

இரண்டாவதாக ஆப்ரேடிங் ஸிஸ்டமானது அல்லது ப்ரோக்ரமானது அதை இன்னும் பயன் படுத்துகிறது என்று அர்த்தம். இதை விடுவிக்க கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தாலெ போதும்.

முக்கியமாக ஒரு யூ பி எஸ் வாங்கி வைப்பது நல்லது, சுமார் பத்து நிமிட யூ பி எஸ் போதும். மின்சார கோளாறினாலேயே ( எப்போது போகும் எப்போது வரும் தெரியாது ) அதிகம் பாதிப்பு வருகிறது. வெளிநாட்டில் மின்சார கோளாறு அத்தனை இல்லை. அதே போல எர்த் கனெக்‌ஷனையும் முக்கியமா பாருங்க .இல்லாவிட்டால் முதலில் கெட்டு போவது ஹார்டிஸ்க் , இரண்டாவது ராம் . (மெமரி )

நினைவில் நின்ற பாடல்-5

4 என்ன சொல்றாங்ன்னா ...

ஒரு முறை பிறந்தேன், ஒரு முறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்
என் கண்ணில் உனை வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உனை மறக்க
முயன்றதிலே தோற்றேன்
2. நீயே என் இதயமடி, நீயே என் ஜீவனடி
***
உந்தன் நெற்றி மீதிலே
துளி வேர்வை வரலாகுமா
சின்னதாக நீயும்தான்
முகம் சுழித்தால் மனம் தாங்குமா
உன் கண்ணிலே துளி நீரையும்
நீ சிந்தவும் விடமாட்டேன்
உன் நிழலையும் தரை மீதிலே
நடமாடவும் விடமாட்டேன்
ஒரே உடல், ஒரே உயிர், ஒரே மனம்
நினைக்கையில் இனிக்கிறதே
2.
***
காற்று வீசும் மாலையில்
கடற்கரையில் நடை போடணும்
உன்மடிதான் பாய்மரம்
படகேறி திசைமாறணும்
ஒளி வீசிடும் இரு கண்கள்தான்
வழி காட்டிடும் கலங்கரையா
கரைசேரவே மனம் இல்லையே
என தோன்றினால் அது பிழையா
நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து
பூட்டி விட்டு சாவியை தொலைத்து விட்டேன்
நீயே என் இதயமடா
நீயே என் ஜீவனடா

Sunday, February 21, 2010

வரும் முன் காக்க!!

26 என்ன சொல்றாங்ன்னா ...
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கான ஆதார அடிப்படை அம்சமே சுவாசித்தலேதான். ஆனால் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்ந்து , ஊளைச்சதை காரணமாக உடல் பருமனால் பாதிக்கப்படுகிறவர்கள் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா போன்ற பாதிபினால் அவஸ்தைப் படுகின்றார்கள்.
நோய்களிலேயே ஆஸ்துமா ஒருவிதமான கொடிய நோய் என்றும் சொல்லலாம். மூச்சி திணறலால் இந்த நோயாளிகள் படாதபாடு படுகிறார்கள். சாப்பிட்ட உடனே படுத்து விட்டால் , உணவானது ஜீரணம் ஆகாமல் , சுவாசக் கோளாறினை ஏற்படுத்தும். அதனால் இப்பிரச்சனை உள்ளவர்கள் சிறிது நேரம் உலவிவிட்டு பிறகு படுக்கலாம். இவர்களுக்கு சளியானது சுவாச குழாய்களில் தங்கி விடுவதால் குறட்டை ஏற்பட்டு பக்கத்தில் படுப்பவர்க்கு அது இணிய இரவாக இல்லாமல் தூக்கம் கெட்டு நாலு தலைமுறைக்கு முன் பிறந்த வரைக் கூட திட்டிகொண்டு இருப்பார். தேவையா நமக்கு?
தவறான மற்றும் அதிகமான உணவு சாப்பிட்டு சுவாசிக்கவே அவஸ்தை படக்கூடியவர்கள் பலர் உடல் பருமணாலும் பாதிக்கப் பட்டவர்களாகவே இருக்கிண்றார்கள்.
அதிகமான கொழுப்பு உணவுகள் , குறிப்பாக சொன்னால் பால் , தயிர் , பாலாடை கட்டி , வெண்ணெய் , டால்டா , நெய் மற்றும் மாமிசம் (ஆடு , மாடு , .......) போன்றவற்றை உட்கொள்கிறபோது மூச்சுக் குழழில் சளி நிறைகிறது. இதனாலேயே சுவாசிப்பதில் பெரும் பிரச்சனை ஏற்படும்.
அதிக கொழுப்பானது அடிவயிற்றிலும் , நெஞ்சிலும் சேர்கிறது. தான் இருக்க வேண்டிய எடையை விட அதிகமான எடை இருக்கிற போது , அந்த அதிகப்படி எடையைச் சுமக்கிறபோது மூச்சிறைப்பு ஏற்படுகிறது.
ஆகவே உடல் பருமணாக இருந்து , ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க முயற்ச்சி செய்ய வேண்டும். அதற்காக பட்டினி இருக்கக் கூடாது.
ஏன் என்றால் அதிகபடியான கொழுப்பு ஆஸ்துமா நேயாளிகளுக்கு வேறுஒரு பிரச்சனையை உண்டாக்கி விடும் . அதாவது ஆர்ட்டிரிக்களில் உள்ள ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை குறைத்து விடும். இதனால் ரத்த அணுக்களின் எண்ணிக்கை கூட குறையும் , அதனால் ரத்தம் உறையவும் , மாரடைப்பு , மூளையில் கட்டி போன்ற தொந்தரவுகளுடன் மரணம் கூட வர வாய்ப்பு இருக்கு

உடம்பை குறைக்க இதோ வழி:
( 1 )தினமும் காலை அல்லது மாலை அதாவது லேசாக வெயில் உள்ள போது குறைந்தது அரை மணி நேரம் நடக்க வேண்டும். பின் படிப்படியாக அதிகரித்து இரண்டு மணி நேரமாக்கலாம்.
( 2 ) நொருக்கு தீணியை குறைத்து கொள்ளவும் அல்லது கூடாது...( அப்படி பட்ட எண்ணம் வரும் போது )
(3 ) தண்ணீர் அதிகம் குடிக்கவும். ( ஜுஸ் இல்லை )
(4 ) சின்ன சின்ன உடல் பயிற்சி ( துணி துவைப்பது - - இது ஆண்களுக்கும் பொருந்தும் )
( 5 ) பாதி வயிறு சாப்பாடு , கால் வயிறு தண்ணீர் கால வயிறு காலியாக இருக்குமானால் மிகவும் நல்லது. பந்திக்கு போனால் பிந்தி போகவும்
( 6 ) ருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிடவும்
( 7 ) முடிந்தவரை வீட்டுவேலைகளை நாமே செய்யவேண்டும்.
( 8 ) அதிக கவலை நம்மை குண்டாக்கிவிடும். ( கவலையினால் ஒரு வேளை சாப்பிடாமல் இருந்துவிட்டு நாம சாப்பிடலையே என்ற அதே கவலையில் மூன்று வேளை சாப்பாட்டை ஒரே வேளையில் மூச்சிபிடிக்க சாப்பிடுவது.
( 9 ) என்னுடைய பதிவுகளை படிப்பது..( யாருங்க அது கல்லை விட்டு எறியறது..)

குஷ்பு இட்லி பார்க்க(சாப்பிட) நல்லா இருக்கும் அதுக்காக யாரும் எண்ணையில்லாத ( காய்ந்த) சப்பாத்தியை விரும்பாமல் இல்லையே!!!!!!!!!

டிப்ஸ்:::: (1 ) முருங்கை கீரை இரண்டு கைபிடி அளவு ( 2 ) நாலு கிளாஸ் நீர் (3 )கால் ஸ்பூன் சீரகம் (4) நாலு பொடித்த மிளகு(மிளகாய் இல்லை) ( 5 ) சிறிது உப்பு
செய்முறை::: முருங்கை கீரை (முத்திய கீரை இல்லை இளசாக)யை (சுத்தம் செய்து (நீண்ட காம்புவை மட்டும் எடுங்க சிரியது ஓக்கே) அதனுடன் மேல் சொன்ன எல்லாத்தியும் போட்டு இரண்டு கிலாஸ் நீர் ஆகும் வரை கொதிக்க வைத்து டீ காப்பிக்கு பதில் குடித்து வர ஆஸ்துமா மற்றும் குளிர் கால சுவாச பிரச்சனை தீரும்..
((ஆசியா உமர் கேட்டதால் இந்த டிப்ஸ்))

Friday, February 19, 2010

கம்ப்யூட்டரா !! தலைவலியா?

20 என்ன சொல்றாங்ன்னா ...

தற்போதுள்ள அவசர உலகத்தில் அத்தியாவசியமான பொருட்களில் கணிணியும் ஒன்றாகி விட்டது..பலருக்கு இது இல்லாமல் பொழுதும் போகாது என்னும் அளவிற்கு இருக்கிறது. பல நேரங்களில் நண்பனாக இருக்ககூடியது. சில நேரங்களில் சண்டிக்குதிரை ஆக மாறி நம்ம BP எகிறவைக்கும். இதிலிருந்து தப்பிக்க இதோ சில ஆலோசனைகள்.

உங்களில் உள்ள ஏதாவது ஒரு போல்டரை திறக்கவும். அதில் மேலே உள்ள பட்டையில் டூல்ஸ் அழுத்தி போல்டர் ஆப்ஷன் என்பதை திறக்கவும். இதில் வியூ டேபில் show hidden files and folders தேர்ந்தெடுத்து. அப்ளை செய்து ஓகே தந்து வெளியேறவும். இப்போது சில ஃப்பைல்கள் நமது கண்ணுக்கு தெரியும்.சில வைரஸ்கள் hidden files ஃப்பைல்களாக வரும்

யாரிடமிருந்தும் சீடியோ அல்லது பெண்டிரைவோ வாங்கினால், அதில் என்ன தலைவலி உள்ளே உள்ளது என்பது தெரியாது. அதனால், சீடி டிரைவில் அல்லது USB யில் போட்டதும் வரும் ஆட்டோ ப்ரோகிராமை க்ளோஸ் செய்துவிடுங்கள். பின் மை கம்ப்யூட்டர் திறந்து சீடி அல்லது USB வலது கிளிக்கில் ஓப்பன் என்பதை அழுத்தி திறக்கவும்..

அதில் நமக்கு புரியாத விளங்காத ஃப்பைல், ஃப்போல்டர் இருந்தால் திறக்க வேண்டாம். இல்லையெனில் சில வைரஸ்கள் அழையா விருந்தாளிகளாக உள்ளே வந்து விடும்.

பொதுவாக நாம் நெட்டிலிருந்தோ , சீடி அல்லது USB யிலிருந்தோ, டவுன்லோட் இல்லை காப்பி செய்தால் அது டிபால்டாக மை டாக்குமென்ஸில் காப்பி , டவுன்லோட் ஆகும். நாம் இதில் காப்பி , டவுன்லோட் செய்யாமல் வேறு ஒரு டிரைவில் சேமிக்க வேண்டும். இதற்காகவே ஒரு டிரைவ் வைத்திருப்பது மிகவும் நல்லது.

விண்டோஸ் 3.5 வந்தபோது ஹாட்டிஸ்கின் அளவு சுமார் 160 எம்பிதான் வந்தது .ஆனால் இப்போதோ 1000ஜிபி (1 டிபி) சர்வசாதாரணமாக கிடைக்கிறது.

விண்டோஸ் பிறகு ஆபிஸ், ஆட்டோகேட், போட்டோஷாப் ஆகியவற்றை தவிர மற்ற மென்பொருட்களுக்கு சில ஜிபி இடம் போதும். மொத்ததில் 25 ஜிபி இடம் போதும் . சி-டிரைவில் மற்றும் டெஸ்க்டாப்பில் சொந்த, பர்சனல் விபரங்களை எப்போதுமே வைக்கவேண்டாம். அது நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியதாக இல்லை, கொடுத்ததாக இருக்கலாம் , போட்டோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

ஒரே டிரைவாக 30ஜிபி 40ஜிபி 80ஜிபி 130ஜிபி என்று இருக்காமல் 20+10 ,20+20, 30+30+20, 40+30+30+30 என்று தேவைக்கு தகுந்தமாதிரி பிரித்து கொள்ளவும்.( 30ஜிபிஐ இட்டால் 8ஜிபிஐ அதே சாப்பிட்டுவிடும்) உங்களுடைய தகவல்களை இரண்டு வெவ்வேறு டிரைவில் பதிந்து வைப்பது மிகவும் நல்லது. ஒரு சில கணிணிவல்லுநர்கள்????? கேட்பார்கள். இடத்தைஅடைத்துக்கொள்ளும்என்று. நான் கேட்கிறேன்தகவல் முக்கியமா? இடம் முக்கியமா?

லேப்டாப் உபயேகிப்பவர்கள் (350ஜிபி) USB டிரைவ் பயன் படுத்தவும். ஒருடிரைவ் திறக்காவிட்டாலும் அடுத்ததில் நமது தகவல் பாதுகாப்பாக இருக்கும்இல்லாவிடில் . தோழர் டவுசர் பாண்டி போல் அலைய வேண்டி இருக்கும்

வைரஸ் பாதிப்பது அதிகம் நமது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகிய விண்டோசைதான். சில, பல நேரங்களில் ரீஸ்ஸ்டோரும் ஆகாமல் அதனுடன் சண்டை போடவேண்டிவரலாம். நம்மால் முடியாதபோது அடுத்தவரிடம் (கடைகளில்) தருகிறோம்.

அப்படி தரும் போது சி-டிரைவ் உள்ள ஹார்டிஸ்க் தவிர மற்ற ஹார்டிஸ்க்கை (சிஸ்டம் டோரை திறந்து)கழட்டி தனியே வைத்துவிட்டு தரவும். பின் கணிணி வந்தவுடன் பழையபடி தனியே கழட்டி வைத்த ஹார்டிஸ்க்கை மாட்டவும். லேப்டாபில் கழட்டி மாட்டும் சங்கதி கஷ்டம் என்பதால்தான் தனியாக USB டிரைவ் பயன்படுத்த சொன்னேன்.

ஒரே ஹார்டிஸ்கில் எல்லாவற்றையும் போடும் போது ரிப்பேர் ஆனால்மீண்டும் எதுவும் கிடைக்காது. டெஸ்க்டாப் என்பதும் சி-டிரைவில் வரும்ஒருஃப்போல்டர்தான். ஒரே ஹார்டிஸ்கில் சி-டிரைவும் இருந்தால் ,சி-டிரைவ்மட்டுதானே ரிப்பேர் மற்ற டிரைவ் நல்லதுதானே என கேட்பவருக்குபதில்.........கடையில் தரும் போது அதையும்தானே தரவேண்டி இருக்கும். தந்தால் என்ன?....... தந்தால் என்னவாகும்?............. தந்தால் என்னதான் ஆகும்?.

ஆப்பு உலகில் அதனதன்இடத்தில்தான் இருக்கிறது. நாமாகதான் தேடிபோய்அதில் உட்காருகிறோம் . நமக்குயாரும் வைப்பதில்லை (உதா:குருக்கள்தேவநாதன்)

Wednesday, February 17, 2010

நற்ச்செயல் என்பது

13 என்ன சொல்றாங்ன்னா ...
நற்ச்செயல் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல!! மாறாக
இறைவனையும் , இறுதி நாளையும் ,வானவர்களையும் , வேதங்களையும் , இறை தூதர்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும்
மேலும் (இறைவனின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத் )
தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிபோருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும்
மேலும்
தொழுகையை நிலைநாட்டி , ஜகாத் ( ஏழை வரி )தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்கள். மேலும் வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள்.
ஆவர் இவர்களே உண்மையாளர்கள்:, மேலும் இவர்களே இறையச்சமுடையவர்கள்

திரு குர் ஆன் :2 : 177


டிஸ்கி : இறையச்சமுடையவர்கள் யார் என்று அல் குர் ஆனில் வரும் வசனம் இது.

Saturday, February 13, 2010

மருதாணி யாருக்கு!

29 என்ன சொல்றாங்ன்னா ...
நமக்கு எல்லாம் மருதாணி யைப் பற்றி தெரியும். பொதுவாக இது பெண்கள் அதிகம் விரும்பக்கூடியது .அதிலும் கொஞ்ஜம் வெள்ளை நிற பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்க்கும். பல இடங்களில் போட்டியே நடக்கும் யார் அழகான டிஸைன் வரைகின்றாரோ அவருக்கு பரிசுகளும் கிடைக்கும். அழகு நிலையங்களில் இது இல்லாமல் இருக்காது.
திருமணங்களில் எது இருக்கிறதோ இல்லையோ மணப்பெண் அலங்காரத்தில் கை,கால் முழுவதும் டிஸைன் எனற பெயரால் பூசி மெழுகி இருக்கும்.
இதை அதிகம் பயன்படுத்துவது பாக்கிஸ்தானியர்கள் தான். இதன் பூர்வீகம் ஆப்பிரிகா .
நாம் மருதாணியை அழகு சாதனமாக மட்டுமே நினைகிறோம். அதனால தானோ என்னவோ இது பெண்களுக்கு மட்டுமானது என்ற எண்ணம் எல்லோருக்குமே உள்ளது. ஆனால் என்னை பொருத்தவரை ஒவ்வொரு ஆணுக்கும் இது தேவை. நாம் (ஆண்) கையில் , காலில் இட்டால் நீ என்ன பொம்பளையா? என்ற கேள்வி உடனே வரும். அது தவிர நமக்கு தரவும் மாட்டார்கள்.

மருதாணியின் முக்கிய பலன் என்னவென்றால் உடலுக்கு குளிர்ச்சியை தரும். முறைபடி பயன் படுத்தும் போது அதிக அளவில் பலன் தருகிறது. ஆண்கள் பொதுவாக வேலையின் காரணமாக (வேலைவெட்டி இல்லாட்டியும்)வெளியே சுற்றுவதாலும், சிலருக்கு வேலையே அதுவாக அமைந்து விடுவதாலும், கையேந்திபவனில்(அவசர உலகில் எல்லாமே ரெடிமேட்) உப்பு, காரம் (அசைவம்) சற்றே கூடுதலாக இருப்பதால் எதைப்பற்றியும் கவலை படாமல் தின்றுவிடுவதால் ,வரும் உடல் சூட்டை குறைக்க வழி தெரிவதில்லை. தேவை இல்லாத டென்ஷன்., வயிற்று வலி.,ஆக உடல் சூடுதான் முதற்காரணம்.

இரண்டாவதாக கண்எரிச்சல். இதில் உண்மைநிலை புரியாமல் ஒருவேளை பார்வை குறைவோ என்ற பயமும் இருக்கும். இந்த இரண்டு வியாதிக்கும் வருமுன் காக்கும் அற்புதமான மூலிகைதான்நமது மருதானி. கடைகளில் கலர் சேர்காத பவுடராகவும்(u.a.e யில் சூடானி மெஹந்தி எல்லா கடைகளிலும் கிடைக்கும்)
கிடைக்கும். இதை நீர் விட்டு குழைத்து முதலில் சிறிது உள்ளங்காலில் வைத்து ஒரு மணிநேரம் இருக்கவும் . (பத்து நிமிடத்திலேயே கால் மரத்து போய்விடும்) புதிதாக வைப்பவர் குறைந்த நேரமே வைத்து டெஸ்ட் செய்யவும். பிறகு நேரத்தை கூட்டலாம். இல்லாவிட்டால் குளிர்ஜுரம் வந்துவிடும்.

பழகியபின் தேவைக்கு ஏற்ப தலைமுழுவதும்(ஆண்கள்) வைத்துவிட்டு இரண்டு மணிநேரம் கழித்து தலைக்கு குளிக்கவும் .சோப்பு தேவை இல்லை. கலர் சேர்காத பவுடரினால் தலை முடி சிவப்பாக ஆகாது. தலைமுடியும் கொட்டாது. விடுமுறை நாட்களில் செய்யவும். (இல்லாவிட்டால் ஆபீஸில் தூக்கம் வரும்) பெண்கள் உச்சந்தலையில் மட்டும் வைத்து விட்டு குளிக்கலாம்.

கோடைக்காலத்தில் வாரம் ஒருமுறை இதுப்போல செய்துவந்தால் 48டிகிரி வெயில் அடித்தாலும் நமக்கு , உடலுக்கு ஒன்னும் செய்யாது. சிவாஜியில் ரஜினி சொல்வது போல் ஹை...ஹை...கூல்...


டிஸ்கி: அனுபவமா என்று கேட்பவர்களுக்கு 100சதவிகிதம் டெஸ்டட். கோடைக்காலம் நெருங்குவதால் இந்த டிப்ஸ் பயன் படும்.




Friday, February 12, 2010

நினைவில் நின்ற பாடல்-4

9 என்ன சொல்றாங்ன்னா ...

kyon ki itna pyar tumko karte hain ham
kya jaan loge hamari sanam
kyon ki itna pyar tumko karte hain ham - 2
kya jaan loge hamari sanam
kyon ki itna pyar tumko karte hain ham
kya jaan loge hamari sanam
kyon ki itna pyar tumko karte hain ham
hamare dil ki tum thodi si kadar kar lo
ham tumpe marte hain thodisi fikar kar lo
fikar kar lo
kyon ki itna pyar tumko karte hain ham
kya jaan loge hamari sanam
kyon ki itna pyar tumko karte hain ham

tune o jaana deewana kiya hain
deewana kiya is kadar - 2
chahat mein teri bhulaya jahaan ko
na dil ko kisiki khabar - 2
rago mein mohabbat ka ehsaas jara bhar lo
ham tumpe marte hain thodisi fikar kar lo
fikar kar lo
kyon ki itna pyar tumko karte hain ham
kya jaan loge hamari sanam
kyon ki itna pyar tumko karte hain ham

tumse hain saansein tumse hain dhadkan
tumhise hain deewangi - 2
rab ne hame di hain tumhare liye zindagi
tumhare liye zindagi
wada sang jeene ka tum jaane jigar kar lo
ham tumpe marte hain thodisi fikar kar lo
fikar kar lo
kyon ki itna pyar tumko karte hain ham
kya jaan loge hamari sanam
kyon ki itna pyar tumko karte hain ham

Tuesday, February 9, 2010

மீண்டும் முயல் ஆமை

21 என்ன சொல்றாங்ன்னா ...
தலைமுறை மாறமாற அர்த்தங்களும் மாறிக்கொண்டேதான் வருகிறது. கேட்பவர்களும் அதையே மற்றவர்களுக்கு சொல்லிக்கொண்டு வருவதால் உண்மை எது பொய் எது என்று பிரித்து அறியாமல் தலைஆட்டுகிறோம். எப்படி?

சின்ன வயதில் பள்ளியில், ஓட்டபந்தையத்தில் முயல் தூங்கிவிட்டது. ஆமை தூங்காமல் ஓடி??? கோப்பையை வென்றது என்று கதை சொன்னார்கள் . நான் கேட்டேன், ஸார் போட்டி என்றால் சமமானவர்கள் தேவை. இங்கே ஜோடி பொருத்தமே சரி இல்லையே என்று. பதிலும் கிடைத்தது தலையில் நறுக்.. என்று. அதிலிருந்து நான் கேள்வியே கேட்பதில்லை.

முயல் என்பது நாம் பார்க்கும் காது நீண்டு உள்ள காட்டு விலங்கு இல்லை. முயல் என்றால் முயற்சி அல்லது முயற்சி செய் என்று அர்த்தம். சோம்பேறியாக இருக்காமல் முயன்றுக்கொண்டே இருக்கவேண்டும் அதாவது விடாமுயற்சியாக ஒரு செயலை செய்யவேண்டும். ஆமை என்பதும் அதைப்போலவே நாலு கால் பிராணி இல்லை. அமைதி அல்லது பொறுமை என்று பொருள். ஒரு செயலானது அவசரப்படாமல் பொறுமையாக முயற்சி செய்தால் அது கைக்கூடும் என்பதே!! இதன் முழுப்பொருள்.. நிதானம் அல்லது அமைதி இல்லாமல் வெறும் முயற்சி மட்டும் பலன் தராது. அது தடுமாற்றத்தில்தான் முடியும்.அதை போல எதையும் முயற்சி செய்யாமல் அமைதியாக இருப்பதும் வேலைக்காகாது. ஆக இரண்டுமே தேவை.
அடுத்தது

””மாதாவை ஒரு நாளும் மறக்கவேண்டாம்.””
நான் கேட்கிறேன், அப்பா என்ன பாவம் செய்தார்? உடன் பிறந்தவர்கள் என்ன தவறு புரிந்தார்??.ஏன் மாதாவை மட்டும் மறக்கவேண்டாம். மற்றவர்களை விட்டுவிடலாமா?? மா போன்ற பெரிய மரங்களையும், செடிக் கொடி போன்ற தாவரங்களையும் தினமும் நீர், உரம் போன்றவை போட்டு அதை மறக்காமல் பார்த்துக் கொண்டால். பெரிய மரங்கள் மழை பெய்யவும், பின் நிலத்தடி நீரை பிடித்து வைக்கவும், நிலச்சரிவிலிருந்து (சமீபத்தில் ஊட்டியில் நடந்தது) பாதுகாக்கவும் தேவை. நமக்கு தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் செடிக்கொடிகள் மூலமே கிடைக்கிறது. அப்படி மறந்தால் உணவுக்காக நாம் அலைய வேண்டிவரும்.(சோமாலியா நாட்டின் நிலை). தற்போது நிலை என்ன?. விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறி வருகிறது. உணவு பற்றாக்குறை வந்தால் கருங்கல், செங்கலையா சாப்பிடமுடியும்.

ஆக நடப்பது என்ன? நாம் எதையுமே தீர விசாரிக்காமல் ஏட்டு சுரைக்காய்( அட நல்லாயிருக்கே அடுத்த பதிவில் பார்க்கலாம்) கறிக்குதவாது என்பது போல குழந்தைகளுக்கு சொல்லிவந்தால் 3020ல் கூட இந்தியா வல்லரசு ஆகாது.

டிஸ்கி:: சூடான கருத்துக்கள் வரவேற்கப்படும்.

Thursday, February 4, 2010

பேய், பிசாசு இருக்கா ?

16 என்ன சொல்றாங்ன்னா ...
பேய், பிசாசு இருக்கா ? இந்த கேள்வியை முன் வைக்கும் போது உலக மக்களில் நூற்றுக்கு தொன்னூறு பேர் ஆமாம் இருக்கு என்பார்கள். ஆறு பேர் இல்லை என்பார்கள். நான்கு பேரோ (உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டே )பதில் சொல்லத்தெரியாமல் பேய்முழி முழிப்பார்கள். மத நம்பிக்கையை விட்டு வெளியே வந்து பார்க்கும் போது எல்லோருமே ஒப்புக்கொள்ளத்தக்க விஷயம்; ஆமாம் என்பதே.. (அதற்கு ஏன் இந்த பதிவு என்கிறீர்களா!)
ஆனால் இந்த பிசாசில் ஆண், பெண் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. ஒன்றே ஒன்று தான். இது யாரையும் பிடிக்கும். ஆனால் பிடிப்பவருக்கு குறைந்தது டீன் ஏஜ் வயது வேண்டும். அந்த பேய் ஒருவரை பிடித்து விட்டால் அத்தனை விரைவில் அதுவிடாது.எந்த வேப்பிலைக்கும் அடங்காது.எந்த தர்காவிலும் ஒடுங்காது. அந்த பேய் பிசாசின் பெயர் சந்தேகம். பிடித்தவர் பள்ளி மாணவனாக இருந்தால் கூடப்படிக்கும் பெண் சின்னதாக (ஸ்நேகமாக )புன்னகைத்தால் உடனே சின்ன சந்தேகம். ஒரு வேளை லவ்வாக ஒருக்குமோ. தேவையில்லாமல் மனஅமைதி கெட்டு படிப்பும் ஏறாமல் தன்னை ஹீரோவாக காட்ட முயன்று செய்யும் அட்டகாசம் எத்தனை எத்தனை..அவனை பெற்ற குடும்பம் ஏழையாக இருந்தால் எவ்வளவு கஷ்டம்..
அதே பள்ளி மாணவியாக இருந்தால், இத்தனை வருடம் பெற்ற தாய் தந்தையை உதாசினப்படுத்தி விட்டு சிலசமயம் வீட்டைவிட்டே வெளியேறி விடுகிறாள். பிள்ளையை பெற்றவர்களுக்கு தலைக்குனிவும், மனவருத்தமும், கெட்ட பெயரும்தான் கடைசியில் மிஞ்சும்.
ஆண் பணியின் காரணமாக, பொதுவாக பத்து மணிநேரம் வீட்டை விட்டு வெளியே வேலை செய்ய வேண்டியிருப்பதால் சிலப்பல பேரிடம் சிரித்து பேசிவிட்டு களைத்துப்போய் வீடு வந்தால் மனைவி, கேட்கும் முதல் கேள்வியே எவக்கூட பேசிவிட்டு இவ்வளவு நேரம் லேட், வீட்டில் உங்களுக்காக ஒருத்தி இருப்பது, காத்திருப்பது தெரியாதா?? இந்த சந்தேகம் தொடரும் போது உண்மையிலேயே ஒரு சின்னவீடு செட்டப்பாகி பின் அது பெரியவீடாகி, உண்மையான பெரியவீடு காலாவதி ஆகிவிடும் நிலை (டைவர்ஸ்).காரணம் சந்தேகப்பேய்.
அதே ஆண், வீட்டில் மனைவி தனியாக இருக்கிறாளே. பால் காரனிடம், (அல்லது) காய்காறி விற்பவனிடம சிரித்து பேசுகிறாளே. என்று சந்தேகப்படும் போது. மனைவி மனம் வெறுத்துப்போய், பொய்யை ஏன் மெய்யாக்ககூடாது என்று மனம் வெதும்பி சில நாட்களில், கள்ளக்காதல் கணவன் கொலை, தினசரி பத்திரிக்கைகளில் நாம் தினசரி படிக்கின்றோமே. காரணம் சந்தேகப்பேய்.
சரி, நேற்றுவரை சொந்தம், தெரிந்தப்பெண் ,தன் மகனுக்கு பொருத்தமானவள், குடும்பத்திற்கு ஏற்றவள் என்று திருமணம் செய்துவிட்டு, நான்கே நாட்களில் எங்கே தன்மகனை என்னை விட்டு வந்தவள் பிரித்து விடுவாளோ என்று தாயை போன்று கவனிக்கவேண்டியவள் மாமியாராக மாறிவிடுகிறாளே. ஒரு கட்டத்தில் உயிரோடு எரித்தும் விடுகிறாளே. காரணம் சந்தேகப்பேய். .
இப்படி சந்தேகம் எந்தரூபத்தில் எப்படி நுழைந்தாலும் அது வாழ்கை வண்டியை தடம்மாற செய்வது மட்டுமல்லாது. அதலபாதாலத்திலும் தள்ளிவிடுகிறது.
என்னதான் தீர்வு? நம்பிக்கை ஒன்றுதான். இந்த நம்பிக்கையானது ஒரே நாளில்வருமா? கண்டிப்பாக வராது. எட்டுவயது முதலே கற்றுத்தரவேண்டும். கல்வி (பாடத்திட்டம்) என்பது பொருளீட்டுவதற்கு மட்டும் இல்லாமல் வாழ்கையை சரியாக வாழ பழக்கப்படுத்துவது போல இருக்காதவரையில் சந்தேகப்பேய் உலகில் சந்தோஷத்துடன் உலாவரும்.........